செவ்வாய், 25 அக்டோபர், 2011

ஒருபெட்டையின் புலம்பல்.

கலைஞருக்கு மகள் கனி திகார் சிறையில் இருக்கிறார் என்கிற கவலை.
அம்மாவுக்கு உள்ளாட்சி தேர்தலிலும் அமோக அறுவடை என்பதில் அளவற்ற  மகிழ்ச்சி. 
 ஈழத் தமிழர்களுக்கு தமிழகத் தலைவர்கள் எவருமே உண்மையாக இல்லையே என்கிற கவலையில் இன,மான,உணர்வுள்ள உண்மையான சில தமிழர்கள்.
பொய்யாக வேடம் புனைந்த கேப்டனுக்கு இக்கட்டான நிலைமை.இனி எதை சொல்லி ஈழத் தமிழர் ஆதரவு போர்வையை போர்த்திக் கொள்வது என்கிற கவலை.
 ஆவேசமாக குரல் எழுப்பிய சீமானுடைய கடையில் கொள்முதல் செய்வதற்கு எதுவும் இனி இல்லை.அம்மாதான்  ஈழத் தமிழரை காப்பாற்றும் சக்தி என சொல்லி வருகிற அவரால் உரத்துக் குரல் எழுப்ப முடியாது.''அம்மாவின் உயிருக்கு  ஈழத் தமிழரால் ஆபத்து ''என்று அதிமுக தலைமை சொல்லி வருகிறது.இதை மறுதலிக்கும் சக்தி சீமானுக்கு இல்லை.
 வைகோ,நெடுமாறன் இருவருக்கும் படை பலம் இல்லை.அவர்களால் உண்மைகளை  சொல்ல முடியவில்லை.ஆனாலும் உண்மையான உணர்வு உள்ள தமிழர்கள் இவர்களைத் தான் நம்பியாக வேண்டும்.ஆனால் அரசியல் கட்சிகளின் மோடிமஸ்தான் மயக்கு வேலைகளில் அடிமை பட்டுக் கிடக்கிற தமிழ் இனம் இவர்களின் பின்னால் ஒன்று பட்டு ஒரு போதும் நிற்கப் போவதில்லை. 
 லட்சக் கணக்கில் சொந்தங்கள் கொல்லப் பட்டு ,தாய்,தங்கைகள் என உறவுகள்  பாலியல் கோரங்களால் சிதைக்கப்பட்டு ரணமாகிப் போனார்களே என்கிற கவலை எவனுக்காவது இருக்கிறதா?
 புத்தாடைகள் போட்டுக்கொள்,பட்டாசுகள் கொளுத்து.மட்டன் சிக்கன் வெளுத்துக் கட்டு.நரகாசுரன் ஒழிந்தான் என சந்தோசம் கொண்டாடு.
 வாழ்க கலைஞர்.வாழ்க அம்மா.வாழ்க கேப்டன்.வாழ்க சீமான்.உலகத் தமிழர்களே ,உள்ளூர் தமிழர்களே    உங்களை காப்பாற்றுகிறவர்கள்   
அடுத்து எத்தகைய காட்சிகளை நடத்தலாம் என்று ஒத்திகை பார்க்க போகிறார்கள். உங்கள் வாக்குகளை போடுவதற்கு தயார் ஆகுங்கள்.