மிகவும் வேதனையாக இருந்தது அந்த வதந்தியை கேட்டபோது!
நமக்கு நெருங்கியவர்களைப் பற்றிய வதந்தி என்கிறபோது அந்த வேதனைக்கு நெருப்பின் வடிவம் கிடைக்கிறது என்பதை இன்றுதான் உணர்ந்தேன்.
ஈகோ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் 'எப்படா முடிப்பார் இயக்குனர்?'என்கிற சலிப்பு உச்சம் தொடுகிறபோது அந்த வதந்தி என் செவிகளை அடைத்தது.
"சிவகுமார் உடல்நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.விசாரித்தீர்களா?"என சக பத்திரிகையாளர் சித்ராமணி கேட்டதும் ஆடிப் போனேன்.
சற்று நேரத்தில் 'மிகவும் சீரியசாம்' என ரெக்கை முளைத்து விட்டது.
சற்று அழுத்தம் எனது குருதியின் ஓ ட்டத்தில் !
நமக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரிக்கத் தொடங்கினால் கண்டிப்பாக அவர்களுக்கு வேண்டிய பலரிடம் சொல்ல....டெங்குவாக பரவி விடும்.
எனவே சூர்யா,கார்த்தி இருவரின் கால்ஷீட் பார்க்கும் தங்கதுரை ,மக்கள் தொடர்பாளர் ஜான்சன் இருவரிடம் கேட்டேன்.
சிவகுமாருக்கு போன் போட்டேன்.சுவிட்ஸ் ஆப் !
தொடர்ந்து முயற்சித்தேன்.பலன் கிடைத்தது.
"அட பாவிகளா !நல்லாதான்பா இருக்கேன்"என்றார்.
குடும்பத்துடன் கோவைக்கு சென்ற அவர் நண்பரின் மருத்துவ மனைக்கு சென்று வழக்கமான சோதனைகளை செய்திருக்கிறார்.
இதற்காகவே காத்திருந்தவர்கள் வாய்வரிசையை காட்டி விட்டனர்
அதை சிலர் கைவரிசையாக மாற்றிவிட்டனர்.
என்ன உலகமடா!
நமக்கு நெருங்கியவர்களைப் பற்றிய வதந்தி என்கிறபோது அந்த வேதனைக்கு நெருப்பின் வடிவம் கிடைக்கிறது என்பதை இன்றுதான் உணர்ந்தேன்.
ஈகோ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் 'எப்படா முடிப்பார் இயக்குனர்?'என்கிற சலிப்பு உச்சம் தொடுகிறபோது அந்த வதந்தி என் செவிகளை அடைத்தது.
"சிவகுமார் உடல்நலமின்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.விசாரித்தீர்களா?"என சக பத்திரிகையாளர் சித்ராமணி கேட்டதும் ஆடிப் போனேன்.
சற்று நேரத்தில் 'மிகவும் சீரியசாம்' என ரெக்கை முளைத்து விட்டது.
சற்று அழுத்தம் எனது குருதியின் ஓ ட்டத்தில் !
நமக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரிக்கத் தொடங்கினால் கண்டிப்பாக அவர்களுக்கு வேண்டிய பலரிடம் சொல்ல....டெங்குவாக பரவி விடும்.
எனவே சூர்யா,கார்த்தி இருவரின் கால்ஷீட் பார்க்கும் தங்கதுரை ,மக்கள் தொடர்பாளர் ஜான்சன் இருவரிடம் கேட்டேன்.
சிவகுமாருக்கு போன் போட்டேன்.சுவிட்ஸ் ஆப் !
தொடர்ந்து முயற்சித்தேன்.பலன் கிடைத்தது.
"அட பாவிகளா !நல்லாதான்பா இருக்கேன்"என்றார்.
குடும்பத்துடன் கோவைக்கு சென்ற அவர் நண்பரின் மருத்துவ மனைக்கு சென்று வழக்கமான சோதனைகளை செய்திருக்கிறார்.
இதற்காகவே காத்திருந்தவர்கள் வாய்வரிசையை காட்டி விட்டனர்
அதை சிலர் கைவரிசையாக மாற்றிவிட்டனர்.
என்ன உலகமடா!