புதன், 23 செப்டம்பர், 2009

கவிராயர்களும் கருநாக இந்திரியமும் !

உட்கார்ந்து எழமுடியாத போதிலும் மதன விளையாட்டுகளில் மனதளவில் கிறங்கி போகிற கிழட்டு பிராணிகள் எண்பதிலும் உண்டு
நாளேடுகளில் நாள்தோறும் படிக்க முடிகிறது நாற்றமெடுத்த செய்தியை . சுடுகாடு அழைக்கின்ற நேரத்திலும் வாலிப வயோதிகர்கள் வலுவேற்றுகிற லேகியத்தை தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்குகிறார்கள் . இத்தகைய விளம்பரத்தை தேடி தேடி படிப்பதால் தான் மான்கறி வைத்தியர்கள் சந்து பொந்துகளில் எல்லாம் கிளைகள் திறக்கிறார்கள் .
இக்காலத்திய கவிகளை விட ஆதி காலத்து கவிராயர்கள் மதனாபிசேகம் வியாபித்து நிற்பதற்கு மருந்துகள் கண்டுபிடித்து பாடிஇருக்கிறார்கள்
'மின்னிக்காய் , மாங்காய் , விளங்காய் , புல் ஆமணக்கு ,கண்ணிகிழங்கு வெருகங்கிழங்கு , பொரிகாரம் போரத்தை ,பூலாங்கிழங்கு ,கரியபவளம் காசுக்கட்டி , கெருடபச்சை ,புள்ளிமான்மூளை , புலிநகம் ,செம்போத்திறகு , கள்ளியடிசெஞ்சூகைக் ,கண் பீழை ,முள்ளெலிப்பல் ,காக்கை கடைக்கண் ,கருநாக இந்திரியம் ' இவையெல்லாம் சேர்த்து மருந்து செய்தால் பெண்ணே கதியென படுத்து விடுவானாம் . சரவண பெருமாள் கவிராயர் தனது விரலி விடு தூதுவில் இப்படி பட்டியலிட்டிருக்கிறார் .
இந்த கவிராயர் சொல்கிறபடி எந்த கிறுக்கனாவது மருந்து செய்ய முடியுமா ? கருநாக இந்திரியம் எடுக்க முடியுமா? எப்படியெல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள் !

1 கருத்து:

free devils சொன்னது…

superb and fantastic how do u think like this