திங்கள், 31 டிசம்பர், 2012

பேஸ்புக்,ட்விட்டர் ,பிளாக்,இவை மூன்றிலும் இருக்கிறேன்.
தொடக்கத்தில் 'லைக்'குகளை எதிர்பார்த்து எழுதினேன்.நல்லவைகளை!
ஆனால் விழவில்லை.'லைக்குகள்'!
சினிமாவை எழுதினேன்.விழுந்தன.ஆனால் எண்ணிக்கையில் குறைவு!
படித்த கிசுகிசுகளை வேறு பாணியில் எழுதினேன்.வரவேற்பு எக்க சக்கம்.!
ஆகா...விஷயம் இப்படி இருக்கா?அப்படியானால் இலக்கியங்களில் இருக்கிற இன்பத்து ச் சுவைகளை எழுதினால்?
சுப்ரதீபக் கவிராயரின் தூதுவில் இருந்து எழுத, பிளாக்கில் எண்ணிக்கை உயர்ந்தது.!
அப்படியானால் பிளாக்கில் நாம் சாராயம் விற்க ஆரம்பித்திருக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
சில நண்பர்கள் கண்டித்தனர்."நாகரீகமாக எழுது"! 
அரசு சாராயம் விற்பது நாகரீகமாகிவிட்டபோது நான் எழுதுவது மட்டும்  நாகரீகமாக ஆகாதா?
நானே கேட்டுக் கொண்டு தொடர்ந்தேன்.
எனது வீட்டுச் சிறுவர்கள் கம்ப்யூட்டரில் சித்தர்கள் என்றானதும் ......
உள்ளத்தில் வலி!
ஓ ...நம் வீட்டில் அடி விழும்போது தான் சமுதாயம் தெரிகிறது.
வெட்கம்.வேதனை.இதுவரை நான் எழுதிய காமரச கட்டுரைகளை எத்தனை சிறுவர்கள் படித்திருப்பார்கள் ?
வேண்டாமே.இனிமேல் அப்படி எழுத வேண்டாமே!
எத்தனை நூறு  பேர் படிக்கிறார்கள் என்பதை விட ,பத்து பேர் படித்தால் போதும் என்கிற உறுதியை இந்த ஆங்கில புத்தாண்டில் எடுத்திருக்கிறேன்,


செம்மொழிப் பூங்கா.....காதலர் பூங்கா!

ஆங்கிலப் புத்தாண்டுக்கு எங்கேயாவது போகலாமே?
'செம்மொழிப் பூங்கா போ'-மனம் சொன்னது.
சரி ,எப்படி இருக்கிறது அந்த பொட்டானிகல் கார்டன் என்பதையும் பார்த்துவிடலாம் என்று வண்டியை கட்டினேன்.
டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என இருந்தபோது அடிக்கடி சென்ற இடம்.இப்போது
ஐந்து ரூபா நுழைவுக்கட்டணம்.
கூட்டம் நிரம்பி இருந்தது.
என்ன வகை மரம் என்பதை ஒவ்வொரு மரத்திலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.யாரும் அதை கவனித்தமாதிரி தெரியவில்லை.ஆனால் அழகை ரசிக்கிறார்கள்.பசுமையை நேசிக்கிறார்கள்.செல் போனில் படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அன்னங்கள் தடாகங்களில்!கரையில் வண்ண வண்ண வர்ண ஜாலங்களில்  பெண்கள்..
சிறுவர்,சிறுமியர் ஓடி விளையாடுவதை பார்த்து பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி .
வளைந்து வளைத்து செல்லும் வழிகளில் பக்கப் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளும் இருக்கின்றன.
அந்த பகுதிகளை காதலர்கள் நிரப்பி இருந்தனர்.
ஏறத்தாழ கட்டி அணைத்தபடி ,கன்னங்கள் சேர்ந்தபடி .உதடுகள் உரசியபடி....!
அவர்கள் மாணவ மாணவியராக ,அலுவலகப் பணியாளர்களாக ,தெரிந்தார்கள்.தோற்றம் அப்படி!ஒருவேளை அது தவறாக க் கூட இருக்கலாம்.
"இன்று மட்டும்தான் இப்படியா ,அல்லது வழக்கமாகவே இப்படியா?"-சீருடை அணிந்த பூங்கா பணியாளரிடம் கேட்டேன்.
"தினமும் பார்க்கலாம் சார்"! என்றார்.
"அத்து மீறுதல் உண்டா?"
"உதடுகளுடன் சரி.இதற்காக  வருகிறவர்கள் யார் ,படிப்பதற்காக வருகிறவர்கள் யார் என்பதை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம்.அவர்களை நாங்கள் கடுமையாக கண்காணித்தப்படி இருப்போம்."என்றார்.
ஆறுதலாக இருந்தது.
இருந்தாலும் பெற்றவர்களுக்கே தெரியாமல் இப்படி சந்திப்பவர்கள் பூங்கா பணியாளர்களை ஏமாற்றுவது  பெரிய காரியம் அல்ல!
இதைக் காரணமாக சொல்லி பூங்காவை மூடாமல் இருக்க வேண்டும்.அதுதான் எனது கவலை!

ஏனென்றால் அது கலைஞர் கருணாநிதி திறந்த பூங்கா!

புத்தாண்டு வாழ்த்துகள்.

வணக்கம் நண்பர்களே,
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்நேரம் பலர் ஆரம்பித்திருப்பார்கள்.ஆடல்,பாடல் என அமர்க்களப்படும்.கடலோரம் பலர் காதலி,மனைவி,ஆசைநாயகி என ஜோடி  சேர்ந்திருப்பார்கள்.மார்கழிப் பனி அவர்களை ஒன்றும் செய்யாது.கத கதப்புக்கு  
பலர் 'உள்ளுக்குள்ளும் 'ஸ்வெட்டர் போட்டிருப்பார்கள்.எனவே குளிரோ,பனியோ,பயமோ இருப்பதில்லை.
ஆங்கில புத்தாண்டு ஜனவரி முதல் நாளன்று தொடங்கும்.
ஆனால் ,தமிழனுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதம் என ஜெயலலிதாவும்,தை மாதம் என தமிழ் அறிஞர்களும் சொல்லி வருகிறார்கள்.திமுக ஆட்சியில் இருந்தால் தை மாதம்,அதிமுக ஆட்சியில் இருந்தால் சித்திரை மாதம் என அரசு கொண்டாடும்.
அரசியல்வாதிகளின் விளையாட்டுக்கு தமிழ் வருசப் பிறப்பு நாய் படும் பாடு படுகிறது.
ஏன் இப்படி என அரசியலாரை  கேட்க முடியாது.அதனால் அந்தந்த கட்சிக்காரர் களால் இரண்டு தடவை கொண்டாடும் பெருமை தமிழனுக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு வேளை  பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் அசல் தமிழர்கள் அவர்கள்தான் என சொல்லி ஒரு மாதத்தை சொல்லலாம்.இப்படி ஒரு பெருமை தமிழனுக்குதான்கிடக்கிறது.உலகத்தில் இப்படி வேறு எந்த இனமாவது தங்களின் புத்தாண்டை கொண்டாடி இருக்குமா என்பது தெரியவில்லை.
ஆனால் ,
நான் தைத் திங்கள் நாளைத்தான் தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவேன்.
அன்புடன் ,
தேவிமணி. 

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சன்னிகளும் பாலியல் வன்முறைகளும்...

உண்மைகளை ஒப்புக் கொள்வது ஆண்மை.!
ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இது சாத்தியம் இல்லை .
மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கோரமான முறையில் சிதைக்கப் பட்டு  செத்தும் போனாள் !தலைநகர் டெல்லியில் மிகப் பெரிய போராட்டம் நடத்திக் காட்டப்பட்டது .
மாணவியின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடு என ஒரு சாராரும்,மரணதண்டனை தீர்வாகாது என மறு சாராரும் சொல்லி வருகிறார்கள்.பாலியல் வல்லுறவு என்பது இந்தியாவின் தென் கோடியிலிருந்து வட  கோடி வரை பரவிக் கிடக்கிறது.
என்ன கொடுமை என்றால் பச்சிளம் குழந்தைகளைக் கூட பாவிகள் விட்டு வைக்கவில்லை .தமிழ் நாட்டிலேயே  வன்கொடுமை-பாலியல் வல்லுறவுகள்-கொலைகளும்  நடந்திருக்கின்றன.
எவனும் கொதித்ததில்லை '
எந்த கட்சியும் கொடி பிடித்து களம் கண்டதில்லை பத்தோடு பத்தாக கண்டித்து தீர்மானம் போட்டு கையை கழுவிக் கொண்டார்கள் . வாய் நிறைய வீரம் பேசினார்கள் .
பெண்கள் நடமாட முடியவில்லை.இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது என்பதாக குரல் எழுப்பினார்கள் இத்தகைய கொள்கை கோமான்கள் சன்னி லியோன்களும் ஷெர்ளின் ஷோப்ராக்களும் நிர்வாண ப் படங்கள் கொடுத்த போது வாயில் நீர் சுரக்க பார்த்து மகிழ்ந்தவர்கள்தானே!இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது பெண்களைப் பற்றி பேசுவதற்கு ?ஜிஸ்ம் 2 படத்தில் சன்னி லியோன் நிறைய மார்புகளை காட்டியபோது சிலிர்த்து ப் போகவில்லையா?
ஷெர் லின் ஷோப்ரா பிளே பாய் பத்திரிகைக்கு முழு நிர்வாண போஸ் கொடுத்தபோது கள்ளத்தனமாக வரவழைத்து வாங்கிப் பார்த்தவர்கள் தானே இவர்கள்?

சினிமாவில் நிர்வாணத்தை வரவேற்று ரசிக்கும் காமரச கண்ணியவான் களுக்கு பெண்களைப்பற்றி பேசும் தகுதி இல்லை.


காஜலின் பின்பக்கத்தில் ராம்சரண் அடித்தாரா?

தெலுங்கு சினிமாவில் கமர்சியலாக எதையாவது செய்தாகவேண்டும் என்கிற நிலைமை.
மீடியாக்களும் பத்த வைத்து சூடேற்றி விடும்.சிறு பொறி கிடைத்தால் போதும் .எரிமலையாக்கி குமுற வைத்து விடுவார்கள்
லிப் லாக் என்பது வரை வந்துவிட்ட சினிமாவில்"நாயக்" படத்தில்  காஜலின் பின்னம் பக்கத்தில் ராம் சரண் தட்டியதை பூகம்பமாக்கி கல்லா கட்டப் பார்க்கிறார்கள் .
இன்றைய சினிமா இப்படிதான் கமர்சியலாகி வருகிறது.
சினிமா செய்தி என்றால் படிப்பவர்கள் அதிகம்.இலக்கியம் எழுதினால் வேப்பெண்ணையாக விலக்கி விடுகிறார்கள் .
செக்ஸ் விரும்புகிற உலகமாகி விட்டது.
சரி .இனி விஷயத்துக்கு வருவோம்.
'ரச்சா'படத்தில் இப்படிதான் தமன்னாவின்   பின்னம்பக்கத்தில் தட்டிஇளைஞர்களின் மனதை ராம்சரண் கவர்ந்தாராம்.
இப்படி எழுதுகிறவர்கள் வேர் எது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சரணின் அப்பா சிரஞ்சீவி ஒரு படத்தில் விஜயசாந்தியின் 'பம் 'சில் தட்டி வாலிபர்களை கவர்ந்தாராம்.
ஸோ ,இந்தக் காலத்து வாலிபர்களை கவர வேண்டும் என்றால் இப்படிப்பட்ட காரியங்களை செய்தால் போதும் என மீடியாக்கள் நினைப்பது தவறு.
முத்தம் கொடுக்கிற அளவுக்கு சினிமா முன்னேறி  விட்ட இந்த காலத்தில் கேவலம் பெண்ணின் பின்னம்பக்கதட்டலுக்கு ...
அட...போங்கப்பா!

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சிறந்த நடிகர் சூர்யாவா,விஜயா?

சிறந்த நடிகர் சூர்யாவா,விஜயா?
ஆண்டு முடிய போகுது.
இனி ஆளாளுக்கு 'அவார்டு பங்ஷன் 'நடத்த கெளம்பிடுவாணுங்க.சில நடிகர்கள் அவங்களே பணம் காசு கொடுத்து செட்-அப் பண்ணி அவார்டு வாங்கி பப்ளிசிடிக்கு பணம் கொடுத்து அவங்களே சிறந்த நடிகர்னு சொல்லிக்குவாங்க.இந்த கண்றாவி வருஷம் தோறும்  நடக்கிது.
இதுல என்ன வேடிக்கைன்னா அந்த நடிகருக்காக மத்த நடிகர்களும் நடிகைகளும் விழாவுக்கு போக வேண்டியதா இருக்கு .போகலேன்னா அடுத்த பட சான்சு அல்வா!அதனால அல்லக்கைகளா சில பெரிய நடிகர்கள் பின்னாடி திரிய வேண்டியதா போச்சு.
2012ம் வருசத்து சிறந்த நடிகர் யார்னு மக்களுக்கு தெரியாம இருக்காது..
படம் பார்த்தவங்க மனசில அவங்க நிச்சயம் இருப்பாங்க /சில பேர் வேணும்னா மறந்திருப்பாங்க.
இப்ப சொல்லுங்க உங்க மனசில இருக்கிறது யாரு?
கடந்த வருஷ 'பாக்ஸ் ஆபீஸ்' படம்னா ஒப்பனிங்க்ல அள்ளிக்கொட்டிய 10 படத்த சொல்லலாம்.அப்படி வாரிக் கொடுத்த பட ஹீரோ ஹீரோயின்தான் பெஸ்ட்டா?இல்ல  திறமையை காட்டி நடிச்சவங்கதான் பெஸ்ட்டா?
சும்மா ஒரு பட்டியல் தரேன்.செலெக்ட் பண்ணுங்க.அப்புறம் சில கம்பெனிகள் செலெக்ட் பண்ணி விழா நடத்துறவங்க லிஸ்ட்டு டன் சரி பாருங்கள் உண்மை தெரியும்..சூர்யா,விஜய்ஆர்யா,கார்த்தி,சமுத்திரக்கனி,சசிகுமார்,பிரகாஷ்ராஜ்,விக்ரம்,ஆதி,ஜீவா,கமல்,அதரவா,விக்ரம் பிரபு,உதயநிதி .....!...
இவங்களை தாண்டி பெஸ்ட் வர சான்ஸ் இல்ல.எனகென்னமோ பட்டியலில் கமல் சூர்யா.விஜய் கார்த்தி...சிலர் உதயநிதியை சொல்வாங்க...




உங்க முடிவு என்ன? 

சனி, 22 டிசம்பர், 2012

விஜயும்-விஜயும் !

இயக்குநர் விஜயும்.நடிகர் விஜயும் இணைந்து ஒரு படம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.படத்திற்கு ;தங்கமகன்' எனப் பெயரிட்டிருப்பதாக செவிவழி செய்திகள்.
ஆனால் அதிகாரப் பூர்வமாக எந்தப் பெயரும் அறிவிக்கப் படவில்லை.இதுவரை தமிழ் சினிமாவில் எவரும் செய்திராத வகையில் எல்லோரும் தங்களை தயார்படுத்திக்  கொண்டு படப்பிடிப்பு தளம் சென்றிருக்கிறார்கள்.
ஒரு ஐம்பது ,அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தென் தமிழகத்தில் 'குஸ்தி'பந்தயம் நடக்கும்.காட்டாக் குஸ்தி,போட்டா போட்டி என துண்டு பிரசுரங்கள் ஊர் முழுக்க பறக்கும்.பயில்வானுகளுக்கு தயார் தீனிக்காக கான்ட்ராக்டர் பந்தயத்தில்  மோதுகிற  பயில்வான் இருவருக்கும் பணம் கொடுப்பார்.இருவரும் உடம்பில் உறம்  ஏற்றிக் கொண்டு மோதுவார்கள்.
அதைப்போல இயக்குநர் விஜய் தனது படப்பிடிப்புக் குழு மொத்தத்தையும் சென்னை கிரீன் பார்க் என்கிற நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து  வீடியோ போட்டுக் காட்டினார்
முதல் ஒரு மணி நேரம் அவர் கதை சொன்னதை வீடியோவாக காட்டினார்
அடுத்த ஒரு மணி நேரம் அந்த படத்தின் கேரக்டர்கள் எப்படி இருக்கும் என்பதை சித்திரமாக வரையப் பட்டதை காட்டினார்.
இதன் பின்னர் நடிக நடிகையர்,டெக்னிஷியங்களின் கேள்விகளுக்கு இயக்குனர் பதில் சொன்னார்.
மொத்த சினிமாவும் இப்படிதான் இருக்கும் ,அதில் தங்களின் கேரக்டர்களும் இப்படிதான் இருக்கும் என்பதை நட்சத்திரங்கள் புரிந்து கொண்ட மாதிரி ,டெக்னிசியன்களும் தங்களின் வேலை எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்கள்.
இதனால் லொக்கேஷனில் நடிக்கும் பொது திருத்தம் சொன்னால் போதும் என்கிற நிலை.
இந்த மூன்று மணி நேர ஒர்க் ஷாப்பை யாரும் படம் எடுக்ககூடாது என்பது இயக்குனரின் கட்டளை.
நல்ல முயற்சிதான்.!

கற்பும் மனிதர்களும்!

இஷ்டப்பட்டு எவனுடன் படுத்தாலும் அது கற்பழிப்பு இல்லை.!
அது அவளின் கணவனுக்கு செய்யும் துரோகமும் இல்லை.
ஆனால்,
அவளின் விருப்பத்திற்கு மாறாக வல்லுறவு கொண்டால் மட்டுமே அது "கற்பழிப்பு"!என்னங்கடா உங்க நியாயம்?
இந்த கற்பு என்பது உறுப்பு சார்ந்ததா?
மனம் சார்ந்ததா?
உடல் சார்ந்ததா?
ஒருவனின் மனைவி இன்னொருவனுடன் பாலியல் தொடர்பு கொண்டால் அங்கே துரோகம்  அல்லது கள்ளத் தொடர்பு என ஏதோ ஓன்று  முன்னிலை படுத்தப் படுகிறது..கற்பு என்பது பின்னால் நின்று விடுகிறது.
"அவனை அவ வச்சிருக்காளாம்" ஓடிப்போயிட்டாளாம்இன்னார்பொண்டாட்டி"
"என்ன பொம்பள அவ.குடிய கெடுத்திட்டாளே ,சண்டாளி"
இப்படிதான் சொல்வார்கள்.
எங்கேயாவது ராமநாதன் கற்பிழந்தான் ,கோதண்டம் கற்பை பறி  கொடுத்தான் என சொல்கிறார்களா?
ஆணுக்கு மட்டும் கற்பு இல்லையா?
கற்பு என்பதை பெண்பாலாக கருதும் முட்டாள்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம்   திருந்தப் போவதில்லை.
தெருவில் நடந்து செல்லும்போது ஆண் சைட் அடிக்கலாம்.ஆனால் அவன் மனைவியை அல்லது உறவுப் பெண்ணை எவனாவது பார்த்தால் கோபம் வந்துவிடுகிறது.
திருந்துங்கடா!

புதன், 12 டிசம்பர், 2012

நடிகையின் நிர்வாண புரட்சி!

இந்திய தேசத்தின் கவர்ச்சி திலகம் பூனம் பாண்டே!
நிர்வாணத்தின் உச்சம் எதுவோ அதன் பரிபூரணம் காட்டியவர்.
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு நான்கும் பெண்ணின் அடிமைத்தனம் என வாழ்ந்து கொண்டிருப்பவர்.
முதன்முதலாக காலண்டரில் தன்னை நிர்வாணப் படுத்திக் கொண்டவர்.இவர் இப்போது இந்தி படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
படத்தின் பெயர் 'நஷா'.
இந்த படம் எதை சொல்லப் போகிறதோ நமக்கு தெரியாது.
ஆனால் ஆணும் பெண்ணும் உதடுடன் உதடு பொருத்தி கொடுக்கிற முத்தம் பற்றி பூனம் சொன்ன "அரிய கருத்து"தான் பாலிவுட்டில் கலக்கி இருக்கிறது.
இவ்வளவு பெரிய ,அரிய கருத்து பூனம் சொல்லலாமா என கேட்கிறார்கள்?
அப்படி என்ன சொல்லி விட்டார்?
"நான் கேமரா முன் நிர்வாணமாக நிற்பதை பற்றி கவலைப் படவில்லை.ஆனால் லிப்-லாக் காட்சியில் நடிக்கமாட்டேன்"
இதான் மக்களே ,பூனம் சொன்ன கருத்து!நிர்வாணத்தை விட  முத்தம் மோசம் என்பது அவரது கருத்து.
அது ஒரு வகையில் சரிதான்.
ஆணை கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் இடும்போது உணர்வுகளை கட்டுப் படுத்தமுடியாது.நடிப்புத்தானே என நடிகை வாயைக் கொடுத்தால் நாயகன் நாவினால் வருடி விளையாடி தூண்டுதல் செய்வது தவிர்க்க இயலாது .
எனக்கென்ன போச்சு என்று அவிழ்த்துப் போட்டுவிட்டு நிற்பதில் ஆபத்து இருக்கப் போவதில்லை என பூனம் நினைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிர்வாணம் சென்சாரை மட்டுமே திருப்தி படுத்துமே தவிர மக்களை வந்தடையாது என்பது எனது கருத்து.

திங்கள், 10 டிசம்பர், 2012

கமலின் விஸ்வரூபம்

கமலுக்கு பிடிவாத குணம்.
ஒரு முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னரே அதன் விளைவுகள் இப்படி எல்லாம் வரக்கூடும் என யூகித்து வைத்திருப்பார்.
அது அவரது பலம்.
இத்தனை கோடிகள் செலவு செய்கிறோமே கையைக் கடிக்குமா,அல்லது பையை நிரப்புமா என்கிற கணக்குப் போடத்தெரிந்த வியாபாரி என்றாலும் வித்தகர்.கையைக் கடித்தாலும் பரவாயில்லை என சில நேரங்களில் துணிந்துவிடுவார்.
புதியவையாக இருக்க வேண்டும் ,தன்னால் புதுப் பாதை அமைய வேண்டும் என்கிற ஆர்வம அதிகம்.
அவர் சொன்ன ஆலோசனைகளை தயாரிப்பாளர்கள் முன்னரே  கேட்டிருந்தால் கள்ள வீடியோ கேசட்டுகள் வந்திருக்காது.
அவர் சொல்லி நாம் என்ன கேட்பது என்கிற மனப்  பான்மை தயாரிப்பாளர்களிடம் இருந்தது.இப்போதும் இருக்கிறது.
விசுவரூபம் வீட்டுக்கு வருவது நல்லது.நசிந்து வரும் சினிமாவுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருவாய்தயாரிப்பாளர்களின்  கையை கடிக்காமல் காப்பாற்றும்.
ரஜினிக்கு அடுத்து வருவாய் ஈட்டக்கூடிய நடிகர் கமல்தான் என்பதை விசுவரூபத்தின் வியாபாரம் நிரூபிக்கலாம்.
ஆந்திராவில் அமோக வரவேற்பு.மலையாளமும் தயார். கன்னடமும் கை கொடுத்திருக்கிறது.
டிவி சேனல வருவாயும் இருக்கிறது.எனவே சில தியேட்டர் அதிபர்கள் கதவை சாத்துவதால் நட்டம் அவர்களுக்கே!
கமல் என்கிற அதி புத்திசாலியிடம் அவர்கள் ஏமாறாமல்  லாபம் பெற வேண்டும் என்றால் ஒத்துழைப்பு கொடுப்பதுதான் நல்லது.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

ஆசையாய் ஓர் கடிதம்.....

என்னவளே,
இப்படி உன்னை அழைக்கலாம் அல்லவா ?
என் தலை கோதி அதன் சுருளை ரசித்தவள் நீ!
காதோரம் முகர்ந்து கனலை மூட்டியவள் நீ!
கன்னத்தில் உதடுகளால் ஓவியம் வரைந்தவள் நீ!
எனது இதழ்களில் உனது நாவினால் காதல் சொன்னாய்.
இப்படி காதல் சொன்னவளை
என்னவளே என நான் சொல்வது பிழையா ?

நேற்று பழகியதெல்லாம் பருவத் தவறா ?
முத்தம் கொடுத்து உயிரை உறிஞ்சியபோது
எத்தனை சுனாமிகள் நமக்குள்!
இப்படியே இருக்கலாமா ,
இருக்கமுடியாதெனில்
இறப்பதே சொர்க்கம் என சொன்னது யார்?
அந்த கண  நேரம்தானா சத்தியம்?

மறந்தவளே ,எனை ,இல்லை, நமை
மறந்தவளே!
காதலை காற்றில் கரைத்து விட்டாய்.!
உடை கலைத்து ,உடல் கலந்து
திகைந்து ,பின் முகைந்து .....
இதுவே நமக்கு நல்லறம்
என இல்லறம் சொன்னவள் நீ!

இன்று
துறவறம் கொண்டது ஏன் ?
இளமை என்பது கொடை !
காலம் கடந்துவிட்டால்
முதுமை துயரம்.
வேண்டாம் ,நமக்கு.!
காலம் இருக்கும்போதே
காமத்தில் கரைவோம்!

இவண் ,
உனது
அவன்.

நமக்கு கிடைத்த அடிமை ....நல்ல பேச்சாளி !


மதிமுக.வின் பலம் வாய்ந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
மொழி ஞானம்,வளைந்து கொடாமை ,அஞ்சாமை ,ஆளுமை ,எழுத்தாற்றல் என இன்ன பிற திறமை உள்ள மனிதர்.
வைகோவைப் போன்றே தன்னை வடிவமைத்துக் கொண்டவர் என சொன்னாலும் பிழை இல்லை.
உவமைகளும் ,எடுத்துக்காட்டுகளும் இவரது பேச்சில் துள்ளி விளையாடும்.
அமர்ந்திருப்பவர்களை ஆவேசம் கொள்ளவைக்கும் ஆற்றல் இந்த தமிழனுக்கு உண்டு.
வைகோவுக்கும் இவருக்கும் இடையில் உருவாகிய-அல்லது உருவாக்கப் பட்ட கருத்து வேறுபாடு இவரை அணி மாற வைத்திருக்கிறது.
மதிமுகவில் இருந்தபோது  மனம் விட்டு மேடைகளில் பேசி இருப்பார் .
இனிமேல் அவரால் அந்தளவுக்கு பேச முடியுமா?
தமிழ் ஈழம் பற்றி கருத்து சொல்வதற்குக் கூட அனுமதி வாங்க வேண்டும்.
இவர் பங்கு பெறு ம் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளில் கூட இவரின் முகம் இருக்கக் கூடாது.
மதிமுகவில் அனுபவித்த சுதந்திரத்தைப்  போல்  அதிமுகவில் .அவரால் அனுபவிக்க முடியுமா?
அவரின் தமிழாற்றலை அதிமுக பயன் படுத்திக் கொள்ளும்.
மறைந்த கா.காளிமுத்துவுக்குப் பிறகு அந்த கழகத்திற்கு கிடைத்திருக்கும் வலிமையான ஆயுதம் சம்பத் என்பதில் ஐயமில்லை.
அவரின் வாழ்வு செழுமை பெறும் .பதவிகள் நாடி வரும் .
"இதற்காகத்தானே ஆசைப் பட்டாய்  சம்பத்?"என பேச்சு வலம் வரும்.
மதிமுகவில் இருந்து சிலர் வரலாம்.
ஆனாலும் என்ன?
கருவேப்பிலைதானே !
உண்மையான அரசியலை பேசமுடியாது.

"நமக்கு கிடைத்த அடிமை திறமையான பேச்சாளி!"

செவ்வாய், 13 நவம்பர், 2012

ஆர்யா ஓர் பெண் வேட்டைக்காரர்..!

புத்தகம் பாடல்கள் வெளியீடு விழா..
 செசெல்ஸ் தீவின் அரும்-பெரும் கோடீஸ்வரர் என்பதால் ஹயாத் ஹோட்டலில் விழாவை நடத்தினார்கள்.
விஜய் ஆதிராஜின் இயக்கத்தில் வெளியாகப் போகிற முதல் படம்.ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு இது இரண்டாவது படம்.முதல் படம் இன்னும் வெளியாகவில்லை.
ஆர்யா-சத்யா இருவரும் இசுலாமியர்கள் என்றாலும் தங்களின் பெயர்களை ஆரியம் கலந்து சொல்வதில் பெருமைப் பட்டுக் கொள்கிறவர்கள் என நம்புகிறேன்.தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தங்கத் தட்டில் வைத்தா தாங்கப் போகிறார்கள். தமிழில் பெயர் வைத்து யூ சான்றிதல் கிடைத்தும் அரசின் வரி விலக்குக் கேட்டு நீதிமன்றம் போகிற காலத்தில் அவர்கள் தமிழ் துறந்து தமிழ்ப் படங்களில் நடிப்பது பிழையில்லை.
சொல்ல வந்தது தடம் மாறுகிறது....அன்றைய விழாவில்  கூட்டம் அதிகமாக இருந்தது.அந்த பெருமை பத்திரிகை தொடர்பாளர் நிகிலுக்கு உரியது.
பொதுவாக இத்தகைய விழாக்களில் மெட்டுப் பிறந்த விதம் ,அதற்கு வரிகள் இட்டுக் கட்டிய நேர்த்தி பற்றி சொன்னால் புதிய தகவல்கள் கிடைக்கலாம்.
மெட்டுக்கும் பாட்டுக்கும் பட்ட வலிகள் அல்லது சுவைகள் வித்தியாசமாக இருக்கக்கூடும்.
பார்த்திபன் கலந்து கொண்டால் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கு பழ -பல துணுக்குகள் கிடைக்கும்! அன்றும் கிடைத்தது.
இன்றைய சினிமாவின் பெண் வேட்டைக்காரர் என சொல்லப் படுகிறவர் ஆர்யா.அது இட்டுக்கட்டிய புனை கதை இல்லை என்பதை பலர் அன்று பகிரங்கமாகவே சொல்லி விட்டார்கள்.ஆர்யாவும் நாணி ,கோணி அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் .
ஆக நடிகர்கள் சக நடிகையரிடம் உறவு கலப்பது தவறில்லை என்பதை பகிரங்கமாக சொல்வது இன்றைய நாகரீகம் என நம்புகிறார்கள்.
அவர்களின் தைரியம் மற்ற நடிகர்களுக்கும் வர வேண்டும் என்பதே எனது ஆசை.
எதற்காக மறைந்து,ஒளிந்து....பின்னர் மறுத்து,நாளைடைவில் அது உண்மையாகி...!

மண் தின்னப் போவதை மனிதன் தின்றால் என்ன ?

திங்கள், 29 அக்டோபர், 2012

மலிவான எண்ணங்கள்!

மிகவும் வேதனையாக இருந்தது அந்த வதந்தியை கேட்டபோது!
நமக்கு நெருங்கியவர்களைப் பற்றிய வதந்தி என்கிறபோது அந்த வேதனைக்கு நெருப்பின் வடிவம் கிடைக்கிறது என்பதை இன்றுதான் உணர்ந்தேன்.
ஈகோ  திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் 'எப்படா முடிப்பார் இயக்குனர்?'என்கிற சலிப்பு உச்சம் தொடுகிறபோது அந்த வதந்தி என் செவிகளை அடைத்தது.
"சிவகுமார் உடல்நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.விசாரித்தீர்களா?"என சக பத்திரிகையாளர் சித்ராமணி கேட்டதும் ஆடிப் போனேன்.
சற்று நேரத்தில் 'மிகவும் சீரியசாம்' என ரெக்கை முளைத்து விட்டது.
சற்று அழுத்தம் எனது  குருதியின் ஓ ட்டத்தில் !
நமக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரிக்கத் தொடங்கினால் கண்டிப்பாக அவர்களுக்கு வேண்டிய பலரிடம் சொல்ல....டெங்குவாக பரவி விடும்.
எனவே சூர்யா,கார்த்தி இருவரின் கால்ஷீட் பார்க்கும் தங்கதுரை ,மக்கள் தொடர்பாளர் ஜான்சன் இருவரிடம் கேட்டேன்.
சிவகுமாருக்கு போன் போட்டேன்.சுவிட்ஸ் ஆப் !
தொடர்ந்து முயற்சித்தேன்.பலன் கிடைத்தது.
"அட பாவிகளா !நல்லாதான்பா இருக்கேன்"என்றார்.
குடும்பத்துடன் கோவைக்கு சென்ற அவர் நண்பரின் மருத்துவ மனைக்கு சென்று வழக்கமான சோதனைகளை செய்திருக்கிறார்.
இதற்காகவே காத்திருந்தவர்கள் வாய்வரிசையை காட்டி விட்டனர் 
அதை சிலர் கைவரிசையாக மாற்றிவிட்டனர்.
என்ன உலகமடா!

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மாற்றான்--புதிய யோசனை!

மாற்றான் படம் பார்த்து விட்டு சில நாள் தூக்கம் இல்லை.!
பலவிதமான சிந்தனைகள்.
இருவருக்கும் மணவிழா நிகழ்ந்திருக்குமானால் இல்லற வாழ்க்கை எவ்விதம் இருந்திருக்கும்?
அடுத்தவருக்கு தெரியக் கூடாத அந்தரங்க வாழ்க்கை அர்த்தமற்றதாக போயிருக்காதா?
மனைவிகளாக  வாழ வந்த இருவரின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?
ஒட்டிப் பிறந்த இருவர்க்கு வாழ்க்கை படப் போகிறோம் என்பதை அறிந்து உணர்ந்துதான் அவர்கள் மணந்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்றாலும் நடைமுறையில் நாளடைவில் மன முறிவுக்கு வழி வகுக்கும்.
அந்த இரட்டையரும் துரோகிகளாக மாறக்கூடும்.
இவ்வித கற்பனை இழையோடியபோதுதான் .......
ஒரு புகைப்படம் பார்த்தேன் ,செய்தியுடன்!
அவள் ஒரு பெண்.
அடர்த்தியான தாடி ,மீசை.
ஒட்டு இல்லை.உண்மையானது!
பெண்மையில் மாற்றம் இல்லை,ஆனால் முடி வளர்ச்சியில் பயங்கர மாற்றம்!
அவள் அறையை விட்டு வெளியில் வருவதில்லை.வெட்கம்.வேதனை.
16 வயதான அந்த பருவப் பெண்ணின் பெயர் நானா!
bone morrow -ல் போதிய ரத்த அணுக்கள் உற்பத்தி ஆகவில்லை என்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றாள் !
பலன் கிடைத்தது.aplastic anemia என்கிற நோய் குணமாகியது.
அதே நேரத்தில் உடலில் மாற்றம்.மென்மையான முகம் வன்மை ஆகியது.ஆண்களுக்கு எங்கெல்லாம் முடி வளருமோ அதை போல நானாவுக்கும் அடர்த்தியாக முடி வளர்கிறது.இந்த நோய்க்கு hirsutism எனப் பெயர்,
அதை சகித்துக் கொண்டு வாழ்வது,அல்லது மயிரை மழித்துக் கொண்டு வாழ்வது  இதுதான் தீர்வு?
உணவு முறையில் மாற்றம் மருந்துகள் என நீண்ட கால மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

திரைப்பட கதாசிரியர்கள் கற்பனை குதிரையை தட்டி விடலாமே!
மருந்துகளும் மாத்திரைக்களுமாக வாழ்கிற அவளை என்ன பாடு படுத்தலாம் என் யோசியுங்க மக்கா!

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

நடிகையை அடிப்பது நாகரீகமா?

நடிகையை அடிப்பது நாகரீகமா?
'என்னை பாரதிராஜா அடிச்சார்,பாலசந்தர் சார் அடிச்சார்'என நடிகைகள் சொல்வது சினிமாவில் காலம் காலமாக இருந்து வருகிற அவலம் தான்.சில நடிகர்களும் விலக்கள்ள !
ஆனால் எல்லா நடிகர்களும் அடி வாங்குவது இல்லை.
'நடிப்பு வரவில்லை'என சொல்லி முன்னணி நடிகர்களை திட்டுவது கூட இல்லை.வேண்டுமானால் மறைவில் திட்டிக் கொள்வார்கள்.அல்லது தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் சொல்லி கிசு கிசு எழுத சொல்வார்கள்.
அண்மையில் 'சென்னையில் ஒரு நாள்' என்கிற பட விழாவில் நடிகை மல்லிகா கலந்து கொண்டிருந்தார்.இந்த விழாவுக்கு சேரன் வர வில்லை.
அதனால்தானோ என்னவோ மல்லிகா தைர்யமுடன் அடி வாங்கியதை சொல்ல முடிந்தது என நினைக்கிறேன்.
ஆட்டோகிராப் படத்தின் ஷூட்டிங் நடந்த போது வாங்கிய அடியை நினைவு படுத்தினார்.
"இந்த படத்தின் [சென்னையில் ஒரு நாள்] ஷூட்டிங் நேரத்தில் அவருடன் பைக்கில் செல்வது மாதிரி ஒரு காட்சி.பயந்து கொண்டே போனேன்.'பயப்படாதே.அடிக்க மாட்டேன்" என்று சொன்ன பிறகுதான் உட்கார்ந்தேன்'"என்றார் மல்லிகா!
தமன்னா,ஆன்டிரியா,ஹன்சிகா ,அனுஷ்கா ஆகிய நடிகைகளை செட்டில் தமிழிலாவது திட்டி கண்டிக்க முடியுமா?
முடியாது.
ரீ  டேக் வாங்குவார்கள்
அவர்களால் அதுதான் முடியும் !

திங்கள், 1 அக்டோபர், 2012

காந்தி ஜெயந்தியும் கறிக் கோழியும்...

"இன்னிக்கி ஆபீஸ் லீவு.என்ன சமைக்கிறே?"

"என்ன செய்யணும்?' என கேட்டாள் வீட்டரசி!

"நாட்டுக் கோழியா?இல்ல கறிக் கோழியா?"

"இன்னிக்கி காந்தி ஜெயந்திங்க.கடை திறக்கமாட்டான்!"

"நான் வாக்கிங் போகும்போதே பார்த்திட்டேன்.கடை திறந்திருக்கு.என்ன வேணுங்கிறத மட்டும் சொல்லு!"

"அடப் பாவிகளா.!"

"என்னையவாடி சொல்றே? "

"உங்களை ஏன் சொல்லப் போறேன்!உங்கள  பத்திதான் நல்லா தெரியுமே..நான் அந்த பாயை சொன்னேன்!"

"அந்த பாய்கிட்ட நானும்தான் கேட்டேன். கார்ப்பரேஷன்காரன் சீல்  வச்சுற மாட்டானான்னு...!"

"என்ன சொன்னான்?"

"காலம்பறவே கவுன்சிலரின் ஆளுங்க வந்திட்டுப் போயிட்டாங்க.அதனால் 12 மணி வரை கடை இருக்கும்னு சொல்லிட்டான்.சிட்டிக்குள்ள எல்லா கடைகளும்  திறந்துதான் கிடக்கு.நான் மட்டும் மூடி என்னாவாகப் போவுதுங்கிறான் பாய்."

"அதுவும் சரிதான்..எல்லா தி.வி களிலும் பேருக்கு காந்திய பத்தி சொல்லிட்டு சிறப்பு சினிமாக்கள்னு தானே ஒட்டுறானுங்க.நாம்ப பாயை மட்டும் குறை சொல்லி  என்னவாகப் போவுது.நீங்க நாட்டுக் கோழிய வாங்கிட்டு வாங்க.நல்லா வாட்டி மஞ்ச தடவி மண்டய தூக்கி எறிஞ்சிடாம எடுத்துட்டு வாங்க. வெடக் கோழியா இருக்கட்டும்!"

"சரி.சீக்கிரமா வந்துடறேன்.கிளாஸ எடுத்து வச்சிடு!"

வாழ்க நீ எம்மான்! நான் நாட்டு  நடப்பு பற்றிதான் சொன்னேன்.

காந்தி ஜெயந்தியும் கறிக் கோழியும்...

தங்கர்பச்சானின் கோபம் நியாயமானதா?

தமிழ்சினிமாவில் தங்கர் பச்சான் மீது பலருக்கு கோபம் இருக்கிறது.
எதையும் வெளிப்படையாக சொல்லிவிடுகிறவர் என்கிற ஆத்திரம் அவர் மீது இருக்கிறது.
இயல்பான சினிமா யாரும் எடுப்பதில்லை என்பது தங்கரின் ஆதங்கம்!
அவருடைய 'அம்மாவின் கைப் பேசி'படத்தின் முன்னோட்ட காட்சிகளை திரையிட்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது ஆதங்கம் மறுமுறையும் வெளியானது.
"இங்கே மாற்று சினிமாவுக்கு இடம் இல்லை.நடிப்பதற்கு நடிகர்கள் இல்லை.
அழகி படம் எடுத்துவிட்டு அதை வெளியிட எத்தனை மாதங்கள் காத்திருந்தேன் தெரியுமா?
அம்மாவாக மனோரமா இருப்பார் .மகன் சரத் திருநெல்வேலி வழக்கு மொழியில் பேசுவார்.இன்னொரு மகன் மதுரை வழக்கு மொழியில் பேசுவார்.எப்படிங்க இது?
இப்படிதாங்க இருக்கு சினிமா!
நான் நிறைய படங்களை பார்க்கவில்லை.நான் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்கிற போது எதற்காக பார்க்கணும்?
பாரதி படத்தில் நடித்தவர் தமிழன் இல்லை.எதற்காக அவரை அழைத்தீர்கள் என கேட்டார்கள்.
அந்த மனிதன் பாரதி மாதிரி வாழ்ந்தான்.கட்டிலில் படுக்கவில்லை.பாயை விரித்து தரையில் படுத்தான்.
நெஞ்சு நிமிர்த்தி பாரதி மாதிரியே நடந்தான்.அம்மாதிரி நடிக்க தமிழர்கள் இல்லை!
இப்போது ஆம்பிளை பாடுகிறானா பொம்பளை பாடுகிறாளா என்பதே தெரியவில்லை.அந்த அளவுக்கு இருக்கிறது இசை!
அம்மாவின் கைப் பேசி படம் முடிந்ததும் தியேட்டரில் 2 நிமிடம் விளக்கு போடவேண்டாம் என கேட்டுக் கொள்ள இருக்கிறேன்.தங்களை உணர்ந்து கொள்வதற்கு அது பயன் படும் "என்று பேசினார் தங்கர்.

இப்படி பேசினால் கோபம் வராதா?நீங்களே சொல்லுங்கள் 

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ரீ -டேக் விரும்பும் சூர்யா!

"மாற்றான் "படத்தின் பத்திரிகையாளர் கூட்டம்.
ஜே..ஜே... என்றிருந்தது.
"இந்த ரம்யாவிடம் தானே உதவி டைரக்டர் பொன்னுசாமி "தாண்டவம்"கதையை சொன்னதாக சொல்லி இருந்தார்?"
தொகுத்து வழங்கிய  பெண்ணை சுட்டிக் காட்டி கேட்டார் சக பத்திரிகையாளர்.
தலையாட்டினேன்."பொன்னுசாமி சொன்ன அந்த ரம்யா இவர்தான்"
"தொகுத்து வழங்குவதே இந்த பெண்ணுக்கு சிக்கலாக இருக்கிறது.இவர் எப்படி கதையை செலெக்ட் பண்ணுவார்?"என்றார் நண்பர் .
"நமக்கு வேண்டாத விஷயம்.வந்த வேலையை பார்!"என்றேன்.
டைரக்டர் கே.வி.ஆனந்த் போடியம் வந்து மைக்கை பிடித்தார்.
பல உண்மைகளை சொன்னார் .
"நான் பல பெரிய ஹீரோக்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறேன்.ட்ராலி ஷாட் களில் சில இடங்களில் ஜெர்க் அடித்திருக்கும்.அதற்காக "ரீ டேக் சார்"என்பேன் இதை சிலர் விரும்பமாட்டார்கள் "ரெக்ரெட் "டாக எடுத்துக் கொள்வார்கள்.ஆனால் சூர்யாவோ  ரீ டேக் என்றால் முகம் சுழிக்கவே மாட்டார்.எத்தனை டேக் வேண்டுமானாலும் கேட்கலாம் மிகத் திறமையான நடிகர்"என்று பாராட்டியவர் அடுத்து சொன்னது காஜல் அகர்வாலை பற்றிதான்!
"காஜல் உண்மையிலேயே அறிவான பெண்!"என்றவர் அதைத் தொடர்ந்து சொன்னவைதான் ஹைலைட்.
"சிலர் ஆங்கில புத்தகங்களை தலைகீழாக வைத்துக் கொண்டு படிப்பார்கள்."என்று அவர்  சொன்ன தகவல்தான்  'யாராக இருக்கும் அத்தகைய அறிவாளிப் பொண்ணு' என்கிற ஆவலை தூண்டிவிட்டது.
இரட்டை வேட சூர்யாவில் ஒரு சூர்யாவுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியிருப்பது அவரது தம்பி கார்த்தி என்பது உலகறிந்த செய்தி.அதை சிலர் கேட்டதுதான்  ஆச்சரியமாக இருந்தது.
பாடலாசிரியர்கள் எல்லோரும் பேசினார்கள் ஒருவரைத்தவிர!
அவரை ஏன் மேடைக்கு அழைக்கவில்லை என்பது தெரியவில்லை.

முதலிரவு ..தேனிலவு..ஏமாற்றம்!

இப்படியெல்லாம் ஏமாறுவார்களா?
ஏமாற்றப் படுவார்களா?
காதலி வருவாள் என ஏக்கமுடன்  காத்திருந்த கணவனுக்கு உயிர் மீது பயம்தான் வந்திருக்கிறது!
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே எனப் பாடாத குறைதான்!
மாப்பிள்ளை பால் பிட்டஸ்பார்க்.வயது 56தான்!இந்த காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா!
வாலிப வயோதிகர்களுக்காகவே எல்லாமே கிடைக்கும்போது வயது ஒரு பொருட்டே இல்லை!
போன வருஷம்! பொழுது போகவில்லை என்பதற்காக துனிஷியா போனார் பால் !
அங்கே அழகி மபர்காவை  பார்த்ததும் பற்றி கொண்டுவிட்டது காதல்!
அவளின் வயது ஜஸ்ட் 30தான்!
இருவரும் சுற்றினார்கள்.
அவள் அருகில் இருந்ததே அவருக்கு போதையாகி விட்டது.
தூண்டிலில் புழுவை மாட்டி வைத்து குளத்தில் வீசினால் மீன் சிக்காமல் போகுமா?
இனி அவரே சொல்வார்,கேளுங்கள்.
"இங்கிலாந்து திரும்பியதும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என ரொம்பவே கவலை பட்டாள் .உடனே அவளை பார்க்க கிளம்பி விட்டேன்.இப்படி பலதடவை துனிஷியா போய் வந்திருக்கிறே ன் .
அவள் இன்றி நான் இல்லை என்கிற முடிவுக்கு வந்தாச்சு.
கல்யாணம் பண்ணிக் கொண்டு அவளை அழைத்து வந்து விடலாம் என்கிற முடிவுடன் கிளம்பிவிட்டேன்.
இதைதான் அவளும் எதிர்பார்த்திருக்கிறாள்.என்பது எனக்கு தெரியாது!
கல்யாணம் நடந்தது.
முதல் இரவை முடித்துவிட்டு ஹனிமூன் கிளம்பிவிடலாம் என பத்து நாள் ஷெடியுள் போட்டேன்.
முதல் இரவு.காத்திருந்தேன்.
அவள் வரவில்லை.கதவை வெளியில் பூட்டிவிட்டார்கள்.
எல்லா சொத்துகளையும் கொடுத்துவிட்டு கிளம்பு என பயமுறுத்தினார்கள்.
எனது மொத்த சேமிப்பும் இங்கிலாந்தில் இருந்து வரும் வரை அங்குதான் அந்த அறையில்தான் எனது தனிமை என சொல்லி விட்டார்கள்.10 நாள் அங்கேயே கிடந்தேன்.பணம் வராவிட்டால் கையை வெட்டி விடுவோம் என பயமுறுத்தவும் சரி நமக்கு சாவு துநிஷியாவில்தான் என நினைத்துவிட்டேன்.

நான் எதிர்பார்த்தபடியே அவர்கள் அசந்து இருந்த நேரம் பார்த்து தப்பி தூதரகம் சென்று அங்கிருந்து இங்கிலாந்து வந்துவிட்டேன்."என்கிறார்.கிட்டத்தட்ட 20 ஆயிரம் பவுண்ட்ஸ் காலி,


சனி, 29 செப்டம்பர், 2012

அதிமுக நடவடிக்கை சரியா?

பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடினார்கள் ,பிளக்ஸ் போர்டுகளில் சபாநாயகரின் படங்களும் இடம் பெற்றிருந்தன என்பதற்காக கட்சிக்காரர்களை கட்டம் கட்டி இருக்கிறது அதிமுக மேலிடம்.
கட்சியின் கட்டளையை மீறியது தவறு.ஆகவே ஒழுங்கு நடவடிக்கை என்கிறது அதிமுக தலைமை.
கட்சிக்காரர்கள் கழக நிகழ்வுகளுக்கான விளம்பரங்களில் அண்ணா,எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகிய மூவரைத் தவிர வேறு எவரது படமும் இடம் பெறக்கூடாது என்பது தலைமையின் ஜனநாயக ரீதியான உத்திரவு.
கட்சிக்கு அப்பாற்பட்ட ,பொதுவான தலைவர்களின் நிகழ்வுகளில் கட்சிக்காரர்கள் இடம் பெறுவது ,விளம்பரம் செய்வது என்பது ஒழுக்கத்திற்கு புறம்பானதா?
காந்தியாரின் பிறந்த நாளை கட்சிக்காரகள் கொண்டாடக்கூடாதா?
பெரியாரின் நாள் கட்சிக்காரர்களால் கொண்டாடப் படாமல் போனதற்கு காரணம் இது தானா?
சட்டப் பேரவையின் தலைவர் என்பவர் பொதுவானவர்.எல்லாக் கட்சிகளும் மதிக்கத் தக்கவர்.அவரை ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என கருதுவதே ஜனநாயக விதிகளை ,சட்டப் பேரவையின் மாண்பினை மீறுவதாக பொருள்.
சபாநாயகர் ஜெயகுமாரின் பிறந்த நாளை கொண்டாடியதும்.அதற்கான வாழ்த்துகள் சொல்லும் விளம்பரங்களிலும் அவரது படங்களை வைத்தது கட்சி கட்டளையை மீறிய செயலாக என்னால் நினைக்க முடியவில்லை.
சட்டப் பேரவையில் முதல்வரே பேசினாலும் சபாநாயகரை முன்னிலைப் படுத்தி விட்டுதான் பேச தொடங்கவேண்டும்.
எதிர்கட்சித் தலைவருக்கும் மட்டுமல்ல அத்தனை உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.
அப்படி பட்ட வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகரின் பிறந்த நாளை  கொண்டாடியது தவறா?
புரியவில்லை அரசியல்!

நடிகர் திலகத்தின் நையாண்டி மேளம்.

திரைப்பட பத்திரிகையாளர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை அமைத்தனர்.அதில் அடியேனும் ஒரு பொறுப்பில் இருந்தேன்.சக நண்பர்களில் பிஸ்மியும் ஒரு பொறுப்பில் இருந்தார்.
"அண்ணன் கிட்ட நம்ம சங்கத்தைப் பற்றி சொல்லி அவருடைய வாழ்த்துகளை  வாங்கலாமா?"
யோசனை சொன்னேன்.
"வீட்டுக்கு போகலாம்.ஷூட்டிங் ஸ்பாட்னா  மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்" என இன்னொருவர் சொல்ல எங்களின் ஜமா அன்னை இல்லம் நோக்கி சென்றது.
வீட்டில் இருந்தார் நடிகர் திலகம்.
"வாங்க ...என்ன இத்தனை பேர் மொத்தமா வந்திருக்கீக?"
அண்ணன் செம மூடில் இருக்கிறார் என்பதை அவர் வரவேற்ற பாங்கு எனக்கு சொல்லாமல் சொன்னது.
நெருங்கி பழகுகிறவர்கள் அதை கண்டு பிடித்து விடுவார்கள்.
"அண்ணே நாங்க சங்கம் ஆரம்பிச்சிருக்கோம் .இவர் நேர்மையா எழுதுறவரு!"என்று பிஸ்மியை அறிமுகப் படுத்தினேன்.
"ஒ ...அப்படியா..."என்றவாறே மற்றவர்களை பார்த்து"இவங்கல்லாம் நேரா எழுத மாட்டாங்களா?"என்றாரே பார்க்கலாம்.கொஞ்சம் கூட சிரிப்பைக் காட்டாமல் கேட்ட ஸ்டைல் இருக்கே.இன்னமும் பசுமையாக இருக்கிறது.அத்தனை பெரும் சிரித்து விட்டோம்.
"சிரிக்கிறீக.....ஏதும் தப்பா சொல்லிட்டேனா?"என அப்பாவியாக .எதுவுமே தெரியாததைப் போல் கேட்க ,  பத்திரிக்கை தொடர்பாளராக இருந்த இன்னொரு நண்பர் "நானும் இந்த சங்கத்தில இருக்கேண்ணே" என்று அந்த கேப்பில் அறிமுகப் படுத்திக் கொண்டார்.
"டே ..நீ பாக்கிற வேலை வேறயாச்சே ..உனக்கு எழுதக் கூட தெரியுமா?" என சட்டென கேட்டதும் அந்த ஏரியாவே கல கலப்பாகி விட்டது.
"அண்ணே ...ரொம்பவும் ஒடசல் பண்ணாதீங்கண்ணே !"என அந்த பி.ஆர்.ஒ.நண்பர் வழிந்தார்.
நடிகர் திலகத்தின் 84 வது பிறந்த நாள் அக்டோபர் 1-ம தேதி.
அவருடன் பழகிய அந்த நாட்களை மறக்கவே முடியாது.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அலைகிற ஆவிகள்! நம்புக!!

இந்த தேகத்தை விட்டு வெளியேறும் ஆன்மா எங்கு செல்லும்?
அதற்கென இடங்கள் இருக்கிறதா?
தாய்மை அடையும் பெண்களின் கருவில் புகுந்து கொள்கின்றனவா?
இப்படி எத்தனையோ சந்தேகங்கள் எனக்கு உண்டு. அண்மையில் ஒரு நாளேட்டில் புகைப் படத்துடன் வெளி வந்திருந்த செய்தி ஆச்சரியமாக இருந்தது.
63 வருடங்களுக்கு முன்னர் ---
போர்னியோ வனப் பகுதியில் ஆஸ்திரேலிய,பிரிட்டிஸ் போர் கைதிகளை ஜப்பானிய படையினர் நடக்க வைத்து கூட்டி சென்றனர்.
160 மைல்கள் .
2400 கைதிகள்.
இவர்களில் உயிர் பிழைத்தவர்கள்.ஆறே பேர்!
மற்றவர்கள் மரணித்துப் போனார்கள்.
பட்டினியால் பலர்,
நடக்க இயலாமையால் பலர்,
அடித்ததால் பலர்,
துப்பாக்கி சனியன் எனப்படும் பைனேட்டால் குத்தப் பட்டு பலர் ,
இப்படி செத்தவர்கள் எஞ்சியவர்கள்.
இவர்கள் இப்போது போர்னியோ காடுகளில் ஆவியாக அலைகிறார்கள்.
போட்டோ எடுத்து காட்டுகிறார் முன்னாள் மேஜர் ஜான்.அந்த படத்தை பாருங்கள்.
தந்திரம் எதுவும் இருக்கிறதா?
ஏனென்றால் இன்றைய நவீன கணினி யுகத்தில் ஆவிகள் பிறப்பது அதிசயம் அல்ல!
பார்த்து விட்டு சொல்லுங்கள் நம்பகத்தன்மையை!

தாமரை பாதங்கள்.

தாமரை பாதங்கள்.
டெல்லி தலைநகரின் பிரகதி மைதானம் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது,இந்த தாமரைப் பாதங்கள்.!
பாத்ரூம் சிலிப்பர்கள்  ஆயிரம் கொண்டு அமைத்திருக்கிறார்கள்.
கலை கண் காட்சி.
கவிதை பாடத் தோணுகிறதா?
கடவுளர்களின் பாதங்களை தாமரை என சொல்பவர்கள் நாம்.
கண்ணுக்கு புலப்படாத கடவுளின் பாதம் ,மலருக்கு இணையாக சொல்லப் படுகிறபோது வாழும் கடவுளர்களாகிய  நாம் அணியும்  குளியலறை பாதணிகளை தாமரை என சொல்லக் கூடாதா?
இதைக் கூட வசதியான பணக்காரர்கள்தான் அணிகிறார்கள்?
ஏழைகளுக்கு வெறும் காலே அழகு.
இந்த கண்காட்சியில் இன்னொரு புகைப்படம்.
"இந்தப் படம் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்" என்கிறார் படத்தை எடுத்த தாருண் !
"நமது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் ஏனோ தெரியவில்லை.புகைப் படங்களின் புதை குழி யாகவே இருக்கின்றன.மாற்றுங்கள்!" என்கிறார்.
உங்களுக்கு எத்தனை அர்த்தங்களை சொல்லி இருக்கிறது?

உடலை ஏலம் விடும் நான் விலை மகளா?

"உடலை ஏலம் விடும் நான் விலை மகளா?
இல்லை !"என்கிறாள் கத்தரீனா .
பிரேசில் நாட்டு மாணவி.
"வித்தியாசமானவள்.என்னை உலகம் புரிந்து கொள்ளட்டும் "என்கிற கத்தரீனா  எதற்காக தனது அழகிய உடம்பை ஏலம் விட வேண்டும்?
"தெற்கு பிரேசிலில் உள்ள ஏழைகள் வாழும் பகுதியில் அவர்களுக்காக நவீன வசதிகள் கொண்ட வீடுகள் கட்டித்தர முடிவு செய்திருக்கிறேன் .
அரசாங்கம் செய்யத் தவறியதை நான் செய்யப் போகிறேன்.
ஏலம் போகும் ஒவ்வொரு நிகழ்வையும் ஆஸ்திரேலிய படக்குழுவினர் படமாகப் பதிவு செய்கிறார்கள்.
நான் விலை மகளா?
இல்லை.இல்லவே இல்லை.
இது ஒரு வியாபாரம்.
அதில் நானும் பங்கு பெறுவது பெருமை!
நல்ல வாய்ப்பு.
அதை ஏன் நான் நழுவ விட வேண்டும்?
காதல்  உயர்வானது,நான் ரொமாண்டிக்கானவள்.
இப்படி ஏலம் போவதால் நான் விலை மகளாகி விடமுடியாது.அப்படி சொல்வது தவறு.
வியாபாரம்.அவ்வளவுதான்!" என்கிறாள் கத்தரீனா!
நீங்கள் என்ன சொல்கிறிர்கள்?

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தலை குனிவு!

தலை குனிவு!
இன்பத்து பால் என சொல்லி ஒரு பதிவு செய்ததற்கு 385 பேர் பார்த்திருக்கிறார்கள்.
ஆபாசம் எவ்வளவு விரும்ப படுகிறது என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டாக இருந்தது.
ஆனால் -
மனம் நைந்து தொலைபேசியில் வருத்தப் பட்டவர்கள் என்னிலும் பெரியவர்கள்.
என் வளர்ச்சியை விரும்புகிறவர்கள்.
தொடக்க காலத்தில் இருந்து என்னை ,என் எழுத்தை,மாற்றத்தை கவனித்து வருகிறவர்கள்.
ஒருவர் சொன்னார்;
"இத்தனை நாளும் இல்லாத வக்கிரமான விருப்பம் இப்போது எப்படி வந்தது.செப்படி வித்தைக் காரனை பார்க்க விரும்புகிற கூட்டம் உனக்கு வேண்டாம்.இனியும் அப்படி எழுதினால் அந்த எழுத்துகளை 'நேக்ரோபீலியா' என்பேன்"என சொன்னார்.
தலை குனிந்து வணக்கமும் நன்றியும் சொல்லி விட்டு எழுத்தில் கறை இருக்காது என்றேன்.
பொறுத்தருள்க.
அன்புடன்,
தேவிமணி.
25.09.2012.

சனி, 22 செப்டம்பர், 2012

தமிழன் எங்கிருக்கிறான்?

இதை படித்தபின்னர் என்னைப் பற்றி எப்படி வேண்டும் என்றாலும் விமர்சிக்கட்டும் .கவலை இல்லை!
ஒட்டு மொத்தமாக ஈழத்தில் நம்மைக் கொன்ற ழித்தவன் ராஜ பக்ஷே என்பதில் எவனுக்கும் சந்தேகம் இருக்கப் போவதில்லை.
அவனுக்கு துணையாக நின்றவர்கள் யார்?
எல்லோருக்குமே தெரியும் !
கொலையாளி கையில் கத்தியை கொடுத்தவனையும் தெரியும்.
அந்த கத்தியில் விஷம் தடவியவனையும் தெரியும்.
அவர்களும் ஈழத்தமிழனுக்காக "அழுகிறார்கள்" அதையும் இங்கு இருப்பவர்கள் நம்புகிறார்கள் என்கிற போது "நம்புகிறவன்"தமிழனாக எப்படி இருக்க முடியும்?
கொலை காரன் ராஜ பக்சே  சாஞ்சிக்கு வந்தபோது இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கலைஞர்.
அது வெறும் கண் துடைப்பு என்பது தெரியாதா?
டீசல் ,விலைவாசி உயர்வு  ,கியாஸ் சிலிண்டர் குறைப்பு என்கிற பிரச்னைகளுக்காக ஆட்சியை விட்டு மம்தா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரஸ் விலகியதைப் போல  அன்று ஈழத்தில் தமிழர்கள் கொல்லப் பட்டபோது ஆட்சியை விட்டு திமுக  வெளியேறி இருந்தால்....?
படுகொலைகள் கற்பழிப்புகள் நடந்திருக்குமா?
ராஜ பக்சே இந்தியா வரக்கூடாது என்பதில் தமிழகத்தில் உள்ள கட்சிகள
 ஒ ன்று பட்டு போராடி இருந்தால் அவன் வந்திருப்பானா?
கட்சிகளை மறந்து ,கொடிகளை மறந்து,யார் பெரியவன் என்பதை மறந்து ,ஈழ பிரச்னையில் எவரும் ஓரணியில் நிற்கப் போவதில்லை..
ஆகவே வெளி நாட்டில் வாழ்கிற தமிழர்களே ,!
தமிழ் நாட்டில் இன,மான உணர்வு உள்ள தமிழர்கள் அத்தி பூத்தது போல இருக்கிறோம்.
பெரு ம்பான்மை யான கட்சிகள் தமிழர் பெயர் சொல்லி வாழ்கின்றன.
அவர்களை நம்பாதீர்கள்.

ஈழத் தமிழர்களின் கல்லறையை தோண்டி எலும்பு கூட்டை காண்பித்து கட்சி நட த்துகிற கேடுகெட்டவர்கள் ,வீர வசனம் பேசுகிறவர்கள் இங்கு இருக்கிறார்கள்.தமிழர்களும் பெரும்பான்மையாக  இல்லை.ஈழத்தில் அழி க்கப் பட்டது. .இங்கே  ஆரம்பம்!


"போனி கபூரை கொல்ல விரும்பும் ஆர் ஜி வி "

ராம் கோபால் வர்மாவை தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது,அறியாத தயாரிப்பாளர்களும் இருக்க முடியாது,
காரணம்?
அந்த மனிதனின் துணிச்சல்!
தீவிரவாதிகள்  ,கூலிப் படையினர்  இவர்களின் பின்னணி யார் என்பதைப் பற்றி இவர் அளவுக்கு தைரியமாக சொன்னவர்கள்.எவரும் இல்லை என்பது எனது கருத்து.
ஆந்திர அரசியல் தலைவர்களில் சிலரின் கூலிப் படை தொடர்பு பற்றி தைரியமாக படங்கள் எடுத்தவர்,
அதே நேரத்தில் பெண்களின் அந்தரங்கங்களை படம்  காட்டியவரும் இவர்தான்.
இன்று இவரின் டிவிட்டர் பதிவை பார்த்த போது....... 

பகீர் என்று இருந்தது.
போனிகபூரை கொலை செய்ய விரும்புவது ஏன்?....கண்டு பிடியுங்கள்  என  பதிவு செய்திருந்தார்,
சினிமாக்காரர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள்.என்ன ,அதை படங்களில் காட்ட பல நேரங்களில் மறந்து விடுவார்கள்.அவ்வளவுதான்.
ஏன் கொலை செய்ய விரும்புகிறார் என்பதை சாதுர்யமாக ,ரசிக்கும் வகையில் சொல்லக் கூடிய ஆசாமிதான் ஆர்.ஜி.வி.!
இவருக்கு ஸ்ரீ தேவி மீது ஒரு  கண் உண்டு.
பதில் அதை சார்ந்தும் இருக்கலாம்.
இதை விட்டுத் தள்ளுங்கள்.
பிள்ளையாரைப் பற்றி அவர் சொல்லி இருக்கிற சில கருத்துகள் சிந்தனைக்குரியதாக இருந்து தொலைக்கின்றன!
"கணேஷ சதுர்த்தி என்பது அவருடைய அப்பா தனது மகனின் தலையை துண்டித்த நாளா?
சொந்த மகனின் தலையை துண்டித்த சிவனார் அப்பாவி யானையின் தலையை வெட்டி மகனின் முண்டத்தின் மீது பொருத்தியதை விட மகனின் தலையையே  பொருத்தி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
வேறு எந்த மிருகத்தின் தலையை வெட்டி எடுத்து ஒட்டி இருந்தால் இந்த அளவுக்கு புகழ் கிடைத்து இருக்குமா?
அம்மாவின் பெருமையை காப்பாற்றுவதற்காக எந்த அப்பனாவது சொந்த பிள்ளையின் தலையை துண்டிப்பானா?அல்கொய்தாவின் காட்டுமிராண்டித் 
தனமான்வைகளை  கேள்விப் பற்றிருக்கிறேன் ஆனால் இந்த கோரம் மாதிரி?"
ராம் கோபால் வர்மா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


ஸ்ரேயாவின் இடுப்பு அளவு என்ன?

தொலைக் காட்சியில் இந்திய ஏவுகணை விண்ணில் சீறிப் பாய்கிறது.
இந்திய விஞ்ஞானிகள் எழுந்து நின்று மகிச்சி பொங்க பெருமிதமுடன் கை தட்டுகிறார்கள்.கட்டித்  தழுவுகிறார்கள்!

",ஹை ....ய் ...யா..!"

என் பக்கம் அமர்ந்திருந்த எனது பேரனும் கை தட்டி மகிழ்கிறான்.

எட்டாவது படிக்கிற அவனுக்குதான் எவ்வளவு ஆர்வம்.அக்கறை!

"நாம்ம வல்லரசாயிட்டம்டா பேராண்டி!" எனது மனசுக்குள் சின்னதாக பூ மத்தாப்பு!

"அது எப்ப தாத்தா கீழே விழும்?"

பேரன்தான் கேட்டான்!

"ஏன் இப்படி கேட்கிறான் ,எதை  மனசில் வைத்துக் கொண்டு இப்படி படு சேதாரமான கேள்வியைக் கேட்கிறான் என்பது எனக்குப் புரியவில்லை.

வாழைப்பூவில் நரம்பு எடுத்துக் கொண்டிருந்த எனது பாரியாளுக்கும் தெரியவில்லை.

அவள் என்னை நோக்க நான் அவளை நோக்க இரவுதான் நினைவுக்கு வந்தது.
பேரனின் கேள்வியில் உள்ள பொருள் புரியவில்லை.

"ஏம்பா ,இப்படி கேக்கிறே ?"

"எங்க சயின்ஸ் மாஸ்டர் தான் சொல்லிக் கொடுத்திருக்கார். ஐன்ஸ்டின் தியரி படி மேலே போறதெல்லாம்  கீழே வந்து விழுந்துருமாம்.ஆப்பிளை மேலே தூக்கிப் போட்டால் கீழே தானே வந்து விழுகுது!"

மாஸ்டர் சொன்னதை பிள்ளை சரியாகத்தான் சொன்னது.

ஆனால் அந்த புவி ஈர்ப்பு சக்தி எத்தனை மைல் வரை இருக்கும் என்பதையும் வான்வெளி ,செயற்கை கோள் பற்றியும் சொல்லிக் கொடுத்திருந்தால் அந்த சிறுவன்  அப்படி கேட்டிருக்க மாட்டான்,நமது கல்வி முறை இன்னமும் பாட்டி வைத்திய காலத்திலேதான் இருக்கிறது என்கிற போது நாம் என்ன செய்ய முடியும்?

வீட்டிலிருக்கும் எத்தனை பெற்றோர்களுக்கு இந்த புவிஈர்ப்பு பற்றி தெரியும் என நினைக்கிறீர்கள்?

எனக்கே தெரியாது என்பதை எனது மனைவி மிகவும் நாகரீகமாக என் காதில் வந்து சொன்னாள்
!

"ஸ்ரேயா, இலியானா இடுப்பு சைஸ்னா உடான்ஸ் விட்டாவது பதில் சொல்லி இருப்பீங்கள்ல ?"

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கோவில் அர்ச்சகருக்கு அன்பளிப்பு கொடுக்கலாமா?

கணவனின் உடம்பை பேணுவதில் டாக்டர்களை விட மனைவி கவனிப்பதுதான் அதிகம்,அக்கறை,கவலை எல்லாமே!
டாக்டர்களுக்கு நோயாளியின் நிலைமை தெரியும் அதனால் அவர்கள் எந்த அளவுக்கு கவனிக்க  வேண்டுமோ அந்த அளவுக்கு....!அது கடமை!
ஆனால்?
மனைவி ?
டாக்டரை விட கடவுளர்களை நம்புவாள் .இன்னின்ன நோய்க்கு இன்னின்ன கடவுள் என ஒவ்வொரு ஊரிலும் ஒரு கடவுளை ஸ்பேஷலிஸ்ட்டாக வைத்திருக்கிறாள்!
தமிழ்ப் பெண்களுக்குமட்டுமல்ல ,பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு பொருந்திப் போகிற ஒரு தனிக் குணம் !
நான் அதிக நாள் படுக்கையில் கிடந்தவன் இல்லை.ஒரு நாள் முற்பகல் முழுவதும் கடுமையான வயிற்றுப் போக்கு,அமீபியா பாதிப்பு உள்ளவர்கள் கடுமையான உணவுபழக்கத்தை பின் பற்றவில்லை என்றால் அனுபவிக்க வேண்டிய அவஸ்தை!வெளியில் சாப்பிடவே கூடாது.பத்திரிகையாளனால் பின் பற்ற முடியாத இம்சை !
மாத்திரைகளை வாங்கிக் கொண்டு திரும்புகையில் ஆட்டோவை வடபழனி கோவிலுக்கு திருப்ப சொல்கிறாள் மனைவி.
" அர்ச்சனை பண்ணி விட்டு போகலாம்.எந்த சாமி புண்ணியமோ நல்லபடியா சொகமாப் போச்சு." என்றவள் தொடர்ச்சியாக விட்ட அம்பு"வெள்ளி செவ் வாய்க்கு கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வாங்கன்னா மனுஷன் கேக்கணும். மெனக்கெட்டு ஒருத்தி சொல்றாளே ,கேப்பம்கிற நெனப்பே இல்லீன்னா இப்படிதான்!" என்றாள் .
அவள் சொன்னதை கேட்காததினால் நான் மனுஷன் இல்லை என்பது அவளறியாமல் சொன்ன மேட்டர்.
அர்ச்சனை முடிந்தது.
" சாமிக்கு தச்சனை வையுங்க!"
"தச்சனை வச்சுதான் அர்ச்சனை சீட்டு வாங்கிருக்கேன்டி "
ஐயோ ......!அய்யருக்கு தட்டில அஞ்சு ரூபாயை போடணும்.அவர் துண்ணுரு  கொடுக்க வர்ற போது  பர்ஸ நோண்டாம இப்பவே  எடுத்து வச்சுக்க சொல்றேன்!" தட்சணை  மேட்டரை விளக்கினாள் .
வெளியில் வந்ததும் "அய்யருக்கும் சேத்துதான் தேவஸ்தானத்தில பணம் வாங்குறோம்னு அர்சசனை சீட்டிலேயே பிரிண்ட் பண்ணிருக்குடி!நாம ஏன் அனாவசியமா கொடுக்கணும்  "என்றேன்.
"அய்யருக்கு கொடுத்தா குறஞ்சா போகப் போறோம் .பேசாம வாங்க!"
"அவங்க கடவுளுக்கு சேவை பண்றதுக்குனே சமஸ்கிருதம் படிச்சிட்டு வந்திருக்காங்க.அதனால கவர்மெண்டே நம்மகிட்ட கலெக்சன் பண்ணி மொத்தமா கொடுத்திருது.இப்ப நாம்ம கொடுத்தது லஞ்சம்!" என்றேன் சற்று கடுப்பாகவே!
"அதெல்லாம் சட்டமா பேசுங்க!டாக்டர் சொல்றத  மட்டும்ம் கேக்காம பீஸ் பீஸ்னு னு அழுங்க.!"
அவள் சொவதிலும் ஒரு நியாயம் இருந்தது.
ஆனால் மந்திரம் சொல்கிறாரா ,அதையும் முழுமையாக சொல்கிறாரா என்பது கூட தெரியாமல் தெய்வத்தின் முன்பாக நமது கோரிக்கைய சொல்லாமல் பொத்தாம் பொதுவில் எல்லோருக்கும் சொல்வதையே எனக்கும் சொல்பவருக்கு நான் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்?

முலை என்பது ஆபாச சொல்லா?

சங்க இலக்கியங்களில் காணப்படும் செழுமை வாய்ந்த சொற்களில் சில இன்று ஆபாச சொற்களாக கருதப் படுகின்றன,
பெண் அல்லது ஆண் இவர்களின் அங்கங்களை சொன்னால் பிழையாகப் படுகிறது.

ஆனால் காலம் காலமாக பிழைகளையே இலக்கியமாக சொல்லி வருகிறார்கள்.

கம்பனின் மகன் அம்பிகாபதி என்கிறார்கள்..அரசனின் மகளை நேசித்தான் 'இவ்விருவரின் காதல் அமரத்துவம் வாய்ந்தவை என்கிறார்கள்.

இது வரலாற்று பிழையா?

அல்லது வலிந்து சொல்லப் படும் பிழையா?

கம்பனின் காலம் 9 ம் நூற்றாண்டின் பிற் பகுதி!

அம்பிகாபதி என்பாரின் காலம் 17 ம் நூற்றாண்டிற்கு முன்பு!

ஒட்டவே இல்லை !அம்பிகாபதி என்பவரின் கோவை அற்புதமான சிற்றிலக்கியம்.அதில் அன்றைய தமிழரின் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இன்றைக்கு மேலை நாட்டினர் தமது நிர்வாண உடம்பில் சித்திரங்கள் தீட்டி கொள்கிறார்கள்.பச்சை குத்திக் கொள்கிறார்கள்.ஆனால் 17 ம் நூற் றாண்டில் வாழ்ந்த தமிழ் பெண்கள் தம் உடம்பில் குங்கும குழம்பினால் சித்திரங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள்.

சங்க இலக்கியத்திலும் காணலாம்,

"தோளில் கரும்பு முலையில்கொடி விடு தொய்யலும்"என்கிறது இலக்கியம்.

இப்படி எழுதிக் கொள்வதை "தொய்யில் " என்கிறது தமிழ்.


சாருலதா --விமர்சனம் அல்ல.

அழிந்தான்,தொலைந்தான் என மீடியாக்கள் பக்கம் பக்கமாக படங்கள் போட்டு தாளித்த மனிதர் சாக்சேனா!
ஆட்சி மாறியதும் காவல்துறையின் கடுமையான "பராமரிப்பில்"வீரத் தழும்புகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர்,
சன்  தொலைக்காட்சியின் வளர்ச்சியில் இந்த மனிதருக்கு "பங்கு" இல்லை என சொல்ல முடியாது.தனக்கு ஆபத்து வரும் எனத் தெரிந்தால் பெற்ற பிள்ளையை நெரிக்கத் தயங்காதவர்கள் மேல் மட்ட அரசியல் வாதிகள்.
எப்படியோ இவர்களிடம் இருந்து தப்பிய சாக்ஸ் அண்ட் நண்பர்களின் வெளியீடுதான் "சாருலதா!"
ஒட்டிப் பிறந்த இரட்டை பெண்களைப் பற்றிய கதை,ப்ரியாமணி நாயகி!
இன்று உடல் நலம் ஒத்துழைக்காத நிலையிலும் சாருலதாவை பார்க்கவேண்டும் என்கிற ஆசையில் பார்த்த படம்.
காரணம் அடுத்து பார்க்க இருப்பது "மாற்றான்"!ஒட்டிப் பிறந்த இரண்டு ஆண்களைப் பற்றிய கதை.சூர்யா நடித்திருக்கும் படம்.
தலைப்பிலேயே சொல்லி இருக்கிறேன் "விமர்சனம் "அல்ல என்பதை!
படம் முடிந்த பின்னர் என் நண்பர் ''ஸ்க்ரீன் பிளே  சொதப்பல்" என்றார்.சத்தியமாக எனக்கு அந்த பிளே யை பற்றி எதுவும்  தெரியாது.
"அத பத்தி எனக்கு கொஞ்சம் விளக்கி சொல்லமுடியுமா?"என்றேன்.
"மழை  வர்ற மாதிரி இருக்கு அவசரமா போகணும்!"
இடத்தை காலி பண்ணினார்.
இப்படிப்பட்டவர்களிடம் எதை தெரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறீர்கள்?
சாருலதாவில் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் ஒளிப் பதிவாளர் எம்.வி.பன்னீர் செலவமும்,பிரியாமணி யும்தான்!
ஒருவரை ஒருவர் ப்ரோபைலில் பார்த்துக் கொள்கிற காட்சிகளில்தான் ஒளிப்பதிவாளர்களின்  திறமை கணிக்கப் படும்.பின்புலம் ஒரு லைட்டிங் .இரட்டையர்களில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி லைட்டிங் .சொதப்பினால் கோவிந்தாதான்!
இப்படி பலவிதமான சோதனைகள் உண்டு .வெற்றி பெற்றிருக்கிறார் பன்னீர்.
பிரியாமணிக்கு இந்த படம சோதனை களம் .

வியாழன், 20 செப்டம்பர், 2012

மதுவின் அடிமையாகிய மாதிவள்!

மதுவின் அடிமையாகிய  மாதிவள்!
சம உரிமை பெண்ணுக்கு!
ஆணின் அத்துமீறல் பெண்ணுக்கு வேண்டுமா?
மது அருந்துகிற பெண்களை பாரில் பார்க்க முடிகிறது.
பணம் படைத்தவர்கள்.பன்னாட்டு நிறுவனங்களில் கைகள் வழிய ஊதியம் வாங்குகிறவர்கள்.
உழைத்த களைப்பு நீங்க மது அருந்த வருகிறார்களாம் !
சரி,அருந்துங்கள்.அதில் குளிக்காதீர்கள்.என்பதே எமது கோரிக்கை.
அண்மையில் அமெரிக்காவில் மாஸஸூட்  ஸ்பிரிங் பீல்ட் ஹோட்டலில் மாக்ஸின் ரொமானோ என்கிற 23 வயது பெண் மது குடித்தாள் !
உச்சம் போனது போதை!
சக குடிகாரன்-குடிகாரிகளை கண்டபடி ஏசினாள் ! கூச்சல் ,குழப்பம்,மானாவாரியாக முத்தங்கள்.என அட்டகாசம் தாங்க முடியவில்லை.
போலீஸ்  அதிகாரி வந்து அமைதி படுத்த முயன்றார்.தனது ஹை ஹீல்ஸ் ஷூவினால் அதிகாரியின் காலை காயப்படுத்தினாள் !இந்த அநாகரீகம் சென்னைக்கும் பரவி இருக்கிறது.
முத்தங்கள் சாதாரணமாகி இருக்கிறது.
நமக்கும் இப்படி ஒருவள் கிடைக்க மாட்டாளா?
ஏக்கம் வருகிறது!நானும் ஆண்மகன்தானே !

லிண்டா! என்னை மன்னிப்பாயா!

 மிகப் பெரிய  வேன் !
 ஜார்ஜ் ரெனால்டு இண்டஸ்ட்ரி அருகே நிறுத்தப் பட்டிருக்கிறது.
 ஆலைக்கு செல்கிற ஆண்களும் பெண்களும் என்றும் இல்லாத திருநாளாய் அந்த வேனைப் பார்க்கிறார்கள்.
காதலனின் வலி அந்த வேனின்  உடலில் எழுதப் பட்டிருக்கிறது!
ஆச்சரியம் அலை அடிக்கிறது!
யார் அந்த லிண்டா?
அவளின் காதலன் யார்?
இப்படி கசிந்து உருகி எழுதி இருக்கிறானே!
"லிண்டா!என்னை மன்னித்து விடு!" என்பதாக !அப்படி என்ன பெரிய தவறிழைத் திருக்கப் போகிறான்?
காதலின் மாண்பினை ரசித்தபடியே செல்கிறார்கள்.
"லிண்டா!சில நேரங்களில் நான் முட்டாள்.மடையன் !
என்னுயிரிலும் மேலாக உன்னை நான் காதலிக்கிறேன்.
உன்னை நிறைய இழந்து விட்டேன்,
நாம் இழந்திருக்கிறோம்.
நான் உன்னுடன் வாழ வேண்டும்.
மணந்து கொள்ள மாட்டாயா அன்பே !"
இப்படி ஆரஞ்சு வண்ண நிறத்தில் எழுதி இருக்கிறான் !
அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கிற "தவறை" அவன் வெளிச்சம் போட வில்லை.!
பகிரங்கப் படுத்த விரும்ப வில்லை,
அவளும் அதை விரும்ப மாட்டாள் என்கிற நம்பிக்கை!
இதுதான் உண்மையான காதலின் அடையாளம்.,
அவள் நிச்சயம் படித்திருப்பாள்.
அனேகமாக நாளை நன்றி தெரிவித்து எழுதினாலும் ஆச்சரியம் இல்லை!
வாழ்க காதல்! 

புதன், 19 செப்டம்பர், 2012

விநாயகர் சிலை எங்கிருந்து வந்தது?

விநாயகர் சிலை எங்கிருந்து வந்தது?
இதைப் பற்றி கடந்த ஆண்டே எனது வலைப பக்கத்தில் பதிவு செய்திருந்தேன்.
இன்று இந்திய துணைக் கண்டம் மட்டும் இல்லாமல் இந்தியர்கள்,தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் "விநாயகர் சதுர்த்தி" கொண்டாடப் படுகிறது.
அவர் இந்தியக் கடவுளா,தமிழ்க் கடவுளா என்கிற ஆய்வுக்குள் புக நான் விரும்ப வில்லை.
அதை சமய ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
நான் படித்த வகையில் தெரிந்து கொண்டதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் குல தெய்வம் விநாயகர்.
1749-1818,வரை விநாயகர் விழா என்பது அரசினர் மட்டுமே குடும்ப நிகழ்வாக வணங்கி கொண்டாடி வந்தனர் ,இன்றைய புனே,அன்றைய பூனாவில்தான் விநாயகர் வழிபாட்டினை அரச குடும்பம் கொண்டாடி வந்துள்ளது.
பெஷாவர் வீழ்ச்சிக்குப் பின்னர் அரசு அந்தஸ்தை இழந்து குடும்பத்தார் மட்டுமே கொண்டாடினார்கள்.
இங்கு ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
விநாயகரை மன்னர் குடும்பம் மட்டுமே கொண்டாடியதால் உயர் சாதியினருக்கு மட்டுமே அவர் சொந்தம் என பிரிக்கப் பட்டார்,
அப்போதுதான் லோகமான்ய திலகர் "பிள்ளையார் இந்தியாவிலுள்ள பிராமணர் அல்லாதவர்களும் கொண்டாடப் பட வேண்டிய கடவுள் எனவே இந்தியா முழுவதும் உள்ள பிராமணர்--பிராமணர் அல்லாதவர்கள் எல்லோருமே வாங்கலாம் .விழா எடுக்கலாம் " என அறிவித்து அதை இயக்கமாக செயல்படுத்தினார்.
சரி தமிழ் நாட்டுக்கு விநாயகர் சிலை முதன் முதலாக வந்தது எப்போது?
பல்லவ மன்னன் நரசிம்மன் காலத்தில் தளபதி பரஞ்சோதிதான்  தமிழ் நாட்டுக்கு முதன் முதலாக பிள்ளையார் சிலையைக் கொண்டு வந்தான்.
சாளுக்கிய மன்னன் புலிகேசியை போரில் வென்று அரண்மனையில் இருந்து எடுத்து வரப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் விநாயகர் சிலை!
விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் படும் 19.09.2012 ல் பதிவு செய்கிறேன்.இவை இல்லாமல் வேறு புதிய தகவல்கள் வைத்திருப்பவர்கள் எனக்கு அனுப்பி வைக்கலாம்.
நன்றி,