நடிகர் ஜெய் ஆகாஷ் இயக்குகிற படம் ''ஆயுத போராட்டம்''
''டைட்டில் வித்தியாசமாக இருக்கிறது. கதை என்ன?''என்றேன்.
''தமிழீழ தமிழன்-தமிழக தமிழன் பற்றிய கதை.இந்த இரண்டு கேரக்டரையும் நானே செய்கிறேன்.''என்றார் ஜெய் ஆகாஷ்.
''விடுதலைப் புலிகளை பற்றிய படமா?'' பட்டென கேட்டுவிட்டேன்.தமிழீழம் என்றால் புலிகளின் விடுதலை முழக்கம் இல்லாமல் படம் எடுப்பது இயலாத ஒன்று.
''அதை இப்போது சொல்ல இயலாது. உலகத் தமிழர்களின் உணர்வுகளை கண்டிப்பாக இந்த படம் எதிரொலிக்கும்.இந்த படத்திற்காக நாங்கள் தாய்லாந்து போகிறோம்.போர்க்கள காட்சிகளை அங்குதான் படமாக்கப் போகிறோம்.''
''கமர்சியல் என்கிற பெயரில் குத்தாட்டம் ,காமடி என்கிற பெயரில் ஆபாச வசனங்கள் என்று நிரப்பப் போகிறீர்களா? கதையின் உணர்வு கெட்டுவிடுமே"என்கிற கவலையை பதிவு செய்ய,
மனிதர் சற்று ஆடித்தான் போனார்.''உயர்வான நோக்குடன் கதை, திரைக் கதை,வசனம் என பொறுப்பு ஏற்றுள்ள நான் அத்தகைய தவறுகளை செய்ய மாட்டேன்.நீங்களெல்லாம் பாராட்டும் வகையில் இந்த படம் இருக்கும்''
என்றார்.
. தொடர்ந்து ''எனக்கு இந்த படப் பிடிப்பை தமிழீழத்தில்தான் எடுக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால் அனுமதி கிடைக்காது என்பதால் தாய்லாந்தை தேர்ந்தெடுத்தேன்.தயாரிப்பாளரும் செலவு பற்றி கவலைப் படவில்லை.பிப்ரவரி 27 எங்கள் பயணம் தொடங்குகிறது.''என்றார் ஜெய் ஆகாஷ்.
''பாடல்களின் வரிகளில் வீரியம் இருக்கவேண்டுமே ,யார் எழுதுகிறார்கள்?''
''செந்தமிழ்தாசனும் ,ஆண்டாள் பிரியதரிசினியும் எழுதுகிறார்கள்.''
''உச்சகட்டகாட்சியாக என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள்?''
''தமிழர்களின் கருத்தாக கிளைமாக்ஸ் இருக்கும்''என்றார்.
வாழ்த்துகளை சொல்லி விடை பெற்றேன்.
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக....!
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை பார்த்து விட்டு வந்ததும் எதிர்பட்டவர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.
'' எப்ப ஹீரோவாக களம் இறங்கப் போறீங்க''என்று கேட்டேன்.
''அவசரப் படணுமா? ''
''எதுக்காக தயக்கம்?''
''நல்ல கதை வேணும்.எனக்கேத்த கேரக்டரா அமையனும் .வெயிட் பண்றது தப்பில்லேன்னு நினைக்கிறேன்''
''அதுவும் சரிதான்.சிலர் உசுப்பேத்தி விட்ருவாங்க. எச்சரிக்கையாக இருப்பது தப்பில்லே''என்று சொல்லி கை கொடுத்துவிட்டு திரும்பிவிட்டேன்.
'' எப்ப ஹீரோவாக களம் இறங்கப் போறீங்க''என்று கேட்டேன்.
''அவசரப் படணுமா? ''
''எதுக்காக தயக்கம்?''
''நல்ல கதை வேணும்.எனக்கேத்த கேரக்டரா அமையனும் .வெயிட் பண்றது தப்பில்லேன்னு நினைக்கிறேன்''
''அதுவும் சரிதான்.சிலர் உசுப்பேத்தி விட்ருவாங்க. எச்சரிக்கையாக இருப்பது தப்பில்லே''என்று சொல்லி கை கொடுத்துவிட்டு திரும்பிவிட்டேன்.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வராதா?
'' 1967 -க்குப் பிறகு தமிழகத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்களின் ஆட்சியே நடந்து கொண்டு வருகிறது.அண்ணா வந்தார்,அவருக்குப்பின் கலைஞர் வந்தார் ,பிறகு எம்.ஜி. ஆர் . வந்தார்,தொடர்ந்து ஜெயலலிதா வும் ,வி.என்.ஜானகியும். இப்படியாக திரைத்துறையை சேர்ந்தவர்களிடமே ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது.இனிமேலும் ஆட்சி அவர்களிடமே இருக்கும்.இதை யாராலும் மாற்ற முடியாது''
இப்படி ஆணி அடித்திருக்கிறார் வி.சி.குகநாதன்.பெப்சி தலைவர்.25 ஆயிரம் தொழிலாளர்களின் தலைவர்.
அவர் அத்துடன் நின்றுவிடாமல் எச்சரிக்கை ஒன்றும் விட்டிருக்கிறார்.அவர் யாரை நினைத்து இப்படி குண்டு வீசினார் என்பது ஏழுகடல் ஏழு மலை தாண்டி கண்டுபிடிக்க வேண்டிய ரகசியம் இல்லை.சாட்சாத் ரஜினிகாந்துதான் என்பது அவரது பேச்சிலேயே மறைந்து இருக்கிறது.
''வெளியே இருந்து வந்தவர்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ,வற்புறுத்தலை கூட மிரட்டல் என்று சொல்கிறார்கள்''என்கிறார் ,வி.சி.கு. நானும் நீங்களும் அவர் சொன்ன ஆள் அஜித் என்பதாக புரிந்துகொள்வோமாம்.
அஜித் எந்த காலத்தில் ஆட்சியை பிடிப்பதாக சொன்னார். ரஜினியை அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டது திமுகவும் ,தேசிய கட்சிகளும்தானே !அவரது 'வாய்ஸ் 'கிடைக்காதா என்று காத்திருப்போர் பட்டியலில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பது குகநாதனுக்கு தெரியாததல்ல .
சங்கத்தில் உறுப்பினர் என்பது 'அடிமை சாசனம்'அல்ல! உறுப்பினர் ஆகி விடுவதால் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டதாக நினைத்து விடக்கூடாது . நான் சாமி கும்பிடமாட்டேன் ,கோவில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறபோது 'நீ வந்துதான் ஆக வேண்டும் 'என்று கட்டாயப்படுத்தினால் அதன் பெயர் என்ன? இன்று கலைஞருக்கு விழா எடுப்பவர்கள் நாளைக்கு' ஜெ 'ஆட்சிக்கு வந்தால் அவருக்கும் விழா எடுப்பார்கள் .அது தவிர்க்க முடியாதது. இன்று இவருக்கு புகழ் மாலைகள் போடுவதைப்போல் அவருக்கும் போடவேண்டும். தமிழுணர்வு தடுக்காது. 'ஜெ'யும் சினிமாவை சேர்ந்தவர்தான் என்று சொல்லிவிடுவார் வி.சி.கு.
விஜயகாந்த் வந்தாலும் இதே பதிலை சொல்லிவிடுவார் .
சினிமாவை சேர்ந்தவர்கள்தான் தொடர்ந்து ஆட்சிக்கு வரமுடியும் என்று ஆணி அடிப்பவர் கண்களுக்கு 'ரஜினியும்,அஜித்தும் ''வெளி ஆட்களாக''தெரிவது எதனால்?
சினிமாவை சேர்ந்தவர்கள்தான் ஆட்சியை பிடிப்பார்கள் என்றால் என்றால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்கவே முடியாதா?அந்த கட்சியைசேர்ந்தவர்கள் சினிமாவில் யாரும் இல்லை என்பதால் இப்படியா நக்கல் பண்ணுவது?
இப்படி ஆணி அடித்திருக்கிறார் வி.சி.குகநாதன்.பெப்சி தலைவர்.25 ஆயிரம் தொழிலாளர்களின் தலைவர்.
அவர் அத்துடன் நின்றுவிடாமல் எச்சரிக்கை ஒன்றும் விட்டிருக்கிறார்.அவர் யாரை நினைத்து இப்படி குண்டு வீசினார் என்பது ஏழுகடல் ஏழு மலை தாண்டி கண்டுபிடிக்க வேண்டிய ரகசியம் இல்லை.சாட்சாத் ரஜினிகாந்துதான் என்பது அவரது பேச்சிலேயே மறைந்து இருக்கிறது.
''வெளியே இருந்து வந்தவர்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ,வற்புறுத்தலை கூட மிரட்டல் என்று சொல்கிறார்கள்''என்கிறார் ,வி.சி.கு. நானும் நீங்களும் அவர் சொன்ன ஆள் அஜித் என்பதாக புரிந்துகொள்வோமாம்.
அஜித் எந்த காலத்தில் ஆட்சியை பிடிப்பதாக சொன்னார். ரஜினியை அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டது திமுகவும் ,தேசிய கட்சிகளும்தானே !அவரது 'வாய்ஸ் 'கிடைக்காதா என்று காத்திருப்போர் பட்டியலில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பது குகநாதனுக்கு தெரியாததல்ல .
சங்கத்தில் உறுப்பினர் என்பது 'அடிமை சாசனம்'அல்ல! உறுப்பினர் ஆகி விடுவதால் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டதாக நினைத்து விடக்கூடாது . நான் சாமி கும்பிடமாட்டேன் ,கோவில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறபோது 'நீ வந்துதான் ஆக வேண்டும் 'என்று கட்டாயப்படுத்தினால் அதன் பெயர் என்ன? இன்று கலைஞருக்கு விழா எடுப்பவர்கள் நாளைக்கு' ஜெ 'ஆட்சிக்கு வந்தால் அவருக்கும் விழா எடுப்பார்கள் .அது தவிர்க்க முடியாதது. இன்று இவருக்கு புகழ் மாலைகள் போடுவதைப்போல் அவருக்கும் போடவேண்டும். தமிழுணர்வு தடுக்காது. 'ஜெ'யும் சினிமாவை சேர்ந்தவர்தான் என்று சொல்லிவிடுவார் வி.சி.கு.
விஜயகாந்த் வந்தாலும் இதே பதிலை சொல்லிவிடுவார் .
சினிமாவை சேர்ந்தவர்கள்தான் தொடர்ந்து ஆட்சிக்கு வரமுடியும் என்று ஆணி அடிப்பவர் கண்களுக்கு 'ரஜினியும்,அஜித்தும் ''வெளி ஆட்களாக''தெரிவது எதனால்?
சினிமாவை சேர்ந்தவர்கள்தான் ஆட்சியை பிடிப்பார்கள் என்றால் என்றால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்கவே முடியாதா?அந்த கட்சியைசேர்ந்தவர்கள் சினிமாவில் யாரும் இல்லை என்பதால் இப்படியா நக்கல் பண்ணுவது?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
நான் சென்னை வந்து தேவி வார இதழில் பணியாற்றிய நேரம். அப்போது தலைவர் எம்.ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக செல்வி.ஜெயலலிதா நியமிக்...
-
லேடி காகா! மேலை நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தின் ஒரு பகுதியை தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் பாடகி லேடி காகா! பூத்துக் குலுங்கும் ...