திங்கள், 31 டிசம்பர், 2012

பேஸ்புக்,ட்விட்டர் ,பிளாக்,இவை மூன்றிலும் இருக்கிறேன்.
தொடக்கத்தில் 'லைக்'குகளை எதிர்பார்த்து எழுதினேன்.நல்லவைகளை!
ஆனால் விழவில்லை.'லைக்குகள்'!
சினிமாவை எழுதினேன்.விழுந்தன.ஆனால் எண்ணிக்கையில் குறைவு!
படித்த கிசுகிசுகளை வேறு பாணியில் எழுதினேன்.வரவேற்பு எக்க சக்கம்.!
ஆகா...விஷயம் இப்படி இருக்கா?அப்படியானால் இலக்கியங்களில் இருக்கிற இன்பத்து ச் சுவைகளை எழுதினால்?
சுப்ரதீபக் கவிராயரின் தூதுவில் இருந்து எழுத, பிளாக்கில் எண்ணிக்கை உயர்ந்தது.!
அப்படியானால் பிளாக்கில் நாம் சாராயம் விற்க ஆரம்பித்திருக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
சில நண்பர்கள் கண்டித்தனர்."நாகரீகமாக எழுது"! 
அரசு சாராயம் விற்பது நாகரீகமாகிவிட்டபோது நான் எழுதுவது மட்டும்  நாகரீகமாக ஆகாதா?
நானே கேட்டுக் கொண்டு தொடர்ந்தேன்.
எனது வீட்டுச் சிறுவர்கள் கம்ப்யூட்டரில் சித்தர்கள் என்றானதும் ......
உள்ளத்தில் வலி!
ஓ ...நம் வீட்டில் அடி விழும்போது தான் சமுதாயம் தெரிகிறது.
வெட்கம்.வேதனை.இதுவரை நான் எழுதிய காமரச கட்டுரைகளை எத்தனை சிறுவர்கள் படித்திருப்பார்கள் ?
வேண்டாமே.இனிமேல் அப்படி எழுத வேண்டாமே!
எத்தனை நூறு  பேர் படிக்கிறார்கள் என்பதை விட ,பத்து பேர் படித்தால் போதும் என்கிற உறுதியை இந்த ஆங்கில புத்தாண்டில் எடுத்திருக்கிறேன்,


செம்மொழிப் பூங்கா.....காதலர் பூங்கா!

ஆங்கிலப் புத்தாண்டுக்கு எங்கேயாவது போகலாமே?
'செம்மொழிப் பூங்கா போ'-மனம் சொன்னது.
சரி ,எப்படி இருக்கிறது அந்த பொட்டானிகல் கார்டன் என்பதையும் பார்த்துவிடலாம் என்று வண்டியை கட்டினேன்.
டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என இருந்தபோது அடிக்கடி சென்ற இடம்.இப்போது
ஐந்து ரூபா நுழைவுக்கட்டணம்.
கூட்டம் நிரம்பி இருந்தது.
என்ன வகை மரம் என்பதை ஒவ்வொரு மரத்திலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.யாரும் அதை கவனித்தமாதிரி தெரியவில்லை.ஆனால் அழகை ரசிக்கிறார்கள்.பசுமையை நேசிக்கிறார்கள்.செல் போனில் படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அன்னங்கள் தடாகங்களில்!கரையில் வண்ண வண்ண வர்ண ஜாலங்களில்  பெண்கள்..
சிறுவர்,சிறுமியர் ஓடி விளையாடுவதை பார்த்து பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி .
வளைந்து வளைத்து செல்லும் வழிகளில் பக்கப் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளும் இருக்கின்றன.
அந்த பகுதிகளை காதலர்கள் நிரப்பி இருந்தனர்.
ஏறத்தாழ கட்டி அணைத்தபடி ,கன்னங்கள் சேர்ந்தபடி .உதடுகள் உரசியபடி....!
அவர்கள் மாணவ மாணவியராக ,அலுவலகப் பணியாளர்களாக ,தெரிந்தார்கள்.தோற்றம் அப்படி!ஒருவேளை அது தவறாக க் கூட இருக்கலாம்.
"இன்று மட்டும்தான் இப்படியா ,அல்லது வழக்கமாகவே இப்படியா?"-சீருடை அணிந்த பூங்கா பணியாளரிடம் கேட்டேன்.
"தினமும் பார்க்கலாம் சார்"! என்றார்.
"அத்து மீறுதல் உண்டா?"
"உதடுகளுடன் சரி.இதற்காக  வருகிறவர்கள் யார் ,படிப்பதற்காக வருகிறவர்கள் யார் என்பதை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம்.அவர்களை நாங்கள் கடுமையாக கண்காணித்தப்படி இருப்போம்."என்றார்.
ஆறுதலாக இருந்தது.
இருந்தாலும் பெற்றவர்களுக்கே தெரியாமல் இப்படி சந்திப்பவர்கள் பூங்கா பணியாளர்களை ஏமாற்றுவது  பெரிய காரியம் அல்ல!
இதைக் காரணமாக சொல்லி பூங்காவை மூடாமல் இருக்க வேண்டும்.அதுதான் எனது கவலை!

ஏனென்றால் அது கலைஞர் கருணாநிதி திறந்த பூங்கா!

புத்தாண்டு வாழ்த்துகள்.

வணக்கம் நண்பர்களே,
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்நேரம் பலர் ஆரம்பித்திருப்பார்கள்.ஆடல்,பாடல் என அமர்க்களப்படும்.கடலோரம் பலர் காதலி,மனைவி,ஆசைநாயகி என ஜோடி  சேர்ந்திருப்பார்கள்.மார்கழிப் பனி அவர்களை ஒன்றும் செய்யாது.கத கதப்புக்கு  
பலர் 'உள்ளுக்குள்ளும் 'ஸ்வெட்டர் போட்டிருப்பார்கள்.எனவே குளிரோ,பனியோ,பயமோ இருப்பதில்லை.
ஆங்கில புத்தாண்டு ஜனவரி முதல் நாளன்று தொடங்கும்.
ஆனால் ,தமிழனுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதம் என ஜெயலலிதாவும்,தை மாதம் என தமிழ் அறிஞர்களும் சொல்லி வருகிறார்கள்.திமுக ஆட்சியில் இருந்தால் தை மாதம்,அதிமுக ஆட்சியில் இருந்தால் சித்திரை மாதம் என அரசு கொண்டாடும்.
அரசியல்வாதிகளின் விளையாட்டுக்கு தமிழ் வருசப் பிறப்பு நாய் படும் பாடு படுகிறது.
ஏன் இப்படி என அரசியலாரை  கேட்க முடியாது.அதனால் அந்தந்த கட்சிக்காரர் களால் இரண்டு தடவை கொண்டாடும் பெருமை தமிழனுக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு வேளை  பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் அசல் தமிழர்கள் அவர்கள்தான் என சொல்லி ஒரு மாதத்தை சொல்லலாம்.இப்படி ஒரு பெருமை தமிழனுக்குதான்கிடக்கிறது.உலகத்தில் இப்படி வேறு எந்த இனமாவது தங்களின் புத்தாண்டை கொண்டாடி இருக்குமா என்பது தெரியவில்லை.
ஆனால் ,
நான் தைத் திங்கள் நாளைத்தான் தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவேன்.
அன்புடன் ,
தேவிமணி. 

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சன்னிகளும் பாலியல் வன்முறைகளும்...

உண்மைகளை ஒப்புக் கொள்வது ஆண்மை.!
ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இது சாத்தியம் இல்லை .
மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கோரமான முறையில் சிதைக்கப் பட்டு  செத்தும் போனாள் !தலைநகர் டெல்லியில் மிகப் பெரிய போராட்டம் நடத்திக் காட்டப்பட்டது .
மாணவியின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடு என ஒரு சாராரும்,மரணதண்டனை தீர்வாகாது என மறு சாராரும் சொல்லி வருகிறார்கள்.பாலியல் வல்லுறவு என்பது இந்தியாவின் தென் கோடியிலிருந்து வட  கோடி வரை பரவிக் கிடக்கிறது.
என்ன கொடுமை என்றால் பச்சிளம் குழந்தைகளைக் கூட பாவிகள் விட்டு வைக்கவில்லை .தமிழ் நாட்டிலேயே  வன்கொடுமை-பாலியல் வல்லுறவுகள்-கொலைகளும்  நடந்திருக்கின்றன.
எவனும் கொதித்ததில்லை '
எந்த கட்சியும் கொடி பிடித்து களம் கண்டதில்லை பத்தோடு பத்தாக கண்டித்து தீர்மானம் போட்டு கையை கழுவிக் கொண்டார்கள் . வாய் நிறைய வீரம் பேசினார்கள் .
பெண்கள் நடமாட முடியவில்லை.இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது என்பதாக குரல் எழுப்பினார்கள் இத்தகைய கொள்கை கோமான்கள் சன்னி லியோன்களும் ஷெர்ளின் ஷோப்ராக்களும் நிர்வாண ப் படங்கள் கொடுத்த போது வாயில் நீர் சுரக்க பார்த்து மகிழ்ந்தவர்கள்தானே!இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது பெண்களைப் பற்றி பேசுவதற்கு ?ஜிஸ்ம் 2 படத்தில் சன்னி லியோன் நிறைய மார்புகளை காட்டியபோது சிலிர்த்து ப் போகவில்லையா?
ஷெர் லின் ஷோப்ரா பிளே பாய் பத்திரிகைக்கு முழு நிர்வாண போஸ் கொடுத்தபோது கள்ளத்தனமாக வரவழைத்து வாங்கிப் பார்த்தவர்கள் தானே இவர்கள்?

சினிமாவில் நிர்வாணத்தை வரவேற்று ரசிக்கும் காமரச கண்ணியவான் களுக்கு பெண்களைப்பற்றி பேசும் தகுதி இல்லை.


காஜலின் பின்பக்கத்தில் ராம்சரண் அடித்தாரா?

தெலுங்கு சினிமாவில் கமர்சியலாக எதையாவது செய்தாகவேண்டும் என்கிற நிலைமை.
மீடியாக்களும் பத்த வைத்து சூடேற்றி விடும்.சிறு பொறி கிடைத்தால் போதும் .எரிமலையாக்கி குமுற வைத்து விடுவார்கள்
லிப் லாக் என்பது வரை வந்துவிட்ட சினிமாவில்"நாயக்" படத்தில்  காஜலின் பின்னம் பக்கத்தில் ராம் சரண் தட்டியதை பூகம்பமாக்கி கல்லா கட்டப் பார்க்கிறார்கள் .
இன்றைய சினிமா இப்படிதான் கமர்சியலாகி வருகிறது.
சினிமா செய்தி என்றால் படிப்பவர்கள் அதிகம்.இலக்கியம் எழுதினால் வேப்பெண்ணையாக விலக்கி விடுகிறார்கள் .
செக்ஸ் விரும்புகிற உலகமாகி விட்டது.
சரி .இனி விஷயத்துக்கு வருவோம்.
'ரச்சா'படத்தில் இப்படிதான் தமன்னாவின்   பின்னம்பக்கத்தில் தட்டிஇளைஞர்களின் மனதை ராம்சரண் கவர்ந்தாராம்.
இப்படி எழுதுகிறவர்கள் வேர் எது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சரணின் அப்பா சிரஞ்சீவி ஒரு படத்தில் விஜயசாந்தியின் 'பம் 'சில் தட்டி வாலிபர்களை கவர்ந்தாராம்.
ஸோ ,இந்தக் காலத்து வாலிபர்களை கவர வேண்டும் என்றால் இப்படிப்பட்ட காரியங்களை செய்தால் போதும் என மீடியாக்கள் நினைப்பது தவறு.
முத்தம் கொடுக்கிற அளவுக்கு சினிமா முன்னேறி  விட்ட இந்த காலத்தில் கேவலம் பெண்ணின் பின்னம்பக்கதட்டலுக்கு ...
அட...போங்கப்பா!

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சிறந்த நடிகர் சூர்யாவா,விஜயா?

சிறந்த நடிகர் சூர்யாவா,விஜயா?
ஆண்டு முடிய போகுது.
இனி ஆளாளுக்கு 'அவார்டு பங்ஷன் 'நடத்த கெளம்பிடுவாணுங்க.சில நடிகர்கள் அவங்களே பணம் காசு கொடுத்து செட்-அப் பண்ணி அவார்டு வாங்கி பப்ளிசிடிக்கு பணம் கொடுத்து அவங்களே சிறந்த நடிகர்னு சொல்லிக்குவாங்க.இந்த கண்றாவி வருஷம் தோறும்  நடக்கிது.
இதுல என்ன வேடிக்கைன்னா அந்த நடிகருக்காக மத்த நடிகர்களும் நடிகைகளும் விழாவுக்கு போக வேண்டியதா இருக்கு .போகலேன்னா அடுத்த பட சான்சு அல்வா!அதனால அல்லக்கைகளா சில பெரிய நடிகர்கள் பின்னாடி திரிய வேண்டியதா போச்சு.
2012ம் வருசத்து சிறந்த நடிகர் யார்னு மக்களுக்கு தெரியாம இருக்காது..
படம் பார்த்தவங்க மனசில அவங்க நிச்சயம் இருப்பாங்க /சில பேர் வேணும்னா மறந்திருப்பாங்க.
இப்ப சொல்லுங்க உங்க மனசில இருக்கிறது யாரு?
கடந்த வருஷ 'பாக்ஸ் ஆபீஸ்' படம்னா ஒப்பனிங்க்ல அள்ளிக்கொட்டிய 10 படத்த சொல்லலாம்.அப்படி வாரிக் கொடுத்த பட ஹீரோ ஹீரோயின்தான் பெஸ்ட்டா?இல்ல  திறமையை காட்டி நடிச்சவங்கதான் பெஸ்ட்டா?
சும்மா ஒரு பட்டியல் தரேன்.செலெக்ட் பண்ணுங்க.அப்புறம் சில கம்பெனிகள் செலெக்ட் பண்ணி விழா நடத்துறவங்க லிஸ்ட்டு டன் சரி பாருங்கள் உண்மை தெரியும்..சூர்யா,விஜய்ஆர்யா,கார்த்தி,சமுத்திரக்கனி,சசிகுமார்,பிரகாஷ்ராஜ்,விக்ரம்,ஆதி,ஜீவா,கமல்,அதரவா,விக்ரம் பிரபு,உதயநிதி .....!...
இவங்களை தாண்டி பெஸ்ட் வர சான்ஸ் இல்ல.எனகென்னமோ பட்டியலில் கமல் சூர்யா.விஜய் கார்த்தி...சிலர் உதயநிதியை சொல்வாங்க...




உங்க முடிவு என்ன? 

சனி, 22 டிசம்பர், 2012

விஜயும்-விஜயும் !

இயக்குநர் விஜயும்.நடிகர் விஜயும் இணைந்து ஒரு படம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.படத்திற்கு ;தங்கமகன்' எனப் பெயரிட்டிருப்பதாக செவிவழி செய்திகள்.
ஆனால் அதிகாரப் பூர்வமாக எந்தப் பெயரும் அறிவிக்கப் படவில்லை.இதுவரை தமிழ் சினிமாவில் எவரும் செய்திராத வகையில் எல்லோரும் தங்களை தயார்படுத்திக்  கொண்டு படப்பிடிப்பு தளம் சென்றிருக்கிறார்கள்.
ஒரு ஐம்பது ,அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தென் தமிழகத்தில் 'குஸ்தி'பந்தயம் நடக்கும்.காட்டாக் குஸ்தி,போட்டா போட்டி என துண்டு பிரசுரங்கள் ஊர் முழுக்க பறக்கும்.பயில்வானுகளுக்கு தயார் தீனிக்காக கான்ட்ராக்டர் பந்தயத்தில்  மோதுகிற  பயில்வான் இருவருக்கும் பணம் கொடுப்பார்.இருவரும் உடம்பில் உறம்  ஏற்றிக் கொண்டு மோதுவார்கள்.
அதைப்போல இயக்குநர் விஜய் தனது படப்பிடிப்புக் குழு மொத்தத்தையும் சென்னை கிரீன் பார்க் என்கிற நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து  வீடியோ போட்டுக் காட்டினார்
முதல் ஒரு மணி நேரம் அவர் கதை சொன்னதை வீடியோவாக காட்டினார்
அடுத்த ஒரு மணி நேரம் அந்த படத்தின் கேரக்டர்கள் எப்படி இருக்கும் என்பதை சித்திரமாக வரையப் பட்டதை காட்டினார்.
இதன் பின்னர் நடிக நடிகையர்,டெக்னிஷியங்களின் கேள்விகளுக்கு இயக்குனர் பதில் சொன்னார்.
மொத்த சினிமாவும் இப்படிதான் இருக்கும் ,அதில் தங்களின் கேரக்டர்களும் இப்படிதான் இருக்கும் என்பதை நட்சத்திரங்கள் புரிந்து கொண்ட மாதிரி ,டெக்னிசியன்களும் தங்களின் வேலை எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்கள்.
இதனால் லொக்கேஷனில் நடிக்கும் பொது திருத்தம் சொன்னால் போதும் என்கிற நிலை.
இந்த மூன்று மணி நேர ஒர்க் ஷாப்பை யாரும் படம் எடுக்ககூடாது என்பது இயக்குனரின் கட்டளை.
நல்ல முயற்சிதான்.!

கற்பும் மனிதர்களும்!

இஷ்டப்பட்டு எவனுடன் படுத்தாலும் அது கற்பழிப்பு இல்லை.!
அது அவளின் கணவனுக்கு செய்யும் துரோகமும் இல்லை.
ஆனால்,
அவளின் விருப்பத்திற்கு மாறாக வல்லுறவு கொண்டால் மட்டுமே அது "கற்பழிப்பு"!என்னங்கடா உங்க நியாயம்?
இந்த கற்பு என்பது உறுப்பு சார்ந்ததா?
மனம் சார்ந்ததா?
உடல் சார்ந்ததா?
ஒருவனின் மனைவி இன்னொருவனுடன் பாலியல் தொடர்பு கொண்டால் அங்கே துரோகம்  அல்லது கள்ளத் தொடர்பு என ஏதோ ஓன்று  முன்னிலை படுத்தப் படுகிறது..கற்பு என்பது பின்னால் நின்று விடுகிறது.
"அவனை அவ வச்சிருக்காளாம்" ஓடிப்போயிட்டாளாம்இன்னார்பொண்டாட்டி"
"என்ன பொம்பள அவ.குடிய கெடுத்திட்டாளே ,சண்டாளி"
இப்படிதான் சொல்வார்கள்.
எங்கேயாவது ராமநாதன் கற்பிழந்தான் ,கோதண்டம் கற்பை பறி  கொடுத்தான் என சொல்கிறார்களா?
ஆணுக்கு மட்டும் கற்பு இல்லையா?
கற்பு என்பதை பெண்பாலாக கருதும் முட்டாள்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம்   திருந்தப் போவதில்லை.
தெருவில் நடந்து செல்லும்போது ஆண் சைட் அடிக்கலாம்.ஆனால் அவன் மனைவியை அல்லது உறவுப் பெண்ணை எவனாவது பார்த்தால் கோபம் வந்துவிடுகிறது.
திருந்துங்கடா!

புதன், 12 டிசம்பர், 2012

நடிகையின் நிர்வாண புரட்சி!

இந்திய தேசத்தின் கவர்ச்சி திலகம் பூனம் பாண்டே!
நிர்வாணத்தின் உச்சம் எதுவோ அதன் பரிபூரணம் காட்டியவர்.
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு நான்கும் பெண்ணின் அடிமைத்தனம் என வாழ்ந்து கொண்டிருப்பவர்.
முதன்முதலாக காலண்டரில் தன்னை நிர்வாணப் படுத்திக் கொண்டவர்.இவர் இப்போது இந்தி படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
படத்தின் பெயர் 'நஷா'.
இந்த படம் எதை சொல்லப் போகிறதோ நமக்கு தெரியாது.
ஆனால் ஆணும் பெண்ணும் உதடுடன் உதடு பொருத்தி கொடுக்கிற முத்தம் பற்றி பூனம் சொன்ன "அரிய கருத்து"தான் பாலிவுட்டில் கலக்கி இருக்கிறது.
இவ்வளவு பெரிய ,அரிய கருத்து பூனம் சொல்லலாமா என கேட்கிறார்கள்?
அப்படி என்ன சொல்லி விட்டார்?
"நான் கேமரா முன் நிர்வாணமாக நிற்பதை பற்றி கவலைப் படவில்லை.ஆனால் லிப்-லாக் காட்சியில் நடிக்கமாட்டேன்"
இதான் மக்களே ,பூனம் சொன்ன கருத்து!நிர்வாணத்தை விட  முத்தம் மோசம் என்பது அவரது கருத்து.
அது ஒரு வகையில் சரிதான்.
ஆணை கட்டிப் பிடித்து உதட்டில் முத்தம் இடும்போது உணர்வுகளை கட்டுப் படுத்தமுடியாது.நடிப்புத்தானே என நடிகை வாயைக் கொடுத்தால் நாயகன் நாவினால் வருடி விளையாடி தூண்டுதல் செய்வது தவிர்க்க இயலாது .
எனக்கென்ன போச்சு என்று அவிழ்த்துப் போட்டுவிட்டு நிற்பதில் ஆபத்து இருக்கப் போவதில்லை என பூனம் நினைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிர்வாணம் சென்சாரை மட்டுமே திருப்தி படுத்துமே தவிர மக்களை வந்தடையாது என்பது எனது கருத்து.

திங்கள், 10 டிசம்பர், 2012

கமலின் விஸ்வரூபம்

கமலுக்கு பிடிவாத குணம்.
ஒரு முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னரே அதன் விளைவுகள் இப்படி எல்லாம் வரக்கூடும் என யூகித்து வைத்திருப்பார்.
அது அவரது பலம்.
இத்தனை கோடிகள் செலவு செய்கிறோமே கையைக் கடிக்குமா,அல்லது பையை நிரப்புமா என்கிற கணக்குப் போடத்தெரிந்த வியாபாரி என்றாலும் வித்தகர்.கையைக் கடித்தாலும் பரவாயில்லை என சில நேரங்களில் துணிந்துவிடுவார்.
புதியவையாக இருக்க வேண்டும் ,தன்னால் புதுப் பாதை அமைய வேண்டும் என்கிற ஆர்வம அதிகம்.
அவர் சொன்ன ஆலோசனைகளை தயாரிப்பாளர்கள் முன்னரே  கேட்டிருந்தால் கள்ள வீடியோ கேசட்டுகள் வந்திருக்காது.
அவர் சொல்லி நாம் என்ன கேட்பது என்கிற மனப்  பான்மை தயாரிப்பாளர்களிடம் இருந்தது.இப்போதும் இருக்கிறது.
விசுவரூபம் வீட்டுக்கு வருவது நல்லது.நசிந்து வரும் சினிமாவுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருவாய்தயாரிப்பாளர்களின்  கையை கடிக்காமல் காப்பாற்றும்.
ரஜினிக்கு அடுத்து வருவாய் ஈட்டக்கூடிய நடிகர் கமல்தான் என்பதை விசுவரூபத்தின் வியாபாரம் நிரூபிக்கலாம்.
ஆந்திராவில் அமோக வரவேற்பு.மலையாளமும் தயார். கன்னடமும் கை கொடுத்திருக்கிறது.
டிவி சேனல வருவாயும் இருக்கிறது.எனவே சில தியேட்டர் அதிபர்கள் கதவை சாத்துவதால் நட்டம் அவர்களுக்கே!
கமல் என்கிற அதி புத்திசாலியிடம் அவர்கள் ஏமாறாமல்  லாபம் பெற வேண்டும் என்றால் ஒத்துழைப்பு கொடுப்பதுதான் நல்லது.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

ஆசையாய் ஓர் கடிதம்.....

என்னவளே,
இப்படி உன்னை அழைக்கலாம் அல்லவா ?
என் தலை கோதி அதன் சுருளை ரசித்தவள் நீ!
காதோரம் முகர்ந்து கனலை மூட்டியவள் நீ!
கன்னத்தில் உதடுகளால் ஓவியம் வரைந்தவள் நீ!
எனது இதழ்களில் உனது நாவினால் காதல் சொன்னாய்.
இப்படி காதல் சொன்னவளை
என்னவளே என நான் சொல்வது பிழையா ?

நேற்று பழகியதெல்லாம் பருவத் தவறா ?
முத்தம் கொடுத்து உயிரை உறிஞ்சியபோது
எத்தனை சுனாமிகள் நமக்குள்!
இப்படியே இருக்கலாமா ,
இருக்கமுடியாதெனில்
இறப்பதே சொர்க்கம் என சொன்னது யார்?
அந்த கண  நேரம்தானா சத்தியம்?

மறந்தவளே ,எனை ,இல்லை, நமை
மறந்தவளே!
காதலை காற்றில் கரைத்து விட்டாய்.!
உடை கலைத்து ,உடல் கலந்து
திகைந்து ,பின் முகைந்து .....
இதுவே நமக்கு நல்லறம்
என இல்லறம் சொன்னவள் நீ!

இன்று
துறவறம் கொண்டது ஏன் ?
இளமை என்பது கொடை !
காலம் கடந்துவிட்டால்
முதுமை துயரம்.
வேண்டாம் ,நமக்கு.!
காலம் இருக்கும்போதே
காமத்தில் கரைவோம்!

இவண் ,
உனது
அவன்.

நமக்கு கிடைத்த அடிமை ....நல்ல பேச்சாளி !


மதிமுக.வின் பலம் வாய்ந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
மொழி ஞானம்,வளைந்து கொடாமை ,அஞ்சாமை ,ஆளுமை ,எழுத்தாற்றல் என இன்ன பிற திறமை உள்ள மனிதர்.
வைகோவைப் போன்றே தன்னை வடிவமைத்துக் கொண்டவர் என சொன்னாலும் பிழை இல்லை.
உவமைகளும் ,எடுத்துக்காட்டுகளும் இவரது பேச்சில் துள்ளி விளையாடும்.
அமர்ந்திருப்பவர்களை ஆவேசம் கொள்ளவைக்கும் ஆற்றல் இந்த தமிழனுக்கு உண்டு.
வைகோவுக்கும் இவருக்கும் இடையில் உருவாகிய-அல்லது உருவாக்கப் பட்ட கருத்து வேறுபாடு இவரை அணி மாற வைத்திருக்கிறது.
மதிமுகவில் இருந்தபோது  மனம் விட்டு மேடைகளில் பேசி இருப்பார் .
இனிமேல் அவரால் அந்தளவுக்கு பேச முடியுமா?
தமிழ் ஈழம் பற்றி கருத்து சொல்வதற்குக் கூட அனுமதி வாங்க வேண்டும்.
இவர் பங்கு பெறு ம் கூட்டங்களுக்கான சுவரொட்டிகளில் கூட இவரின் முகம் இருக்கக் கூடாது.
மதிமுகவில் அனுபவித்த சுதந்திரத்தைப்  போல்  அதிமுகவில் .அவரால் அனுபவிக்க முடியுமா?
அவரின் தமிழாற்றலை அதிமுக பயன் படுத்திக் கொள்ளும்.
மறைந்த கா.காளிமுத்துவுக்குப் பிறகு அந்த கழகத்திற்கு கிடைத்திருக்கும் வலிமையான ஆயுதம் சம்பத் என்பதில் ஐயமில்லை.
அவரின் வாழ்வு செழுமை பெறும் .பதவிகள் நாடி வரும் .
"இதற்காகத்தானே ஆசைப் பட்டாய்  சம்பத்?"என பேச்சு வலம் வரும்.
மதிமுகவில் இருந்து சிலர் வரலாம்.
ஆனாலும் என்ன?
கருவேப்பிலைதானே !
உண்மையான அரசியலை பேசமுடியாது.

"நமக்கு கிடைத்த அடிமை திறமையான பேச்சாளி!"