கோவில் நகரம்மதுரை.வரலாற்றில்மதுரைக்குதனிஇடம்உண்டு.தமிழ்ச்சங்கம் கண்ட இலக்கிய நகரம்.உலக அதிசயங்களில் ஒன்று என ஆராதிக்கப்பட, கொண்டாடப்படவேண்டிய அழகு நகரம்.
இந்த நகரத்தில் தான் சைவம் வளர்த்த ஞான சம்பந்தர் அம்மை அப்பனை பாடி அருள் பெற்றார்.இன்னும் எவ்வளவோ பெருமைகள் இந்த நகரத்துக்கு இருக்கிறது.அந்த நகரம் இன்று '' நரக '' மாறி வருகிறது.
அருணகிரி என்கிற மடாதிபதி இளைய ஆதீனமாக நித்தியானந்தா என்கிற போலி யான சாமியாரை நியமித்து இருக்கிறார்.
இந்த நித்தி மீது ஏகப்பட்ட காமக்குற்றங்கள் இருக்கின்றன.நடிகை ரஞ்சிதாவுடன் சரசமாடிய வீடியோ பதிவு வீதிதோறும் நாறியது.இப்போது நித்தி கெடுத்த ஆர்த்தி என்கிற பெண் அந்த ஆசாமியின் லீலைகளை கிழி கிழி என கிழித்திருக்கிறார்.எப்படியெல்லாம் ''ஜீவன் முக்தி''கொடுத்தார் அந்த போலி சாமியார் என்பதை நாணம் மறந்து,வெட்கம் துறந்து சொல்லி இருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு அந்த பெண் ரணமாகி இருக்கவேண்டும்.
கருவறையில் அர்ச்சகர் ஒருவர் உடலுறவு கொண்டதை எவ்வளவு கேவலமாக பார்த்தார்களோ அதை விட கேவலமாக ,இழிவாக பார்க்கப் படவேண்டியர் நித்தி.அந்த காமானந்தாவை மதுரை ஞான சம்பந்தர் மடாலயத்தில் இனி அனுமதிக்கலாமா? அனுமதித்தால் அது மடாலயம் இல்லை!மலக் கூடமாக மாறிவிடும்.மதுரை நகருக்கு இழுக்காகி விடும். மதுரையில் இருக்கிற ஆன்மீக வாதிகள் ,சைவ பெரியவர்கள்,அரசியல் தலைவர்கள் ...இல்லை இவர்களை சேர்க்கவேண்டாம்.இவர்களும் பாதி நித்திகளே!..மீனாக்ஷி அம்மனை வழிபடுகிற பக்த கோடிகள் என்ன செய்கிறார்கள்?
நித்தியை வரவேற்கிறார்களா?
ஞானப்பால் குடித்த சம்பந்தரின் மடம் மது அருந்தும் கூடமாக மாற வேண்டுமா?
காமக் கொடுரங்களின் இருப்பிடமாக மாற வேண்டுமா?
தமிழ மக்கள் நித்தியை அனுமதிக்ககூடாது!
இந்த நகரத்தில் தான் சைவம் வளர்த்த ஞான சம்பந்தர் அம்மை அப்பனை பாடி அருள் பெற்றார்.இன்னும் எவ்வளவோ பெருமைகள் இந்த நகரத்துக்கு இருக்கிறது.அந்த நகரம் இன்று '' நரக '' மாறி வருகிறது.
அருணகிரி என்கிற மடாதிபதி இளைய ஆதீனமாக நித்தியானந்தா என்கிற போலி யான சாமியாரை நியமித்து இருக்கிறார்.


நித்தியை வரவேற்கிறார்களா?
ஞானப்பால் குடித்த சம்பந்தரின் மடம் மது அருந்தும் கூடமாக மாற வேண்டுமா?
காமக் கொடுரங்களின் இருப்பிடமாக மாற வேண்டுமா?
தமிழ மக்கள் நித்தியை அனுமதிக்ககூடாது!