வியாழன், 26 ஜூலை, 2012

தமிழக மீனவனுக்கு விடியாதா?


என்ன பாவம் பண்ணினானோ, தமிழக மீனவன்.கடலுக்கு மீன் பிடிக்கப் போனால் இவனைப் பிடித்துக் கொள்கிறது சிங்கள ராணுவம்.
அடி, உதை ,பிடிக்கப்பட்ட மீன்களை கடலில் கொட்டிவிட்டு வலைகளையும்  அறுத்து விட்டு பிடித்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.
கருணாநிதி ஆட்சி காலத்தில் மத்திய அரசுக்கு கண்டித்து கடுதாசி எழுதினார் .
ஜெயலலிதாவும் அதே கடுதாசியை எழுதுகிறார்.
மத்திய அரசோ சர்வதேச கடல் எல்லையை இவர்கள் ஏன் தாண்டுகிறார்கள் என்று நேரடியாக இருந்து பார்த்ததை போல் சொல்கிறது..நம்ம்வனால் கச்சத் தீவுக்கு அருகில் மீன் பிடிக்க முடியவில்லை உரிமை இருந்தும்!
இதை மத்திய மந்திரி எஸ் எம்.கிருஷ்ணாவால் கேட்க முடியவில்லை.
ஜெயலலிதாவினாலும்  மத்திய அரசிடம் கண்டிப்புடன் இருக்க முடியவில்லை.
இங்கே இருக்கிற எதிர்கட்சிகளும் காகித புலிகள்!
கர்சித்துவிட்டு காப்பியை குடித்துவிட்டு போய்விடுவார்கள்
அவர்களுக்கு பேப்பரில் படத்துடன் செய்தி வந்தால் போதும்.
ஆக ,தமிழக மீனவனின் பிழைப்புக்கு என்னதான் வழி ?
பிரச்சினையை எப்படித்தான் தீர்ப்பது?
இவனையும் ஆயுதம் கொண்டு போக சொல்கிறார்களா ?
இவனிடம் இருக்கிற ஒரே ஆயுதம் ஓட்டு சீட்டு!
அதையும் தேர்தல் காலத்தில் விற்று தண்ணி அடித்து விடுவான்.
எந்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது இவனின் பிரச்னையில் அக்கறை செலுத்தவில்லையோ அதே கட்சிக்கு ஓட்டுப் போட்டுவிட்டு பிறகு வாழ்நாள் முழுக்க ஒப்பாரி!
இது சிங்கள ராணுவத்துக்கு சாதகமோ இல்லையோ ஆனால் நம்ம மத்திய அரசுக்கு லாபம்,
ஈழத்தமிழனை கொன்றொழிக்க உதவிய சிங்களவனின் பங்காளிகள் ஆயிற்றே!
மக்கள் திருந்தாதவரை மீனவ பிரசனை தீரப் போவதில்லை.
மக்கள் திருந்த கூடாது என்பதற்காக தானே அரசாங்கம் மதுக் கடைகளை நடத்துகிறது..குடித்தால் மரணம் என்று விளம்பரம் செய்வது அரசுதான்.அவன் குடிப்பதற்காக கடை நடத்துவதும் அரசுதான்!
விளம்பரத்தை பார்த்து குடிகாரன் திருந்தி விடுவானாம்.
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என சொல்கிற அமைச்சர்கள் வாங்கவில்லையா?எத்தனை வழக்குகள் நடக்கிறது?
நாடு நாசமாகிறது!

சனி, 21 ஜூலை, 2012

கோவிலில் கண்ட காட்சி...


 அடியேனுக்கு இன்று பிறந்த நாள் .சூலை 21.
அலுவலகமும் கிடையாது.அம்மாவின் ஆசிர்வாதத்தினால் மின்சாரம் இன்று முழுவதும் வராது.அதனால் விடுமுறை.

''கோவிலுக்கு போயிட்டு வாங்க ..அதுக்குள்ளே டிப்பன் ரெடியாகிடும்!''என்றாள்

வீட்டுக்காரி சொல்லுக்கு மறு பேச்சு பேச முடியுமா?

முடியும்,ஆனா இன்னிக்கி முடியாது..புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இருந்தாலும் வீம்புக்காக ''ஏன் நம்ம வீட்டிலேயே சாமி கும்பிட்டா பத்தாதா,ட்ராபிக்கா இருக்கும் பெட்ரோல் செலவு''என சிக்கனம் பாடினேன்.

''சனிக்கிழமை ,ட்ராபிக் அவ்வளவா இருக்காது ..போயிட்டு வாங்க .நானும் கூட வரணும்தான் ஆனா,  .வீட்டு வேலை ஜாஸ்தி.பசங்களுக்கு பலகாரம் பண்ணனும் ''என்று கிச்சனில் இருந்து பதிலுக்கு பாடினாள் .

டூ வீலரை எடுத்துக் கொண்டு கபாலீசுவரர் கோவிலுக்குப் போனேன்.
நான் மதுரைக்காரன் .அதனால் மீனாட்சி-சுந்தரேஸ்வர ரை பிடிக்கும்.
பிரகாரம் சுற்றி வந்து சுப்பிரமணியர் சந்நிதிக்கு எதிராக இருக்கும் பெரிய மண்டபத்தில் உட்கார்ந்தேன்.

எனக்கு சற்று தள்ளி இரண்டு முதியவர்கள்.

கணவ ன் -மனைவி..மிகவும் வசதியானவர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.முகத்தில் தெய்வீக களை  !

யாரையோ எதிர்பார்க்கிற பரபரப்பு .அடிக்கடி பிரகாரத்தை பார்த்து கொண்டிருந்தனர்.

அவர்களின் பரபரப்பு எனக்கு சற்று வித்தியாசமாக படவே அர்ச்சனை செய்த தேங்கா மூடியை உடைத்து சில்லை மென்றபடி கவனிக்க ஆரம்பித்தேன்.

அவர்களின் முகத்தில் இப்போது மகிழ்ச்சி,

''கிரான்ட்பா ''என சொல்லியவாறே ஒரு சிறுவன் ஒடி வந்தான். அவனை அழைத்து வந்த ஆணும் பெண்ணும் தொலைவிலேயே நின்று விட்டனர். அவர்கள் அந்த சிறுவனின் அப்பா-அம்மா.

முதியவர்களிடம் மிகவும் பாசமாக  இருந்தான் அந்த சிறுவன்.அவர்களுக்கு ஆனந்தம் ,பரமானந்தம். பத்து நிமிடம் இருக்கும்.மூவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

''க்ரிஷ் .....''

தொலைவில் நின்றிருந்த பெண்தான் அழைத்தாள்

அந்த சிறுவன் பிரிய மனமின்றி பிரிகிறான்.

அவன் அந்த முதியவர்களின் பேரன்.மகன் வயிற்று பிள்ளையாம்.

 சனிக்கிழமை தோறும்  காலையில்  கோவிலுக்கு வந்து பேரனை காட்டிவிட்டு போய் விடுவாராம் மகன்!.கூடவே வருவாள் மருமகள்.

இதென்ன உறவு ஏனிந்த கொடுமை?புரியவில்லை.


கனத்த இதயமுடன் வந்த எனக்கு காலை உணவு பிடிக்கவில்லை.மதியம் 12மணி அளவில் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டேன்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

தலைவரின் இந்தி எதிர்ப்பு!

இந்தி ஆதிக்கம் வந்துவிட்டதாக தலைவர் கலைஞர் கொதித்துப் போயிருக்கிறார்.மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார்.

யாரும் சிரிக்காதீர்கள்! மத்தியில் நடக்கிற ஆட்சியில் திமுக முக்கிய பதவிகளில் இருக்கிறது.மந்திரிகள் மட்டத்தில் பேசி தலைவர் கூறும் கையெழுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம்,
ஆனால்?

இந்தி அங்கு மட்டும்தான் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லையா?

திமுக எதையெல்லாம் இந்தி திணிப்பாக நினைத்ததோ அவை எல்லாம் இன்று தமிழ் நாட்டில் இல்லையா?

 மைல் கல்லில் இல்லையா?

மத்திய அரசு நிறுவனங்களில் இல்லையா?ஆங்கிலத்தின் ஆதிக்கம் தமிழின்  வளர்ச்சியை தடுக்கவில்லையா?

தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என்கிற பெயரா இருக்கிறது? மெட்ராஸ் ஹை கோர்ட் என்று தானே இருக்கிறது?ஆங்கிலமும் இந்தியும் சேர்ந்து தமிழின் மாண்பினை சிதைத்துக் கொண்டிருப்பது இன்றுதானா தலைவருக்கு தெரிகிறது?



காரணம் தேடி அலைகிறார் எதையாவது எதிர்த்தாக வேண்டும்.!ஆனால் இந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் இவர் நடத்தபோகும் நாடகத்திற்கு உடன்பிறப்புகளே வரமாட்டார்கள் .ஈழத் தமிழர்களை ஏமாற்றிய நாடகத்தினால் தமிழக மக்கள் அவர் மீது நம்பிக்கை இழந்து போயிருக்கிறார்கள் 

போங்கடா ,நீங்களும் பொன்மொழியும் !

ஆட்டோவில் எழுதியிருந்தார்கள் ,''கல்லில் செதுக்கிய கடவுளை விட கருவில் சுமந்த தாயே உண்மையான தெய்வம்'' என்பதாக!
சிரிப்புதான் வந்தது.
எந்த மகன் இப்படி நினைக்கிறான்? அய்யா நீங்கள் கோவித்துக் கொள்ளக் கூடாது.நீங்கள் அம்மாவை பூஜிக்கலாம் .உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை !
கல்யாணாம் ஆன ஆம்பிளைகளில் நூத்துக்கு 95 சதவீதம் அம்மாவை மதிப்பதில்லை. சத்தியம் பண்ணுவேன்.
அன்னிக்கி தலை நிறைய முல்லைப்பூ வைத்துக்கொண்டு கணவன் எப்ப வருவான்னு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் மனைவி.
பயலும் வந்தான்! வீட்டுக்குள் நுழைந்த போதே முல்லையின் மணம் ஒரு தூக்கு தூக்கிவிட்டது.அவனும் பேச வில்லை,அவளும் பேச வில்லை.ஊஞ்சலில் படுத்து இருந்த அம்மாவும் பேச வில்லை.எல்லாம் அமைதியாகவே ஓடுகிறது.
அவர்களின் அறைக்குள் போனான்.பனியனை கழற்றினான்.லுங்கிக்கு மாறி சிரித்தபடியே படுக்கிறான் .எதிர்பார்ப்புகள் எக்கசக்கம்.அவளும் பிராவும் பாவாடையுமாக விடி விளக்கை போட்டுவிட்டு படுத்தாள் .அவனுக்கு முதுகு காட்டியபடி!
நமட்டு சிரிப்புடன் தோளை தொட்டான்.
''ப் ஸ்ஸ் " கடுப்புடன் கையை தட்டிவிடுகிறாள் '
''என்னம்மா ..''செல்லமாக நெருங்கி அணைத்தான்.
பட்டாசாக வெடிக்கிறாள்.''இதுக்கொன்னும்  கொணச்சல் இல்லை''
மறுநொடியில் விசும்பல்.
இருவரும் வெகு நேரம் பேசுகிறார்கள் .தூங்குவதற்கு நள்ளிரவு ஆகிவிட்டது.அன்றைய இரவு அவனுக்கு ஏமாற்றம்.!
விடிந்தது!கச்சேரி ஆரம்பம் !
''ஏம்மா ,உனக்கு புத்தி கெ ட்டுப் போச்சா ,வீட்டுக்கு வந்தவளை எப்படி நடத்துற ங்கிறது தெரியாதா,பெரிய மனுஷியா நீ?''
அம்மாவை சகட்டுமேனிக்கு பேசுகிறான் ,ராத்திரி பொண்டாட்டி என்ன ஓதினாலோ தெரியாது.என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலேயே ஒன்சைடாகவே அம்மாவை வைகிறான் !
''என்னடா விடிஞ்சும் விடியாம இப்படி கத்துறே..ஒம்பொண்டாட்டிக்காரி ராத்திரி மந்திரிச்சி  விட்டாளா?''
பதிலுக்கு அம்மாவும் பேசுகிறாள்.பேசத்தானே செய்வாள்!
அவனை 25வருசம் வளர்த்து கல்யாணம் பண்ணி வைத்தவள் ,அவனை நன்றாக தெரிந்திருப்பவள். அவள் மருமகளிடம் தகராறு செய்யக் கூடியவளா ,நேற்று என்ன நடந்தது என்பதை இருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டல்லவா பேசி இருக்கவேண்டும்

அவனின் உடல் பசி நேற்று இரவு வெட்டியாகி விட்டது.அதன் விளைவு அம்மா விரோதி ஆகி விட்டாள் .ஆக பொன்மொழி ,பழமொழி எல்லாம் இந்த காலத்தில்  வேற்று மொழிதான்!

வியாழன், 19 ஜூலை, 2012

வெட்கம் இல்லாத ஜெ ன்மங்கள் !


என்னடா இவன் விளம்பர  படங்கள் மீதே குறி வைத்து அடிக்கிறானே என்று யாரும் நினைத்து விடாதீர்கள்!
ஒ மட்டுதுங்க! பசங்க கெட்டுப் போய் விடக்கூடாதே என்கிற பயம்.வருது!
இரண்டு பேர் பைக்கில் போறாய்ங்க .பின் சீட்டில் பிகர் இல்லமலா?இரண்டும் ''மாதிரி''யான அயிட்டங்கள் மாதிரி தெரியிது.
இந்த பைக்கில் உட்கார்ந்திருக்கிறவளை அந்த பைக்கில் உட்கார்ந்திருககிறவள் பார்க்கிறாள்.
சரி.தொலையட்டும்!
ஏறி நின்னுக்கிட்டு அவ காட்டுற  நெளிப்பு ,உனக்கு நான் மட்டமா என்று இவ  காட்டுற தேய்ப்பு  எல்லாம் அந்த ஆண்கள் மீதுதான்!அந்த பெண்கள் பண்ணிய சரசங்கள் நிஜமாகவே அந்த ஆண் மாடல்களை சலனபடுத்தி இருக்கும் .சபலம் வந்திருக்கும் .அந்த பெண்களின் அந்த உரசல் தேய்ப்பு அணைப்பு இவைகளுக்காக எத்தனை தடவை ரீடேக் வாங்கி இருப்பார்களோ தெரியாது.
இந்த விளம்பரத்தை பார்க்கிற அப்பாவி வீட்டுப் பெண்கள் ,பைக் வைத்திருக்கும் கணவன் மீது வேறு பார்வை பார்ப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு !
லிப்ட் கேட்கிற பெண்கள் இந்த உரசல் கிடைக்காதா என நினைப்பதற்கும்  வேண்டும் என்றே ஸ்பீட் பிரேக்கர்கள் ,பள்ளங்களில் ஆண்கள்  விஷமம் பண்ணவும்  வாய்ப்பு உண்டு.
பெண்களை எந்த அளவுக்கு கேவலபடுத்தமுடியுமோ ...படுத்துகிறார்கள்.
விமன் லிபரேஷன் என்கிற அமைப்புகள் சினிமா போஸ்டர்கள்  மீதெல்லாம் தார் பூசியது ஒரு காலம்.பிரா போடமாட்டோம் அது அடிமைத்தனம் என்று தேவையற்ற போராட்டங்கலும்  நடத்தினார்கள்.
நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் மாற வேண்டியதுதான்.அதற்காக நமது பண்புகளை  இழந்துவிடக் கூடாதல்லவா?
வீட்டு மருமகள் பிகினி யில் வந்து நின்றாள்  என்றால் மாமனாருக்கே ஒரு மாதிரியாக இருக்கும்  .அந்த ஆபத்துக்கு அவர் காரணமாக இருக்க முடியாது.
ஹார்மோன்கள் தான் காரணமாக இருக்கலாம்.

ஆகவே இந்த மாதிரியான ஆபாசமான விளம்பரங்கள் வருகிறபோது ரிமோட் கண்ட்ரோல்  கையில் இருக்கட்டும்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

சென்னை நகரத்தில் விபசாரம் கொடி கட்டி பறக்கிறது!


மனிதன் அறிவு தெரிந்த நாளில் இருந்து விபசாரமும் இருந்து வந்திருக்கிறது.கடவுளர்களும் அடுத்தவன் மனைவி மீது நோட்டம் விட்டு நோண்டி இருக்கிறான்.படைப்புக் கடவுளான பிரம்மா அகலிகை மீது ஆசைப் பட்டுத்தானே அவளின் புருசனைப் போல வேஷமிட்டு மேய்ந்திருக்கிறான் .அவன்தான் படைப்புக் கடவுள் ஆயிற்றே.அவனக்குள் இருக்கிற மந்திர சக்தியை பயன் படுத்தி அகலிகை மாதிரி ஒருத்திய தயார் பண்ணி இருக்கலாம். 
ஏதோ  அவன் காட்டிய வழியில் இன்று எல்லா தேசங்களிலும் விபசாரம் கோடி கட்டி பறக்கிறது.
சென்னையில் இரவானால் அண்ணா மேம்பாலம் சர்ச்சுக்கு எதிரில் அயிட்டங்களை ரக வாரியாக பார்க்கலாம்.
பஸ் ஸ்டாப்பில் மல்லிகை மணக்க நிற்கிறார்கள்.
சிக்னலுக்காக பைக் நின்றால் ''நீங்க ப்ரீயா?பீச்சுக்கு போகலாமா ,பிக்சருக்கு போகலாமா ''என கிக்கோடு கேட்கிறபோது மனுஷனுக்கு சபலம் வராதா ?
அதிலும் லோ நெக்,கட் ஜாக்கெட் என மாட்டு கொம்பு மாதிரி நிமிர்ந்து நிற்கிறபோது கை ஊறுதுப்பா !
அந்த இடத்திலிருந்து சற்று தள்ளி திரு நங்கைகள் .!
செம மேக்கப் !பதில் சொன்னால் கண்டிப்பாக மாட்டிக் கொள்வோம்!நோ டவுட்!
''என்ன ,வரசொல்லிட்டு இம்மாம் லேட்டா வர்றே?இன்னொரு பார்ட்டியை கட் பண்ணி விட்டுட்டேன். அதுக்கும் நீதான் செட்டில் பண்றே!''கழுத்தில் கத்தி வைக்காத குறையாக மிரட்டுவார்கள்.
இளிச்சவாயனாக இருந்தால் பையை கொடுத்து விடுவான்.
கொஞ்சம் முரட்டு  பயலாக இருந்தால் மிரட்டிப் பார்ப்பான் .உடனே அவனை மற்ற திரு நங்கைகள் சூழ்ந்து கொண்டு கேவலப் படுத்தி விடுவார்கள்.
இவ்வளவுக்கும் அமெரிக்கன் தூதரகம்  அருகில்தான் இருக்கிறது. தனி போலீஸ் படை வேறு 24 மணி நேரமும் இருக்கிறது .இருந்தும் என்ன செய்ய?
இவர்கள் ஏழை விபசாரிகள் .
கணவனால் தங்களை திருப்தி படுத்த முடியவில்லை .எனவே எங்களை திருப்தி படுத்தக் கூடிய ஆண்கள் வாருங்கள் என வரவேற்கும் பெரிய இடத்து மனைவிகளை  என்ன செய்யலாம்? 

இனியும் திமுகவை நம்பலாமா?

''தனி ஈழம்தான் தீர்வு '' என சொல்லி டெசோ வை ஆரம்பித்தவர் ''இப்போது அதற்கான சூழ்நிலை இல்லை,அங்குள்ள தமிழர்களின் நலன் பாதுகாக்கப் படவேண்டும்.அதற்காகவே டெசோவை  கூட்டியிருக்கி றேன்,'' என புறம்  காட்டி இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி,

தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தவர்.

எதிரிகளால் தாக்கப் பட்டு தெரு ஓரம் கிடந்தவர்.

அடக்குமுறைகளால் பாதிக்கப் பட்டவர்.

நள்ளிரவில் அரக்கத்தனமாக கைதானவர்.

எதையும் மறக்கவில்லை நாம்! இவை எல்லாமே யாருக்காக?

தமிழர்க்கா? மொழிக்காகவா?

இல்லை ,சத்தியமாக இல்லை.தனது குடும்பத்தின் ஆதிக்கம் திமுகவில் இருக்கவேண்டும் என்பதற்காக அவர் அமைத்த வலுவான அடித்தளம்.
அதற்காக அவர் தமிழனை காவு கொடுத்தார்.மொழியை பின்னுக்கு தள்ளினார்.அவரின் லட்சியம் பதவி பணம் என்றாகியது.

மாவீரன் பிரபாகரன் மீது அவருக்கிருந்த காழ்ப்பு மாறி துரோகமாக உருவெடுத்தது.

இப்போதைய சூழலில் அவரால் மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசை  பகைத்துக் கொள்ள முடியாது.ஊழல் வழக்கு அவரின் மகள் மீது  இருக்கிறது.
ஆகவே தனி ஈழம் பற்றி பேச முடியாது.              

அவர் மட்டுமல்ல ,ஆட்சியில் அமர்ந்திருக்கும் அதிமுகவும் பேச முடியாது.


எதிர்க்கட்சிகளாலும் பேச முடியாது.

தமிழனின்  வாழ்வுரிமையை மத்திய அரசிடம் திராவிட ஆட்சிகள் அடகு வைத்து  விட்டன.மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் நாம் நிரந்தர அடகு ஜடங்கள்.

திங்கள், 16 ஜூலை, 2012

என்ன கர்மம்டா இது!

என்ன கர்மம்டா இது!
மழை பெய்கிறது!மாடியில் காயப்போட்ட துணிகளை எடுக்க ஒரு பெண் வருகிறாள்.
எதிர் வீட்டில் ஒரு விடலை.
அவனைப் பார்த்தபடியே காம உணர்வுகளை வெளிப் படுத்தும் வகையில் அவள் நெளிகிறாள்.இடுப்பு காட்டுகிறாள். யாரோ கூப்பிடும் சப்தம் கேட்கிறது.
புன்னகை சிந்தியபடி நீ எப்படா கூப்பிடுவே என்கிற பாவனையுடன் போகிறாள்.
இது என்ன கர்மம் இது?
அவன் போட்டிருக்கும் பாடி ஸ்பிரே அவளை அந்த பாடு படுத்துகிறதாம்.!
எவ்வளவு மலிவான விளம்பரம்?
அவள் கன்னிப் பெண்ணா,அல்லது கல்யாணம் கட்டிக் கொண்டவளா?
யாராக இருந்தால் என்ன ?
இந்த மாதிரி வாசனைக்கு நெளிகிறவளுக்கு  ஒரு பாடி ஸ்பிரே கொடுத்தால்  வந்து விடுவாள் படுக்கைக்கு என்கிற தொனி தெரிகிறதே..
இதையும் டிவியில் காட்டுகிறார்கள்.குழந்தைகளுடன் உட்கார்ந்து ரசிக்கிறோம்.
இப்படிப்பட்ட விளம்பரங்களை பெண்களும் ரசிக்கிறார்கள் என்பதுதான் வெட்ககேடு!
தமிழனாம்,கலாச்சாரமாம்,பண்பாம்,..போங்கடா  ....

முட்டாள் அல்ல நாம்?

இன்னும் எனக்கு புரியாமல் இருப்பது நாம் ஏமாற்றப் படுவதை உணர்ந்தே இருக்கிறோமா ,அல்லது தெரிந்திருந்தும்,தெரியாததைப் போல் வெளிக் காட்டிக் கொண்டு இருக்கிறோமா , ஏன் என்பது தான்!
''பீம்சிங் இது என்ன புதுக் குழப்பம்?''என்கிற வசனம்தான் நினைவுக்கு வருகிறது!
''சுதந்திர ஈழம் பெற்றே தீருவோம்!''என டெசோ முழக்கம் செய்கிறார் திமுக தலைவர் கலைஞர்.ஆட்சியை கையில் வைத்திருந்த போது நிகழ்ந்த   ஈழ விடுதலைப் போரில் இவரின் பங்களிப்பு என்ன என்பது உலகமே அறியும் !
முள்ளிவாய்க்காலை  மறந்தால் அவன் தமிழனே இல்லை!
அங்கு நிகழ்ந்த படுகொலைகளுக்கு முக்கிய பொறுப்பாளிகளில் திமுகவும் ஓன்று!
இதை தமிழன் மறந்து விட்டானா?
''ஆவி பறந்தபின்னர் நமக்கு எதுவும் சொந்தமில்லை.கட்டி இருக்கிற இடுப்புக் கயிறையும் அறுத்து விட்டுதான் எரிப்பதோ,புதைப்பதோ,!ஏ,மனிதா,உனக்கேன் எதுவும் சொந்தமில்லை என்கிறபோது எதற்காக பண ஆசை!''
இப்படி வசனம் பேசுகிறவர்கள் தங்களின் வாரிசுகளுக்காக கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து சொத்து குவித்து வைத்திருப்பார்கள்.
முற்றும் துறந்தவர்கள் எனப்படும் இன்றைய ஆதினங்கள் தங்க கிரிடம் ,தங்கத்திலான மாலைகள் என அணிந்துகொண்டுதானே அருளுரைக்கிறார்கள்.அவர்களை கடவுளின் அவதாரம் என சொல்வதையும் நம்புகிறோம்.கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறோம்.
இதை போலதானே டெசோ வும்?
இன்று வரை தமிழக மீனவர்களை சிங்கள படையினர் அடிக்கிறார்கள்.வலைகளை அறுக்கிறார்கள்.சுடுகிறார்கள்.
கொடநாடு குளிர்மாளிகையில் முதல்வர் ஜெயலலிதா ஒய்வு எடுத்தபடி டெல்லிக்கு கடிதம் எழுதுகிறார்.
மற்ற கட்சியினர் கண்டன அறிக்கைகள்,ஆர்ப்பாட்டங்கள் என தங்களையும்  நினைவு படுத்திக் கொள்கிறார்கள்.
கலைஞர்,புரட்சித்தலைவிஇந்த இருவருமே மீனவர்கள் பிரச்னையில் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.
அவர்களால் மத்திய அரசை அறிக்கைகளால் கண்டனம் செய்ய முடியுமே தவிர நடவடிக்கைகள் என இறங்க்முடியாது.
இது தெரிந்தும் அவர்களை நம்புகிறோம் என்றால்....?
நமக்கு வேறு நாதி இல்லை,இவர்கள்தான் கதி என்று நம்பி இருப்பது தானே?
தமிழன் என சொல்வதே பாவம் என்கிற நிலையில் இருக்கிறோம்.
''தமிழன்னு சொல்லிட்டு இருந்தின்னா அடுப்பு எரியாது..போய்யா ,சம்பாதிக்கிற வழியைப் பாரு '' என்று வீட்டுப் பெண்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
நமக்கு எல்லாமே தெரிகிறது.அவர்கள் சுயநலமிகள் என்பது புரிகிறது,
இருந்தும் ஏமாறுகிறோம்! ஏன்?