செவ்வாய், 29 மே, 2012

நடிகையரால் என்ன பயன்?

பாராளுமன்ற மேலவையில் நடிகையரை நியமித்திருக்கிறார்கள்.
இவர்கள் நியமன உறுப்பினர்கள்
.ஆளும் கட்சி யாரை விரும்புகிறதோ அவர்களை நியமித்துக் கொள்ளும்.
இந்தியாவின் மிகப் பெரிய ,உயர்வான சபை
.இங்கு கட்சி மாச்சரியங்களுக்கு இடமில்லை.
ஆனால் அடிக்கடி ரகளைகள் நடக்கும்.
மேஜை மீது ஏறி நின்று காகிதங்களை வீசுவார்கள்.கூச்சல் போடுவார்கள்.
என்னவோ இவர்கள்தான் ஜனநாயகத்தை பாதுகாக்க வந்த ரட்சகர்களை போல் பேசுவார்கள்.
இதெல்லாம் சரி ,இத்தகைய சபையில் நடிகையரை நியமிப்பது ஏன்?நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது ஏன்?
அவர்களால் என்ன பயன்?ஜனநாயகம் பற்றி படங்களில் பேசி இருப்பார்கள்.தீண்டாமையை பற்றி படங்களில் போராடி இருப்பார்கள்.
நிஜத்தில்....?
நடிகை ரேகா அமருகிற இடம் அருகே தனக்கு இடம் ஒதுக்கக் கூடாது என்கிறார் ஜெயா பச்சன்.
ஏனாம்? 
ஒன்ஸ் அப் ஆன் எ டைம் அமிதாப்பச்சனுடன் நெருக்கமாக 'நடித்தவராம்'
அதனால் என்ன?
சக்களத்தியாக நினைத்து விட்டாரா?
இப்படி எல்லாம் நினைப்பதற்காகவா மேலவைக்கு வந்தார்?
நடிப்பவர்கள் நாடாளக் கூடாது என்பதல்ல !
தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படவேண்டும்?
அது தான் உண்மையான ஜனநாயகத்திற்கு வழி அமைக்கும்.


திங்கள், 28 மே, 2012

இரண்டு வயது சிறுமியை புணர்ந்த சண்டாளன்!

இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா?
இருக்கிறார்கள்.மிருகங்கள் மனித உருவில் வந்திருப்பது எவருக்கு தெரியும்?
அவன் பெயர் ஜேம்ஸ் எம் ரீடர்.இரண்டு வயது சிறுமி கோரலினின் அம்மாவின் 'பாய் பிரெண்ட்'!
அடிக்கடி வீட்டுக்கு அம்மாவைப் பார்க்க வருவான்,
அப்படியே கோரலினிடம் பேசுவான் .கொஞ்சுவான்.
அம்மா வெளியில் போவதாக சொன்னதும் இவன் சிறுமிக்கு துணை இருப்பதாக சொல்வான்.
அம்மா போனதும் இவனின் ஆட்டம் ஆரம்பமாகிவிடும்.
அரும்புகிற மலரல்ல அச்சிறுமி.இன்னும் துளிர் விடவில்லை!
அவளைப் போய்......?
கதறி அழுதாலும் விடுவதில்லை.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சிறுமியின் கதறல் கேட்கும்.
சிறுமியை கண்டிப்பதாக எண்ணிக கொண்டார்களாம்.
இப்படி எத்தனை நாட்கள் கதறல் கேட்டிருக்குமா..!
அன்று அம்மா வீட்டில் இல்லை.
ரீடர் வழக்கம் போல் வந்திருக்கிறான்,
சிறுமி பாத்ரூமில்!
இவனுக்கு வசதியாகி விட்டது.
வழக்கம் போல் சிறுமி கதற,அவனும் காரியத்தில் இறங்க..
சிறுமி மூர்சித்து விட்டாள்.
அவசர போலீசை அழைத்து சொல்ல அவர்களும் அள்ளிக் கொண்டு போக வழியிலேயே சிறுமி செத்துப் போனாள் 
டவல் எடுத்துக் கொண்டு திரும்பியபோது பாத்டப்பில் மூழ்கி கிடந்தாள் என சொல்லி இருக்கிறான். 
போலீஸ் விசாரணையில் எல்லாமே தெரிந்து விட்டது.
மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பின் தோல் உரிந்திருப்பதும் ,பலவிதமான காயங்கள் இருப்பதும் தெரிந்திருக்கின்றன,
அமெரிக்காவில் வாசிங்டன் அருகில் உள்ள சென்டிராலியாவில் வழக்கு பதிவாகி இருக்கிறது.

சனி, 26 மே, 2012

பெண்ணின் சுகம்தான் சொர்க்கம்!

பெண்ணின் சுகம்தான் சொர்க்கம்! இதில் எத்தனை பேருக்கு உடன்பாடு என்பது எனக்கு தெரியாது.
ஆனால் அதுதான் உண்மை.மனிதன் வாழ்கிற போதே சொர்க்கத்தை அனுபவித்து விடுகிறான்
.நரகம் என்பது அவனின் துயரமே !
ஆக சொர்க்கத்தையும் ,நரகத்தையும் மனிதன் உயிர் வாழ்கிற போதே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் .
செத்த பிறகு எங்கே புதைக்கப் படுவோம் என்பது அவனுக்கே தெரியாது.
அதனால்தான் சொல்கிறேன் ,சொர்க்கம் என்பது பெண்ணில்தான்!
அந்த சுகத்துக்காக எவ்வளவோ பொய் சொல்கிறோம் அவரவர் தகுதிக்கேற்ப!
அன்பே ஆருயிரே,கண்ணே மணியே,கட்டாணி முத்தே,தேனே திரவியமே,என்றெல்லாம் புகழ்வது அந்த கண நேர சுகத்துக்காகதானே!
கண்கள் சொருகி மயங்குவது ,இப்படி புகழ்வது [பொய்யாக இருந்தாலும்] பெண்ணிடம் தானே!
ஏன் மதுவில் கூட மயங்குகிறோம் என்பார்கள்..உண்மைதான் 
,அதுவும் மயக்கம்தான்
.ஆனால் மாதுவிடம் அனுபவிக்கும் கண நேர இன்பத்தின் அளவுக்கு ஈடாகா!
ஊடல் கொள்ளும் சுகம் மதுவில் உண்டா?
முதுகு காட்டி படுத்துக் கொள்பவளிடம் இணக்கமாக பேசி உடல் தழுவி உதடு நனைத்து. பொய்யான வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி விட்டு கடைசியில் அவள் உடன்பட்டு ''அத்தான் !'' என முகம் காட்டி திரும்பியதும் அனுபவிக்கும் சுகம் மதுவில் கிடைக்குமா?
மூச்சு முட்ட உதடுகளால் உதடு கவ்வி முத்தமிடுவதில் கோடி சுகம் கிடைக்கிறதே!
ஆக பெண்ணிடம் அனுபவிக்கும் சுகம்தான் சொர்க்கம்.
அதை அளவுடன் அனுபவிப்பதே மனிதனின் கடமை.
இதில் மாறு படுவோர் யாரும் இருக்கமுடியாதே !
இருக்கிறீர்களா?

புதன், 23 மே, 2012

காமம் என்பது இழிவா?

காமம் என்பது இயற்கை.ஆண்-பெண் இரு பாலாருக்கும் இருப்பது!
காமம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை.அது இல்லாமல் வாழ முடியும் என்பது மூடத்தனம்!
மண்ணுக்குள் போகும் வரை ஜீவனுடன் இருப்பது காமம் தான்.
உடலுறவுதான் காமம் என்பதல்ல!அதுவும் காமத்தின் ஒரு அம்சம்தான்!
காமம் என்பது ஒழுக்கம் உள்ளது.
அது அனுபவிக்க வேண்டியது.உடலில் இருக்கிற உணர்வு.அதை நெறிப் படுத்திக் கொள்ளவேண்டும்.
காமம் என்ற சொல் அசிங்கம் இல்லை.ஆபாசம் இல்லை.
பார்வதிக்கு காமக்கோட்டி என்பது பெயர்.
காமக் கோட்டம் என்று காஞ்சிபுரத்தை அழைப்பார்கள்.
அன்பு,ஆசை என்பதும் காமம் தான்.
நெறியற்ற காமத்தினால்தான் இந்திரன் கேட்டான்.
நித்தியும் கேட்டார்.
தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு இன்னொரு பெண் மீது ஏற்பட்ட முறையற்ற காமம் அவனின் உடல் முழுக்க பெண் குறிகளை சுமக்க செய்தது. துறவறம் என சொல்லி வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது என்பதினால்தான் விசுவாமித்திரர் மேனகை உறவு !
எவ்வளவு உயர்ந்த தவ முனிவர் அவர்.!
வாழ்க்கையை அனுபவிக்காமல் போகக்கூடாது என்பதற்காக பெண்ணுடன் கூடி னார் என்பதுதான் உண்மை.
கடவுளர்கள் காம வசப்படவில்லையா?
ரிஷிகள் காமம் இல்லாமல் வாழ்ந்தார்களா?
வயது முதிர்ந்தால் உன்னால் இயலாமல் போகலாம்.ஆனால் காமம் இருக்கும்.சிலர் பெண்களின் மேனியை தழுவி சுகம் கொள்வார்கள்.
வயதான தம்பதியர் எத்தனை பேர் இந்த சுகத்தை விரும்பவில்லை என்று சொல்வார்கள்?
வெட்கப் படுவார்கள்.சமுதாயம் அவர்களை இழிவாக பார்க்கும் என்கிற அச்சம்.! ஆனால் மேலை நாடுகளில் முதியவர்கள் தயக்கம் இல்லாமல்  அனுபவிக்கிறார்கள். 
இன்னொரு மனிதப் பிறவி வேண்டும் என விரும்புகிறவனே உண்மையான மனிதன்.
நானும் அதை விரும்புகிறேன்!

செவ்வாய், 22 மே, 2012

நியாயம்தானே,மோகன்லால்?

கருத்து சொல்வதற்குள் தமிழ்சினிமா நடிகர்களின் விழிகள் பிதுங்கி விடும்?
சரியா தவறா என சொல்வதற்கு கூட அஞ்சுவார்கள்.
ஒரு வகையில் அது நியாயமாக தெரியலாம்.ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துகளாக இருந்தால் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் வன்மம் வைத்து கழுத்தை அறுத்து விடுவார்கள்.ஜனநாயகத்தின் தவ புத்திரர்கள் தாங்கள்தான்  என் சொல்லிக் கொண்டே எல்லாவிதமான இம்சைகளையும் கொடுப்பார்கள்.
ஆனால் அவைகளை தாங்கிக் கொள்வது வீரம் உள்ள கலைஞனுக்கு அழகு!

இத்தகைய அழகு வாய்ந்த நடிகன் இருக்கிறான்.இங்கல்ல!

கேரளத்தில்!

அந்த மாவீரனின் பெயர் மோகன்லால்!

மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி 'புரட்சிகர மார்க்ஸ்சிஸ்ட் கட்சி ஆரம்பித்த டி.பி.சந்திரசேகரன் என்பவரை கண்டம் துண்டமாக வெட்டி கோரக் கொலை செய்திருக்கிறார்கள்.கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள கோஷ்டி மோதலுக்கு ஒரு உயிர் பலி ஆகி விட்டது.ஒருவன் வெளி ஏறி  விட்டால் அவனைப் போட்டு தள்ளிவிடுவதா?

இதுதான் அவர்களது சித்தாந்தமா?

மோகன்லால் மனம் வெறுத்து அவரது இணைய தளத்தில் எழுதி இருக்கிறார்.

'' நான் என்னுடைய 52 வது பிறந்த நாளை கொண்டாடவில்லை.இருள் மேகம் சூழ்ந்த துயரத்தில் மூழ்கிவிட்டேன்.எனது அம்மா கடந்த மூன்று மாதங்களாக நினைவில்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறார்.என்னை ஆளாக்கி வளர்த்த பாசமலர்..ஆனால் தனது மகனை கொடிய கொலைக்கு இரையான  மகனைப் பார்க்கமுடியுமா?

இரண்டு அம்மாக்களின் நிலைமையை பாருங்கள்!

எனக்கு சந்திரசேகரனை தெரியாது.ஆனால் ஒரு உயிர்!

அவரைக் கொன்றவர்களால் ஒரு எறும்புக்கு உயிர் கொடுக்க முடியுமா?

அச்சமுடன் வாழ வேண்டியதாக இருக்கிறது.

இங்கே பாதுகாப்பு இல்லை.பயம்தான் இருக்கிறது''

இப்படியாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இங்கே நம்மவர்களால் இப்படி எழுத இயலுமா?

அந்த காலம் வருமா? வராது. 

வியாழன், 17 மே, 2012

மாமனாரின் காம வெறி...!

இங்கல்ல இங்கிலாந்தில் !
மகனின் அழகான மனைவியை அடைத்து வைத்து அனுதினமும் அனுபவித்திருக்கிறான்.
அச்சுறுத்தி இருக்கிறான்.
அவளுக்கு ஆங்கிலம் தெரியாது.அவள் பாகிஸ்தானி.தொலை பேசி இருந்தும் அவளால் ஏதும் செய்ய இயலவில்லை.
மாமனாருக்கு ஐம்பத்தி ஆறு வயது.மனைவி வெளியேறியதும் கதவை அடைத்து விடுவான் .மருமகளை நிர்வாணம் ஆக்கி விடுவான்.அழுதாலும் கதறினாலும் அந்த காமப் பிசாசு விடாது.காரியம் முடிந்த பின்னரே கதவை திறக்கும்.
இந்த கேவலத்தை கணவனிடம் அல்லது மாமியாரிடமோ அவள் சொல்லி இருக்கலாம் அல்லவா?
குரான் மீது கட்டாயப் படுத்தி சத்தியம் வாங்கி இருக்கிறான்.'
''யாரிடம் சொன்னாலும் என் மகன் உன்னை விவாக ரத்து செய்து விடுவான்''என்பதாக !
உலக அனுபவம் இல்லாத அவள் என்ன செய்வாள்?
அவளின் கையில் ஸ்குரு டிரைவரால் குத்தி இருக்கிறான். 
நெருப்பால் சுட்டிருக்கிறான். 
கொடுமைகளுக்கு பயந்து அவள் இணங்கி போயிருக்கிறாள்.
மூன்று மாதங்கள் தனது மருமகளை காமத்துக்கு இரையாக்கி இருக்கிறது அந்த காமப் பிசாசு.
மூன்று மாதங்களில் அவளுக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்து விட்டது.சம்பவத்தன்று 999 என்கிற அவசரப் போலீஸ் எண்ணுக்கு போன் செய்து சொல்ல மாமனாரை அள்ளிக் கொண்டு போய்விட்டது .
வழக்கு நடக்கிறது.

ஞாயிறு, 13 மே, 2012

காதலர்கள் ஜாக்கிரதை...!

காதலர்களுக்கு அன்புடன் சொல்லிக் கொள்வது, இல்லை எச்சரிப்பது யாரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள்.
அது உங்கள் இருவருக்குமே நல்லது இல்லை.
பயங்கர விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும் .
அண்மையில் நடந்த ஒரு உண்மை சம்பவம் .நினைவூட்டுகிறேன்.அவள் டாக்டர்.அவன் பிசினஸ்மேன்.இருவருக்கும் நெருக்கமான காதல்.
ஒருவரையொருவர் உள்ளத்தாலும் ,உடலாலும் நேசித்தார்கள்.
பாவிப் பயல் என்ன மந்திரம் போட்டானோ ,அவள் அவனையே சுற்றி வந்தாள்.அவனைப் பார்க்காமல் ,பேசாமல் இருக்க முடியவில்லை.
கட்டி அணைத்து கனிந்து ,கனி வாய் முத்தம் வாங்காமல் போக மாட்டாள்.
அவனும் அப்படிதான்!
தொழில் தெரிந்தவன் போலும். 
அது தெரிந்தவன் என்பதால் அவனுக்கு வண்டு மனம் .
அவளுக்கு தெரியாமல் இன்னொருத்தியையும் பிராக்கெட் போட்டு விட்டான்.
தனக்கு மட்டுமே அவன் என நினைத்து விரும்பிய போதெல்லாம் அவனை அழைத்து காம சுகம் கொண்டவளுக்கு ......,
அவன் இன்னொருவளையும் மேய்க்கிறான் என்பது தெரிந்து விட்டது.
ஒரு நாள்...!
பல் வலி என காதலியிடம் வந்தான்.
மனம் வலித்தது அவளுக்கு!அவனின் பல் பதிந்த தனது மேனி சிலிர்ப்பதை அறிந்தாள்!
''வலி தரும் பல்லை எடுத்து விடலாம்''என சொல்லி அவனை படுக்க வைத்தாள்!
''வலிக்குமா?'' என்றான்.
''வலி இல்லாமல் எடுத்து விடுகிறேன்''என சொல்லி அவனுக்கு அனஸ்தீஷியா கொடுத்தாள்.
மயங்கி விட்டான்.
பல்லை எடுத்தாள்,ஒன்றல்ல!அத்தனையும்!
வாயில் பெரிய கட்டுப் போட்டுவிட்டாள்.
மயக்கம் நீங்கியதும் என்ன நடந்தது என்பது அவனுக்கு தெரிந்தது.அவனால் பேச முடிய வில்லை!
அவள்தான் பேசினாள்!வஞ்சம் தீர்ந்தது என்றாள்!
அவனை நேசித்த இன்னொருத்திக்கு விஷயம் தெரிந்தது.
''பல்லு இல்லாத உன்னை எவ காதலிப்பா?''என்று அவளும் கழன்று கொண்டாள்.
 இந்த உண்மை சம்பவம் போலந்து நாட்டில் நடந்திருக்கிறது.

செவ்வாய், 8 மே, 2012

கண்களை குளமாக்கிய 'வழக்கு எண்'......டீம்!

வழக்கு எண் படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்கள் மற்றும் இதர ஊடகங்களின் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிற நிகழ்ச்சி!

தயாரிப்பாளர் லிங்குசாமி,இயக்குநர் பாலாஜி சக்திவேல் ,ஒளிப்பதிவாளர்  விஜய்மில்டன்ஆகியோருடன்படத்தில்நடித்த.....இல்லையில்லை,வாழ்ந்திருந்த கலைஞர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.முக்கிய நடிகர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.
அவர்களை நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்ததுடன் நில்லாமல் மேடை ஏற்றி தமக்கு சமமாக அமரவைத்து வாழ்த்துப் பா பாடிய லிங்குசாமியும் ,பாலாஜி சக்திவேலும் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என நெஞ்சு நிறைய வேண்டியவன் நான்!
ஊர்களில் கூத்துக் கட்டுகிற சின்னசாமி என்கிற சிறுவன் காலில் செருப்புகள் இல்லாமல் மேடை ஏறினான்.அவன் வணங்குகிற கடவுள்கள் லிங்குவும் பாலாஜியும் என்பதால் அத்தனை பய பக்தி!
நன்றி சொன்ன அறிமுக நடிகர்கள் அத்தனை பேரும் உணர்வுகளால் சொட்ட ,சொட்ட நனைந்திருந்தனர் ,
பேச முடியவில்லை.
இந்த படத்தின் மூலம் அவர்கள் நாளை தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடசத்திரங்களாக வரலாம்.
ஆனால் யாருக்குமே அத்தகைய கனவுகள் இல்லை.என்பதை அவர்களின் நன்றி உரை உணர்த்தியது.
துணை நடிகர்களிடம் பேசுவதே தகுதிக்கு இழுக்கு என ஒதுங்கிப் போகிற படைப்பாளிகளை பார்த்திருக்கிறேன்.தயாரிப்பாளன் என்பவன் ஆண்டவனுக்கு அடுத்தவன் என நினைப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.
ஆனால் பெரிய நடிகனோ சின்ன நடிகனோ,அறிமுக நடிகனோ ,யாராக இருந்தாலும் தனது திரைக் குடும்பத்தின் உறவுகள் என நினைக்கிற லிங்குசாமியை ,இயக்குநர் பாலாஜி சக்திவேலை அன்று தான் பார்த்தேன்.!
இவர்கள் வென்றால் தமிழ்த் திரை உலகம் ஆரோக்கியமுடன் வாழும்.
படத்தின் கிளைமாக்ஸ் படம் பார்ப்பவர்களை அசைத்துவிட வேண்டும்.அல்லது அழவைக்கவேண்டும்.இவை இரண்டில் ஓன்று அழுத்தமாக அமையுமேயானால் படம் பார்த்தவன் கனவுகளில் கண்டிப்பாக கிளைமாக்ஸ் இருக்கும்.
படத்திற்குரிய அந்த இலக்கணம் எவ்வித ஒப்பனையுமில்லாமல் நிகழ்ச்சியின் இறுதியில் நடந்தது!
இந்த காலத்தில் இப்படி ஒருவரா?
வெற்றி பெற்ற நொடியே சட்டைக் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு கறுப்புக் கண்ணாடி வழியாக பார்க்கிற இருட்டு மனிதர்கள் மத்தியில் நன்றியை ரத்த அணுக்களில் வைத்திருக்கிற சக்தி பாலாஜியை வாழ்த்துவதற்கு கடமைப் பட்டிருக்கிறேன்,நான் திரைப்பட விமர்சகனாக இருப்பதால்!
அத்தனை கூட்டத்தின் மத்தியில் லிங்குசாமியை நிற்க சொல்லி ஷாஷ்டாங்கமாக் விழுந்து வழங்கினார் பாலாஜி.
இருவரின் கண்களிலும் நன்றி நிறைந்து கண்ணீராக வழிந்தது.
சினிமா வாழும்! இத்தகைய மனிதர்கள் இருந்தால்!

சனி, 5 மே, 2012

துப்பாக்கி படமும்,பா.ம.க.வும்,,,,!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன் நான் விஜய்யின் ரசிகன் அல்ல.புகைப்பவர்களை ஆதரிப்பவனும் அல்லன்.

நான் ஒரு விமர்சகன்.பத்திரிகையாளன்.அவ்வளவே!

எனது மனம் என்ன சொல்கிறதோ அதை சொல்வதற்கு நான் தயங்குவதில்லை!

அண்மையில் துப்பாக்கி படத்தின் சுவரொட்டிகள்,புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் ஓன்று விஜய் சுருட்டு புகைப்பது மாதிரி!

இந்த படம் பார்கிறவர்கள் சுருட்டு குடிப்பதற்கு விரும்புவார்கள் என நம்பினால் அல்லது புகைக்கும் பழக்கத்தை தொடங்குவார்கள் என நினைத்தால்......!

அல்லது இந்த படம் படத்தில் இடம் பெறும் காட்சி என நினைத்தால் ...?

நாடு முழுவதும் மதுக்கடைகள் மக்களை சீரழித்துக் கொண்டிருக்கின்றன.நமது கண்களுக்கு முன்னர் நாளும் நிகழ்ந்து கொண்டிருகிற பேரழிவு! ஈரல் கெட்டு மரணத்தின் வருகையை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களைக் காப்பாற்றுவதற்கு பா.ம.க .உள்ளிட்ட எந்த கட்சியும் செயலில் இறங்கவில்லை.அறிக்கை,ஆர்ப்பாட்டம் என வெத்து வேட்டுக்களை வெடிக்கின்றனவே தவிர வேறென்ன செய்திருக்கின்றன!

சென்னை நூறடி சாலையில் ராமர கோவிலை அடுத்து டாஸ்மாக் .சாலிகிராமத்தில் கட்சிக்காரரின் இடத்தில் டாஸ்மாக்.அதுவும் பெண்கள் காய்கள் பழங்கள் வாங்கி செல்லும் கடை அருகில்!இப்படி நகர முழுவதும் மதுக்கடைகளை கட்சிக்காரர்கள் நடத்திவருகிறார்கள் அதாவது 'பார்'களை!

சுருட்டு புகைக்கும் படத்தைப் பற்றி அக்கறை கொள்ளும் பசுமைத்தாயகம் ,கண்களுக்கு முன் நிகழும் மதுக் கடை கேவலங்கள் பற்றி கடுமையான போராட்டத்தில் இறங்கினால் என்ன?

திரைப் படங்களினால்தான் நாடு குட்டி சுவராகிறது என்பது பா.ம.க.வினரின்  நெடுநாளைய குற்றசாட்டு.இப்போது அந்த கட்சியினர் இந்த குட்டிசுவராக்கும் துறைக்கு வந்திருக்கிறார்கள்.இக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொடி போட்ட காரில் வந்து சினிமா விழாவில் கலந்து கொண்டார்.  

இப்படி இருக்கும்போது பா.ம.க.ஏன் இரட்டை முகம் காட்ட வேண்டும்?

முதலில் மதுக் கடைகளை இவர்களால் ஒழிக்க முடியுமா?

ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் ஒழிப்புத் தான் முதலில் என சொல்வார்களேயானால் ,அது வரை மக்கள் ஈரல் கெட்டு சாவதுதான் விதியா?

நாளைக்கு கல்யாணம் கழுத்தே சும்மா இரு என்று சொன்னது போல் இருக்கிறது.

பா.ம.க.ஆட்சிக்கு வரும் என்பது கனவில் நிகழக் கூடியது!

கங்கைஅமரன் மகனுக்கு பொண்ணு வேணும்,இருக்கா?

கங்கைஅமரன் மகனுக்கு பொண்ணு வேணும்,இருக்கா?
பிரேம்ஜி அமரனை  தெரியும்ல.கோவா படத்தில நடிச்சிருக்கார்.நடிகர் .இசை அமைப்பாளர்.கெட்டிக்காரப் பிள்ளை.

என்ன கொஞ்சம் வாய் நீளம்.காமடி பீசு!செம கலாட்டா பார்ட்டி.
இன்னும் கல்யாணம் ஆகல.

'' ஏம்பா இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?''


''மனசுக்கேத்த மகாராணியை தேடிட்டிருக்கேன்.அதான் கிடைக்கல!''

''அப்படின்னா எப்படி பட்ட பொண்ணு வேணும்?''

''சிவாஜி படத்தில ரஜினி சார் சொல்வார்,அந்த ஸ்ரேயா மாதிரி ஒரு பொண்ணு வேணும்.சுத்தமான தமிழ் பொண்ணா இருக்கணும்.மகா லட்சுமி மாதிரி!''

''அது சரி. நீங்க மட்டும் ஊர் சுத்துவீங்க,உங்களுக்கு வர்ற பொண்ணு மட்டும் அடக்கம் ஒடுக்கமா குடும்ப பாங்கா வேனுமாக்கும் ,எந்த ஊரு நியாயம் ?''
''
வீட்டுக்கு  மகா லட்சுமி வந்துட்டா நான் ஏன் ஊரு சுத்தப் போறேன்.எப்ப வேலை முடியும் வீட்டுக்கு கிளம்பலாம்னு இருக்க மாட்டேனா?''

''லவ் பண்ண வேண்டியதுதானே?''

''நான் தேடுற மாதிரி பொண்ணு கிடைக்கலியே ''

''கோயிலு,குளம்னு சுத்த வேண்டியதுதானே?''

''சாமி கும்பிடுற எடத்தில போயிபொண்ணை தேட  சொல்றீங்களே ,உங்களுக்கே நல்ல இருக்கா?''

''பிரேம்ஜி!நீ இம்புட்டு நல்ல பிள்ளையா? ஆனா டி சர்ட்ல மட்டும் நக்கல் ,நையாண்டியா வார்த்தைகளை போட்டுக்கிரீங்க?''

''என்ன சார்.நாங்களா செய்றோம்.கடையில விக்கிறான் ,வாங்கிப் போட்டுக்கிறோம்'' என்கிறார் பிரேம்ஜி அமரன.

இதை படிக்கிறவர்கள் நல்ல இடமா இருந்தால் சொல்லுங்களேன்,இது விளையாட்டில்லை. சீரியஸ் மேட்டர்.



''