நயனும் பிரபுதேவாவும் பிரிந்து விட்டனர் என்கிறார்கள் சிலர்.
''இல்லை இல்லை ,அது டிராமா''என்கிறார்கள் இன்னும் சிலர்.
என்னதான் நடக்கிறது?
ஏன் இந்த குளறுபடி?
எதற்காக இப்படி ஒரு டிராமா?

பிரிந்து விட்டால் பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது தானே ?

பிரிந்துவிடுவதற்காகவா நயன் மதம் மாறி இந்துவானார்?
பல இடங்களில் விசாரிக்க...!
கிடைத்த தகவல்களை இங்கே கொட்டி இருக்கிறேன்!
ஜனவரி 26 ம் நாள் ஐதராபாத்தில் நடிகர் ரவிதேஜாஒருவிருந்துகொடுத்தார்.அந்த
விருந்துக்கு நயனும் சென்றிருந்தார்.கலந்து கொண்ட தெலுங்கு இயக்குனர்களில் சிலர் ''மீண்டும் நடிக்க வர வேண்டும்.தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் அவருக்கு ஆதரவு தர வேண்டும்''என்று பேசினார்கள்.
''கல்யாணம் நடக்கவிருப்பதால் சினிமாவை விட்டு விலகப் போகிறார்!'' ராம ராஜ்ஜியம் ''தான் அவரது கடைசி படம் ''என்று அவருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தஇயக்குனர்களே ''நடிக்க வாங்க''என அழைத்தது வியப்பாக இருந்தது.
இந்த நேரத்தில்தான் காதலர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்பதாக மீடியாக்களில் செய்திகள் அடி பட்டன.
தொடர்ச்சியாக நாகார்ஜுனா படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற செய்தியும் வந்தது.
இனி!
ரவிதேஜா விருந்துக்கு பிறகு நடிகர் நாகார்ஜுனா தொடர்பு கொண்டது நயனின் பழைய மானேஜர் அஜித் என்பவரை!அவர்தான் இன்னமும் நயனின் கால்சீட் பார்க்கிறார் என்கிற நம்பிக்கையில் பேசி இருக்கிறார்.அவரோ நயனின் கால்சீட் தேதிகளை வேறு ஒருவர் பார்க்கிறார் என சொல்லி நயனின் செல் எண்களை கொடுத்திருக்கிறார்.
இதன் பிறகுதான் பழைய நினைப்பில் அஜித்துக்கு போன் செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்..ஹாலிவுட் நிறுவனம் தொடர்பு கொண்டிருக்கிறது.தமிழ் , இந்தி என இரு மொழிகளில் படம் பண்ணப் போவதாகவும் ,நயன் நடிக்க வேண்டும் என கேட்டிருக்கிறது.
தெலுங்கு நடிகர் ரானா தமிழில் அறிமுகமாகிறார் ஜோடியாக நயன் நடிக்க வேண்டும் ,பெரிய சம்பளம் தருவதாக இன்னொரு ஆப்பரும் வந்தது.மேலும் இரண்டு இந்திப்பட நிறுவனங்களும் அஜித்திடம் பேசி இருக்கின்றன. அவர் தனது மாஜி முதலாளினி நயனிடம் பேசி இருக்கிறார்.
''சிறிது நேரத்தில் பேசுவதாக''சொல்லி சில மணி நேரத்துக்குப் பிறகு லைனுக்கு வந்திருக்கிறார் நயன்.
''என்னுடைய மேக்கப் மேன் ராஜுவிடம் அந்த விவரங்களை சொல்லி விடுங்கள்'' என்று சொன்னாராம்.
''எதுவாக இருந்தாலும் நம்மிருவரும் தான் பேசிக் கொள்ளவேண்டும்.மூன்றாவது மனிதரின் தலையீடு கூடாது.நாம் பிரிவதற்கு காரணமே மூன்றாவது ஆள் தலையீடுதான்.அந்த தவறை நான் செய்ய மாட்டேன். உனக்கு மானேஜராக இருக்க வேண்டும் என்றால் நேரடியாக என்னுடன் பேசு ''என்று கட் அண்ட் ரைட்டாக பேசி இருக்கிறார்.
இதற்கு பிறகு நயன் அவருடன் பேசவே இல்லை.
இப்போது நயனின் கால்சீட் தேதிகளை பார்க்கிறவர் ராஜேஷ் என்கிறவர் என்கிறது தமிழ்-தெலுங்கு சினிமா வட்டாரம்
இவர் நடிகர் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர்.நயன் வெளி நாடுகளுக்கு போகும் போது இவர்தான் பாதுகாப்பு அதிகாரியாக செல்வாராம்.இவர் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறார்.
காதல் முறிந்து விட்டது என்பது உண்மையாக இருக்குமேயானால் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பரை எப்படி நயன் தனது மானேஜராக வைத்துக் கொள்வார் ?
ஆகவே இருவரும் நாடகம் ஆடுவதாகவே சந்தேகிக்க வேண்டியதாக இருக்கிறது.
ஆனால் முறிந்து போனதாக சிம்பு வட்டாரம் சொல்கிறது.நயனிடம் கால்சீட் கேட்டவர்களில் சிம்புவும் ஒருவர்!