சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி கடந்த சில நாட்களாக ''ஆஸ்பத்திரி வதந்தி''வழக்கம் போல பத்திரிகையாளர்கள் மத்தியில் !
எப்படித்தான் இட்டுக் கட்டி அவரை இழுப்பார்களோ தெரியாது.
அவரைப் பற்றிய செய்திகள் என்றால் கூடுதல் விற்பனை.
இதுதான் காரணமா?
இல்லை ,யாரேனும் அந்த செய்திக்கு பின்னால் இருக்கிறார்களா?
இன்றும் அப்படிதான்!
ஆச்சரியங்கள் படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சியில் [13.ஆக.] ரஜினியை பற்றிய வதந்தி.
உண்மையிலேயே நடந்தது என்ன வென்றால் படம் முடிந்த பின்னர் சிவாஜி திரி டி பட முன்னோட்டத்தை பார்க்க ரஜினியே அங்கு வந்து விட்டார் நல்ல ஆரோக்கியமாக!
ஏவிஎம் சரவணன் -பிரசாத் லேப் இணைந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
படத்தின் முன்னோட்டமும் ,ஆம்பல் பாட்டும் முப்பரிமான முறையில் .பிரசாத் லேப்பினால் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
படமே செப்டம்பரில் ரிலீஸ்.
செம திரில்.தமிழ் தெலுங்கு இந்தி ரசிகர்களுக்கு தஞ்சாவூர் இலையில் படா கானா பரிமாற்றப்பட்டிருக்கிறது.
சாதாரணமாக பார்த்த சிவாஜியை முப்பரிமாண படமாக பார்க்கிறபோது வியப்பின் உச்சம் தொடுகிறோம்.நமது முன்னாடியே ரஜினி வந்து நிற்கிற உணர்வு.
நிச்சயம் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழும்.
முப்பரிமாண கண்ணாடியை போட்டுக் கொண்டு ரசினி பார்த்த பிறகு...
''இந்த புதுமையான சிவாஜியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''இது ரஜினியை பார்த்து கேட்ட முதல் கேள்வி!
சிகிச்சை பெற்று வந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிற முதல் நிகழ்வு என்கிற பரபரப்போ ,பதட்டமோ இல்லாமல் பதில் சொல்கிறார்.
முன்னர் கேட்ட அதே குரல்!
''ஆண்டவன் இப்பவும் என பக்கம் இருக்கிறான்.என ரசிகர்களுக்கு இனி எதை கொடுக்கப் போகிறேன்னு நினச்சிட்டிருந்தப்ப இப்படி ஒரு வியப்ப கொடுத்திருக்கிறான்.எனக்கே பதினஞ்சு நாளைக்கு முன்னாடிதான் தெரியும்.சரவணன் சார் கூப்பிட்டார்.வந்தேன் திரி டி படம் பற்றி சொன்னார். பார்த்தேன் ,என படம்கிரத மறந்து நானே கிளாப் பண்ணினேன்.ஆம்பல் பாட்டை மூணு வாட்டி பார்த்தேன்.''
''இதே மாதிரியான திரி டி எபெக்டில் உங்களின் வேற எந்த படங்களை படமாக்கலாம்?''
''ரோபோ ,படையப்பா பண்ணலாம்.பிரமாண்டமான படங்களா இருந்தாதான் இப்படி ஒரு எபெக்ட் கிடைக்கும்.கோச்சடையான் இந்த மாதிரியான திரி டி படம்தான்.அந்த படத்தின் வெளியீடு சமயத்தில பேசலாம்னு இருந்ததை இங்க பேச வேண்டியதாகிடுச்சு.இனி இமாதிரியான படங்களுக்குத்தான் எதிர்காலம்''

'' கறுப்பு வெள்ளை படம்,கலர்படம்,திரீ டி படம் இப்படி மூன்று வளர்ச்சிகளிலும் இருக்கிற சினிமாவில் நீங்கதான் அந்த மூன்று வளர்ச்சிகளிலும் இடம் பெற்று இருக்கிறீர்கள்' எப்படி பீல் பண்ணுகிறீர்கள்?''
''அதான் சொன்னேனே எல்லாம் அந்த ஆண்டவனின் கையில் இருக்கு!''
''அடுத்து வரும் படங்கள் இதே மாதிரியாக இருக்குமா?''
''அது சப்ஜெக்டை பொறுத்து இருக்கிறது.அடுத்து வருவது கோச்சடையான்.மாநில அளவை பொறுத்து இம்மாதிரியான படங்கள் எடுப்பது எல்லோராலும் இயலாது.சப்ஜெக்டும் கிடைக்காது.ஆனா எதிர்காலம் திரீ டி தான் ''
''ஏவிஎம்.தயாரிப்பில் அடுத்து இப்படி ஒரு திரீ டி படத்தில் நடிப்பீர்களா?''
''அது ஆண்டவன் கையில் இருக்கு!''[சிரிக்கிறார்]
இப்படியாக கலக்கலான கலந்தாய்வில் சரவணன்,குகன், தோட்டாதரணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எப்படித்தான் இட்டுக் கட்டி அவரை இழுப்பார்களோ தெரியாது.
அவரைப் பற்றிய செய்திகள் என்றால் கூடுதல் விற்பனை.
இல்லை ,யாரேனும் அந்த செய்திக்கு பின்னால் இருக்கிறார்களா?
இன்றும் அப்படிதான்!
ஆச்சரியங்கள் படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சியில் [13.ஆக.] ரஜினியை பற்றிய வதந்தி.
உண்மையிலேயே நடந்தது என்ன வென்றால் படம் முடிந்த பின்னர் சிவாஜி திரி டி பட முன்னோட்டத்தை பார்க்க ரஜினியே அங்கு வந்து விட்டார் நல்ல ஆரோக்கியமாக!
ஏவிஎம் சரவணன் -பிரசாத் லேப் இணைந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
படத்தின் முன்னோட்டமும் ,ஆம்பல் பாட்டும் முப்பரிமான முறையில் .பிரசாத் லேப்பினால் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
படமே செப்டம்பரில் ரிலீஸ்.
செம திரில்.தமிழ் தெலுங்கு இந்தி ரசிகர்களுக்கு தஞ்சாவூர் இலையில் படா கானா பரிமாற்றப்பட்டிருக்கிறது.
சாதாரணமாக பார்த்த சிவாஜியை முப்பரிமாண படமாக பார்க்கிறபோது வியப்பின் உச்சம் தொடுகிறோம்.நமது முன்னாடியே ரஜினி வந்து நிற்கிற உணர்வு.
நிச்சயம் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழும்.
முப்பரிமாண கண்ணாடியை போட்டுக் கொண்டு ரசினி பார்த்த பிறகு...
''இந்த புதுமையான சிவாஜியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''இது ரஜினியை பார்த்து கேட்ட முதல் கேள்வி!
சிகிச்சை பெற்று வந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிற முதல் நிகழ்வு என்கிற பரபரப்போ ,பதட்டமோ இல்லாமல் பதில் சொல்கிறார்.
முன்னர் கேட்ட அதே குரல்!
''ஆண்டவன் இப்பவும் என பக்கம் இருக்கிறான்.என ரசிகர்களுக்கு இனி எதை கொடுக்கப் போகிறேன்னு நினச்சிட்டிருந்தப்ப இப்படி ஒரு வியப்ப கொடுத்திருக்கிறான்.எனக்கே பதினஞ்சு நாளைக்கு முன்னாடிதான் தெரியும்.சரவணன் சார் கூப்பிட்டார்.வந்தேன் திரி டி படம் பற்றி சொன்னார். பார்த்தேன் ,என படம்கிரத மறந்து நானே கிளாப் பண்ணினேன்.ஆம்பல் பாட்டை மூணு வாட்டி பார்த்தேன்.''
''இதே மாதிரியான திரி டி எபெக்டில் உங்களின் வேற எந்த படங்களை படமாக்கலாம்?''
''ரோபோ ,படையப்பா பண்ணலாம்.பிரமாண்டமான படங்களா இருந்தாதான் இப்படி ஒரு எபெக்ட் கிடைக்கும்.கோச்சடையான் இந்த மாதிரியான திரி டி படம்தான்.அந்த படத்தின் வெளியீடு சமயத்தில பேசலாம்னு இருந்ததை இங்க பேச வேண்டியதாகிடுச்சு.இனி இமாதிரியான படங்களுக்குத்தான் எதிர்காலம்''

'' கறுப்பு வெள்ளை படம்,கலர்படம்,திரீ டி படம் இப்படி மூன்று வளர்ச்சிகளிலும் இருக்கிற சினிமாவில் நீங்கதான் அந்த மூன்று வளர்ச்சிகளிலும் இடம் பெற்று இருக்கிறீர்கள்' எப்படி பீல் பண்ணுகிறீர்கள்?''
''அதான் சொன்னேனே எல்லாம் அந்த ஆண்டவனின் கையில் இருக்கு!''
''அடுத்து வரும் படங்கள் இதே மாதிரியாக இருக்குமா?''
''அது சப்ஜெக்டை பொறுத்து இருக்கிறது.அடுத்து வருவது கோச்சடையான்.மாநில அளவை பொறுத்து இம்மாதிரியான படங்கள் எடுப்பது எல்லோராலும் இயலாது.சப்ஜெக்டும் கிடைக்காது.ஆனா எதிர்காலம் திரீ டி தான் ''
''ஏவிஎம்.தயாரிப்பில் அடுத்து இப்படி ஒரு திரீ டி படத்தில் நடிப்பீர்களா?''
''அது ஆண்டவன் கையில் இருக்கு!''[சிரிக்கிறார்]
இப்படியாக கலக்கலான கலந்தாய்வில் சரவணன்,குகன், தோட்டாதரணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.