"தறுக்கினாற் பிற தேசத்தார்
தமிழன்பால் என் நாட்டான் பால்
வெறுப்புறும் குற்றஞ் செய்தா
ராதலால் விரைந்தன்னாரை
நொறுக்கினார் முதுகெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்த சொல் கேட்டின் பத்திற்
குதிக்கும் நாள் எந்த நாளோ?"
இதுவே எனது ஆங்கிலப் புத்தாண்டின் ஆசை!
பாவேந்தன் எழுச்சியுடன் பாடியுள்ள வரிகளுக்கு உயிரூட்ட மானமிகு தமிழர்களே எழுக என வேண்டிக் கொள்கிறேன்.
இதுவே எனது ஆங்கிலப் புத்தாண்டின் ஆசை!
புதன், 30 டிசம்பர், 2009
செவ்வாய், 29 டிசம்பர், 2009
சிறந்த நடிகர் -நடிகை யாருங்கோ?
ச்சும்மா ஒரு புள்ளி விவரம் தானுங்கோ!
1931 முதல் 2009 வரை வெளியான நேரடிப் படங்களில் அதாவது 'டப்பிங்' செய்யப் படாத தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை,4833 .
1931 முதல் 2008 வரை சென்சார் செய்யப் பட்டும் வெள்ளித் திரைக்கு வராமல்
பொட்டிக்குள் முடங்கிக் கிடக்கிற படங்களின் எண்ணிக்கை 204.
2009 -ல் சென்சார் ஆகி 2010 -லாவது வருமா என்று எதிர்பார்ப்பில் கிடப்பவை 36.
ஆக மொத்தத்தில் தமிழில் தயாரிக்கப் பட்ட படங்களின் கணக்கு 5073 என்றாகிறது.
2009 -ல் மட்டும் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் 131 .
இந்தப் படங்களில் 150 நாட்கள் ஓடியதாக ''நாயகன்'' படத்தை சொல்லுகிறார்கள். எத்தனை தியேட்டர்களில் ,எந்தெந்த ஊர்களில் ஓடியது என்றெல்லாம் கேட்கக் கூடாது .நூன் ஷோ ஓடியதா ,அல்லது தினமும் த்ரீ ஷோ ஓடியதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் இடம் இல்லை.இப்போதெல்லாம் பகல் காட்சிகள் மட்டுமே ஓடினாலும் அது வெற்றிப் படங்கள்தான்!
2009 -ல் அறிமுக இயக்குனர்கள் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது! 69 -பேர் வந்திருக்கிறார்கள் .ஆரோக்கியமான விஷயம்தான் .45 -புதிய இசை அமைப்பாளர்கள் ,50 புதிய கதாநாயகர்கள் ,45 -புது நாயகிகள் என அமர்க்களப்பட்டிருக்கிறது.
இவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றனர் ? சொல்லுவதற்கு சங்கடமாக இருக்கிறது.
இயக்குனர்களில் 'பசங்க' பாண்டிராஜ்,'சிந்தனை செய்' யுவன் ,'ஞாபகங்கள்' ஜீவன் ,'ஈரம்' அறிவழகன் ,மதுரை டு தேனீ வயா ஆண்டிபட்டி 'ரதிபாலா,'ரேணிகுண்டா' பன்னீர்செல்வம் என சிலர் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள்.
அமீர்,சித்தார்த்,பா.விஜய்,தருண்கோபி, ஆகியோர் பழக்கப்பட்டுவிட்ட முகங்கள்.நினைவில் சுலபமாகி விடுகிறார்கள். ஆனால் நாயகிகளில் எத்தனை பேர் நினைவில் இருக்கிறார்கள்?
இப்போது என் ஆர்வம் எல்லாம் 2009 -ல் சிறந்த சினிமா கலைஞர்கள் யாராக இருக்கமுடியும் என்பதில்தான்!
அயன்,நாடோடிகள்,காஞ்சிவரம், நான் கடவுள், பேராண்மை, பொக்கிஷம், கந்தசாமி,ஆகிய படங்களில் ஒன்றாக சிறந்த படம் இருக்கலாமா? அல்லது வேறு எதாவது இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
சிறந்த நடிகராக சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, விக்ரம் இவர்களில் ஒருவர் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். மக்கள் என்ன நினைக்கிறார்களோ? நடிகைகளில் பத்மப்ரியா, பூஜா , சினேகா ஆகிய மூவர்தான் என் பூனைக் கண்களுக்கு தெரிகிறார்கள்.
உங்கள் முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா நண்பர்களே?
1931 முதல் 2009 வரை வெளியான நேரடிப் படங்களில் அதாவது 'டப்பிங்' செய்யப் படாத தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை,4833 .
1931 முதல் 2008 வரை சென்சார் செய்யப் பட்டும் வெள்ளித் திரைக்கு வராமல்
பொட்டிக்குள் முடங்கிக் கிடக்கிற படங்களின் எண்ணிக்கை 204.
2009 -ல் சென்சார் ஆகி 2010 -லாவது வருமா என்று எதிர்பார்ப்பில் கிடப்பவை 36.
ஆக மொத்தத்தில் தமிழில் தயாரிக்கப் பட்ட படங்களின் கணக்கு 5073 என்றாகிறது.
2009 -ல் மட்டும் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் 131 .
இந்தப் படங்களில் 150 நாட்கள் ஓடியதாக ''நாயகன்'' படத்தை சொல்லுகிறார்கள். எத்தனை தியேட்டர்களில் ,எந்தெந்த ஊர்களில் ஓடியது என்றெல்லாம் கேட்கக் கூடாது .நூன் ஷோ ஓடியதா ,அல்லது தினமும் த்ரீ ஷோ ஓடியதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் இடம் இல்லை.இப்போதெல்லாம் பகல் காட்சிகள் மட்டுமே ஓடினாலும் அது வெற்றிப் படங்கள்தான்!
2009 -ல் அறிமுக இயக்குனர்கள் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது! 69 -பேர் வந்திருக்கிறார்கள் .ஆரோக்கியமான விஷயம்தான் .45 -புதிய இசை அமைப்பாளர்கள் ,50 புதிய கதாநாயகர்கள் ,45 -புது நாயகிகள் என அமர்க்களப்பட்டிருக்கிறது.
இவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றனர் ? சொல்லுவதற்கு சங்கடமாக இருக்கிறது.
இயக்குனர்களில் 'பசங்க' பாண்டிராஜ்,'சிந்தனை செய்' யுவன் ,'ஞாபகங்கள்' ஜீவன் ,'ஈரம்' அறிவழகன் ,மதுரை டு தேனீ வயா ஆண்டிபட்டி 'ரதிபாலா,'ரேணிகுண்டா' பன்னீர்செல்வம் என சிலர் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள்.
அமீர்,சித்தார்த்,பா.விஜய்,தருண்கோபி, ஆகியோர் பழக்கப்பட்டுவிட்ட முகங்கள்.நினைவில் சுலபமாகி விடுகிறார்கள். ஆனால் நாயகிகளில் எத்தனை பேர் நினைவில் இருக்கிறார்கள்?
இப்போது என் ஆர்வம் எல்லாம் 2009 -ல் சிறந்த சினிமா கலைஞர்கள் யாராக இருக்கமுடியும் என்பதில்தான்!
அயன்,நாடோடிகள்,காஞ்சிவரம், நான் கடவுள், பேராண்மை, பொக்கிஷம், கந்தசாமி,ஆகிய படங்களில் ஒன்றாக சிறந்த படம் இருக்கலாமா? அல்லது வேறு எதாவது இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
சிறந்த நடிகராக சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, விக்ரம் இவர்களில் ஒருவர் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். மக்கள் என்ன நினைக்கிறார்களோ? நடிகைகளில் பத்மப்ரியா, பூஜா , சினேகா ஆகிய மூவர்தான் என் பூனைக் கண்களுக்கு தெரிகிறார்கள்.
உங்கள் முடிவு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா நண்பர்களே?
ஞாயிறு, 27 டிசம்பர், 2009
என்.டி..திவாரியும்,ஷகீலாவும்!
ஒரு ஆண் ஆயிரத்தெட்டு அவிசாரித் தனம் செய்வான் .அவனை இந்த சமுதாயம் மன்னிக்கிறது. மனிதனாக ஏற்கிறது. ஆனால் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு பலி ஆனாலும் அவளை இந்த சமுதாயம் ஏற்பதில்லை. மனுஷியாகவும் மதிப்பதில்லை. விலை மாது என்று பட்டம் கட்டிவிடுகிறது. இதுமட்டுமல்ல அவளை மனமுவந்து ஏற்பவனையும் இழிந்தவனாகப் பார்க்கிறது.
எல்லாமே ஆணாதிக்கத்தின் திமிர்!
ஆணை சார்ந்து வாழ வேண்டிய சமுதாய நடைமுறைகளால் இந்த பெண்ணடிமைத்தனம் கற்காலம் தொட்டே இருக்கிறது.
ஆணின் வலிமை-பெண்ணின் பலவீனம் இவ்விரண்டும் பெண் அடிமைத்தனத்தின் அடித்தளமாக இருக்கிறது.
இவை மாறப்போவதில்லை.
ஆனால் இரக்கப்படலாம் அல்லவா?
சக மனுஷியாக பார்க்கலாம் அல்லவா?
இதில் கொடுமை என்னவென்றால் பெண்களை ,பெண்களே இழிந்தவளாகப் பார்ப்பதுதான்.
அண்மையில் ஒரு நிகழ்வு.
நடிகை ஷகீலா ஒரு தொழிலதிபரை காதலிப்பதாகவும் ,அவரை கல்யாணம் செய்யவிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் சொன்னார்.
அவ்வளவுதான் உத்தமர்களுக்கு சுரீர் என்று சுட்டுவிட்டது.
''பிட்டுப் பட நடிகைக்கு காதலா,கல்யாணமா....எந்த கேனையன்யா அவன்''? என சில சினிமாக்காரர்களே கேவலமாக பேசினார்கள். சக நடிகையை பிழை படப்பேசுகிறோம் என்கிற குற்ற உணர்வு கொஞ்சம் கூடஇல்லை .
ஷகீலாவின் திருமணத்தினால் இந்த சமுதாயத்துக்கு என்ன கேடு வந்துவிடும் என அவர்கள் அப்படி கொந்தளித்தார்கள் என்பது தெரியவில்லை.
ஷகீலாவின் திருமணத்தில் எத்தகைய வலி -தியாகம் இருக்கிறது தெரியுமா?
ஒரு சின்ன பிளாஷ் பேக் !
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு படத்தில் நடிப்பதற்கு இந்த நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷகீலாவின் படம் என்றால் பி .அண்ட். சி . சென்டர்களில் நல்ல வியாபாரம் ஆகும் என்பதால் பைனான்சியர் ஒருவரின் உதவி கிடைத்தது.
ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கவில்லை!
ஷகீலா சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை. இதனால் நொந்து போன தயாரிப்பாளர் படப்பிடிப்பை தள்ளிப் போட்டுவிட்டார்.
பைனான்சியருக்கு பயங்கர டென்சன். பணம் போட்ட மனுசனாயிற்றே!சும்மா இருக்க முடியுமா?
நேராக நடிகையின் வீட்டுக்குப் போய்விட்டார் .
காரசாரமாக திட்டவேண்டும் என்கிற கோபத்துடன் போனவர் அங்கிருந்த நிலைமையைப் பார்த்ததும் ,அவரால் எதுவும் பேசமுடியவில்லை.
ஷகீலாவின் அம்மா படுத்த
படுக்கையில். ஒரு நாளைக்கு இரண்டு முறை டயாலிஸ் பண்ணவேண்டும் . கிட்னி பெயிலியர். கண்ணீர் மல்க ஷகீலா.
ஆத்திரமுடன் சென்ற பைனான்சியர் அனுதாபம் சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டார். அது மட்டுமல்ல, ஷகீலாவின் அம்மாவுக்கான மருத்துவ செலவையும் அவரே ஏற்றுக் கொண்டார். மனிதாபிமானம். வட்டிக்கு வட்டி போட்டு வசூல் செய்பவர்கள்தான் பைனான்சியர்கள் என்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் இந்த மனிதர் வித்தியாசமாக இருக்கவே நடிகைக்கு அவரைப் பிடித்துப்போனது. அவருக்கும் நடிகையை பிடித்து விட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டனர்.
ஆனால் பைனான்சியரின் உறவுகளும் , நட்பு வட்டமும் அவரை எந்த அளவுக்கு மதிக்கும் என்கிற பிரச்னையால் அவர்களால் பகிரங்கமாக அறிவிக்க முடியவில்லை.
சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப் படுகிறவர்கள் சிலர் எவ்வளவு கேவலமாக திரை மறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? அவர்களைவிட இந்த பைனான்சியர் மிக ,மிக உயர்ந்தவர்.
நட்டுக் கழன்று நடப்பதற்கே துணை தேவைப் படு ம் 86 வயது காந்தியவாதி (?) முன்னாள் கவர்னர் என். டி. திவாரியை விட உயர்ந்தவர். திவாரிக்கு தினமும் மூன்று பெண்கள் படுக்கைக்கு வேண்டுமாம். வீடியோ ஆதாரங்களுடன் நாறிக் கொண்டிருக்கிறார்.
ஷகீலாவை இழிவுபடுத்துகிறவர்கள் யோசிப்பார்களா?
ஆண் ஆதிக்கவாதிகள் சிந்திக்க நல்ல வாய்ப்பு!
செவ்வாய், 22 டிசம்பர், 2009
எம்ஜிஆரும் ,வேட்டைக்காரனும்!


உங்களுக்கு செண்டி மென்டுகளில் நம்பிக்கை உண்டா?
என் நண்பர்கள் சிலரிடம் கேட்டேன்.
பெரும்பான்மையானவர்கள் 'நம்பிக்கை இருக்கிறது' என்றார்கள்.
ஒருவர் சொன்னார்'காலையில் எழுந்ததும் காக்காவைப் பார்த்தால் அன்றைய பொழுது நல்லாவே போகுமாம்'
இன்னொருவருக்கு எதிர் வீட்டு மாமியைப் பார்த்தால் 'போகிற இடங்களில் எல்லாம் ஜெயம்தானாம்'
மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டுப் போனால் வியாபாரம் 'ஓகோ' என்று இருக்கும் என்பது பலசரக்குக் கடை வைத்திருப்பவரது அனுபவம்.
இப்படி சொன்னவர்கள் '' உண்மையை சொன்னார்களா, இல்லையா ''என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு உள் நோக்கம் நிச்சயம் இருக்கும்.
மாமியை பார்த்தால் நல்லது என்பவரும் ,மனைவிக்கு முத்தம் கொடுப்பதாக சொல்பவரும், தங்களின் குணங்களை பிரதிபலிக்கிறார்கள்.
இவர்களை விட இன்னொரு நண்பர் சொன்ன தகவல் வேடிக்கையாகவும் இருந்தது, உதறித் தள்ளிவிட முடியாமலும் இருந்தது.
''எம்ஜிஆர் .நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் பெயர்களை வைத்து எடுக்கப் படும் படங்கள் இப்போது வெற்றி பெறுவதில்லை'' என்பதே அந்த நண்பர் சொன்ன தகவல்.
''எந்த ஆதாரத்துடன் இப்படி சொல்கிறீர்கள்?'' என்று அவரிடம் கேட்க, ஒரு சிறு பட்டியலை கொடுத்தார்.
''ரகசிய போலிஸ் ','நாடோடி மன்னன்','மதுரை வீரன்' என்றவர் சின்னதாக இடைவெளி விட்டு 'வேட்டைக்காரன்' வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை,ஒப்பனிங் பிரமாதமாக இருப்பதாக சொல்லப் படுகிறது. இனிமேல்தான் அதன் கதை தெரியும்'' என்றார்.
''கமல்ஹாசன் நடித்த 'சதி லீலாவதி' எம்ஜிஆர் .நடித்த படம்தானே, அது வெற்றி பெற்றிருக்கிறதே'' என மடக்கினால் ,அதற்கும் பதில் வைத்திருந்தார்.
''எம்ஜிஆருக்கே அதுதான் முதல் படம். அதனால் அதை கணக்கில்
எடுக்கக்கூடாது, அப்படி எடுத்துக் கொள்வதாக இருந்தால் 'மர்மயோகி' என்கிற பெயருடன் கமல் அறிவித்த படத்தின் நிலைமை என்ன ஆயிற்று என்பதை
எனக்கு சொல்லுங்கள்'' என்றார்.
மாபெரும் மக்கள் சக்தியாக திகழ்ந்த ஒரு மாமனிதன் ,புரட்சித் தலைவர் எனப் போற்றப் படுகிறவர் , இன்றைக்கும் தெய்வமாக வழி படப் படுகிறவர் எம்ஜிஆர். அவர் நடித்த படங்களின் பெயர்கள் இன்றைய நடிகர்களுக்கு கை கொடுப்பதில்லை, என்கிறார்களே ? எங்கே இருக்கிறது தவறு?
கதைகளில் கவனம் செலுத்தாமல் ,கவர்ச்சிக்கும் ,ஆக்சன் ,அதிரடிகளுக்கும் ,முக்கியம் கொடுப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் சென்டிமென்டுகளின் ஆதிக்கம் சினிமாக்காரர்களிடம் அதிகமாகவே இருக்கிறது.
ஒரு தயாரிப்பாளர் சொன்ன இன்னொரு தகவலும் உண்டு.
''காளி என்கிற பெயரில் படம் எடுக்கமாட்டோம் . பத்ரகாளி என்கிற பெயரில் படம் எடுத்த போது அந்த படத்தின் கதாநாயகி விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். காளி என்கிற பெயரில் படம் எடுத்த போது பெருந் தீ விபத்து நடந்து ரஜினி உயிர் தப்பினார். எங்களின் தொழிலில் ராசி ,சென்டிமென்ட்கள் ,பார்ப்பது தவிர்க்கமுடியாதது''என்றார்.
பெயர் ராசி ,எண்கணிதம் ,எழுத்துகளில் மாற்றம் , இவை எல்லாம் செய்தால் ,வெற்றி பெறமுடியும் என்பதை கணினி யுகத்திலும் நம்புகிறார்கள் என்கிறபோது நாம் இன்னமும் மூட நம்பிக்கைகளில் இருந்து மீள வில்லை என்பதைத் தானே காட்டுகிறது?
யாரை நோவது?
''வேட்டைக்காரனின்' வெற்றியில்தான் பதில் இருக்கிறது.
திங்கள், 21 டிசம்பர், 2009
நாங்க தமிழருங்க....!
எச்சரிக்கை!
இது சுத்தமான கற்பனை!
பொழுது போகாதவர்கள் படிச்சா போதும்.
''உனக்கு ஓட்டுப் போடத் தெரியுமா?''
''தெரியும்,ரெண்டாயிரம் கொடுத்தா!''
''யாருக்குப் போடுவே?''
''அதிகமா யாரு கொடுப்பாங்களோ ,அவங்களுக்கு போடுவேன்''
''ஓட்டின் மதிப்பு என்னங்கிறது உனக்குத் தெரியாதா?''
''தெரிஞ்சு என்னாகப் போகுது?முன்னெல்லாம் பேப்பரில் படம் இருக்கும்,பார்த்துக் குத்துவோம். இப்ப மிசினில் படம் பார்த்து பட்டனை அமுக்கி ஓட்டுப் போடுறோம். எவன் செயிச்சு வந்தாலும் நம்ம நிலைமை மாறப் போறதில்ல!செயிக்கிரவன் மட்டும் காரு, பங்களா ,பொண்டாட்டி, வப்பாட்டினு வசதியாகிப் போவான் .''
''இப்படி சலிச்சுக்கிறியே ,நீ எந்த கட்சி?''
''ஆட்சிக்கு எந்த கட்சி வருதோ அதான் என் கட்சி''
''கொள்கை, கோட்பாடு, இதெல்லாம் பார்க்கமாட்டியா?''
''எலக்சன்ல நிக்கிற எத்தன பேருக்கு அந்த வெங்காயம் தெரியும்னு நினைக்கிறீங்க? அவங்களுக்கே தெரியலேன்கிறபோது எனக்கு மட்டும் தெரிஞ்சு என்னாகப் போகுது?''
''இந்தியக் குடிமகன் இப்படி சொல்லலாமா?''
''யோவ், முட்டாள்த் தனமா பேசாதே,குடிச்சாத் தான் குடிமகனாக முடியும்னுதான் இந்தியா முழுக்க ஒயின் சாப் இருக்கு . வசதியானவங்க பெரிய ஹோட்டலுக்கு போயி குடிமகனாகிறாங்க. வசதி இல்லாத எங்கள மாதிரியான ஆளுங்கதான் தெரு ஓரக் கடைகளில் குடிமகனாகிறோம்!''
''உங்களைத் திருத்தவே முடியாதுப்பா!ஒரு தமிழன் இப்படிக்
கெட்டு போறானேன்னு கவலையா இருக்கு!''
''அடடே, நீங்க அந்த மாதிரியான ஆளா? அதான் ரொம்பவே
கவலைப் படுறீங்க! கடலுக்கு மீன் பிடிக்கப் போனா தமிழனை சிங்கள இராணுவத்தான் சுடுறான்.அடிக்கிறான்.உதைக்கிறான். பிடிச்சிட்டுப் போயி சித்ரவதை பண்றான். அதப் பத்திக் கவலைப் படக் காணோம்.கடலோரக் காவல்
படை,கத்தரிக்காய் படைன்னு போட்டிருக்கிறோம்னு இந்திய அரசாங்கம்
சொன்னதை நம்பி கடலுக்குப் போனா மறுபடியும் சிங்களத்தான் அடிக்கிறான்யா! நாதியில்லாம இருக்கிற தமிழ் மீனவர்களை காக்கிற வழியைப்
பாருங்க சாமிகளா!உங்களை நம்பி நாங்க இழந்தது நிறைய. ரத்தக் கண்ணீர்
விட்டாச்சு. விட்ருங்க எங்கள. சூடு ,சொரணை எல்லாம் கப்பலில் போயாச்சு.
கற்பைக் கொடுத்தால்தான் நிவாரணப் பொருட்களை சிங்கள இராணுவத்தான்
முள்வேலி தமிழ் பெண்களுக்கு கொடுக்கிறானாம். அதை கண்டிக்கிற வழியைப்
பாருங்க.ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னையாம். அங்க போங்க ,எங்களை
விட்ருங்க!''
இப்படி ஒரு கனவு வராம இருக்க மருந்து இருக்கா? இல்ல,
சாமியார் யாரிடமாவது தாயத்து வாங்கனுமா?
தெரிஞ்சவங்க சொல்லுங்க!
இது சுத்தமான கற்பனை!
பொழுது போகாதவர்கள் படிச்சா போதும்.
''உனக்கு ஓட்டுப் போடத் தெரியுமா?''
''தெரியும்,ரெண்டாயிரம் கொடுத்தா!''
''யாருக்குப் போடுவே?''
''அதிகமா யாரு கொடுப்பாங்களோ ,அவங்களுக்கு போடுவேன்''
''ஓட்டின் மதிப்பு என்னங்கிறது உனக்குத் தெரியாதா?''
''தெரிஞ்சு என்னாகப் போகுது?முன்னெல்லாம் பேப்பரில் படம் இருக்கும்,பார்த்துக் குத்துவோம். இப்ப மிசினில் படம் பார்த்து பட்டனை அமுக்கி ஓட்டுப் போடுறோம். எவன் செயிச்சு வந்தாலும் நம்ம நிலைமை மாறப் போறதில்ல!செயிக்கிரவன் மட்டும் காரு, பங்களா ,பொண்டாட்டி, வப்பாட்டினு வசதியாகிப் போவான் .''
''இப்படி சலிச்சுக்கிறியே ,நீ எந்த கட்சி?''
''ஆட்சிக்கு எந்த கட்சி வருதோ அதான் என் கட்சி''
''கொள்கை, கோட்பாடு, இதெல்லாம் பார்க்கமாட்டியா?''
''எலக்சன்ல நிக்கிற எத்தன பேருக்கு அந்த வெங்காயம் தெரியும்னு நினைக்கிறீங்க? அவங்களுக்கே தெரியலேன்கிறபோது எனக்கு மட்டும் தெரிஞ்சு என்னாகப் போகுது?''
''இந்தியக் குடிமகன் இப்படி சொல்லலாமா?''
''யோவ், முட்டாள்த் தனமா பேசாதே,குடிச்சாத் தான் குடிமகனாக முடியும்னுதான் இந்தியா முழுக்க ஒயின் சாப் இருக்கு . வசதியானவங்க பெரிய ஹோட்டலுக்கு போயி குடிமகனாகிறாங்க. வசதி இல்லாத எங்கள மாதிரியான ஆளுங்கதான் தெரு ஓரக் கடைகளில் குடிமகனாகிறோம்!''
''உங்களைத் திருத்தவே முடியாதுப்பா!ஒரு தமிழன் இப்படிக்
கெட்டு போறானேன்னு கவலையா இருக்கு!''
''அடடே, நீங்க அந்த மாதிரியான ஆளா? அதான் ரொம்பவே
கவலைப் படுறீங்க! கடலுக்கு மீன் பிடிக்கப் போனா தமிழனை சிங்கள இராணுவத்தான் சுடுறான்.அடிக்கிறான்.உதைக்கிறான். பிடிச்சிட்டுப் போயி சித்ரவதை பண்றான். அதப் பத்திக் கவலைப் படக் காணோம்.கடலோரக் காவல்
படை,கத்தரிக்காய் படைன்னு போட்டிருக்கிறோம்னு இந்திய அரசாங்கம்
சொன்னதை நம்பி கடலுக்குப் போனா மறுபடியும் சிங்களத்தான் அடிக்கிறான்யா! நாதியில்லாம இருக்கிற தமிழ் மீனவர்களை காக்கிற வழியைப்
பாருங்க சாமிகளா!உங்களை நம்பி நாங்க இழந்தது நிறைய. ரத்தக் கண்ணீர்
விட்டாச்சு. விட்ருங்க எங்கள. சூடு ,சொரணை எல்லாம் கப்பலில் போயாச்சு.
கற்பைக் கொடுத்தால்தான் நிவாரணப் பொருட்களை சிங்கள இராணுவத்தான்
முள்வேலி தமிழ் பெண்களுக்கு கொடுக்கிறானாம். அதை கண்டிக்கிற வழியைப்
பாருங்க.ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னையாம். அங்க போங்க ,எங்களை
விட்ருங்க!''
இப்படி ஒரு கனவு வராம இருக்க மருந்து இருக்கா? இல்ல,
சாமியார் யாரிடமாவது தாயத்து வாங்கனுமா?
தெரிஞ்சவங்க சொல்லுங்க!
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
சிறந்த நடிகர் நீங்க தான் தலைவா!
வருஷம் முடியப் போகுது, சிறந்த சினிமா நடிகர் -நடிகை மற்ற கலைஞர்களையும் செலக்ட் பண்ணியாகணும். என்ன பண்ணப் போறிங்க, நீங்க யாரை மனசில நினைச்சு இருக்கீங்க ,சொல்ல முடியுமா?
அட ,உங்களைத் தாங்க கேட்கிறேன். ஏன்னா நம்ம மக்கள் ரொம்பவும் புத்திசாலிங்க! அதான் கேட்கிறேன்.
ஆடித் தள்ளுபடி முடிந்து இப்ப ஆங்கிலப் புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு தள்ளுபடிகள் ,என்று வரிசையாக வரப் போகுதுல்ல.ஏமாறுவதில் , ஏமாற்றுவதில் நம்ம ஆளுங்களை விஞ்ச இனிமேல் தான் பிறந்து வரணும். தள்ளுபடி விலை என்றால் சாணத்தையும் வாங்கத் தயார்.வாங்கிய சாணத்தை எப்படி அடுத்தவன் தலையில் கட்டுவது என்பதிலும் நம்மளவர்கள் கடுமையான புத்திசாலிகள்.
எந்த மாதிரி சொன்னால் நோகாமல் ஏமாறுவார்கள் என்பதற்காகவே கமிட்டி போட்டு யோசிப்பார்கள். பச்சை,சிவப்புப் புடவை ,ரவிக்கை,அட்சய திருதி ,ரம்பா திருதி ,என விதம் விதமாக யோசித்து மக்களை மடக்கியவர்கள் ஆயிற்றே!
இவர்களுக்கு நாம்ப எந்த வகையில் குறைஞ்சவர்கள்?
நாம்ப யார் என்பதைக் காட்டவேணாமா?
இனிமேல் சென்னையில் அரங்கங்கள் கிடைப்பது கஷ்டம்தான். சிறந்த சினிமா கலைஞர்கள் யார் என்பதை போட்டி போட்டுக் கொண்டு சொல்லி விழா எ டுப்பதற்காக எல்லா அரங்குகளுமே ஹவுஸ்புல் . ஆளுக்காள் பட்டியலுடன் திரிகிறார்கள். அந்த பட்டியல்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது ஸ்பான்சர்களைப் பொருத்தது. யாரைப் போட்டால் அரங்கம் நிறையும் என்கிற அடிப்படையில் பெஸ்ட் இருக்கும்.
அப்பத்தானே டிவி ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
இதற்கு பெயர்தான் சிறந்த சினிமா கலைஞர்கள் விருது வழங்கும் விழாவா? அப்படித்தானுங்க இத்தனை வருசமா கொண்டாடிட்டு வருகிறோம். திறமையின் அடிப்படையில் தேர்வுகள் என்பது அத்திப் பூத்தது மாதிரிங்க. மெஜாரிட்டி மெம்பர்கள் சொன்ன அடிப்படையில் தேர்வு செய்திருக்கிறோம் என்று சொல்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
அறிமுக நடிகன் திறமையாக நடித்திருந்தாலும் அவரை சிறந்த நடிகர் என்று சொல்லாமல் சிறந்த புதுமுகம் என்று சொல்லி சீனியர்களை திருப்திப் படுத்திவிடுவார்கள்.
எதை சொன்னாலும் நம்பி ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை நேர்மையான தேர்வுகள் என்பது வெறும் வேசம்தான்.
எல்லாமே வியாபாரமாகிவிட்டது.
அட ,உங்களைத் தாங்க கேட்கிறேன். ஏன்னா நம்ம மக்கள் ரொம்பவும் புத்திசாலிங்க! அதான் கேட்கிறேன்.
ஆடித் தள்ளுபடி முடிந்து இப்ப ஆங்கிலப் புத்தாண்டு,தமிழ் புத்தாண்டு தள்ளுபடிகள் ,என்று வரிசையாக வரப் போகுதுல்ல.ஏமாறுவதில் , ஏமாற்றுவதில் நம்ம ஆளுங்களை விஞ்ச இனிமேல் தான் பிறந்து வரணும். தள்ளுபடி விலை என்றால் சாணத்தையும் வாங்கத் தயார்.வாங்கிய சாணத்தை எப்படி அடுத்தவன் தலையில் கட்டுவது என்பதிலும் நம்மளவர்கள் கடுமையான புத்திசாலிகள்.
எந்த மாதிரி சொன்னால் நோகாமல் ஏமாறுவார்கள் என்பதற்காகவே கமிட்டி போட்டு யோசிப்பார்கள். பச்சை,சிவப்புப் புடவை ,ரவிக்கை,அட்சய திருதி ,ரம்பா திருதி ,என விதம் விதமாக யோசித்து மக்களை மடக்கியவர்கள் ஆயிற்றே!
இவர்களுக்கு நாம்ப எந்த வகையில் குறைஞ்சவர்கள்?
நாம்ப யார் என்பதைக் காட்டவேணாமா?
இனிமேல் சென்னையில் அரங்கங்கள் கிடைப்பது கஷ்டம்தான். சிறந்த சினிமா கலைஞர்கள் யார் என்பதை போட்டி போட்டுக் கொண்டு சொல்லி விழா எ டுப்பதற்காக எல்லா அரங்குகளுமே ஹவுஸ்புல் . ஆளுக்காள் பட்டியலுடன் திரிகிறார்கள். அந்த பட்டியல்கள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது ஸ்பான்சர்களைப் பொருத்தது. யாரைப் போட்டால் அரங்கம் நிறையும் என்கிற அடிப்படையில் பெஸ்ட் இருக்கும்.
அப்பத்தானே டிவி ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
இதற்கு பெயர்தான் சிறந்த சினிமா கலைஞர்கள் விருது வழங்கும் விழாவா? அப்படித்தானுங்க இத்தனை வருசமா கொண்டாடிட்டு வருகிறோம். திறமையின் அடிப்படையில் தேர்வுகள் என்பது அத்திப் பூத்தது மாதிரிங்க. மெஜாரிட்டி மெம்பர்கள் சொன்ன அடிப்படையில் தேர்வு செய்திருக்கிறோம் என்று சொல்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
அறிமுக நடிகன் திறமையாக நடித்திருந்தாலும் அவரை சிறந்த நடிகர் என்று சொல்லாமல் சிறந்த புதுமுகம் என்று சொல்லி சீனியர்களை திருப்திப் படுத்திவிடுவார்கள்.
எதை சொன்னாலும் நம்பி ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை நேர்மையான தேர்வுகள் என்பது வெறும் வேசம்தான்.
எல்லாமே வியாபாரமாகிவிட்டது.
செவ்வாய், 15 டிசம்பர், 2009
பாரதிராஜாவும்,விஜய்ஆண்டனியும்...!
ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தமிழ் திரைப் பட இயக்குனர்கள் இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்று கிழமை எங்காவது ஒரு இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் விவாதித்து தமிழ்சினிமாவை முன்னெடுத்து செல்லுவது பற்றி திட்டங்களை வகுத்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியமான விஷயம். டிச. 13 ந் தேதி சென்னை ஈஸியார் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் படைப்பாளிகளும் ,உதவியாளர்களும் ஒன்று கூடியிருந்தனர்.
ஆச்சரியம் என்னவென்றால் அன்றைய கூட்டத்துக்கு பாரதிராஜா,மணிரத்னம், ரவிகுமார் ,ஷங்கர் என பிரபலங்களும் வந்திருந்தனர்.
கூட்டம் கல கலப்பாக நடந்தது. விருந்து வேடிக்கை என ஒரே அமர்க்களம்.
திடீர் என உதவியாளர் ஒருவர் எழுந்தார். அவர் பாரதிராஜாவின் உதவியாளர்.
பாரதிராஜாவின் காலில் விழுந்தார்.
''என்னை ஆசிவாதம் பண்ணுங்க சார்''என்றார்.
''என்னய்யா கல்யாணமா?'' என்றார் பாரதி.
''இல்லிங்க சார், எனக்கு ஒரு படம் கமிட் ஆயிருக்கு .டைரக்ட் பண்ணப்போறேன்''
''வெரி குட் ,நான் என்ன உதவி பண்ணனும்''?
''வாழ்த்துங்க சார்''
'' ஒகே. உன்ன மாதிரி அசிஸ்டென்ட் வச்சுக்காதேய்யா,என்னை மாதிரி நீயும் கஷ்டப் படக்கூடாதுல்ல' என்றதும் ஒரே கைதட்டல். உதவியாளருக்கு செம குஷி.
தன்னுடைய குரு காமடியாக பேசியதால் ரொம்பவே நெகிழ்ந்து விட்டார்.
இந்த மாதகூட்ட மொத்த செலவும் இயக்குனர் லிங்குசாமியினுடையது..அடுத்த மாத கூட்டச்செலவு இயக்குனர் பி .வாசு.
சரி, இனி இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மீதான குற்றச்சாட்டைப் பார்க்கலாம்.
தமிழ் ஈழ போராட்டம் நடந்தபோது சிங்கள ராணுவத்துக்காக பாட்டு எழுதிய ஒருவரை ''வேட்டைக்காரன்'' படத்திலும் பயன் படுத்தியிருக்கிறார் . ஆகவே அவரை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் சொல்லிவருகிறார்கள். ராணுவத்துக்காக போட்ட மெட்டையே பயன்படுத்தி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
சிங்கள ராணுவத்திற்காக இந்திய அரசு உதவி செய்ததே, அப்போது எங்கே போயிருந்தது இந்த வீர உணர்வு?
சிசுக்களும் முதியவர்களும் மாற்று உடைகள் இல்லாமல் வெட்ட வெளியில் வெயிலிலும் ,மழையிலும் ,கடும் குளிரிலும் தமிழ் ஈழத்தில் செத்துக் கொண்டிருந்த போது தமிழ் நாட்டில் புத்தாடை ,இனிப்புகள் என்று தீபாவளி கொண்டாடி மகிழவில்லையா? எங்கே போயிருந்தது தமிழ் இன மான உணர்வு?
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆவி உங்களை மன்னிக்கவே மன்னிக்காது..
தமிழ் திரைப் பட இயக்குனர்கள் இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்று கிழமை எங்காவது ஒரு இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் விவாதித்து தமிழ்சினிமாவை முன்னெடுத்து செல்லுவது பற்றி திட்டங்களை வகுத்துக் கொள்கிறார்கள். ஆரோக்கியமான விஷயம். டிச. 13 ந் தேதி சென்னை ஈஸியார் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் படைப்பாளிகளும் ,உதவியாளர்களும் ஒன்று கூடியிருந்தனர்.
ஆச்சரியம் என்னவென்றால் அன்றைய கூட்டத்துக்கு பாரதிராஜா,மணிரத்னம், ரவிகுமார் ,ஷங்கர் என பிரபலங்களும் வந்திருந்தனர்.
கூட்டம் கல கலப்பாக நடந்தது. விருந்து வேடிக்கை என ஒரே அமர்க்களம்.
திடீர் என உதவியாளர் ஒருவர் எழுந்தார். அவர் பாரதிராஜாவின் உதவியாளர்.
பாரதிராஜாவின் காலில் விழுந்தார்.
''என்னை ஆசிவாதம் பண்ணுங்க சார்''என்றார்.
''என்னய்யா கல்யாணமா?'' என்றார் பாரதி.
''இல்லிங்க சார், எனக்கு ஒரு படம் கமிட் ஆயிருக்கு .டைரக்ட் பண்ணப்போறேன்''
''வெரி குட் ,நான் என்ன உதவி பண்ணனும்''?
''வாழ்த்துங்க சார்''
'' ஒகே. உன்ன மாதிரி அசிஸ்டென்ட் வச்சுக்காதேய்யா,என்னை மாதிரி நீயும் கஷ்டப் படக்கூடாதுல்ல' என்றதும் ஒரே கைதட்டல். உதவியாளருக்கு செம குஷி.
தன்னுடைய குரு காமடியாக பேசியதால் ரொம்பவே நெகிழ்ந்து விட்டார்.
இந்த மாதகூட்ட மொத்த செலவும் இயக்குனர் லிங்குசாமியினுடையது..அடுத்த மாத கூட்டச்செலவு இயக்குனர் பி .வாசு.
சரி, இனி இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மீதான குற்றச்சாட்டைப் பார்க்கலாம்.
தமிழ் ஈழ போராட்டம் நடந்தபோது சிங்கள ராணுவத்துக்காக பாட்டு எழுதிய ஒருவரை ''வேட்டைக்காரன்'' படத்திலும் பயன் படுத்தியிருக்கிறார் . ஆகவே அவரை புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் சொல்லிவருகிறார்கள். ராணுவத்துக்காக போட்ட மெட்டையே பயன்படுத்தி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
சிங்கள ராணுவத்திற்காக இந்திய அரசு உதவி செய்ததே, அப்போது எங்கே போயிருந்தது இந்த வீர உணர்வு?
சிசுக்களும் முதியவர்களும் மாற்று உடைகள் இல்லாமல் வெட்ட வெளியில் வெயிலிலும் ,மழையிலும் ,கடும் குளிரிலும் தமிழ் ஈழத்தில் செத்துக் கொண்டிருந்த போது தமிழ் நாட்டில் புத்தாடை ,இனிப்புகள் என்று தீபாவளி கொண்டாடி மகிழவில்லையா? எங்கே போயிருந்தது தமிழ் இன மான உணர்வு?
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆவி உங்களை மன்னிக்கவே மன்னிக்காது..
சனி, 12 டிசம்பர், 2009
அரசியலுக்கு வருவாரா ரஜினி?

''2010-ல் கட்சி;2011-ல் ஆட்சி'' என்கிற எதுகை ,மோனை சொல்லடுக்கு.மெகா சைஸ் போஸ்டர்கள் .அந்த போஸ்டரில் 'சட்டசபையில் முதல் அமைச்சராக ரஜினி' அமர்ந்திருப்பதைப் போல் படம்.டிசம்பர் 12 ம் தேதி பிறந்த நாள் போஸ்டர்களிலேயே ''ச் சும்மா அதிருதுல்ல'' என்று சொல்ல வைத்த போஸ்டர் இதுதான்.
இந்த போஸ்டரின் வாசகங்களுக்கு 'சூப்பர் ஸ்டார்' காரணமில்லை.அவரது தலைமை மன்ற நிர்வாகிகளும் காரணமில்லை என்கிறார்கள்.
அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் நன்றாகவே உணர்ந்திருக்கிற நிலையில் இப்படி ஒரு போஸ்டர்! சிட்டியை ரொம்பவே கலக்கி விட்டது.ரஜினியின் மனம் மாறி இருக்கலாமோ என்கிற சந்தேகம்வரவே அவரை தொடர்பு கொள்ள'முயன்றபோது எந்திரன் ' படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் சந்தோசத்தில் இருப்பது தெரிந்தது.
தமிழ்சினிமா நடிகர்களில் புரட்சித் தலைவர் எம் .ஜி. ஆருக்குப் பிறகு கட்டுக் கோப்பான விதிகளுடன் காக்கப்பட்ட மன்றம் ரஜினியின் மன்றங்கள்தான்.
அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கையுடன் பட்டி, தொட்டிகளில் ரசிகர் மன்றங்கள் வேர் விட்டிருந்தன. ஆனால் ஆன்மீகத்தின் பக்கமாக அவரது பார்வை தீவிரமாக பதியத் தொடங்கியதும் ரசிகர் மன்றங்களின் வேகமும் சற்று குறையத் தொடங்கிவிட்டது. வேருக்குத் தண்ணீர் விடும் அக்கறையும் குறைந்து போனது.
''தான் பேசிய அரசியல் தொடர்பான வசனங்கள் தன்னுடைய கருத்துகள் அல்ல. எழுதிக் கொடுத்ததைப் பேசினேன்'' என 'சூப்பர் ஸ்டார் ' மனம் திறந்ததும் ரசிகர்கள் சோர்வடைந்து போனார்கள்.ஆனால் அவரது ரசிகர்களாகவே இருக்கிறார்கள். அவர் சொடக்குப் போட்டால் போதும் உடனடியாக கிளர்ந்து எழுந்து விடுவார்கள். அந்த உணர்வு சாம்பல் பூத்த நெருப்பாகவே இருக்கிறது.
அந்த உணர்வை 'எந்திரன்' படத்துக்காக 'சிலர்' பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது போஸ்டர் உருவெடுத்திருக்கிறது .60- ம் வயது 'சஷ்டியப்த பூர்த்தி' விழாவை அவர் எந்த அளவுக்கு கொண்டாடியிருக்க வேண்டுமோ ,அந்த அளவுக்கு அவர் கொண்டாடவில்லை என்கிற வருத்தம் சினிமா வட்டாரத்திலும் இருந்தது. அந்த வருத்தத்தினால் சோர்வடைந்து போயிருந்த ரசிகர்களுக்கு ஊக்கம் ,உற்சாகம் கொடுக்கும் வகையில் இந்த போஸ்டர் இருந்தது. அதே நேரத்தில் 'எந்திரன்' படத்துக்கான பூஸ்டர் என்பதையும் மறந்து விடக் கூடாது. அன்று ஒளி பரப்பாகிய 'படையப்பா' படத்தின் நோக்கமும் அதுதான் என்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா? சினிமாவைத் தொடர்வாரா? கலைஞர் அரசியலை விட்டு ஒதுங்குவதாக சொல்லியிருப்பதால் ரஜினியின் கருத்தில் மாறுதல் ஏற்படுமா?
இந்த 'மில்லியன் டாலர்' கேள்விக்கு என்ன பதில்?
ரஜினியே பதில் சொல்லும் வரை இந்த கேள்விக்கு உயிர் உண்டு.
கேளம்பாக்கம் பண்ணை வீட்டை விட்டு அம்பாசடர் காரில் புறப்பட்டுவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்துக்குப் போய்விட முடியும். அவருக்காகவே காத்திருப்பவர்கள் தியான மண்டபத்தை திறந்துவிட ,உள்ளே சென்றதும் ரஜினி தியானத்தில் ஆழ்ந்து விடுவார். குறைந்தது நான்கு மணி நேரம் தியானம் நீடிப்பது உண்டு.
இப்படித் தன்னை மறந்து துறவு நிலைக்குப் போய் விடுகிறவருக்கு அரசியல் சரிப்படுமா?
அரசியல் மீது அவருக்கு பற்று ,பாசம் இல்லை என்றாலும் நாட்டின் நலத்திலும் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை உண்டு. அது இந்தியனின் கடமை என்கிறார். அதனால் அரசியலைத் தெரிந்து கொள்ள சில நண்பர்களிடம் பேசுவது உண்டு. ஆனால் அதையே சிலர் தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முற்பட்டதால் அந்த நட்பையும் துண்டித்துக் கொள்ளவேண்டியதாகி விட்டது.
நாட்டில் நிகழும் நல்லது கெட்டதை அவர் இப்பொதும் சிலரிடம் பகிர்ந்து கொள்வது உண்டு. ஆனால் அவர்கள் அரசியல் சாராதவர்கள்.
ரஜினிக்கு பதவிகள் மீது ஆசைகள் இருந்தது இல்லை.
விரும்பியிருந்தால் என்றைக்கோ ராஜ்ய சபா வில் அமர்ந்திருக்கலாம். அவர் கேட்டால் எந்த கட்சி ,மறுக்கும்? ஆகவே ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றே அவரது நண்பர்கள் சொல்கிறார்கள் .
சரி, சினிமாவில் தொடர்ந்து இருப்பாரா?
''எந்திரன்'' வரட்டும். அவரே சொல்வார் என்கிறார்கள்.
வியாழன், 10 டிசம்பர், 2009
ஒரு போராளியின் கதை...!
மிகவும் பெருமையாக இருந்தது. நாம் கர்வம் கொள்ளலாம். உலக அளவில் எவரும் செய்திராத அரிய- பெரிய சாதனையை தமிழர்கள் செய்திருக்கிறார்கள் .முழுக்க,முழுக்க உடல் ஊனமுற்றவர்கள் சேர்ந்து ஐம்பது நாட்களில் ஒரு தமிழ் திரைப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் . அந்த படத்தின் பெயர் ''மா''.
கதை,திரைக் கதை,வசனம் பேராசிரியர் மதன் கேப்ரியல்.அரசு திரைப் படக் கல்லூரி.
இயக்கியவர் இஸ்லாமியப் பெண்மணி பாத்திமாபீவி.
இசை அமைத்தவர் கிடியோன் கார்த்திக் .
நடனம் அமைத்தவர் அமுத ரஜினி.
பாடல்கள் சிதம்பர நாதன் .
துணை இயக்குனர் அருணா தேவி.
இப்படி படைப்பாளிகள் எல்லோருமே உடல் ஊனமுற்றவர்கள்தான்.
இசை அமைப்பாளருக்கு பார்வை இல்லை.டான்ஸ் மாஸ்டருக்கு போலியோ .கால் ஊனம்.ஆனால் அன்று மேடையில் சந்திரமுகி பாடலுக்கு ''ரா..ராரா''என்று சுழன்று ஆடியதைப் பார்த்த போது ஊனம் அவரிடம் இல்லை ,நம் பார்வையில்தான் என்பதை தெரிந்து கொண்டேன் .
படத்தை உருவாக்கியவர்கள் அனைவருமே ஊனமுற்றவர்கள்தான்.அவர்கள் தங்களை'' மாற்றுத் திறனாளிகள் ''enbathaakave அழைக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அது நியாயமும் ஆகும்.
''துணிந்தபின் என்ன தோழா !அந்த இமயமும் என்ன போடா''என்பது ''மா''படத்தில் இடம் பெற்றுள்ள பாடல். பாடலைக் கேட்டபோது உடல் சிலிர்த்தது நண்பர்களே.எத்தகைய வீரமிகு வரிகள்!
துடிப்பான மெட்டு. எழுச்சிமிகு குரல்.
''மா'' ஒரு போராளியின் காதல் கதை.
நடிகர்களில் சிலர் மட்டுமே ஊனமற்றவர்கள் ,கதையின் தேவை அப்படி.
தத்தி நடந்தும்,தவழ்ந்து நடந்தும் ,கம்புகளால் தட்டித் தட்டி நடந்தும் ,வழித்துணையுடன் தமிழ் இன உணர்வோடும் வந்திருந்த ''மாற்றுத் திறனாளிகளைப்பார்க்கபார்க்க பரவசமாக இருந்தது. அவர்களுக்கு இருக்கும் உணர்வு நம்மிடம் இல்லாமல் போனதேன் என்கிற கேள்வியும் எனக்குள் அரித்தது.
பிறவியின் பிழையால் பலவிதமாக பாதிக்கப் பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு திரைப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது ''கின்னசையும்'' விஞ்சியது.
இவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு அடியேன் கலந்து கொண்டது,நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் !
சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடப்பது பற்றிய சந்திப்பு.
என்னை எதிர் கொண்டவர் நடிகர்-அரசியல்வாதி எஸ்.வி.சேகர்.
வழக்கம் போல காமடி தூக்கல்!
''முன்னெல்லாம் உலக திரைப் பட விழா என்றால் தணிக்கை செய்யப் படாத படங்கள் இருக்கும் ,பார்க்கலாம் என்று வருவார்கள் ,இப்போது நம்ம ஆட்களே அந்த மாதிரிப் படங்களில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இப்போது சென்னையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் படத்துக்குத்தான் பெரிய 'டிமாண்ட்'' என்று சிரித்தார் ,சேகர்.
அவர் சொன்னது உண்மைதான்.
இந்த இடுகையைப் படிப்பவர்கள் நிச்சயம் ஏதோ ஒருவகையான உணர்வுக்கு ஆளாகக் கூடும். அதை என்னிடம் பகிர்ந்து கொண்டால் எனது அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு உதவக் கூடும்.
எதிர்பார்க்கிறேன்!
கதை,திரைக் கதை,வசனம் பேராசிரியர் மதன் கேப்ரியல்.அரசு திரைப் படக் கல்லூரி.
இயக்கியவர் இஸ்லாமியப் பெண்மணி பாத்திமாபீவி.
இசை அமைத்தவர் கிடியோன் கார்த்திக் .
நடனம் அமைத்தவர் அமுத ரஜினி.
பாடல்கள் சிதம்பர நாதன் .
துணை இயக்குனர் அருணா தேவி.
இப்படி படைப்பாளிகள் எல்லோருமே உடல் ஊனமுற்றவர்கள்தான்.
இசை அமைப்பாளருக்கு பார்வை இல்லை.டான்ஸ் மாஸ்டருக்கு போலியோ .கால் ஊனம்.ஆனால் அன்று மேடையில் சந்திரமுகி பாடலுக்கு ''ரா..ராரா''என்று சுழன்று ஆடியதைப் பார்த்த போது ஊனம் அவரிடம் இல்லை ,நம் பார்வையில்தான் என்பதை தெரிந்து கொண்டேன் .
படத்தை உருவாக்கியவர்கள் அனைவருமே ஊனமுற்றவர்கள்தான்.அவர்கள் தங்களை'' மாற்றுத் திறனாளிகள் ''enbathaakave அழைக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அது நியாயமும் ஆகும்.
''துணிந்தபின் என்ன தோழா !அந்த இமயமும் என்ன போடா''என்பது ''மா''படத்தில் இடம் பெற்றுள்ள பாடல். பாடலைக் கேட்டபோது உடல் சிலிர்த்தது நண்பர்களே.எத்தகைய வீரமிகு வரிகள்!
துடிப்பான மெட்டு. எழுச்சிமிகு குரல்.
''மா'' ஒரு போராளியின் காதல் கதை.
நடிகர்களில் சிலர் மட்டுமே ஊனமற்றவர்கள் ,கதையின் தேவை அப்படி.
தத்தி நடந்தும்,தவழ்ந்து நடந்தும் ,கம்புகளால் தட்டித் தட்டி நடந்தும் ,வழித்துணையுடன் தமிழ் இன உணர்வோடும் வந்திருந்த ''மாற்றுத் திறனாளிகளைப்பார்க்கபார்க்க பரவசமாக இருந்தது. அவர்களுக்கு இருக்கும் உணர்வு நம்மிடம் இல்லாமல் போனதேன் என்கிற கேள்வியும் எனக்குள் அரித்தது.
பிறவியின் பிழையால் பலவிதமாக பாதிக்கப் பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு திரைப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள் என்பது ''கின்னசையும்'' விஞ்சியது.
இவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு அடியேன் கலந்து கொண்டது,நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் !
சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடப்பது பற்றிய சந்திப்பு.
என்னை எதிர் கொண்டவர் நடிகர்-அரசியல்வாதி எஸ்.வி.சேகர்.
வழக்கம் போல காமடி தூக்கல்!
''முன்னெல்லாம் உலக திரைப் பட விழா என்றால் தணிக்கை செய்யப் படாத படங்கள் இருக்கும் ,பார்க்கலாம் என்று வருவார்கள் ,இப்போது நம்ம ஆட்களே அந்த மாதிரிப் படங்களில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இப்போது சென்னையில் காஞ்சிபுரம் அர்ச்சகர் படத்துக்குத்தான் பெரிய 'டிமாண்ட்'' என்று சிரித்தார் ,சேகர்.
அவர் சொன்னது உண்மைதான்.
இந்த இடுகையைப் படிப்பவர்கள் நிச்சயம் ஏதோ ஒருவகையான உணர்வுக்கு ஆளாகக் கூடும். அதை என்னிடம் பகிர்ந்து கொண்டால் எனது அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு உதவக் கூடும்.
எதிர்பார்க்கிறேன்!
செவ்வாய், 8 டிசம்பர், 2009
'செக்ஸ்'அர்ச்சகருக்கு வக்காலத்து.
''கோவில் அர்ச்சகரும் மனிதன்தானே ,அவருக்கு காம உணர்வுகள் இருப்பது தப்பு இல்லை !விபசாரிகளை காசு கொடுத்துத் தானே அனுபவித்திருக்கிறார்.அதில் என்ன தவறு இருக்கிறது '' என்று ஒரு பெண் எழுதியிருக்கிறார்[!].
பெண்ணின் பெயரில் ஒரு ஆண் எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன்.
எழுதியது ஆணா, பெண்ணா என்பதல்ல நம் கவலை.
பொதுவான ஒரு இடத்தில் ,மதம் சார்ந்த இடத்தில் ,வழிபாட்டுத் தளத்தில் ,பல பெண்களுடன் முறை கேடாக ,ஒழுக்கக் கேடாக அர்ச்சகன் காம வேட்டை ஆடியதை தவறில்லை என்று சொல்லுவதுதான் கவலை அளிக்கிறது.
கடவுள் இருக்கிறாரா,இல்லையா?
அது ஆத்திக-நாத்திக விவாதத்திற்குரியது.
நாம் கவலைப் படுவது ஒழுக்கத்தைப் பற்றி!
கடற்கரை,திரை அரங்குகள் ,காப்பி ஷாப் இவைகளுக்கு அடுத்து காதலர்கள் சந்திக்கும் இடமாக கோவில்கள் இருக்கின்றன என்பது கவலைக்குரிய உண்மை! இதை யாரும் மறுக்க முடியாது.
இப்படி ஒரு சூழல் இருந்து வருகிறபோது ,கோவில் கருவறையை காமக் கூடமாக அர்ச்சகர் மாற்றிக் கொண்டது தப்பில்லை என வாதிடுவது சமூக நலனுக்கு நல்லதில்லை.
செக்ஸ் அர்ச்சகருக்கு ஆதரவான கருத்து நிச்சயமாக ஒரு பெண்ணின் கருத்தாக இருக்க முடியாது.
பெண்ணின் பெயருக்குப் பின் இருக்கிற ஒரு ஆணின் ஆதிக்க வெளிப்பாடுதான் அது.
ஐவருக்கு ஒரு மனைவி சாத்தியமாகிறது மகாபாரதக் கதையில்!
அதுவே நிஜத்தில் நடக்குமேயானால் அந்த பெண்ணைக் கைது செய்து விபச்சார வழக்குப் பதிவு செய்துவிடுவார்கள்.
நீதி போதனைக் கதையாக இருந்தாலும் ,நிஜக் கதையாக இருந்தாலும் ஆணாதிக்கம்தான் தலை தூக்கிநிற்கும்.
ஆண்களுக்குத் திமிர் எடுத்தால் எங்கேயும் ,யாருடனும் போகலாம் என்பது செக்ஸ் அர்ச்சகருக்கு வக்காலத்து வாங்கும் செயல்தான் .
இந்தக் கருத்து உங்களுக்கு உடன்பாடா ஐயா?
அப்படியென்றால் எனக்குபோடுங்கய்யா வோட்டு!
பெண்ணின் பெயரில் ஒரு ஆண் எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன்.
எழுதியது ஆணா, பெண்ணா என்பதல்ல நம் கவலை.
பொதுவான ஒரு இடத்தில் ,மதம் சார்ந்த இடத்தில் ,வழிபாட்டுத் தளத்தில் ,பல பெண்களுடன் முறை கேடாக ,ஒழுக்கக் கேடாக அர்ச்சகன் காம வேட்டை ஆடியதை தவறில்லை என்று சொல்லுவதுதான் கவலை அளிக்கிறது.
கடவுள் இருக்கிறாரா,இல்லையா?
அது ஆத்திக-நாத்திக விவாதத்திற்குரியது.
நாம் கவலைப் படுவது ஒழுக்கத்தைப் பற்றி!
கடற்கரை,திரை அரங்குகள் ,காப்பி ஷாப் இவைகளுக்கு அடுத்து காதலர்கள் சந்திக்கும் இடமாக கோவில்கள் இருக்கின்றன என்பது கவலைக்குரிய உண்மை! இதை யாரும் மறுக்க முடியாது.
இப்படி ஒரு சூழல் இருந்து வருகிறபோது ,கோவில் கருவறையை காமக் கூடமாக அர்ச்சகர் மாற்றிக் கொண்டது தப்பில்லை என வாதிடுவது சமூக நலனுக்கு நல்லதில்லை.
செக்ஸ் அர்ச்சகருக்கு ஆதரவான கருத்து நிச்சயமாக ஒரு பெண்ணின் கருத்தாக இருக்க முடியாது.
பெண்ணின் பெயருக்குப் பின் இருக்கிற ஒரு ஆணின் ஆதிக்க வெளிப்பாடுதான் அது.
ஐவருக்கு ஒரு மனைவி சாத்தியமாகிறது மகாபாரதக் கதையில்!
அதுவே நிஜத்தில் நடக்குமேயானால் அந்த பெண்ணைக் கைது செய்து விபச்சார வழக்குப் பதிவு செய்துவிடுவார்கள்.
நீதி போதனைக் கதையாக இருந்தாலும் ,நிஜக் கதையாக இருந்தாலும் ஆணாதிக்கம்தான் தலை தூக்கிநிற்கும்.
ஆண்களுக்குத் திமிர் எடுத்தால் எங்கேயும் ,யாருடனும் போகலாம் என்பது செக்ஸ் அர்ச்சகருக்கு வக்காலத்து வாங்கும் செயல்தான் .
இந்தக் கருத்து உங்களுக்கு உடன்பாடா ஐயா?
அப்படியென்றால் எனக்குபோடுங்கய்யா வோட்டு!
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
கவிஞர் சிநேகனின் நமீதா ஆசை!
நில் கவனி என்னை காதலி படத்தின் இசை,முன்னோட்டம் வெளியீட்டு விழாவுக்கு செம கூட்டம்.சிறப்பு விருந்தினர் நமீதா .
எல்லா மீடியாக்களும் சென்ட் ப்ரெசென்ட் ஆஜர்!
கதாநாயகனின் படத்தை தம்மாத்துண்டு சைசில் வைத்துவிட்டு ,நமீதாவின் படத்தை பெரிசு பெரிசாக வைத்திருந்தனர். பெப்சி தலைவர் குகநாதனே வருத்தப் பட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .
''கவர்ச்சி தப்பில்லை.தமிழ் ரசிகனுக்கு 'தள..தள 'என்று இருக்கவேண்டும் .நமீதா அப்படித் தான் இருக்கிறார். தமிழ் படங்களுக்கு கலைஞர் விலக்கு கொடுத்திருப்பதே அந்த படத்தில் தமிழ் பண்பாடு ,கலாச்சாரம் இதெல்லாம் இருக்கவேண்டும் என்பதுதான். பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு ''கதாநாயகனின் படத்தை காணலியே'' என்று பின் பக்கமாக பார்க்க '' கீழே பாருங்க'' என்று பானரை காட்டினார்கள்.
சிரித்துக் கொண்டே உட்கார்ந்து விட்டார்,வி சி .கு.
பாடலாசிரியர் சிநேகன் பேச வந்தார்.
'' எங்க கிராமங்களில் இப்பல்லாம் பாவாடை,தாவணி போட்ட பொண்ணுகளைப் பார்க்க முடியலே .நான் நமீதாவைபாவாடை 'தாவணியில் பார்க்கணும்னு ஆசைப் படுகிறேன்.''என்றார்.
'' என்னை பாவாடை,தாவணியில் யாருங்க நடிக்க வைக்கப் போறாங்க .அதெல்லாம் நடக்கப் போறதில்ல'' என்று சிநேகனைப் பார்த்து சிரிக்க ,கவிஞர் விடுவதாக இல்லை.
''நான் டைரக்ட் பண்றேன்'' என்று ஆசையை சொல்லிவிட்டார். முன்னோட்டக் காட்சியில் நடிகர் பாலாவும் நமீதாவும் காதல் காட்சியில் காட்டியிருந்த நெருக்கம் சினேகனை அப்படி பேச வைத்து விட்டது.
எல்லா மீடியாக்களும் சென்ட் ப்ரெசென்ட் ஆஜர்!
கதாநாயகனின் படத்தை தம்மாத்துண்டு சைசில் வைத்துவிட்டு ,நமீதாவின் படத்தை பெரிசு பெரிசாக வைத்திருந்தனர். பெப்சி தலைவர் குகநாதனே வருத்தப் பட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .
''கவர்ச்சி தப்பில்லை.தமிழ் ரசிகனுக்கு 'தள..தள 'என்று இருக்கவேண்டும் .நமீதா அப்படித் தான் இருக்கிறார். தமிழ் படங்களுக்கு கலைஞர் விலக்கு கொடுத்திருப்பதே அந்த படத்தில் தமிழ் பண்பாடு ,கலாச்சாரம் இதெல்லாம் இருக்கவேண்டும் என்பதுதான். பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டு ''கதாநாயகனின் படத்தை காணலியே'' என்று பின் பக்கமாக பார்க்க '' கீழே பாருங்க'' என்று பானரை காட்டினார்கள்.
சிரித்துக் கொண்டே உட்கார்ந்து விட்டார்,வி சி .கு.
பாடலாசிரியர் சிநேகன் பேச வந்தார்.
'' எங்க கிராமங்களில் இப்பல்லாம் பாவாடை,தாவணி போட்ட பொண்ணுகளைப் பார்க்க முடியலே .நான் நமீதாவைபாவாடை 'தாவணியில் பார்க்கணும்னு ஆசைப் படுகிறேன்.''என்றார்.
'' என்னை பாவாடை,தாவணியில் யாருங்க நடிக்க வைக்கப் போறாங்க .அதெல்லாம் நடக்கப் போறதில்ல'' என்று சிநேகனைப் பார்த்து சிரிக்க ,கவிஞர் விடுவதாக இல்லை.
''நான் டைரக்ட் பண்றேன்'' என்று ஆசையை சொல்லிவிட்டார். முன்னோட்டக் காட்சியில் நடிகர் பாலாவும் நமீதாவும் காதல் காட்சியில் காட்டியிருந்த நெருக்கம் சினேகனை அப்படி பேச வைத்து விட்டது.
சனி, 5 டிசம்பர், 2009
இளையராஜா பிரதர்ஸ் தேர்தல் பாட்டு.
இதைப் படிப்பவர்கள் கோபப் பட்டாலும் சரி,''சரியாத் தான்யா சொல்லியிருக்கிறான் '' என்று சந்தோசப் பட்டாலும் சரி 'நச்'னு உங்கள் கருத்துகளை கமெண்ட்ஸ்ல அடிச்சிருங்க!
இடைத் தேர்தல்கள் வரப் போகுது. தொடர்ந்து பொதுத் தேர்தல் வந்தாலும் வரலாம்.
வாக்காளனை நினைச்சு பெருமைப் படணும் சார்! ஒரு காலத்தில் நிமிர்ந்து நின்னவன் ''எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன்'னு இப்ப விவேக் ஸ்டைலில் வளைஞ்சு நின்னாலும் ''ரேட்டில்'' நிமிர்ந்திட்டானே !
மஞ்சப் பெட்டி,சிவப்புப் பெட்டின்னு கலர்களில் ஓட்டுப் பெட்டி இருந்த போது வாக்காளன் வீரனாகவே இருந்தான். கலர் மாறி வாக்கு சீட்டில் சின்னங்கள் வந்தபிறகு படிப்படியா கீழிறங்க ஆரம்பிச்சிட்டான். ஒரு ஓட்டுக்கு குறைஞ்சது அஞ்சு ரூபா கொடுக்க ஆரம்பித்த 'அபேட்சகர்கள்' போகப் போக' வேட்பாளர்கள்' என்று மாறியதும் நூறு,இருநூறு என்று ரேட்டை .ஏத்தி விட்டார்கள். அந்த காலத்தில் ,கம்யு. கட்சிக்காக மேடைகளில் கச்சேரி செய்த அன்றைய இளையராஜா சகோதரர்கள் ''ஒத்த ரூபாயும் தாரேன் உப்புமா காப்பியும் தரேன், ரெட்டைக் காளை மேல பாத்து ஓட்டைக் குத்து'' என்று பாடி அன்றைய பட்டுவாடா நிலைமையை வெளிப் படுத்தி இருக்கிறார்கள்.
வாக்காளனுக்கு ருசியைக் காட்டிவிட்டார்கள் அந்தக் காலத்திலேயே!
வேட்டி,சேலை ,எவர்சில்வர் குடம் ,என்று மொய் வைக்கிறமாதிரி பணம்,காசு வைத்து ருசியை அதிகப்படுத்தி விட்டார்கள்.
மூக்குத்தி கொடுத்து ஓட்டுக் கேட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. அதன்பிறகு கோழிப் பிரியாணி ,குவாட்டர் ,கூடவே நாலு இலக்கத்தில் கவனிப்பு என்று வாக்காளன் தன்னுடைய ''ரேட்டை'' உயர்த்திவிட்டான்.
''வாக்காளா ,உன் கையில் இருக்கிற வாக்கு சீட்டில்தான் நாட்டின் தலை விதியே இருக்கு''என்று சொல்லி சொல்லி அரசியல்வாதிகள் மக்களைக் 'கரப்ட்' பண்ணிவிட்டார்கள். பணம் காசுக்குப் பழக்கப் படுத்திவிட்டார்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் ''தலைவிதியை'' மாற்றிக் கொள்வதற்காக மக்களின் மனநிலையை மாற்றிவிட்டார்கள்.இப்படியெல்லாம் குற்ற சாட்டுகள் உண்டு.
வோட்டு வாங்கி செயித்தவர்கள் மாட மாளிகைகளிலும் ,அவர்களை செயிக்கவிட்டவர்கள் குடிசைகளிலும் வாழ்கிறார்கள்.
வாக்காளன் இன்னமும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறான்.
யாரும் ஓட்டுப் போடாமல் இருக்கக் கூடாது.அது குற்றம் என்று வாய் கிழிந்தவர்கள் இப்போது 'ஓட்டுப் போட விரும்பவில்லை 'என்பதை ஓட்டு சீட்டில் 'ஓ' குத்தி போட சொல்கிறார்கள். அவனே விருப்பமில்லாமல் தானே வீட்டில் படுத்துக் கிடக்கிறான். அவனை ஏன் வம்பாக இழுத்து வந்து வரிசையில் நிற்க வைக்கிறீர்கள்? அவன் வந்தாலும் வராவிட்டாலும் அவனது வோட்டு எந்த கட்சிக்காவது போய் விடும். செத்தவர்கள் உயிர் பிழைப்பது தேர்தல் காலத்தில்தான் .
சரி, தீர்வுதான் என்ன?
ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களை தண்டிக்க அரசியல் கட்சிகள் விரும்புமா? எந்த அரசு வந்தாலும் இதே கதைதான். அதனால் தேர்தல் கமிசனே ஒரு ரேட்டை நிர்ணயம் பண்ணினால் என்ன? இது யோசனைதான் !
இடைத் தேர்தல்கள் வரப் போகுது. தொடர்ந்து பொதுத் தேர்தல் வந்தாலும் வரலாம்.
வாக்காளனை நினைச்சு பெருமைப் படணும் சார்! ஒரு காலத்தில் நிமிர்ந்து நின்னவன் ''எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டேன்'னு இப்ப விவேக் ஸ்டைலில் வளைஞ்சு நின்னாலும் ''ரேட்டில்'' நிமிர்ந்திட்டானே !
மஞ்சப் பெட்டி,சிவப்புப் பெட்டின்னு கலர்களில் ஓட்டுப் பெட்டி இருந்த போது வாக்காளன் வீரனாகவே இருந்தான். கலர் மாறி வாக்கு சீட்டில் சின்னங்கள் வந்தபிறகு படிப்படியா கீழிறங்க ஆரம்பிச்சிட்டான். ஒரு ஓட்டுக்கு குறைஞ்சது அஞ்சு ரூபா கொடுக்க ஆரம்பித்த 'அபேட்சகர்கள்' போகப் போக' வேட்பாளர்கள்' என்று மாறியதும் நூறு,இருநூறு என்று ரேட்டை .ஏத்தி விட்டார்கள். அந்த காலத்தில் ,கம்யு. கட்சிக்காக மேடைகளில் கச்சேரி செய்த அன்றைய இளையராஜா சகோதரர்கள் ''ஒத்த ரூபாயும் தாரேன் உப்புமா காப்பியும் தரேன், ரெட்டைக் காளை மேல பாத்து ஓட்டைக் குத்து'' என்று பாடி அன்றைய பட்டுவாடா நிலைமையை வெளிப் படுத்தி இருக்கிறார்கள்.
வாக்காளனுக்கு ருசியைக் காட்டிவிட்டார்கள் அந்தக் காலத்திலேயே!
வேட்டி,சேலை ,எவர்சில்வர் குடம் ,என்று மொய் வைக்கிறமாதிரி பணம்,காசு வைத்து ருசியை அதிகப்படுத்தி விட்டார்கள்.
மூக்குத்தி கொடுத்து ஓட்டுக் கேட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு. அதன்பிறகு கோழிப் பிரியாணி ,குவாட்டர் ,கூடவே நாலு இலக்கத்தில் கவனிப்பு என்று வாக்காளன் தன்னுடைய ''ரேட்டை'' உயர்த்திவிட்டான்.
''வாக்காளா ,உன் கையில் இருக்கிற வாக்கு சீட்டில்தான் நாட்டின் தலை விதியே இருக்கு''என்று சொல்லி சொல்லி அரசியல்வாதிகள் மக்களைக் 'கரப்ட்' பண்ணிவிட்டார்கள். பணம் காசுக்குப் பழக்கப் படுத்திவிட்டார்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் ''தலைவிதியை'' மாற்றிக் கொள்வதற்காக மக்களின் மனநிலையை மாற்றிவிட்டார்கள்.இப்படியெல்லாம் குற்ற சாட்டுகள் உண்டு.
வோட்டு வாங்கி செயித்தவர்கள் மாட மாளிகைகளிலும் ,அவர்களை செயிக்கவிட்டவர்கள் குடிசைகளிலும் வாழ்கிறார்கள்.
வாக்காளன் இன்னமும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறான்.
யாரும் ஓட்டுப் போடாமல் இருக்கக் கூடாது.அது குற்றம் என்று வாய் கிழிந்தவர்கள் இப்போது 'ஓட்டுப் போட விரும்பவில்லை 'என்பதை ஓட்டு சீட்டில் 'ஓ' குத்தி போட சொல்கிறார்கள். அவனே விருப்பமில்லாமல் தானே வீட்டில் படுத்துக் கிடக்கிறான். அவனை ஏன் வம்பாக இழுத்து வந்து வரிசையில் நிற்க வைக்கிறீர்கள்? அவன் வந்தாலும் வராவிட்டாலும் அவனது வோட்டு எந்த கட்சிக்காவது போய் விடும். செத்தவர்கள் உயிர் பிழைப்பது தேர்தல் காலத்தில்தான் .
சரி, தீர்வுதான் என்ன?
ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களை தண்டிக்க அரசியல் கட்சிகள் விரும்புமா? எந்த அரசு வந்தாலும் இதே கதைதான். அதனால் தேர்தல் கமிசனே ஒரு ரேட்டை நிர்ணயம் பண்ணினால் என்ன? இது யோசனைதான் !
செவ்வாய், 1 டிசம்பர், 2009
முன்னணி நடிகருக்கு வலை வீசும் அதிமுக
அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது எதிர்பாராத ஒரு அழைப்பு ,தொலைபேசியில் !
பேசியவர் எனது நண்பர் .
அவர் அரசியல் களம் .
நானோ திரைப் படம் சார்ந்த செய்தியாளன் .
அத்திப் பூத்தது மாதிரி தான் எங்கள் சந்திப்பு.
''நான் கேள்விப் பட்டதை சொல்லுகிறேன் .விசாரித்து சொல்கிறீர்களா?''என்று என்னிடம் கேட்டார்.
''செய்தி என்ன?'' என்று கேட்டேன்.
''அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒரு முன்னணி நடிகரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .சின்னம்மா சசிகலாவின் ஆலோசனைப் படி இந்தப் பேச்சு நடக்கிறது. எதற்காக என்பது தெரியவில்லை .ஏன் என்பதும் புரியவில்லை! அதிமுக தரப்பில் விசாரித்தபோது மறுப்பு ஏதும் சொல்லாமல் சிரிக்கிறார்கள். நீங்கள் நடிகர் தரப்பில் விசாரியுங்களேன்'' என்று நட்புடன் கேட்டார் .
அவர் குறிப்பிட்ட நடிகர் யார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
அரசியலிலும் ,சினிமாவிலும் எதுவும் ,எப்போதும் ,நடக்கலாம்.
திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்த 'நடிகர்திலகம்' கருத்து வேறுபாடு காரணமாக தேசிய இயக்கத்திற்கு வந்ததும் ,தேசிய இயக்கத்தில் இருந்த 'புரட்சித் தலைவர்' திராவிட இயக்கத்திற்கு வந்ததும் தமிழக அரசியலில் முன்னுதாரணமாக இருக்கின்றன .
இரண்டு பெரிய நடிகர்கள் ஒரே இயக்கத்தில் இருப்பது சாத்தியமில்லை. யாருக்கு முதலிடம் என்று தொழில் ரீதியாக போட்டியிடக் கூடியவர்கள் எவரும் இரண்டாம் இடத்திற்கு வர விரும்ப மாட்டார்கள் !
ஒரே உறையில் இரண்டு வாள்கள் இருக்கமுடியாது என்பது அனுபவப் பூர்வமான வாய் மொழியாகும்.
இந்த அடிப்படையில் எனது நண்பரின் தகவலை விசாரித்தேன்.
நடிகர் தரப்பில் கசப்பு இருக்கிறது என்கிற உண்மை தொடக்கத்திலேயே முகம் காட்டிவிட்டது.
நடிகர் நடித்திருக்கும் படத்தின் உரிமையை வாங்கி இருக்கிற ஒரு தொலைக் காட்சி தந்த நெருக்கடிகளே காரணம் என்பதாக ஒரு பிரிவினர் சொன்னார்கள்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு அதிமுக காய்களை நகர்த்தி வருகிறது .
வளர்ந்து கொண்டிருக்கிற 'சூப்பர் ஸ்டார்''களில் ஒருவரை தங்களது
ஆதரவாளராக மாற்றுவதற்கு பலே வியூகங்களை வகுத்துக் கொண்டுள்ளது.
இதை என் நண்பனிடம் சொன்னேன்.
இது உண்மையா, இல்லையா என்பதை அவனே கண்டுபிடிக்கட்டும்.
பேசியவர் எனது நண்பர் .
அவர் அரசியல் களம் .
நானோ திரைப் படம் சார்ந்த செய்தியாளன் .
அத்திப் பூத்தது மாதிரி தான் எங்கள் சந்திப்பு.
''நான் கேள்விப் பட்டதை சொல்லுகிறேன் .விசாரித்து சொல்கிறீர்களா?''என்று என்னிடம் கேட்டார்.
''செய்தி என்ன?'' என்று கேட்டேன்.
''அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஒரு முன்னணி நடிகரின் தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .சின்னம்மா சசிகலாவின் ஆலோசனைப் படி இந்தப் பேச்சு நடக்கிறது. எதற்காக என்பது தெரியவில்லை .ஏன் என்பதும் புரியவில்லை! அதிமுக தரப்பில் விசாரித்தபோது மறுப்பு ஏதும் சொல்லாமல் சிரிக்கிறார்கள். நீங்கள் நடிகர் தரப்பில் விசாரியுங்களேன்'' என்று நட்புடன் கேட்டார் .
அவர் குறிப்பிட்ட நடிகர் யார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
அரசியலிலும் ,சினிமாவிலும் எதுவும் ,எப்போதும் ,நடக்கலாம்.
திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்த 'நடிகர்திலகம்' கருத்து வேறுபாடு காரணமாக தேசிய இயக்கத்திற்கு வந்ததும் ,தேசிய இயக்கத்தில் இருந்த 'புரட்சித் தலைவர்' திராவிட இயக்கத்திற்கு வந்ததும் தமிழக அரசியலில் முன்னுதாரணமாக இருக்கின்றன .
இரண்டு பெரிய நடிகர்கள் ஒரே இயக்கத்தில் இருப்பது சாத்தியமில்லை. யாருக்கு முதலிடம் என்று தொழில் ரீதியாக போட்டியிடக் கூடியவர்கள் எவரும் இரண்டாம் இடத்திற்கு வர விரும்ப மாட்டார்கள் !
ஒரே உறையில் இரண்டு வாள்கள் இருக்கமுடியாது என்பது அனுபவப் பூர்வமான வாய் மொழியாகும்.
இந்த அடிப்படையில் எனது நண்பரின் தகவலை விசாரித்தேன்.
நடிகர் தரப்பில் கசப்பு இருக்கிறது என்கிற உண்மை தொடக்கத்திலேயே முகம் காட்டிவிட்டது.
நடிகர் நடித்திருக்கும் படத்தின் உரிமையை வாங்கி இருக்கிற ஒரு தொலைக் காட்சி தந்த நெருக்கடிகளே காரணம் என்பதாக ஒரு பிரிவினர் சொன்னார்கள்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு அதிமுக காய்களை நகர்த்தி வருகிறது .
வளர்ந்து கொண்டிருக்கிற 'சூப்பர் ஸ்டார்''களில் ஒருவரை தங்களது
ஆதரவாளராக மாற்றுவதற்கு பலே வியூகங்களை வகுத்துக் கொண்டுள்ளது.
இதை என் நண்பனிடம் சொன்னேன்.
இது உண்மையா, இல்லையா என்பதை அவனே கண்டுபிடிக்கட்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
நான் சென்னை வந்து தேவி வார இதழில் பணியாற்றிய நேரம். அப்போது தலைவர் எம்.ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக செல்வி.ஜெயலலிதா நியமிக்...
-
லேடி காகா! மேலை நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தின் ஒரு பகுதியை தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் பாடகி லேடி காகா! பூத்துக் குலுங்கும் ...