நட்சத்திர ஹோட்டல்.சென்னையின் மைய்யப் பகுதியில் கம்பீரமாக நிற்கிறது.
இரவு பத்துமணி இருக்கலாம்.
காரிலிருந்து இறங்கினான் .!
பெரியதாக சல்யூட் அடித்த ஹோட்டல் ஊழியர் கார் சாவியை வாங்கி கொண்டார்.வாலட் சர்வீஸ்!
நேராக பாருக்குள் நுழைந்தான்.வழக்கமாக வருகிற பெரிய இடத்து விருந்தாளி என்பதால் வரவேற்பு அதிகம்!
''இன்னிக்கி என்ன சார்?விஸ்கி ஆர் பிராண்டி?''
''நோ. ஜின் வித் லெமன்...தென்? விமன்! '' பெரிதாக சிரித்தான்.
பாரில் இருந்த மற்ற குடிமக்கள் ஆளுக்காள் ''பைன்,டாப் மச்சான்...''இப்படி பல கமண்ட்ஸ் !
''ராமு வரல?'' பெரிய இடத்து பிள்ளை கேட்டது.
''இன்னும் ஆளைக் காணோம் ,பார்ட்டிகளை பிக்கப் பண்ண போயிருக்கலாம்,சார்"
ராமு யார் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
நம்ம ஆள் லார்ஜ் ,லார்ஜாக இரைப்பைக்குள் இறக்கிக் கொண்டிருக்கிறான்.
நேரம் போனது.
''ர ...மு வான் .....த்தானா ?''குளறுகிறது நாக்கு பெரிய இடத்து பிள்ளைக்கு!
''இன்னும் வரல,சார்''
''நோ.....இன்னி....க்கி ..லாரா ....வேணும்''

''சான்ஸ் இல்ல சார் ,இப்பவே டூ லேட்...பாரை குளோஸ் பண்ணனும் '' பார்மேனின் கவலை!பெரிய இடத்துப் பிள்ளை அடாவடி பண்ணாமல் போகவேண்டுமே !!
''இவனோ லாரா இல்லாமல் போகமாட்டான் போலிருக்கிறது.பாழாய்ப் போன ராமுக்கு இன்னிக்கி என்ன கேடோ..ஆளைக் காணவில்லை!
பாரை மூடியாக வேண்டும்.அதற்கு மேல் திறந்து வைத்தால் எவனாவது போட்டுக் கொடுத்து போலீஸ் ரெய்டு வர நேரிடலாம்!
கெஞ்சி கூத்தாடி அவனை வெளியில் அனுப்பி பத்திரமாக காரில் உட்கார வைத்தார்கள்.
அந்த போதையிலும் காரை பார்த்து ஓட்டுகிறான்,எங்காவது ராமு நிற்க மாட்டானா?
சாலையில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை!
ஏமாற்றம்,அவனை வெறியனாக்கியது .
வீடு சேர்ந்து காலிங் பெல் அழுத்தியவனுக்கு .வழக்கமான வரவேற்பு!'' இவன் இனி திருந்த மாட்டான்!காரில் அடிபட்டு சாகத்தான் போறான்.தூக்கிப் போட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்" அப்பாவின் சாபமும்,கவலையும்!
அவனால் தூங்க முடியவில்லை.''இப்படி குடிகாரனா இருந்தா எவன்டா பொண்ணு கொடுப்பான்?''என்று தினமும் அர்ச்சனை செய்கிற அப்பாவின் குரல் வேற அவனை இம்சிக்கிறது.
படுக்கையில் புரண்டபடி கிடந்த அவனுக்கு இரவு மணி ஒன்று என்பதை சுவர்க் கடியாரம் சொன்னது.
எழுந்தான்!
பூனை போல் கிச்சனுக்கு சென்றான்.
அங்குதான் வேலைக்காரி படுத்திருப்பாள் .
பணத்தைக் காட்டியோ,மிரட்டியோ காரியத்தை சாதிக்கலாம் என்கிற நம்பிக்கை.
போர்வையை உடல் முழுக்கப் போர்த்தி நிம்மதியாக தூங்கி கொண்டிருக்கிறாள்.
மெதுவாக பக்கத்தில் படுத்தவன் அப்படியே கைகளை போட்டான்.
கடும் உழைப்பின் அசதி அவளுக்கு !எதுவும் தெரியவில்லை.
நம்ம ஆளுக்கு நம்பிக்கை!படிந்து விடுவாள். என்கிற ஆசையுடன் அவளை இறுக அணைத்தபடி வாயைப் பொத்த அவள் திமிறி எழுகிறாள்.
இவ்வளவு நெருங்கி விட்டவனுக்கு காமம் உச்சத்தில் நிற்கிறது.
மேலும் மேலும் அவளின் உடலை இறுக்க வலிமை முழுவதையும் திரட்டி கொண்டு கூச்சல் போட்டபடியே அங்கிருந்த அரிவாமனையை எடுத்து வெட்ட அலறியபடியே சாய்கிறான் .
கூச்சலை கேட்டு மாடியிலிருந்து இறங்கிய பெற்றோர் விளக்குகளை எரிய விட்டனர்.
வேலைக்காரியின் கால்களைப் பற்றியபடி செல்வந்தர் வீட்டுப் பிள்ளை அலறுகிறான்.
அவனின் அப்பா சொன்ன வார்த்தை''இனியும் நீ திருந்தலேன்னா நானே உன்னை கொல்வேண்டா''
கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாமே!!