திங்கள், 30 ஏப்ரல், 2012

''எத்தனை 'செல்'உடைத்த காதல்?''--பிரசன்னா!

காதல் என்றால் கஷ்டம்,நஷ்டம் இல்லாத காதலா?
எதிர்ப்பு இல்லை என்றால் 'வெற்றி'என்ற சொல்லுக்கு இடமேது?
''இல்லை''என மறுப்பதும் ,பின்னர் ''ஆம்'' என ஒப்புக் கொள்வதும் மனித இயல்பு.பிரசன்னாவின் காதலும் மறுப்பு க்கு பின்னர் வெளிவந்துவிட்ட காதல் கல்யாண செய்திதான்!
காதலர்கள் ஒன்றாக வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
''பத்திரிகைகளில் வருவதற்கு முன்னரே ஒன்றரை வருஷமா ஓடிட்டுஇருந்தது .பத்திரிகையாளர்கள் கேட்டபோது கூட அதை மறுத்து சொல்லிவந்தேன்.இரண்டு குடும்பங்களும் இணக்கமான முடிவுக்கு வரும் வரை   
காத்திருக்க வேண்டும் என்பதினால்தான் அப்படி ஒரு மறுப்பு.!''என்றார் பிரசன்னா.
''யார் முதலில் காதலை சொன்னீர்கள்?''
''அதுதான் இன்று வரை தெரியவில்லை''
''பரிசுகள் பரிமாறிக் கொள்வதுண்டா?''
''உண்டு!அந்த கலர் புடைவை நல்லாருக்குல்ல என்றால் நாம்ப புரிஞ்சுகணும். வாங்கி கொடுத்தா சந்தோசப் படுவாங்க!அவங்களும் வாட்சு வாங்கி கொடுத்திருக்காங்க.பரிசுகள் நிறைய! கல்யாணம் முதலில் நாயுடு முறையில் நடக்கும்.பிறகு எங்களின் பிராமண முறைப்படி நடக்கும் இரண்டு தடவை நான் தாலி கட்டுவேன் .ஸ்ட்ராங்கா இருக்கும்!''
''காதலர்கள் போனில் பேசுவது..?''
''செல்லில் பேசிக் கொள்வோம்.''
''சூடு தாங்காமல் செல் வெடித்தது உண்டா?''
'' உடைந்து போனது நிறைய!எல்லாம் ஊடல்தான்.ஊடல் இல்லாமல் காதலா? ஏதோ இனம் புரியாத கோபத்தில் தூக்கி வீசி உடை பட்டிருக்கின்றன.''என்றார் பிரசன்னா.

சனி, 28 ஏப்ரல், 2012

ஒரு நடிகையின் பகிரங்க வாக்குமூலம்.

இப்படியெல்லாம் பேட்டி...கொடுப்பார்களா?
கொடுப்பார்கள்.மேற்கத்திய கலாசாரம் ஆபாசத்தை அனுமதிக்கிறது.
நமது கலாசாரம் எவைகளை மறுக்கிறதோ அவைகளை அங்கீகரிக்கிறார்கள் ,மேலைநாட்டவர்.
பெக்காம் என்பவரை தெரியாமல் இருக்கமுடியாது,உலகம் அறிந்த 'விளையாட்டு' வீரர் .
இவரின் மனைவியாக வாழ்ந்தவர் ,இப்போது அவரை விட்டு  விலகி வாழ்கிறார்.
பலரின் படுக்கைக்கு பங்காளியாக வாழ்வதில் அவருக்கு தயக்கம் இல்லை.
அண்மையில் ஒருவருடன் ஓரிரவு ..ஓய்ந்தது.
இரவுதான் ஒய்ந்ததே தவிர அந்த பெண் அப்படியே கசங்காமல் ,களைக்காமல் அப்படியே இருந்தார்.
இந்தியாவில் இருந்து வெளிவருகிற பிரபலமான பத்திரிகை அந்த பெண்ணை கண்டது.
அட்டையில் படுகவர்ச்சியாக நடிகைகளை படம் போடும்!.அண்மையில் இந்தி நடிகை காஜல் படம் கூட வெளியாகி,பலத்த மறுப்புகளும் சவால்களும் அடிபட்டன.
அந்த பத்திரிகையில் பெக்காமின் முன்னாள் ஆளின் பேட்டி.!
''அந்த புதிய ஆணுடன் அனுபவம் எப்படி இருந்தது?''
பதில் !!!
''நல்ல உயரம.கட்டுமஸ்தான உடம்பு.ஆரோக்கியமானவன் .எதிர்பார்த்து போனேன்!ஏமாற்றம்!''..பெருமூச்சு விடுகிறாள்.
கேள்வி கேட்ட ஆளுக்கு எதிர்பார்ப்பு எகிறுகிறது.நல்ல ஸ்டோரி ஆச்சே!
''ஏன்?''
அவளுக்கு சலிப்பு.'' படுக்கை ,இரவு,நேரம் ,தூக்கம் எல்லாமே வேஸ்ட்.அவன்தான் உயரம்!''
புரிகிறது! 
ஆனால் ''அது குறையே இல்லையே..காம சாஸ்திரம் சொல்கிறதே.சின்னவன் கூட சாமர்த்தியமாக பெண்ணை அடக்கிவிடுவானே?''
''அட..போய்யா!பூதக் கண்ணாடி வேணும்!''என்றாளே பாவி மகள்!
அந்த பென்னி பெயர் ரெபெக்கா லொஸ்!

மதுரை ஆதீனம் அருணகிரியின் கதை....

மதுரை ஆதீனம் அருணகிரியின் கதை.

இவர் யார்?

சென்னையில் ஒரு பத்திரிகையாளர்....!

இவரது அந்தக் காலத்திய நண்பர்கள் இன்று இருக்கிறார்கள்.

இவருக்கு சைவத்தின் தத்துவம் தெரியுமா?

சைவ புராணம் எத்தனை கிரந்தங்களைக் கொண்டது? அதில் என்னென்ன அடங்கி இருக்கிறது?வரிசையாக சொல்வாரா?ஆதி சைவம் என்றால் என்ன,அத்துவாசைவம் என்றால் என்ன,நாலு பாத சைவம் என்றால் என்ன ,அநாதி சைவம் என்ன சொல்கிறது ,சுத்த சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது,அணு சைவம் நம்முடையது தானா ...இப்படி நிறைய உண்டு.

அருணகிரிக்கு தெரியுமா அல்லது நித்தியானந்துக்கு தெரியுமா?

கன்மம் -என்ன?
ஊர்த்வ சைவம்,ஆதிசிவம்,அணு சைவம்,குண சைவம்,அபேத சைவம்,அந்தர சைவம்,நிர்க்குண சைவம்,வீர சைவம்,யோகசைவம்,இவை போன்று மேலும் பழ சைவங்கள் உண்டு.

காளாமுகம்,காபாலம் எனவும் உண்டு இவைகளின் தன்மையே தனி.

அருணகிரி, நித்யானந்தா இவர்களுக்கு தெரியுமா?

சென்னை மாலை பத்திரிகையில் பணியாற்றியவர் இந்த அருணகிரி இறந்தவர்களுடன் பேசுவதாக சொல்லி ஏமாற்றியவர்.இன்னும் பல விஷயங்கள் உண்டு.அன்றைய சுதேச மித்திரன் பத்திரிகையில் டைம் கீப்பராக பணியாற்றிய 'ரகமி''பல விஷயங்கள் சொல்லி இருக்கிறார்.அட்டையை வாயருகில் வைத்துக் கொண்டு ஆவியுடன் பேசியதெல்லாம் மதியொளி சண்முகமும் நானும் பார்த்த காட்சிகள் தான்!

தந்தை பெரியார் சொன்னதை யாரும் மறந்துவிடாதீர்கள்.

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது.

மக்களே ,விழித்துக்கொள்ளுங்கள்!


வெள்ளி, 27 ஏப்ரல், 2012

வைகையை காணோம்!

சித்திரைத் திருவிழா .மதுரைப் பெரு நகரின் மாண்புமிகு மக்கள் விழா.
சித்திரை முழு நிலவு ..முகத்திரை விலக்கி நிலம் நோக்க மக்கள் கூட்டம் நகரை முற்றுகை இட்டிருப்பது தெரிகிறது!
வங்கக் கடல் இடம் பெயர்ந்து வந்து விட்டதா?
மக்கள்சுனாமி மதுரையை வளைத்து விட்டதா?
நிலவு முகம் திருப்புகிறது!
வற்றாத வைகையில் வறட்சி!அணைக்கட்டின் உதவியால் ஓடையாக ஓடுகிறது.அந்த சுந்தரேசப் பெம்மானே வந்து ''வை ....கை ..என்றாலும் வெள்ளம கரை புரளப் போவதில்லை.
நதியில் மணலைக் காணோம்!ஆங்காங்கே கோரைப் புற்களும் புதர்களும்!
வறட்சி வைகையில் மட்டுமில்லை.மக்கள் வாழ்க்கையிலும்தான்!
வறுமை மறந்து ,துயர் மறைத்து வந்திருக்கிறார்கள்.
திருவிளையாடல் நடத்திய சுந்தரேசப் பெருமானுக்கும் ,மீனாட்சிக்கும் திருமணம்.
சுந்தரேசனின் மைத்துனர் அழகர் வந்திருக்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணியர் வந்திருக்கிறார்.
தேர்களில் திருவீதி உலா!கூடி இழுப்போம்.
கள்ளழகர் வைகை கரையோரம் இறங்கி,கரையோரமாகவே வண்டியூர் போய் திரும்புகிறார்.அவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு போகலாம்.
இதன் பின்னராவது நமக்கு ஒரு வழி கிடைக்காதா?
வறுமை போகாதா?
நம்பிக்கைதானே வாழ்க்கை!

முன்னொரு காலத்தில் வரிசையில் வரும் கூட்டுவண்டிகளில் உப்புக் கண்டம் சரம் சரமாய் காய்ந்தபடியே தொங்கும்.
கள்ளழகரின் பெருமைகளைப் பாடியபடியே வருவார்கள்.அவர்கள் எந்த வித்துவான்களிடமும் கற்றதில்லை.கேட்க சுகமாக இருக்கும்.
''கோவிந்தோ..கோவிந்தோ ..என தோல்பையில் இருக்கும் நீரை பீச்சியபடி  வருவார்கள். கோடை வெயிலுக்கு இதமாக இருக்கும். 
இப்போதும் பீச்சுகிறார்கள்.இளம் பெண்களை,குறி வைத்து!
ஆற்றுமணலில் வட்டமாக குடும்பங்கள்.புளி சோறு.சுண்டல்.உப்புக் கண்டம் .
சொல்லில் அடங்காத சுகம்.சொந்த பந்தங்கள் அமர்ந்து பவுர்ணமி நிலவில் நனையும் சுகம் இனி ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.
இன்னும் பத்து வருடங்களில் வைகை ஆறு காணாமல் போய் விடும்.ஒரு சிற்றோடை ஓடிக கொண்டிருக்கும் ,அதற்கு யாரோ ஒரு தலைவனின் பெயர் அல்லது தலைவியின் பெயர்.
''நீ தமிழனா?''
''அப்படி யாரும் எங்க குடும்பத்தில் இல்லைங்க?''
இப்படி சொல்லக் கூடிய நாள் நெருங்குகிறது !!!!!!

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஏடாகூட இடங்களில் பச்சை குத்தும் நடிகைகள்!

ஒரு காலத்தில் ,ஒரு காலத்தில் என்ன, ஐம்பது வருஷங்களுக்கு முன்னாடி நம்ம மக்கள் கை,கால்களில் பச்சை குத்திக் கொள்வார்கள்.கட்டைவிரலின்  மேல் பக்கமாக தேள் பச்சை குத்திக் கொள்வார்கள்.புஜங்களில் கணுக்கால்களில்,நெற்றியில் என குத்துவது பழக்கம்.பெண்கள் கோலப் பச்சை  குத்துவது வழக்கம்.சிலர் அழகம்மா என குத்தி இருப்பார்கள்.அதாவது கணவன் பெயர் அழகர என்று இருக்கும் .அதனால் அவரின் பெயரை சொல்ல மாட்டார்கள்.புருசன் பெயர் என்ன என்று யாராவது கேட்டால் கையை காட்டி விளக்குவார்கள். 
அந்த காலம் மலை ஏறிவிட்டது. 
'' ராசு இங்க வாயேன்!'' என்று கணவன் ராஜேந்திரனை சுருக்கி கூப்பிடும் காலம்  இது!
அந்த காலத்துப் பெண்கள் பச்சை குத்திக் கொள்வதற்கு வேடிக்கையான காரணம் சொல்வார்கள்.இறந்த பின்னர் மேலோகம் போனால் அங்கிருப்பவர்கள் ''என்ன கொண்டு வந்தே?''என கேட்பார்களாம் .அதற்கு பச்சை கொண்டு வந்தோம் என்று சொல்வார்களாம்.
இந்த காலத்திலும் சாவு வீட்டுக்கு வரும் நெருங்கிய உறவுகள் பச்சை கொண்டு வருவது வழக்கம்.இந்த பச்சை உடலில் இருக்கும் பச்சை இல்லை.தானியம் ,சேலை முதலியன!
பச்சை குத்துவது அநாகரீகம் என சொல்லப் பட்டது மேல்தட்டு மக்களால்!
இன்று அவர்கள்தான் 'டாட்டூஸ்''குத்திக் கொள்கிறார்கள்.பலர் வரைந்து கொள்கிறார்கள்.
அதுவும் எக்கச்சக்கமான இடங்களில்!
முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென் தனது இடுப்புக்கு கீழ்,வலது,இடது மணிக்கட்டுகள்,வலது கை என பச்சை குத்தி இருக்கிறார்.
முன்னாள் லவ்வர் ரன்பீருடன் நடிகை தீபிகா 'டேட்டிங்''போனதின் நினைவாக பின் கழுத்தில் ஆர்கே என ஆங்கில எழுத்துகளை டாட்டூஸ் பண்ணி இருந்தார்.
நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவியின் பெயரை இடது கை மணிக்கட்டில் குத்தி இருந்தார்.
ஆரவ என மகனின் பெயரை தனது முதுகில் குத்தி இருக்கிறார் அக்ஷய் குமார்.
மந்திராபேடி இடுப்புக்கு கீழே..
திரிஷா மார்பகத்தின் மேல் பகுதியில்!
நயன்தாரா மாஜி காதலனாகி விட்ட பிரபு தேவாவின்  பெயரை!
ஆக''பச்ச குத்தலியோ பச்சை' என குறத்தியர் வீதிகளை வந்து வீடுகளில் குத்தியது அந்த காலம்,



அழகு நிலையங்கள் சென்று ஏக்க சக்கமான இடங்களில் குத்திக் கொள்வது இந்தக் காலம்.

சனி, 21 ஏப்ரல், 2012

திமுக .உடையுமா?

பல புயல்களையும் ,பூகம்பங்களையும் பார்த்து ,உடைந்து ,பிளந்து எழுந்த இயக்கம் திமுகழகம்.

சொல்லின் செல்வர் சம்பத் பிரிந்தபோது ஒருதடவை,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டபோது மற்றொரு தடவை என இரண்டு பூகம்பங்கள் இயக்கத்தை பிளந்தன.ஆனாலும் பீனிக்ஸ் பறவையாக கழகம் வானுயரப் பறந்தது.

ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப் படுவதற்கு காங்கிரசுக்கு கை கொடுத்து உதவிய திமுகவுக்கு இப்போதுதான் சுனாமி வருவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கி இருக்கின்றன.பேரறிஞர் அண்ணா சொன்னதைப் போல கழகத்தை அளிப்பதற்கான கலக வேலைகள் உள்ளுக்குள்ளேயே நடக்கின்றன.

மு.க.அழகிரியா,மு.க.ஸ்டாலினா?

இவர்களில் யார் திமுகவை வழி நடத்தி செல்லக் கூடியவர் என்கிற ஆதிக்கப் போட்டி ஆரம்பமாகி இருக்கிறது.கலைஞரையும் மீறி இருவருமே காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

இவர்களில் யார் வென்றாலும் கழகத்தில் ஒற்றுமை என்பது வெறும் கனவுதான்!

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருஅணிகள்.இதில் யார் வெல்வது.யார் தோற்பது? எவர தோற்றாலும் தோல்வி திமுகவுக்குதானே!எதிரிகளுக்கு இடம் கிடைத்து விடுமே!

ஆக ,ஒற்றுமை உடைந்து திசைக்கு ஒன்றாக இருக்கும் கழகத்தை பா.ம.க.கூட சுலபத்தில் வீழ்த்தி விடும்.

அண்ணன்-தம்பிகளுக்கு இடையே நடக்கிற ஆதிக்க போர் பலம் வாய்ந்த இயக்கத்தை அடியோடு சாய்ப்பதற்கான தொடக்கம்தான் என தோன்றுகிறது.

கலைஞர் என்ன செய்யப் போகிறார்?

ஆச்சி மனோரமாவை கண்காணிக்கும் 'ஜெ'

கேப்டன் விஜயகாந்த் ஆச்சியை பார்க்க வருவதாக சொன்னார்கள்.ஆச்சி நோயுற்று ஒன்றை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவருக்கு திடீர் கரிசனம் .அவர் மட்டுமே வந்தார்,
மனைவியையும் அழைத்து வந்திருக்கலாம் அல்லவா?
இல்லை!
அன்று அவர் வந்ததற்கே காரணம் கதாசிரியர் கலைமணி வீடு அந்த பக்கம்தான்!
இறந்துபோன கலைமனிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வந்தவர் அப்படியே ஆன் த வே ஆச்சிவீட்டுக்கும் ஒரு விசிட்!
அரசியல் ஒரு மனிதனை எப்படி எல்லாம் கெடுத்து வைத்திருக்கிறது பாருங்கள்!
மனோரமாவுக்கு எழுபத்தி மூன்று வயது.
முட்டிகளில் வலி! அறுவை சிகிச்சை.!
வந்த மனிதரை வரவேற்பதற்காக எழுந்தார்.
''அக்கா..அக்கா. வேணாம்.உக்காருங்க'' கையை பற்றி உட்கார வைத்தார் கேப்டன்.
''வரணும்னு நினைக்கிறது..ஆனா முடியாம போயிடுது!பேத்தி கல்யாணத்துக்கு வரணும்னு நினைச்சேன்.அன்னிக்கி தான் ராமு வசந்தன் வீட்டு கல்யாணம்.அதனால முடியாம போச்சு.அக்கா ஆஸ்பத்திரியில இருந்தீங்க.நான் கூடங்குளம் பிரச்னையில் தீவிரமா இருந்தேன்.அரசியலுக்கு வந்த பிறகு ஒய்வுங்கிறது இல்லாம போச்சுக்கா!''

''பரவா இல்ல தம்பி!''மெதுவாகத்தான் ஆச்சியால்பேச முடிகிறது.

''உங்களுக்கு ஒன்னுமில்லக்கா!கவலைப் படாதீங்க ! நீண்ட நாள் வாழ்வீங்க!மனச போட்டு கஷ்டப் படுத்தாதீங்க!''

''ஆ ...க ..ட்..டு...ம்... தம்பி!''

விடை பெற்று கிளம்பினார்.

நான் சென்றேன்.ஆச்சி புன்னகைத்து வரவேற்றார்.

''இப்படி சும்மாஉக்கார்ந்து இருப்பதற்குடி வி.யாவது பாக்கலாம்ல?''

''என்னத்த பாக்கிறது?''சலிப்புடன் சொன்னார்.

''கோவில் குளம்னு போகலாம்ல?''

''அந்த முருகன்தான் என்னை இப்படி உக்கார வச்சிட்டான் .எப்படிப்பா போவேன்!கோவிலுக்கு போகனும்னு ஆசைதான் முடியலியே!''

அதிக எண்ணிக்கையில் படங்களில் நடித்த நடிகை என கின்னஸில் பதிவாகிய ஆச்சியை தமிழ்சினிமா அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை என்பது வேதனையான விஷயம்.

ஆனாலும் ஆச்சியின் உடல் நலம் பற்றி அந்த ஏரியாவில் உள்ள தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் அன்றாடம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் சொல்ல வேண்டுமென உத்திரவாம்.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

கல்யாணத்தை வெறுக்கும் நடிகை!

கருவாடு வெறுக்கும் பூனை!
இருக்குமா?
காவி வெறுக்கும் துறவிகள் வாழ்கிற நாட்டில் ''இத்தகைய பூனைகள் '' இல்லாமல் போகுமா?
என்ன, கருவாடுக்கு பதிலாக மீனாகவே கிடைத்து விட்டால்?
அதே..அதே .!நான் நடிகை பிரியங்கா கொதாரியை சந்தித்த போது ரொம்பவும் 
' போல்டாக''பேசினார்.
ஆந்திராவில் இவருடைய பெயர் நிஷா கோதாரி.இப்போது டைரக்டர் ராம் கோபால் வர்மா வின் நடிகை.
தமிழில் இவரை மும்பையிலிருந்து கொண்டு வந்தவர்.மாதவன்.ஜே..ஜே. படத்தில் அறிமுகம்.
'' லிப் லாக் சீனில் நடிப்பீர்களா ?''என கேசுவலாக தொடங்கினேன்.
''ஏன் நடிக்கக் கூடாதா?''அலட்சியமாக பார்த்தார்.
'' உங்க ஹீரோக்களை மவுத் பிரெஷ்ணர் போட்டுக்கிட்டு வர சொல்லுங்க . நடிக்கிறேன்.வாய் சுத்தமா இருக்கணும்'' இந்தி பொண்ணாச்சே .கடுமையா இருக்கு.
இவ்வளவு ப்ரீயா பேசுகிற போது நாம்ப தயங்கினா நல்லா இருக்குமா?
''நடிக்கிற வாய்ப்புக்காக பெட் ரூம் அட்ஜஸ்ட்மென்ட் உண்டா?ஆங்கிலத்தில் கேஷ்டிங் கவுச் என சொல்வாங்க?''என்றேன்.
''ஏன் பத்திரிகை உலகத்தில இல்லையா? டாக்டர்களிடம் இல்லையா,வக்கீல்களிடம் இல்லையா?''''என அடுக்க,
வேறு கேள்விக்கு போனேன்.
''கல்யாணம் பண்ணிப் பீங்களா?''
''அது நரகம்!எனக்கு வருகிற கணவன் என் சொல்ல கேட்கணும்.நான் அடிமையா இருக்க மாட்டேன்.கல்யாணம் என்பது பிள்ளை பெறுவதற்கு ஒரு வசதி.வேறு என்ன?''
''அப்படின்னா லிவிங் ரெலேஷன்ஷிப் ?''
''இப்ப அப்படிதானே ரொம்ப பேர் வாழ்றாங்க''
ஆத்தாடி இதுக்கு மேல என்னத்த கேட்கிறது! 

திங்கள், 9 ஏப்ரல், 2012

கோவிலின் அருமையும் பெருமையும்!


இவளும் பெண்தான் ...ஆனால்?
கோவிலுக்கு சென்றேன் ,பிரதோஷம் என்பதற்காக !
நந்தியின் முன்பாக கூட்டம் அதிகம்.அவரவர் குறைகளை நந்தியின் காதில் சொல்லிப் போனார்கள்.
அவர் கேட்டு அதை சிவனாரிடம் சொல்வார் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை !
நான் ஆத்திகன் அல்லன்,ஆனாலும் ஆலயம் செல்வது அமைதியை தருகிறது,ஒரு வித நிறைவைத் தருகிறது.பலவிதமான ஆண்களையும் ,பெண்களையும் பார்க்கிறபோது ,அவர்களின் ஆடை அணிகலன்களை ரசிக்கமுடிகிறது.வணங்கும்  முறைகளில்தான் எத்தனை விதம்!சிலர் வாய் விட்டு சொல்கிறார்கள்,பலர் கண்ணீர் வழிய வணங்குகிறார்கள்.இன்னும் சிலர் கை கூப்பி வணங்கி அப்படியே தலைக்கு கொண்டு போகும் போது எவ்வளவு சாமர்த்தியமாக பக்கத்தில் நிற்கும் பெண்கள் மீது முழங்கையினால் இடிக்கிறார்கள்!
பக்தி பரவசம் என்பது இதுதானோ !
சவுக்கியமா சார்,இதிலெல்லாம் நம்பிக்கை உண்டா?’’
பக்கமாக வந்து நின்ற பெண் கேட்டாள்.அவளை அதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை.என்னிடம் நலம் விசாரிக்கிறாள்! திரையுலகப் பெண்ணாக இருக்கலாம்.எங்கே சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை.இப்படி நினைத்துக் கொண்டுதான் அவளுடன் பேசத்தொடங்கினேன்.
நல்லா இருக்கேன்,நீங்க?’’
ஏதோ இருக்கேன் சார்! பேசிக்கிட்டே நடக்கலாமே!’’என்ற அவளின் பின்னால் என்னையும் அறியாமல் நடந்தேன்.அவள் அழகாக இருந்தாள்!அகலக் கழுத்து ஜாக்கெட் .கொஸ்டின் பேப்பர் அவுட்.!கருப்பு பிராவின் பட்டை வெளியில் தெரிந்தது.!
சொல்லலாமா ,தப்பாக நினைக்கமாட்டாளா சரி நமக்கென்ன என நடையை தொடர்ந்தபோது ‘என்ன சார் ஏதோ யோசிக்கிறீங்க போலிருக்கு ?’’எனக் கேட்டுவிட்டாள்..சிலவினாடி தயக்கம் அவளுக்கு தெரிந்து விட்டது.
ஒண்ணுமில்லை ...உங்க ஜாக்கெட்டை கரெக்ட் பண்ணிக்கிங்க.தப்பா தெரியுது’’
ஓ.......!   இதுக்கா யோசிச்சீங்க ,சொல்லலாமே ‘என சிரிக்க நானும் சேர்ந்து கொண்டேன். கபாலீஸ்வரர் கோவில் சுப்ரமணிய சாமி சந்நிதி அருகில் இருக்கும் மண்டபத்தில் உட்கார்ந்தோம்.அவள் இவ்வளவு நெருக்கம் காட்டுகிற போது நாம்  ஏன் தயங்க வேண்டும்?
நான் ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை.தலைக்கு மருதாணி பூசி செம்பட்டையாக  இருக்கிறது.ஏதோ வெள்ளையும் சொள்ளையுமா டிரெஸ்! அறிமுகம் இல்லாமல் என்னுடன் வலிய வந்து பேசுவதால் அவள் கண்டிப்பாக ‘அப்படிப் பட்டவளாகத்தான்’’ இருக்க முடியும்.இருக்கட்டும் டைம் பாஸ்! அமைதியை நாடி கோவிலுக்கு வந்தவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு!
என்ன பண்றீங்க?’’என்றேன்.
அரசாங்க வேலை!’’
உங்க டிரஸ் சென்ஸ் சூப்பர்.!’’
அப்படியா ,தாங்க்ஸ்!’’என சிரிக்கிறாள் .’’வெள்ளை ஜாக்கெட் போடும்போது கருப்பு ப்ரா போடக்கூடாதுன்னு சிலர் சொல்றாங்க.நீங்களோ லைக் பண்றீங்க!ரசனை வித்தியாசப் படுது!வித்தியாசமான மனுஷங்க!’’மறுபடியும் கலகல சிரிப்பு.
புரியல!யாரை சொல்றீங்க?’’
என் பாய் பிரண்டுக்கு இதான் பிடிக்கிது!அவர் சொன்னார்னுதான் இந்த மாதிரி வந்தேன்.என்னவோ தெரியல.இன்னும் வரல .கோவில்ல தனியா நின்னா தப்பா  பார்பபாங்கனுதான் உங்களிடம் பேசினேன்.நீங்க ரொம்பவும் அப்பாவிங்கிறது தெரியுது.’’என்று மீண்டும் சிரித்தவள் அவசரமாக எழுந்தாள்!
தாங்க்ஸ் !அவர் வந்திட்டார்!’’
கோவில் பக்தியை மட்டும் வளர்க்கவில்லை.காதலையும் வளர்க்கிறது.
கோவிலின் அருமையும் பெருமையும்!

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நடிகர் ராஜேஷின் ''சீதை'' ஆராய்ச்சி!

நடிகர் ராஜேஷ் எதையும் நுனிப் புல் மேய்கிறவர் அல்லர்.ஆணி வேர் வரை சென்று ஆதாரப் புள்ளி எங்கிருக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் வரை விட மாட்டார்.
இன்று காலையில் தொலை பேசியில் அழைத்தார்.அவருடன் பேசி மாதங்கள் பல கடந்த நிலையில் அவர் அழைத்ததுமே புரிந்து கொண்டேன்.''ஏதோ சிக்கியிருக்கிறது.''என்பதை.
''என்ன சார் சொல்லுங்க?'' என்றேன்.
ஷீரடி பாபா கோவிலுக்குப் போனேன்'' என்றார்.அவர் கிறித்தவர்.
அடுத்து நான் என்ன கேட்பேன் என்பதை உணர்ந்தவராக ''இது ஆன்மீகப் பயணம் அல்ல ஆய்வுப் பயணம்''என்றார்.''மிகப் பெரிய புத்தகம் எழுதுகிற அளவுக்கு நிறைய விஷயங்களை திரட்டி வந்திருக்கிறேன்'' என்றார்.
''என்ன திடீர் பயணம் ,வேறு காரணங்கள் உண்டா?''என்றேன்.
''தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக பல இடங்களுக்கு சென்று வந்திருக்கிறேன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது .சீதையைப் பற்றி கம்பன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கான ஆதாரங்களை கொண்டு வந்திருக்கிறேன்''என்று ஆர்வத்தை தூண்டிவிட்டார்.
''கம்பன் என்ன சொன்னான்?''
''அவளின் இடை,உயரம பற்றி சொல்லி இருக்கிறானே ,அது உண்மைதான் என்பதற்கான ஆதாரம் தான் என்னிடம் இருக்கிறது''என்று விவரத்தை வெளிப்படுத்தாமலேயே சஸ்பென்ஸ் வைத்து சொன்னார்.
''அடுத்து அன்னா ஹசாரே ஊருக்கும் போனேன்.அங்கெ இருக்கிற எல்லோருமே அவரைப் போலவே இருக்கிறார்கள்.அவரைப் பற்றிய விவரங்களையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறேன் .வாருங்கள் .நிறைய பேச வேண்டியதிருக்கிறது''என்று தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
நமக்கு ஆர்வம அலை அடித்துக் கொண்டு இருக்கிறது.



ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஜெயலலிதாவின் பதிலும் வலம்புரி ஜானின் கேள்வியும்! [ பத்திரிகையாளனின் கதை.6 ]

நான் சென்னை வந்து தேவி வார இதழில் பணியாற்றிய நேரம்.
அப்போது தலைவர் எம்.ஜி.ஆரால் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக செல்வி.ஜெயலலிதா நியமிக்கப் பட்டிருந்தார்.
''அவரின் கேள்வி-பதில் பகுதி இருந்தால் பத்திரிகையின் சர்குலேசன் உயரும்  அவரிடம் கேட்டுப் பாருங்கள் '' என்று ஆசிரியர் சொன்னார்.பொறுப்பாசிரியராக இருந்த நண்பர் ஜேம்ஸ் அவர்களும் உற்சாகப் படுத்தினார்.அப்போது நான் சினிமா மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களையும் பேட்டி கண்டு பதிவு செய்து வந்தேன்.
தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆசிரியரின் விருப்பத்தை சொன்னேன்.
செல்வியார் போயஸ் தோட்டத்துக்கு வர  சொன்னார் .
''ஒவ்வொரு வாரமும் எங்களின் வாசகர்களுக்கு பதில் சொன்னால் சிறப்பு சேர்ப்பதாக இருக்கும் '' என்று சொன்னேன்.
அவரும் ஒப்புக் கொண்டார்.
எட்டு வாரங்கள் கேள்வி-பதில் பகுதி சூடாகவும் சுவையாகவும் சென்றது!
மக்களின் ஆதரவு பெருமளவு இருந்தது.பத்திரிகையின் விற்பனையும் கணிசமாக உயர்ந்தது.
திடீர் என ஒரு நாள் ஜேப்பியார் நடத்தி வந்த இதழில் வலம்புரி ஜான் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
''கழக  விரோத இதழில் கொள்கை பரப்பு செயலாளர் கேள்வி பதில் அளிக்கலாமா?'' என கேட்டிருந்தார்.
தேவி வார இதழ் திமுக சார்பு பத்திரிகை என கருதப்பட்ட காலம் அது!
ஏழு வாரங்களை கடந்த நிலையில் அந்த கண்டனக் கட்டுரை வந்ததும் உடனடியாக என்னை தோட்டத்துக்கு வரும்படி செல்வியார் சொல்ல நானும் சென்றேன்.
சிரித்தபடியே ''இந்த வாரத்துடன் கேள்விபதில் பகுதியை நிறுத்திக் கொள்கிறேன்.வருத்தமில்லையே ''எனக் கேட்டார்.
அதை எதிர்பார்த்து சென்றதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லாது போயிற்று.!
சக்தி வாய்ந்த சிலரால் ஜான் அப்படி எழுதும்படி நிர்பந்திக்கப் பட்டிருக்கலாம் என்பது மட்டும் தெரிந்தது.