ஞாயிறு, 6 ஜூன், 2010

கோடீஸ்வரனாக வேண்டுமா?

'' அரசியலுக்கு போ ,கோடி , கோடியாக அள்ளலாம்.எதற்காக மெடிக்கல் ,அதுஇதுன்னு அலையணும்,ஆட்சிக்கு வரக் கூடிய கட்சியா பார்த்து தலைவருக்கு பெரிய அன்பளிப்பா கொடுத்து ஒரு பொறுப்பை வாங்கிட்டினா நாளைக்கு பெருசா அறுவடை பண்ணீறலாம் ,இந்த காலத்தில படிக்க வைக்கிறது வேஸ்டுப்பா ''என்று சொல்கிற நிலை இருக்கிறதா,இல்லையா?

முதல் போட்டு வியாபாரம் பண்றதை விட ,முதல் இல்லாம பெரிய கட்சியா பார்த்து அதில் பொறுப்பு வாங்கிறதுக்கு செலவு பண்ணினால் போதும் ,பின்னாடி பல,பல மடங்கு சம்பாதிச்சிடலாம் என்கிற நிலை உண்மையா,பொய்யா?

பொறுப்பு கிடைக்கவில்லையா ,பரவாஇல்லை .பொறுப்பில் இருக்கிற ஆளுக்கு நம்பிக்கையான கைத்தடியாக ஆவதற்கு ஆவன செய். அந்த ஆளின் பலம் ,பலவீனம் தெரிந்து அதற்கு தகுந்த ''ஏற்பாடுகளை''செய்து கொடு. அடுத்த பொறுப்பு நீ தான்.கைத்தடியாக இருப்பது கேவலம் என நினைக்க கூடாது . இதிலும் ஆயிரம் ,ஆயிரமாய் சம்பாதிக்கலாம்.இதுதான் இன்றைய அரசியலுக்கு பால பாடம் .நிஜமா,பொய்யா?

கைத்தடியாக இருந்தும் பொறுப்பு கிடைக்க தாமதமாகிறதா,கவலைப் படக் கூடாது .ஆயுதம் தாங்கிகளின் தலைமை பொறுப்பு உன் கையில்தான் இருக்கிறது. இதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும்.ஒரு கும்பலை சேர்த்துக் கொண்டுவிட்டால் பொறுப்பே தேடிவந்துவிடும்.இப்படிப்பட்டவர்கள் பங்களாவும் காருமாக வாழ்கிறார்கள் என்பது நிசமா,இல்லையா?

திறமையாக பேசக் கற்றுக்கொண்டுவிட்டால் ,திறமையான பேச்சினால் ,தலைமையின் அன்பை பெற்றுவிடலாம்.திறமையான பேச்சு நல்ல முதலீடு.இந்த திறமையினால் நாளைக்கு தலைமையை மிரட்ட முடியும்.அவசியம் வந்தால் புதிய கட்சியை ஆரம்பிக்கலாம். இது சாத்தியமா, இல்லையா?

எதுவுமே இல்லையா,கவலைப்படக் கூடாது.வட்டமோ ,மாவட்டமோ இவர்களின் கைத்தடியாக இருக்கிறபோதே சின்ன சின்ன காண்ட்ராக்டு கள் கிடைக்கிறமாதிரி ஏற்பாடுகளை செய்து கொண்டுவிடவேண்டும் .இது பிற்கால அரசியல் விளையாடலுக்கு உதவியாக இருக்கும் என்பது உண்மையா,இல்லையா?

இப்படியெல்லாம் நினைப்பதும் ,எழுதுவதும் மிகப் பெரிய தப்பு என்றாலும் நாட்டு நடப்பு அப்படியெல்லாம் நினைக்கவைக்கிறதா,இல்லையா?

கோடீஸ்வரனாக வேண்டும் என்றால் அரசியல்தான் சரியான இடம் என்கிற எண்ணம் அப்பாவி மக்கள் மனதில் இருக்கிறதா இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

1 கருத்து:

sengottaiyaan சொன்னது…

நீங்கள் யார் யாரையெல்லாம் நினைத்து இதை எழுதினீர்கள் மணி சார்?