ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ரீ -டேக் விரும்பும் சூர்யா!

"மாற்றான் "படத்தின் பத்திரிகையாளர் கூட்டம்.
ஜே..ஜே... என்றிருந்தது.
"இந்த ரம்யாவிடம் தானே உதவி டைரக்டர் பொன்னுசாமி "தாண்டவம்"கதையை சொன்னதாக சொல்லி இருந்தார்?"
தொகுத்து வழங்கிய  பெண்ணை சுட்டிக் காட்டி கேட்டார் சக பத்திரிகையாளர்.
தலையாட்டினேன்."பொன்னுசாமி சொன்ன அந்த ரம்யா இவர்தான்"
"தொகுத்து வழங்குவதே இந்த பெண்ணுக்கு சிக்கலாக இருக்கிறது.இவர் எப்படி கதையை செலெக்ட் பண்ணுவார்?"என்றார் நண்பர் .
"நமக்கு வேண்டாத விஷயம்.வந்த வேலையை பார்!"என்றேன்.
டைரக்டர் கே.வி.ஆனந்த் போடியம் வந்து மைக்கை பிடித்தார்.
பல உண்மைகளை சொன்னார் .
"நான் பல பெரிய ஹீரோக்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறேன்.ட்ராலி ஷாட் களில் சில இடங்களில் ஜெர்க் அடித்திருக்கும்.அதற்காக "ரீ டேக் சார்"என்பேன் இதை சிலர் விரும்பமாட்டார்கள் "ரெக்ரெட் "டாக எடுத்துக் கொள்வார்கள்.ஆனால் சூர்யாவோ  ரீ டேக் என்றால் முகம் சுழிக்கவே மாட்டார்.எத்தனை டேக் வேண்டுமானாலும் கேட்கலாம் மிகத் திறமையான நடிகர்"என்று பாராட்டியவர் அடுத்து சொன்னது காஜல் அகர்வாலை பற்றிதான்!
"காஜல் உண்மையிலேயே அறிவான பெண்!"என்றவர் அதைத் தொடர்ந்து சொன்னவைதான் ஹைலைட்.
"சிலர் ஆங்கில புத்தகங்களை தலைகீழாக வைத்துக் கொண்டு படிப்பார்கள்."என்று அவர்  சொன்ன தகவல்தான்  'யாராக இருக்கும் அத்தகைய அறிவாளிப் பொண்ணு' என்கிற ஆவலை தூண்டிவிட்டது.
இரட்டை வேட சூர்யாவில் ஒரு சூர்யாவுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியிருப்பது அவரது தம்பி கார்த்தி என்பது உலகறிந்த செய்தி.அதை சிலர் கேட்டதுதான்  ஆச்சரியமாக இருந்தது.
பாடலாசிரியர்கள் எல்லோரும் பேசினார்கள் ஒருவரைத்தவிர!
அவரை ஏன் மேடைக்கு அழைக்கவில்லை என்பது தெரியவில்லை.

முதலிரவு ..தேனிலவு..ஏமாற்றம்!

இப்படியெல்லாம் ஏமாறுவார்களா?
ஏமாற்றப் படுவார்களா?
காதலி வருவாள் என ஏக்கமுடன்  காத்திருந்த கணவனுக்கு உயிர் மீது பயம்தான் வந்திருக்கிறது!
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே எனப் பாடாத குறைதான்!
மாப்பிள்ளை பால் பிட்டஸ்பார்க்.வயது 56தான்!இந்த காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா!
வாலிப வயோதிகர்களுக்காகவே எல்லாமே கிடைக்கும்போது வயது ஒரு பொருட்டே இல்லை!
போன வருஷம்! பொழுது போகவில்லை என்பதற்காக துனிஷியா போனார் பால் !
அங்கே அழகி மபர்காவை  பார்த்ததும் பற்றி கொண்டுவிட்டது காதல்!
அவளின் வயது ஜஸ்ட் 30தான்!
இருவரும் சுற்றினார்கள்.
அவள் அருகில் இருந்ததே அவருக்கு போதையாகி விட்டது.
தூண்டிலில் புழுவை மாட்டி வைத்து குளத்தில் வீசினால் மீன் சிக்காமல் போகுமா?
இனி அவரே சொல்வார்,கேளுங்கள்.
"இங்கிலாந்து திரும்பியதும் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என ரொம்பவே கவலை பட்டாள் .உடனே அவளை பார்க்க கிளம்பி விட்டேன்.இப்படி பலதடவை துனிஷியா போய் வந்திருக்கிறே ன் .
அவள் இன்றி நான் இல்லை என்கிற முடிவுக்கு வந்தாச்சு.
கல்யாணம் பண்ணிக் கொண்டு அவளை அழைத்து வந்து விடலாம் என்கிற முடிவுடன் கிளம்பிவிட்டேன்.
இதைதான் அவளும் எதிர்பார்த்திருக்கிறாள்.என்பது எனக்கு தெரியாது!
கல்யாணம் நடந்தது.
முதல் இரவை முடித்துவிட்டு ஹனிமூன் கிளம்பிவிடலாம் என பத்து நாள் ஷெடியுள் போட்டேன்.
முதல் இரவு.காத்திருந்தேன்.
அவள் வரவில்லை.கதவை வெளியில் பூட்டிவிட்டார்கள்.
எல்லா சொத்துகளையும் கொடுத்துவிட்டு கிளம்பு என பயமுறுத்தினார்கள்.
எனது மொத்த சேமிப்பும் இங்கிலாந்தில் இருந்து வரும் வரை அங்குதான் அந்த அறையில்தான் எனது தனிமை என சொல்லி விட்டார்கள்.10 நாள் அங்கேயே கிடந்தேன்.பணம் வராவிட்டால் கையை வெட்டி விடுவோம் என பயமுறுத்தவும் சரி நமக்கு சாவு துநிஷியாவில்தான் என நினைத்துவிட்டேன்.

நான் எதிர்பார்த்தபடியே அவர்கள் அசந்து இருந்த நேரம் பார்த்து தப்பி தூதரகம் சென்று அங்கிருந்து இங்கிலாந்து வந்துவிட்டேன்."என்கிறார்.கிட்டத்தட்ட 20 ஆயிரம் பவுண்ட்ஸ் காலி,


சனி, 29 செப்டம்பர், 2012

அதிமுக நடவடிக்கை சரியா?

பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடினார்கள் ,பிளக்ஸ் போர்டுகளில் சபாநாயகரின் படங்களும் இடம் பெற்றிருந்தன என்பதற்காக கட்சிக்காரர்களை கட்டம் கட்டி இருக்கிறது அதிமுக மேலிடம்.
கட்சியின் கட்டளையை மீறியது தவறு.ஆகவே ஒழுங்கு நடவடிக்கை என்கிறது அதிமுக தலைமை.
கட்சிக்காரர்கள் கழக நிகழ்வுகளுக்கான விளம்பரங்களில் அண்ணா,எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகிய மூவரைத் தவிர வேறு எவரது படமும் இடம் பெறக்கூடாது என்பது தலைமையின் ஜனநாயக ரீதியான உத்திரவு.
கட்சிக்கு அப்பாற்பட்ட ,பொதுவான தலைவர்களின் நிகழ்வுகளில் கட்சிக்காரர்கள் இடம் பெறுவது ,விளம்பரம் செய்வது என்பது ஒழுக்கத்திற்கு புறம்பானதா?
காந்தியாரின் பிறந்த நாளை கட்சிக்காரகள் கொண்டாடக்கூடாதா?
பெரியாரின் நாள் கட்சிக்காரர்களால் கொண்டாடப் படாமல் போனதற்கு காரணம் இது தானா?
சட்டப் பேரவையின் தலைவர் என்பவர் பொதுவானவர்.எல்லாக் கட்சிகளும் மதிக்கத் தக்கவர்.அவரை ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என கருதுவதே ஜனநாயக விதிகளை ,சட்டப் பேரவையின் மாண்பினை மீறுவதாக பொருள்.
சபாநாயகர் ஜெயகுமாரின் பிறந்த நாளை கொண்டாடியதும்.அதற்கான வாழ்த்துகள் சொல்லும் விளம்பரங்களிலும் அவரது படங்களை வைத்தது கட்சி கட்டளையை மீறிய செயலாக என்னால் நினைக்க முடியவில்லை.
சட்டப் பேரவையில் முதல்வரே பேசினாலும் சபாநாயகரை முன்னிலைப் படுத்தி விட்டுதான் பேச தொடங்கவேண்டும்.
எதிர்கட்சித் தலைவருக்கும் மட்டுமல்ல அத்தனை உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.
அப்படி பட்ட வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகரின் பிறந்த நாளை  கொண்டாடியது தவறா?
புரியவில்லை அரசியல்!

நடிகர் திலகத்தின் நையாண்டி மேளம்.

திரைப்பட பத்திரிகையாளர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை அமைத்தனர்.அதில் அடியேனும் ஒரு பொறுப்பில் இருந்தேன்.சக நண்பர்களில் பிஸ்மியும் ஒரு பொறுப்பில் இருந்தார்.
"அண்ணன் கிட்ட நம்ம சங்கத்தைப் பற்றி சொல்லி அவருடைய வாழ்த்துகளை  வாங்கலாமா?"
யோசனை சொன்னேன்.
"வீட்டுக்கு போகலாம்.ஷூட்டிங் ஸ்பாட்னா  மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்" என இன்னொருவர் சொல்ல எங்களின் ஜமா அன்னை இல்லம் நோக்கி சென்றது.
வீட்டில் இருந்தார் நடிகர் திலகம்.
"வாங்க ...என்ன இத்தனை பேர் மொத்தமா வந்திருக்கீக?"
அண்ணன் செம மூடில் இருக்கிறார் என்பதை அவர் வரவேற்ற பாங்கு எனக்கு சொல்லாமல் சொன்னது.
நெருங்கி பழகுகிறவர்கள் அதை கண்டு பிடித்து விடுவார்கள்.
"அண்ணே நாங்க சங்கம் ஆரம்பிச்சிருக்கோம் .இவர் நேர்மையா எழுதுறவரு!"என்று பிஸ்மியை அறிமுகப் படுத்தினேன்.
"ஒ ...அப்படியா..."என்றவாறே மற்றவர்களை பார்த்து"இவங்கல்லாம் நேரா எழுத மாட்டாங்களா?"என்றாரே பார்க்கலாம்.கொஞ்சம் கூட சிரிப்பைக் காட்டாமல் கேட்ட ஸ்டைல் இருக்கே.இன்னமும் பசுமையாக இருக்கிறது.அத்தனை பெரும் சிரித்து விட்டோம்.
"சிரிக்கிறீக.....ஏதும் தப்பா சொல்லிட்டேனா?"என அப்பாவியாக .எதுவுமே தெரியாததைப் போல் கேட்க ,  பத்திரிக்கை தொடர்பாளராக இருந்த இன்னொரு நண்பர் "நானும் இந்த சங்கத்தில இருக்கேண்ணே" என்று அந்த கேப்பில் அறிமுகப் படுத்திக் கொண்டார்.
"டே ..நீ பாக்கிற வேலை வேறயாச்சே ..உனக்கு எழுதக் கூட தெரியுமா?" என சட்டென கேட்டதும் அந்த ஏரியாவே கல கலப்பாகி விட்டது.
"அண்ணே ...ரொம்பவும் ஒடசல் பண்ணாதீங்கண்ணே !"என அந்த பி.ஆர்.ஒ.நண்பர் வழிந்தார்.
நடிகர் திலகத்தின் 84 வது பிறந்த நாள் அக்டோபர் 1-ம தேதி.
அவருடன் பழகிய அந்த நாட்களை மறக்கவே முடியாது.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அலைகிற ஆவிகள்! நம்புக!!

இந்த தேகத்தை விட்டு வெளியேறும் ஆன்மா எங்கு செல்லும்?
அதற்கென இடங்கள் இருக்கிறதா?
தாய்மை அடையும் பெண்களின் கருவில் புகுந்து கொள்கின்றனவா?
இப்படி எத்தனையோ சந்தேகங்கள் எனக்கு உண்டு. அண்மையில் ஒரு நாளேட்டில் புகைப் படத்துடன் வெளி வந்திருந்த செய்தி ஆச்சரியமாக இருந்தது.
63 வருடங்களுக்கு முன்னர் ---
போர்னியோ வனப் பகுதியில் ஆஸ்திரேலிய,பிரிட்டிஸ் போர் கைதிகளை ஜப்பானிய படையினர் நடக்க வைத்து கூட்டி சென்றனர்.
160 மைல்கள் .
2400 கைதிகள்.
இவர்களில் உயிர் பிழைத்தவர்கள்.ஆறே பேர்!
மற்றவர்கள் மரணித்துப் போனார்கள்.
பட்டினியால் பலர்,
நடக்க இயலாமையால் பலர்,
அடித்ததால் பலர்,
துப்பாக்கி சனியன் எனப்படும் பைனேட்டால் குத்தப் பட்டு பலர் ,
இப்படி செத்தவர்கள் எஞ்சியவர்கள்.
இவர்கள் இப்போது போர்னியோ காடுகளில் ஆவியாக அலைகிறார்கள்.
போட்டோ எடுத்து காட்டுகிறார் முன்னாள் மேஜர் ஜான்.அந்த படத்தை பாருங்கள்.
தந்திரம் எதுவும் இருக்கிறதா?
ஏனென்றால் இன்றைய நவீன கணினி யுகத்தில் ஆவிகள் பிறப்பது அதிசயம் அல்ல!
பார்த்து விட்டு சொல்லுங்கள் நம்பகத்தன்மையை!

தாமரை பாதங்கள்.

தாமரை பாதங்கள்.
டெல்லி தலைநகரின் பிரகதி மைதானம் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது,இந்த தாமரைப் பாதங்கள்.!
பாத்ரூம் சிலிப்பர்கள்  ஆயிரம் கொண்டு அமைத்திருக்கிறார்கள்.
கலை கண் காட்சி.
கவிதை பாடத் தோணுகிறதா?
கடவுளர்களின் பாதங்களை தாமரை என சொல்பவர்கள் நாம்.
கண்ணுக்கு புலப்படாத கடவுளின் பாதம் ,மலருக்கு இணையாக சொல்லப் படுகிறபோது வாழும் கடவுளர்களாகிய  நாம் அணியும்  குளியலறை பாதணிகளை தாமரை என சொல்லக் கூடாதா?
இதைக் கூட வசதியான பணக்காரர்கள்தான் அணிகிறார்கள்?
ஏழைகளுக்கு வெறும் காலே அழகு.
இந்த கண்காட்சியில் இன்னொரு புகைப்படம்.
"இந்தப் படம் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்" என்கிறார் படத்தை எடுத்த தாருண் !
"நமது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் ஏனோ தெரியவில்லை.புகைப் படங்களின் புதை குழி யாகவே இருக்கின்றன.மாற்றுங்கள்!" என்கிறார்.
உங்களுக்கு எத்தனை அர்த்தங்களை சொல்லி இருக்கிறது?

உடலை ஏலம் விடும் நான் விலை மகளா?

"உடலை ஏலம் விடும் நான் விலை மகளா?
இல்லை !"என்கிறாள் கத்தரீனா .
பிரேசில் நாட்டு மாணவி.
"வித்தியாசமானவள்.என்னை உலகம் புரிந்து கொள்ளட்டும் "என்கிற கத்தரீனா  எதற்காக தனது அழகிய உடம்பை ஏலம் விட வேண்டும்?
"தெற்கு பிரேசிலில் உள்ள ஏழைகள் வாழும் பகுதியில் அவர்களுக்காக நவீன வசதிகள் கொண்ட வீடுகள் கட்டித்தர முடிவு செய்திருக்கிறேன் .
அரசாங்கம் செய்யத் தவறியதை நான் செய்யப் போகிறேன்.
ஏலம் போகும் ஒவ்வொரு நிகழ்வையும் ஆஸ்திரேலிய படக்குழுவினர் படமாகப் பதிவு செய்கிறார்கள்.
நான் விலை மகளா?
இல்லை.இல்லவே இல்லை.
இது ஒரு வியாபாரம்.
அதில் நானும் பங்கு பெறுவது பெருமை!
நல்ல வாய்ப்பு.
அதை ஏன் நான் நழுவ விட வேண்டும்?
காதல்  உயர்வானது,நான் ரொமாண்டிக்கானவள்.
இப்படி ஏலம் போவதால் நான் விலை மகளாகி விடமுடியாது.அப்படி சொல்வது தவறு.
வியாபாரம்.அவ்வளவுதான்!" என்கிறாள் கத்தரீனா!
நீங்கள் என்ன சொல்கிறிர்கள்?

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தலை குனிவு!

தலை குனிவு!
இன்பத்து பால் என சொல்லி ஒரு பதிவு செய்ததற்கு 385 பேர் பார்த்திருக்கிறார்கள்.
ஆபாசம் எவ்வளவு விரும்ப படுகிறது என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டாக இருந்தது.
ஆனால் -
மனம் நைந்து தொலைபேசியில் வருத்தப் பட்டவர்கள் என்னிலும் பெரியவர்கள்.
என் வளர்ச்சியை விரும்புகிறவர்கள்.
தொடக்க காலத்தில் இருந்து என்னை ,என் எழுத்தை,மாற்றத்தை கவனித்து வருகிறவர்கள்.
ஒருவர் சொன்னார்;
"இத்தனை நாளும் இல்லாத வக்கிரமான விருப்பம் இப்போது எப்படி வந்தது.செப்படி வித்தைக் காரனை பார்க்க விரும்புகிற கூட்டம் உனக்கு வேண்டாம்.இனியும் அப்படி எழுதினால் அந்த எழுத்துகளை 'நேக்ரோபீலியா' என்பேன்"என சொன்னார்.
தலை குனிந்து வணக்கமும் நன்றியும் சொல்லி விட்டு எழுத்தில் கறை இருக்காது என்றேன்.
பொறுத்தருள்க.
அன்புடன்,
தேவிமணி.
25.09.2012.

சனி, 22 செப்டம்பர், 2012

தமிழன் எங்கிருக்கிறான்?

இதை படித்தபின்னர் என்னைப் பற்றி எப்படி வேண்டும் என்றாலும் விமர்சிக்கட்டும் .கவலை இல்லை!
ஒட்டு மொத்தமாக ஈழத்தில் நம்மைக் கொன்ற ழித்தவன் ராஜ பக்ஷே என்பதில் எவனுக்கும் சந்தேகம் இருக்கப் போவதில்லை.
அவனுக்கு துணையாக நின்றவர்கள் யார்?
எல்லோருக்குமே தெரியும் !
கொலையாளி கையில் கத்தியை கொடுத்தவனையும் தெரியும்.
அந்த கத்தியில் விஷம் தடவியவனையும் தெரியும்.
அவர்களும் ஈழத்தமிழனுக்காக "அழுகிறார்கள்" அதையும் இங்கு இருப்பவர்கள் நம்புகிறார்கள் என்கிற போது "நம்புகிறவன்"தமிழனாக எப்படி இருக்க முடியும்?
கொலை காரன் ராஜ பக்சே  சாஞ்சிக்கு வந்தபோது இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் கலைஞர்.
அது வெறும் கண் துடைப்பு என்பது தெரியாதா?
டீசல் ,விலைவாசி உயர்வு  ,கியாஸ் சிலிண்டர் குறைப்பு என்கிற பிரச்னைகளுக்காக ஆட்சியை விட்டு மம்தா பானர்ஜியின் திரினாமுல் காங்கிரஸ் விலகியதைப் போல  அன்று ஈழத்தில் தமிழர்கள் கொல்லப் பட்டபோது ஆட்சியை விட்டு திமுக  வெளியேறி இருந்தால்....?
படுகொலைகள் கற்பழிப்புகள் நடந்திருக்குமா?
ராஜ பக்சே இந்தியா வரக்கூடாது என்பதில் தமிழகத்தில் உள்ள கட்சிகள
 ஒ ன்று பட்டு போராடி இருந்தால் அவன் வந்திருப்பானா?
கட்சிகளை மறந்து ,கொடிகளை மறந்து,யார் பெரியவன் என்பதை மறந்து ,ஈழ பிரச்னையில் எவரும் ஓரணியில் நிற்கப் போவதில்லை..
ஆகவே வெளி நாட்டில் வாழ்கிற தமிழர்களே ,!
தமிழ் நாட்டில் இன,மான உணர்வு உள்ள தமிழர்கள் அத்தி பூத்தது போல இருக்கிறோம்.
பெரு ம்பான்மை யான கட்சிகள் தமிழர் பெயர் சொல்லி வாழ்கின்றன.
அவர்களை நம்பாதீர்கள்.

ஈழத் தமிழர்களின் கல்லறையை தோண்டி எலும்பு கூட்டை காண்பித்து கட்சி நட த்துகிற கேடுகெட்டவர்கள் ,வீர வசனம் பேசுகிறவர்கள் இங்கு இருக்கிறார்கள்.தமிழர்களும் பெரும்பான்மையாக  இல்லை.ஈழத்தில் அழி க்கப் பட்டது. .இங்கே  ஆரம்பம்!


"போனி கபூரை கொல்ல விரும்பும் ஆர் ஜி வி "

ராம் கோபால் வர்மாவை தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது,அறியாத தயாரிப்பாளர்களும் இருக்க முடியாது,
காரணம்?
அந்த மனிதனின் துணிச்சல்!
தீவிரவாதிகள்  ,கூலிப் படையினர்  இவர்களின் பின்னணி யார் என்பதைப் பற்றி இவர் அளவுக்கு தைரியமாக சொன்னவர்கள்.எவரும் இல்லை என்பது எனது கருத்து.
ஆந்திர அரசியல் தலைவர்களில் சிலரின் கூலிப் படை தொடர்பு பற்றி தைரியமாக படங்கள் எடுத்தவர்,
அதே நேரத்தில் பெண்களின் அந்தரங்கங்களை படம்  காட்டியவரும் இவர்தான்.
இன்று இவரின் டிவிட்டர் பதிவை பார்த்த போது....... 

பகீர் என்று இருந்தது.
போனிகபூரை கொலை செய்ய விரும்புவது ஏன்?....கண்டு பிடியுங்கள்  என  பதிவு செய்திருந்தார்,
சினிமாக்காரர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள்.என்ன ,அதை படங்களில் காட்ட பல நேரங்களில் மறந்து விடுவார்கள்.அவ்வளவுதான்.
ஏன் கொலை செய்ய விரும்புகிறார் என்பதை சாதுர்யமாக ,ரசிக்கும் வகையில் சொல்லக் கூடிய ஆசாமிதான் ஆர்.ஜி.வி.!
இவருக்கு ஸ்ரீ தேவி மீது ஒரு  கண் உண்டு.
பதில் அதை சார்ந்தும் இருக்கலாம்.
இதை விட்டுத் தள்ளுங்கள்.
பிள்ளையாரைப் பற்றி அவர் சொல்லி இருக்கிற சில கருத்துகள் சிந்தனைக்குரியதாக இருந்து தொலைக்கின்றன!
"கணேஷ சதுர்த்தி என்பது அவருடைய அப்பா தனது மகனின் தலையை துண்டித்த நாளா?
சொந்த மகனின் தலையை துண்டித்த சிவனார் அப்பாவி யானையின் தலையை வெட்டி மகனின் முண்டத்தின் மீது பொருத்தியதை விட மகனின் தலையையே  பொருத்தி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
வேறு எந்த மிருகத்தின் தலையை வெட்டி எடுத்து ஒட்டி இருந்தால் இந்த அளவுக்கு புகழ் கிடைத்து இருக்குமா?
அம்மாவின் பெருமையை காப்பாற்றுவதற்காக எந்த அப்பனாவது சொந்த பிள்ளையின் தலையை துண்டிப்பானா?அல்கொய்தாவின் காட்டுமிராண்டித் 
தனமான்வைகளை  கேள்விப் பற்றிருக்கிறேன் ஆனால் இந்த கோரம் மாதிரி?"
ராம் கோபால் வர்மா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


ஸ்ரேயாவின் இடுப்பு அளவு என்ன?

தொலைக் காட்சியில் இந்திய ஏவுகணை விண்ணில் சீறிப் பாய்கிறது.
இந்திய விஞ்ஞானிகள் எழுந்து நின்று மகிச்சி பொங்க பெருமிதமுடன் கை தட்டுகிறார்கள்.கட்டித்  தழுவுகிறார்கள்!

",ஹை ....ய் ...யா..!"

என் பக்கம் அமர்ந்திருந்த எனது பேரனும் கை தட்டி மகிழ்கிறான்.

எட்டாவது படிக்கிற அவனுக்குதான் எவ்வளவு ஆர்வம்.அக்கறை!

"நாம்ம வல்லரசாயிட்டம்டா பேராண்டி!" எனது மனசுக்குள் சின்னதாக பூ மத்தாப்பு!

"அது எப்ப தாத்தா கீழே விழும்?"

பேரன்தான் கேட்டான்!

"ஏன் இப்படி கேட்கிறான் ,எதை  மனசில் வைத்துக் கொண்டு இப்படி படு சேதாரமான கேள்வியைக் கேட்கிறான் என்பது எனக்குப் புரியவில்லை.

வாழைப்பூவில் நரம்பு எடுத்துக் கொண்டிருந்த எனது பாரியாளுக்கும் தெரியவில்லை.

அவள் என்னை நோக்க நான் அவளை நோக்க இரவுதான் நினைவுக்கு வந்தது.
பேரனின் கேள்வியில் உள்ள பொருள் புரியவில்லை.

"ஏம்பா ,இப்படி கேக்கிறே ?"

"எங்க சயின்ஸ் மாஸ்டர் தான் சொல்லிக் கொடுத்திருக்கார். ஐன்ஸ்டின் தியரி படி மேலே போறதெல்லாம்  கீழே வந்து விழுந்துருமாம்.ஆப்பிளை மேலே தூக்கிப் போட்டால் கீழே தானே வந்து விழுகுது!"

மாஸ்டர் சொன்னதை பிள்ளை சரியாகத்தான் சொன்னது.

ஆனால் அந்த புவி ஈர்ப்பு சக்தி எத்தனை மைல் வரை இருக்கும் என்பதையும் வான்வெளி ,செயற்கை கோள் பற்றியும் சொல்லிக் கொடுத்திருந்தால் அந்த சிறுவன்  அப்படி கேட்டிருக்க மாட்டான்,நமது கல்வி முறை இன்னமும் பாட்டி வைத்திய காலத்திலேதான் இருக்கிறது என்கிற போது நாம் என்ன செய்ய முடியும்?

வீட்டிலிருக்கும் எத்தனை பெற்றோர்களுக்கு இந்த புவிஈர்ப்பு பற்றி தெரியும் என நினைக்கிறீர்கள்?

எனக்கே தெரியாது என்பதை எனது மனைவி மிகவும் நாகரீகமாக என் காதில் வந்து சொன்னாள்
!

"ஸ்ரேயா, இலியானா இடுப்பு சைஸ்னா உடான்ஸ் விட்டாவது பதில் சொல்லி இருப்பீங்கள்ல ?"

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கோவில் அர்ச்சகருக்கு அன்பளிப்பு கொடுக்கலாமா?

கணவனின் உடம்பை பேணுவதில் டாக்டர்களை விட மனைவி கவனிப்பதுதான் அதிகம்,அக்கறை,கவலை எல்லாமே!
டாக்டர்களுக்கு நோயாளியின் நிலைமை தெரியும் அதனால் அவர்கள் எந்த அளவுக்கு கவனிக்க  வேண்டுமோ அந்த அளவுக்கு....!அது கடமை!
ஆனால்?
மனைவி ?
டாக்டரை விட கடவுளர்களை நம்புவாள் .இன்னின்ன நோய்க்கு இன்னின்ன கடவுள் என ஒவ்வொரு ஊரிலும் ஒரு கடவுளை ஸ்பேஷலிஸ்ட்டாக வைத்திருக்கிறாள்!
தமிழ்ப் பெண்களுக்குமட்டுமல்ல ,பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு பொருந்திப் போகிற ஒரு தனிக் குணம் !
நான் அதிக நாள் படுக்கையில் கிடந்தவன் இல்லை.ஒரு நாள் முற்பகல் முழுவதும் கடுமையான வயிற்றுப் போக்கு,அமீபியா பாதிப்பு உள்ளவர்கள் கடுமையான உணவுபழக்கத்தை பின் பற்றவில்லை என்றால் அனுபவிக்க வேண்டிய அவஸ்தை!வெளியில் சாப்பிடவே கூடாது.பத்திரிகையாளனால் பின் பற்ற முடியாத இம்சை !
மாத்திரைகளை வாங்கிக் கொண்டு திரும்புகையில் ஆட்டோவை வடபழனி கோவிலுக்கு திருப்ப சொல்கிறாள் மனைவி.
" அர்ச்சனை பண்ணி விட்டு போகலாம்.எந்த சாமி புண்ணியமோ நல்லபடியா சொகமாப் போச்சு." என்றவள் தொடர்ச்சியாக விட்ட அம்பு"வெள்ளி செவ் வாய்க்கு கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வாங்கன்னா மனுஷன் கேக்கணும். மெனக்கெட்டு ஒருத்தி சொல்றாளே ,கேப்பம்கிற நெனப்பே இல்லீன்னா இப்படிதான்!" என்றாள் .
அவள் சொன்னதை கேட்காததினால் நான் மனுஷன் இல்லை என்பது அவளறியாமல் சொன்ன மேட்டர்.
அர்ச்சனை முடிந்தது.
" சாமிக்கு தச்சனை வையுங்க!"
"தச்சனை வச்சுதான் அர்ச்சனை சீட்டு வாங்கிருக்கேன்டி "
ஐயோ ......!அய்யருக்கு தட்டில அஞ்சு ரூபாயை போடணும்.அவர் துண்ணுரு  கொடுக்க வர்ற போது  பர்ஸ நோண்டாம இப்பவே  எடுத்து வச்சுக்க சொல்றேன்!" தட்சணை  மேட்டரை விளக்கினாள் .
வெளியில் வந்ததும் "அய்யருக்கும் சேத்துதான் தேவஸ்தானத்தில பணம் வாங்குறோம்னு அர்சசனை சீட்டிலேயே பிரிண்ட் பண்ணிருக்குடி!நாம ஏன் அனாவசியமா கொடுக்கணும்  "என்றேன்.
"அய்யருக்கு கொடுத்தா குறஞ்சா போகப் போறோம் .பேசாம வாங்க!"
"அவங்க கடவுளுக்கு சேவை பண்றதுக்குனே சமஸ்கிருதம் படிச்சிட்டு வந்திருக்காங்க.அதனால கவர்மெண்டே நம்மகிட்ட கலெக்சன் பண்ணி மொத்தமா கொடுத்திருது.இப்ப நாம்ம கொடுத்தது லஞ்சம்!" என்றேன் சற்று கடுப்பாகவே!
"அதெல்லாம் சட்டமா பேசுங்க!டாக்டர் சொல்றத  மட்டும்ம் கேக்காம பீஸ் பீஸ்னு னு அழுங்க.!"
அவள் சொவதிலும் ஒரு நியாயம் இருந்தது.
ஆனால் மந்திரம் சொல்கிறாரா ,அதையும் முழுமையாக சொல்கிறாரா என்பது கூட தெரியாமல் தெய்வத்தின் முன்பாக நமது கோரிக்கைய சொல்லாமல் பொத்தாம் பொதுவில் எல்லோருக்கும் சொல்வதையே எனக்கும் சொல்பவருக்கு நான் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்?

முலை என்பது ஆபாச சொல்லா?

சங்க இலக்கியங்களில் காணப்படும் செழுமை வாய்ந்த சொற்களில் சில இன்று ஆபாச சொற்களாக கருதப் படுகின்றன,
பெண் அல்லது ஆண் இவர்களின் அங்கங்களை சொன்னால் பிழையாகப் படுகிறது.

ஆனால் காலம் காலமாக பிழைகளையே இலக்கியமாக சொல்லி வருகிறார்கள்.

கம்பனின் மகன் அம்பிகாபதி என்கிறார்கள்..அரசனின் மகளை நேசித்தான் 'இவ்விருவரின் காதல் அமரத்துவம் வாய்ந்தவை என்கிறார்கள்.

இது வரலாற்று பிழையா?

அல்லது வலிந்து சொல்லப் படும் பிழையா?

கம்பனின் காலம் 9 ம் நூற்றாண்டின் பிற் பகுதி!

அம்பிகாபதி என்பாரின் காலம் 17 ம் நூற்றாண்டிற்கு முன்பு!

ஒட்டவே இல்லை !அம்பிகாபதி என்பவரின் கோவை அற்புதமான சிற்றிலக்கியம்.அதில் அன்றைய தமிழரின் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இன்றைக்கு மேலை நாட்டினர் தமது நிர்வாண உடம்பில் சித்திரங்கள் தீட்டி கொள்கிறார்கள்.பச்சை குத்திக் கொள்கிறார்கள்.ஆனால் 17 ம் நூற் றாண்டில் வாழ்ந்த தமிழ் பெண்கள் தம் உடம்பில் குங்கும குழம்பினால் சித்திரங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள்.

சங்க இலக்கியத்திலும் காணலாம்,

"தோளில் கரும்பு முலையில்கொடி விடு தொய்யலும்"என்கிறது இலக்கியம்.

இப்படி எழுதிக் கொள்வதை "தொய்யில் " என்கிறது தமிழ்.


சாருலதா --விமர்சனம் அல்ல.

அழிந்தான்,தொலைந்தான் என மீடியாக்கள் பக்கம் பக்கமாக படங்கள் போட்டு தாளித்த மனிதர் சாக்சேனா!
ஆட்சி மாறியதும் காவல்துறையின் கடுமையான "பராமரிப்பில்"வீரத் தழும்புகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர்,
சன்  தொலைக்காட்சியின் வளர்ச்சியில் இந்த மனிதருக்கு "பங்கு" இல்லை என சொல்ல முடியாது.தனக்கு ஆபத்து வரும் எனத் தெரிந்தால் பெற்ற பிள்ளையை நெரிக்கத் தயங்காதவர்கள் மேல் மட்ட அரசியல் வாதிகள்.
எப்படியோ இவர்களிடம் இருந்து தப்பிய சாக்ஸ் அண்ட் நண்பர்களின் வெளியீடுதான் "சாருலதா!"
ஒட்டிப் பிறந்த இரட்டை பெண்களைப் பற்றிய கதை,ப்ரியாமணி நாயகி!
இன்று உடல் நலம் ஒத்துழைக்காத நிலையிலும் சாருலதாவை பார்க்கவேண்டும் என்கிற ஆசையில் பார்த்த படம்.
காரணம் அடுத்து பார்க்க இருப்பது "மாற்றான்"!ஒட்டிப் பிறந்த இரண்டு ஆண்களைப் பற்றிய கதை.சூர்யா நடித்திருக்கும் படம்.
தலைப்பிலேயே சொல்லி இருக்கிறேன் "விமர்சனம் "அல்ல என்பதை!
படம் முடிந்த பின்னர் என் நண்பர் ''ஸ்க்ரீன் பிளே  சொதப்பல்" என்றார்.சத்தியமாக எனக்கு அந்த பிளே யை பற்றி எதுவும்  தெரியாது.
"அத பத்தி எனக்கு கொஞ்சம் விளக்கி சொல்லமுடியுமா?"என்றேன்.
"மழை  வர்ற மாதிரி இருக்கு அவசரமா போகணும்!"
இடத்தை காலி பண்ணினார்.
இப்படிப்பட்டவர்களிடம் எதை தெரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறீர்கள்?
சாருலதாவில் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் ஒளிப் பதிவாளர் எம்.வி.பன்னீர் செலவமும்,பிரியாமணி யும்தான்!
ஒருவரை ஒருவர் ப்ரோபைலில் பார்த்துக் கொள்கிற காட்சிகளில்தான் ஒளிப்பதிவாளர்களின்  திறமை கணிக்கப் படும்.பின்புலம் ஒரு லைட்டிங் .இரட்டையர்களில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி லைட்டிங் .சொதப்பினால் கோவிந்தாதான்!
இப்படி பலவிதமான சோதனைகள் உண்டு .வெற்றி பெற்றிருக்கிறார் பன்னீர்.
பிரியாமணிக்கு இந்த படம சோதனை களம் .

வியாழன், 20 செப்டம்பர், 2012

மதுவின் அடிமையாகிய மாதிவள்!

மதுவின் அடிமையாகிய  மாதிவள்!
சம உரிமை பெண்ணுக்கு!
ஆணின் அத்துமீறல் பெண்ணுக்கு வேண்டுமா?
மது அருந்துகிற பெண்களை பாரில் பார்க்க முடிகிறது.
பணம் படைத்தவர்கள்.பன்னாட்டு நிறுவனங்களில் கைகள் வழிய ஊதியம் வாங்குகிறவர்கள்.
உழைத்த களைப்பு நீங்க மது அருந்த வருகிறார்களாம் !
சரி,அருந்துங்கள்.அதில் குளிக்காதீர்கள்.என்பதே எமது கோரிக்கை.
அண்மையில் அமெரிக்காவில் மாஸஸூட்  ஸ்பிரிங் பீல்ட் ஹோட்டலில் மாக்ஸின் ரொமானோ என்கிற 23 வயது பெண் மது குடித்தாள் !
உச்சம் போனது போதை!
சக குடிகாரன்-குடிகாரிகளை கண்டபடி ஏசினாள் ! கூச்சல் ,குழப்பம்,மானாவாரியாக முத்தங்கள்.என அட்டகாசம் தாங்க முடியவில்லை.
போலீஸ்  அதிகாரி வந்து அமைதி படுத்த முயன்றார்.தனது ஹை ஹீல்ஸ் ஷூவினால் அதிகாரியின் காலை காயப்படுத்தினாள் !இந்த அநாகரீகம் சென்னைக்கும் பரவி இருக்கிறது.
முத்தங்கள் சாதாரணமாகி இருக்கிறது.
நமக்கும் இப்படி ஒருவள் கிடைக்க மாட்டாளா?
ஏக்கம் வருகிறது!நானும் ஆண்மகன்தானே !

லிண்டா! என்னை மன்னிப்பாயா!

 மிகப் பெரிய  வேன் !
 ஜார்ஜ் ரெனால்டு இண்டஸ்ட்ரி அருகே நிறுத்தப் பட்டிருக்கிறது.
 ஆலைக்கு செல்கிற ஆண்களும் பெண்களும் என்றும் இல்லாத திருநாளாய் அந்த வேனைப் பார்க்கிறார்கள்.
காதலனின் வலி அந்த வேனின்  உடலில் எழுதப் பட்டிருக்கிறது!
ஆச்சரியம் அலை அடிக்கிறது!
யார் அந்த லிண்டா?
அவளின் காதலன் யார்?
இப்படி கசிந்து உருகி எழுதி இருக்கிறானே!
"லிண்டா!என்னை மன்னித்து விடு!" என்பதாக !அப்படி என்ன பெரிய தவறிழைத் திருக்கப் போகிறான்?
காதலின் மாண்பினை ரசித்தபடியே செல்கிறார்கள்.
"லிண்டா!சில நேரங்களில் நான் முட்டாள்.மடையன் !
என்னுயிரிலும் மேலாக உன்னை நான் காதலிக்கிறேன்.
உன்னை நிறைய இழந்து விட்டேன்,
நாம் இழந்திருக்கிறோம்.
நான் உன்னுடன் வாழ வேண்டும்.
மணந்து கொள்ள மாட்டாயா அன்பே !"
இப்படி ஆரஞ்சு வண்ண நிறத்தில் எழுதி இருக்கிறான் !
அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கிற "தவறை" அவன் வெளிச்சம் போட வில்லை.!
பகிரங்கப் படுத்த விரும்ப வில்லை,
அவளும் அதை விரும்ப மாட்டாள் என்கிற நம்பிக்கை!
இதுதான் உண்மையான காதலின் அடையாளம்.,
அவள் நிச்சயம் படித்திருப்பாள்.
அனேகமாக நாளை நன்றி தெரிவித்து எழுதினாலும் ஆச்சரியம் இல்லை!
வாழ்க காதல்! 

புதன், 19 செப்டம்பர், 2012

விநாயகர் சிலை எங்கிருந்து வந்தது?

விநாயகர் சிலை எங்கிருந்து வந்தது?
இதைப் பற்றி கடந்த ஆண்டே எனது வலைப பக்கத்தில் பதிவு செய்திருந்தேன்.
இன்று இந்திய துணைக் கண்டம் மட்டும் இல்லாமல் இந்தியர்கள்,தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் "விநாயகர் சதுர்த்தி" கொண்டாடப் படுகிறது.
அவர் இந்தியக் கடவுளா,தமிழ்க் கடவுளா என்கிற ஆய்வுக்குள் புக நான் விரும்ப வில்லை.
அதை சமய ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
நான் படித்த வகையில் தெரிந்து கொண்டதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் குல தெய்வம் விநாயகர்.
1749-1818,வரை விநாயகர் விழா என்பது அரசினர் மட்டுமே குடும்ப நிகழ்வாக வணங்கி கொண்டாடி வந்தனர் ,இன்றைய புனே,அன்றைய பூனாவில்தான் விநாயகர் வழிபாட்டினை அரச குடும்பம் கொண்டாடி வந்துள்ளது.
பெஷாவர் வீழ்ச்சிக்குப் பின்னர் அரசு அந்தஸ்தை இழந்து குடும்பத்தார் மட்டுமே கொண்டாடினார்கள்.
இங்கு ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.
விநாயகரை மன்னர் குடும்பம் மட்டுமே கொண்டாடியதால் உயர் சாதியினருக்கு மட்டுமே அவர் சொந்தம் என பிரிக்கப் பட்டார்,
அப்போதுதான் லோகமான்ய திலகர் "பிள்ளையார் இந்தியாவிலுள்ள பிராமணர் அல்லாதவர்களும் கொண்டாடப் பட வேண்டிய கடவுள் எனவே இந்தியா முழுவதும் உள்ள பிராமணர்--பிராமணர் அல்லாதவர்கள் எல்லோருமே வாங்கலாம் .விழா எடுக்கலாம் " என அறிவித்து அதை இயக்கமாக செயல்படுத்தினார்.
சரி தமிழ் நாட்டுக்கு விநாயகர் சிலை முதன் முதலாக வந்தது எப்போது?
பல்லவ மன்னன் நரசிம்மன் காலத்தில் தளபதி பரஞ்சோதிதான்  தமிழ் நாட்டுக்கு முதன் முதலாக பிள்ளையார் சிலையைக் கொண்டு வந்தான்.
சாளுக்கிய மன்னன் புலிகேசியை போரில் வென்று அரண்மனையில் இருந்து எடுத்து வரப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் விநாயகர் சிலை!
விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் படும் 19.09.2012 ல் பதிவு செய்கிறேன்.இவை இல்லாமல் வேறு புதிய தகவல்கள் வைத்திருப்பவர்கள் எனக்கு அனுப்பி வைக்கலாம்.
நன்றி,

மார்பழகி பாடகியின் போதை புலம்பல்!

லேடி காகா!
மேலை நாடுகளில் வாழும் இளைய சமுதாயத்தின் ஒரு பகுதியை தனது இசையால் கட்டிப் போட்டிருக்கும் பாடகி லேடி காகா!
பூத்துக் குலுங்கும்  தோடக மார்புகள்.
வாய் திறந்தால் மயங்கி விழ வைக்கும் வசியக் குரல்.
ஆடிப் பாடும் திறமை!
பாடி ,ஆடும் போது லாவகமாக ஏறி இறங்கும் கலசங்கள்.
இவரின் நிகழ்ச்சி என்றால் அரங்கம் நிறைந்து  நிமிர்ந்து நிற்கும்!
இந்த அழகி மது பிரியை!
இருபத்தி ஆறு  வயது ஆடகத் தேர்!
அண்மையில் இவரது நிகழ்ச்சியில் அதிர்ச்சிகரமான காட்சி!
எதற்கு அடிமையாகக் கூடாதோ ,அதை பகிரங்கமாக நிகழ்த்தி காட்டிவிட்டார்.
"நான் மது அருந்துவதை குறைத்துக் கொண்டு புகைக்க ஆரம்பித்திருக்கிறே ன் எஸ். ...நான் புகைப்பது மர்ஜுவானா"என சொல்லிக் கொண்டே மர்ஜுவானாவை புகைத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் தடை செய்யப் பட்டிருக்கும் மர்ஜுவானா இவருக்கு நிம்மதியை தருகிறதாம்.
மர்ஜுவானா என்பது கொடிய விஷம்!
இதைத் தெரிந்தே புகைக்கிறார் என்றால் தவணை முறையில் மரணத்தை அடையத் தொடங்கி விட்டார் என்றே சொல்லலாம்.
"இசையுடன் இணைந்த உன்னதமான ,உயரிய உணர்வு!பரமானந்தம்!"என்கிறார்
இப்படித்தான் இந்தியாவில் இருக்கிற சாதுக்களும் கஞ்சாவில் கடவுளைப் பார்க்கிறார்கள்.
ஹைடெக் சாமியார்கள் போதையை பல்வேறு வகையில் கொடுத்து பெண்களை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்,
"மர்ஜுவானாவை தடை செய்யக் கூடாது"என அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து கேட்கப் போகிறாராம் காகா!
அழகிய நாகத்திடம் நஞ்சு இருக்கும்!
குயில் நஞ்சை நாடலாமா?

சயீப்--கரீனா திருமணம் வரவேற்புக்குரியதா?

பாலிவுட் நடிகர் சயீப் அலிகான்-நடிகை கரீனா கபூர் இவ்விருவரின் காதல் உலகம் அறிந்த ஒன்றுதான்.!
இருவருக்கும் விரைவில் தீர்மானம்.
சயீப்.சாதாரணமானவர் அல்ல.
கிரிக்கெட் வீரர் பட்டோடியின் மகன்.
அப்பாவும் பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூரை காதலித்துதான் கல்யாணம் செய்து கொண்டார்.
ஆக காதலுக்கு யாரும் எதிர்ப்பு இல்லை.
ஆனால் சயீப் கல்யாணம் ஆனவர் .மணவிலக்குப் பெற்றவர்.இருபது வயதில் அழகான மகள் இருக்கிறார்.இவரை விட பதினோரு வயது மூத்தவர் கரீனா.
அப்பாவின் கல்யாணத்தை பார்க்கிற பருவ மகள் !
அந்த மகளுக்கு ஒரு கல்யாணத்தை நடத்தி விட்டு பிறகு சயீப் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம்.
தமிழ் நாட்டில் இப்படி ஒரு கல்யாணம் நடக்குமானால் கண்டபடி ஏசுவார்கள்.
"வயதுக்கு வந்த மகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு நீ உல்லாசமாக இருந்தால் அந்த சின்ன மகளின் மனம் என்ன பாடு படும் ?"என்பார்கள்.
ஆனால் சயீப்--கரீனா இருவரும் ஒன்றாக ஊர சுற்றியதை மகள் நன்றாக அறிவார்.
காதல் திருமணம் வரவேற்கக்கூடியது!
ஆனால் வயது வித்தியாசம் என்ன என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா?
பொருந்தாத வயது பல பொல்லாப்புகளையும் சுமந்துதான் வரும்.
உடல் ரீதியான பலவீனங்கள் குடும்பத்தில் குழப்பத்தைக் கொண்டுவந்து விடும்.
வாலிப வயோதிகர்களுக்கான மருந்து தேடி பழனிக்கு போகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

அந்த பட்டியலில் சயீப் இருந்து விடக்கூடாது என்பதே நமது ஆசை!

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் ......?

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் ......?
தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது!ஒரு கதை அல்லது நாவலில் இடையில் சில பக்கம் கிழிக்கப் பட்டிருந்தால் ....
அந்த பக்கத்தில் என்ன இருந்திருக்கும் என்கிற அறிகிற ஆர்வம அலையடிக்கும்.
அதிலும் படித்த பக்கங்கள் விறு விறு வென இருந்தால் சொல்லவே தேவை இல்லை ..கிழிந்த ,அல்லது காணாமல் போன பக்கங்களில் என்ன இருந்திருக்கும் என்கிற அரிப்பில் சொரிந்து மண்டை சொட்டையாகிவிடும்.
"நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்"திரைப் படத்தைப் பொருத்தவரை அது வித்தியாசமான படம்.வரவேற்கப் பட வேண்டிய படம்..
பாடைக்கம்பு மாதிரி உருவத்தை வைத்துக் கொண்டு ஏழெட்டுப் பேரை அடித்து துவைத்து நார், நாராய் கிழித்தெரிகிற பொய்மை  இல்லை.!
காதல் என்கிற பெயரில் யதார்த்தம் எகிறும் காமம் இல்லை.தமிழ்ச்சினிமாவின் சாபக் கேடாகிவிட்ட வாழ்ந்தாருக்கு மாரடிக்கும்  வசனம் இல்லை.
காமடி என்கிற பெயரில் நக்கலும் நையாண்டியும் இழைந்தோடும் இரட்டை அர்த்த அசிங்கம் இல்லை.
எனக்கு இந்த படத்தில் பிடித்த முக்கியமான அம்சம் "நட்பு"
நண்பர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.ஆபத்தான கால கட்டத்திலும் நண்பனை விட்டு ஓடாமல் அவனை எப்படியெல்லாம் காப்பாற்ற பார்க்கிறார்கள் தெரியுமா?
விபத்தினால் விளைகிற மறதி நோய் நமக்கு புதிதல்ல.
இயக்குநர் பாலாஜி பரணிதரனின் முயற்சியை வரவேற்க வேண்டும்.
கதாபாத்திரங்களின் பயமே அங்கங்கே காமடியாக விரிகிறது.
வாய் விட்டு சிரிக்க முடிகிறது.
என்னைப் போன்ற பாமரனுக்கு இந்த படம் பிடிக்கும்.
பின் பாதியில் படக் குழுவினரும் மற்ற படைப்பாளிகளைப் போலவே தவறுகள் செய்திருக்கிறார்கள்.
கதாநாயகியை காட்டாமல் படத்தின் முக்கால் பகுதியை கொண்டு
 சென்றிரு க்கிற இவர்கள் துணிச்சல் மிகுந்தவர்கள்.
இவர்களின் துணிச்சல் தமிழ்நாட்டில் எடுபடாது.யதார்த்தம் விரும்புகிற கேரளம் இவர்களுக்கு கை கொடுக்கலாம்.

புதன், 12 செப்டம்பர், 2012

சீயானின் ஆசை!

இன்றைய முன்னணி நாயகர்களில் எளிதாக ,பத்திரிகையாளர்கள் அணுக முடிகிற நாயகர்களில் சீயான் விக்ரமும் ஒருவர்!
பழகுவார்,மனம் விட்டுப் பேசுவார்.
தன்னை கண்ணியவான் மாதிரி காட்டிக் கொண்டு  பத்திரிகையாளர்களிடம் நடிக்க மாட்டார்.
"தாண்டவம்" படத்திற்காக டேனியல் கிரீஸ் என்கிற அமெரிக்கருடன் வந்து  பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அவர் பார்வை அற்றவர்.
இருட்டில் எப்படி ஒலியின் எதிரொலியை உணர்ந்து தடைகள் மீது மோதாமல் வவ்வால் பறக்கிறதோ,அந்த முறைப்படி இவரும் நடக்கிறார்.கற்றும் தருகிறார்.
தாண்டவம் படத்தின் நாயகனும் அப்படிதான்!
"இயக்குநர் விஜய் என்னிடம் தெய்வத் திருமகள் படப்பிடிப்பின் போதே இந்த கதையின் கருவைப் பற்றி சொன்னார்.ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா தான் டேனியல் பற்றி சொன்னார்.அமெரிக்காவுக்கு சென்று அவரை சந்தித்து வந்தார்.இந்த கதையில் காதல் இருக்கிறது. திரில் இருக்கிறது. சாகசம் இருக்கிறது.எங்களின் கடும் உழைப்பு  இருக்கிறது.இந்த படம் எனக்கு சவாலான படம்." என்றார் விக்ரம்.
பார்வை அற்ற டேனியலை பார்த்த போது எனக்கு கெலன் கெல்லர் நினைவுக்கு வந்தார் அந்த சாதனைப் பெண்மணியை அனேகமாக உலகம் மறந்து விட்டது என்றே சொல்லலாம்.
பார் வை யற்றவர்களுக்காக பாடுபட்டவர் அந்த தியாகி.
தாழ்வு மனப்பான்மையை போக்குவதற்காக அரும் பாடு பட்டவர்.

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கேலிப் பொருளாகிவிட்ட ஆசிரியர்கள்!

அண்மையில்தான் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப் பட்டது.
பொதுவாக யாரைக் கவுரவப் படுத்த வேண்டும் என நினைத்து விழாக்கள் எடுக்கிறோமோ ,அந்த விழாக்கள் வெறும் சடங்குகளாகவே இருக்கின்றன!
அரசும் சரி,மக்களும் சரி உண்மையான ஈடுபாடுடன் நடப்பதில்லை!.
ஆரஞ்சு மிட்டாய் கொடுக்கும் நாள்தான் சுதந்திர தினம் என மாணவன் நினைக்கிறான்!
விடுமுறை நாள் என மக்கள் நினைக்கிறார்கள் !அரசு அலுவலகம் தவிர எந்த வீட்டிலாவது சுதந்திரக் கொடி ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களா?
திமுக,அதிமுக,தேமுதிக,பாஜக இப்படி எந்த தலைவர்களின் வீட்டில் தேசியக் கொடி ஏற்றப் படுகிறது?
சொல்லுங்கள் !
மரியாதைக்குரிய மேதை ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் நாள் என அரசு அறிவித்திருக்கிறது.
அந்த நாளினைப் பற்றி பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா நினைவு கூர்ந்திருக்கிறார்!
எப்படி?
"ஆசிரியர்கள் தினம்? அந்த ஒரு நாள் ஆசிரியர்களிடமிருந்து ,மாணவர்களுக்கு விடுதலையா?
அல்லது மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களுக்கு விடுதலையா?
ஹோம் ஒர்க் கொடுக்காத டீச்சரைத் தவிர மற்ற அனைவர் மீதும் எனக்கு வெறுப்பு!
நான் இங்கிலீஷ் டீச்சரை மட்டும் மிகவும் நேசித்தேன்! ஏனென்றால் அவர்தான் "ஹாட்!"
இந்தி டீச்சர் போர்!சயின்ஸ் டீச்சர் வேதனை!
சரித்திர டீச்சருக்கு பசங்களை அடிக்க மட்டுமே தெரியும்!
ஆசிரியர்கள் உண்மையிலேயே அறிவார்ந்தவர்களாக இருந்தால் அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய மற்ற வேலைகளுக்கு போய் இருக்கலாமே!
வீணாக சின்ன பசங்களை அடிக்க வேண்டியதிருக்காது !"

இப்படி சொல்லி இருக்கிறார் ராம் கோபால் வர்மா!

என்ன சொல்கிறீர்கள்?

உண்மையாக இருக்கலாம் ?

ஸ்ரீதேவி சினம் கொண்டது ஏன்?

ஒரு காலத்தில் இந்தியாவின் கனவுக் கன்னியாக வாழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.அற்புதமான நடிகையும் ஆவார்.
  கால மாற்றம் உடலிலும் தெரியும்.
மணமாகி விட்டால் உடல் சற்று பெருக்கும்
,மகிழ்ச்சியின் விளைவு!
பிள்ளைகள் பிறந்து விட்டால் வயோதிகமும் வளரும்.
இது இயற்கை!
வசதிகள்,வாழ்க்கை முறைகள் ஓரளவுக்கு வயோதிகத்தை திரை போட்டுக் காட்டும்.
அது ஸ்ரீதேவிக்கும் பொருந்தும்.
வயதுக்கு வந்த இரண்டு பெண்களின் தாயான அவரிடம் இன்னமும் கேட்கிறார்கள்"உங்களின் இளமையின் ரகசியம் என்ன?" என்று!
அவரும் நாசூக்காக "நீண்ட இடை வெளிக்குப் பிறகு என்னைப் பார்க்கிறீர்கள். அதனால் உங்களுக்கு அப்படித் தெரிகிறேன்"என்கிறார்.
அடுத்து ஒருவர் கேட்கிறார்," பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறீர்களா?"
இந்த கேள்வியில் என்ன பொருள் புதைந்து கிடக்கிறது?
ஸ்ரீதேவிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
டூயட் ஆட்டம் போடுகிற அவசியமும் அவருக்கில்லை.
ஆத்திரம் வருகிறது,அடக்கமாக ,சற்று காட்டமாக பதிலும் வருகிறது.
"இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.அவர்களின் வாய்க்கு ஜிப் போட வேண்டும்."என்கிறார்.
இந்த பதிலில் நியாயம் இருப்பதாகவே உணருகிறேன்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திங்கள், 10 செப்டம்பர், 2012

பாலு மகேந்திரா போட்ட பெரும் போடு!

இந்தியத் திரை உலகின் அற்புதமான ஒளிப்பதிவாளர் ,இயக்குநர் பாலு மகேந்திரா.
அவருடன்  நாற்பது ஆண்டு கால பழக்கம் பத்திரிகையாளனாக!
பட்டதை அப்படியே சொல்லிவிடுவார்.
மறைப்பதில்லை.இது படம் தொடர்பான கருததுகளாகவே  இருக்கும்.தனி மனித விமர்சனமாக இருக்காது.
செப்.பத்தாம் தேதி "யமுனா" படத்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு பாலு வந்திருந்தார்.
அவரது பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவன் சத்யா ,இந்த மாணவன் படத்தின் நாயகனாக நடிக்கிறான்.அவனையும் ,பிற கலைஞர்களையும்  மனம் திறந்து பாராட்டியவர் அப்படியே பத்திரிகையாளர்களுக்கும் ஒரு கோரிக்கை வைத்தார்.
அதை அறிவுரை என்பதாகவே நான் கருதுவேன்.
ஒளிப்பதிவாளரை பாராட்டும் விதமாக சிலர் "கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது" என குறிப்பிடுவது பற்றியே அவர் பேசினார்.
ஒரு படத்தில் ஒளிப்பதிவு பற்றிய எத்தனையோ அம்சங்கள் இருக்கும் அதை பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை .
முக்கால் பக்கத்துக்கு கதையை சொல்லிவிட்டு மற்றதை எழுதுகிறார்கள் .எத்தனை வருடமாக திருப்பித் திருப்பி இந்த பாணியிலேயே எழுதுவது?
கண்ணுக்கு குளிர்ச்சி என்பதை விட்டு  விட்டு புதிதாக எழுதுங்கப்பா என்றார்.
அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கிறது?

சனி, 8 செப்டம்பர், 2012

இதுதான் சாதனை!

டஜன் கணக்கில் பரோட்டா சாப்பிட்டார்.ஒரே கையில் ஒன்பது பேரை தூக்கினார் முழுக் கோழி இரண்டு அரைமணி நேரத்தில் சாப்பிட்டார்,புல் பாட்டில் விஸ்கியை மிச்சம் இல்லாமல் குடித்தார்....
இதெல்லாம் சாதனைகளாக பேசப் படுகிறது!
நம்மைப் பொருத்தவரை இம்மாதிரியான மலிவான சிந்தனைகளில் தான் கவனம் செலுத்துகிறோம்.
கல்வியை பொருத்தவரை இன்னும் மேல்தட்டு வர்க்கம்தான் முதலில் இருக்கிறது.
தப்பித் தவறி பின் தட்டை சேர்ந்த யாராவது முதலில் வந்து விட்டால்  அவர்களை எந்த அளவில் கீழே தள்ளலாம் என நினைக்கிறார்கள்.
சமதர்மம் என்பது வெறும் வாய் பேச்சில்தான் இருக்கிறது.
முந்தைய அரசை விட அதிமுக அரசில் லஞ்ச ,ஊழல் அதிகமாக வே  இருக்கிறது
சரி இதை விட்டுத்தள்ளுங்கள்.
ஒய்வேஸ் ரோஸி என்பவர் ஜெனிவாவில் ஒரு சாதனை புரிந்திருக்கிறார்.தந்து உடலில் நூற்றி இருபது பவுண்ட் எடை உள்ள எந்திரங்களை கட்டிக் கொண்டு ஸ்பிட்பயர் எம் எச் ரக பிரிட்டிஷ் விமானத்துடன் இணையாக பறந்து சாதனை செய்திருக்கிறார்.
இந்த எண்ணம் நமது இளைய சமுதாயத்திற்கு வருமா?
"ஏண்டா மச்சி.அந்த பிகரை மடிக்க ஒரு ஐடியா கொடேன் !"

காவலர்கள் பாதுகாப்புடன் சூப்பர் "செக்ஸ்"

வணக்கம் ,நண்பர்களே! நெடு நாட்கள் ஆகி விட்டன எழுத்துகள் வழியாக உங்களை சந்தித்து.
இனி தொடர்ந்து சந்திக்கலாம்.
நம் நாட்டில் மட்டுமல்ல ,கற்பழிப்பு என்பது உலகளாவிய பொது தத்துவம்.
இதை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.
முதலில் கற்பழிப்பு என்பதற்கு இவர்கள் என்ன பொருள் சொல்கிறார்கள்?
பிறன் மனைவியை கட்டாயப் படுத்தி வன் புணர்ச்சியில் ஈடுபடுவதுதான் கற்பழிப்பு என்கிறார்கள்.
சரி,பிறன் மனைவியாகப் பட்டவள் இன்னொருவனுடன் விரும்பி செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு என்ன பெயர்?
கள்ளக் காதல் என்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் ஆணுக்கு கற்பு என்பது இல்லை என்றாகிறது.இது ஏன்?
உண்மையாக ஒரு நிகழ்வு இங்கிலாந்தில் !வேக்பீல்ட் சிறை என்பது மிகவும் கெடு பிடியானது.எவ்விதமான குற்ற நிகழ்வுகளும் நடக்க இயலாதபடி பாதுகாப்பு நிறைந்தது.
இந்த சிறைசசாலையில் அரசு பெண் அதிகாரி சிறையில் அடைக்கப் பட்ட குற்றவாளிக்கு செல் போனில் குறும் செய்தி அனுப்புகிறாள்.
அவள் பெயர் கலின்.வயது நாற்பத்துஏழு .
அவன் பெயர் பிரயன் மக பிரைட்.
" அன்புக்குரியவனே!உன்னை மறக்க முடியவில்லை.எப்படியடா இப்படிப்பட்ட வித்தைகள் உனக்கு மட்டும் தெரிந்திருக்கிறது.?உன்னுடன் உறவு கொள்ளும்போதே செத்து விடலாம் என தோணு கிறது .வா காத்திருக்கிறேன் " என செய்தி அனுப்புகிறாள்.
அவனும் வருகிறான் .
இருவரும் வெவ்வேறு நிலைகளில் பரவசம் அடைகிறார்கள்.
இவர்களின் பரவச நிலைகளுக்கு பங்கம் வந்து விடக்கூடாது என காவலர்கள் காவல் நிற்கிறார்கள்.
இதற்கு பெயர் என்ன சொல்வது?
அவள் இன்னொருவனின் மனைவி.
அவன் இன்னொருத்தியின் கணவன் .
அவர்களின் படங்கள் இங்கே .பெண் அதிகாரியின் பெரிய சிறிய படங்களும் அவளுக்கு காவல் காத்த அதிகாரிகளில் இருவர் படமும் !.