
பக்கமாக வந்து நின்ற சேத்துக்குளி கோவிந்தன் செய்தி முடியும் வரை எதுவும் பேசவில்லை. வீரப்பனுக்குப் புரிந்தது.!
" பய ஏதோ முக்கியமான சங்கதி கொண்டாந்திருக்கான்.!"
செய்திகள் முடிந்ததும் டிரான்சிஸ்டரை 'ஆப்' செய்த வீரப்பனின் காது வரை குனிந்த சேத்துக்குளி திரட்டிக் கொண்டு வந்திருந்த சங்கதிகளை சொல்லிவிட்டு நிமிர்ந்தான்.
வீரப்பனின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.!
பழுப்பான பச்சை நிற 'புஷ் கோட்டு' முழுக்கால் டவுசர் .'புஷ் கோட்டில்'பெரிய பெரிய பைகள்.வகை வகையான வெடி குண்டுகள்.குறுக்கு வாரில் வரிசையாக ' .புல்லட்டுகள்' 'அல்ட்ரா மாடர்ன் பிரஞ்சு துப்பாக்கி.!
மூன்று பேரை மட்டும் சேர்த்துக்கொண்டு காட்டுக்குள் மறைந்தான்.!
பாலாறு,!கழிவுகள் எதுவும் கலக்காததால் தெளிவான நீரோட்டம். கூட்டம் கூட்டமாக கெண்டை மீன்கள்.நீரோட்டத்தை எதிர்த்தபடி அலைவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.ரம்மியமாக இருக்கும்.பாறைகள் தட்டுப்படும் இடங்களில் துள்ளிக் குதித்து முன்னேறும் போது மாலை நேர வெயிலில் மீன்கள் தகதகக்கும்.
இந்த அழகை ரசிப்பதற்காக அவ்வப்போது பாலாறு பாலத்துக்கு பொரியுடன் வந்து விடுவார்,கார்டு மோகனய்யா.பொரியை தூவி விடுவார்.வாய்களை திறந்து 'மளக் ...மளக்கென்று பொரியை விழுங்கும் மீன்களை பார்க்கும்போது அன்றாட கவலைகள் மறந்துவிடும் அவருக்கு.!
கொண்டு சென்றிருந்த பொரி தீரவே மன நிறைவுடன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்.
நீரைத் தழுவி வரும் குளிர்ந்த காற்று. வனப்பகுதிகளுக்கு உரிய தனித் . தன்மை .
கன்னட சினிமாப் பாடலை 'ஹம்' செய்தபடி அனுபவித்து நடந்தவரை 'டப்' என்று குண்டு தாக்கியது.நெஞ்சை குறி பார்த்து தட்டியவன் வீரப்பன்.ஒரே புல்லட்.!
வேர் அறுந்த மரம் மாதிரி பாலத்தில் சாய்ந்தார் .
முக்கல்,முனகல் ,கதறல் எதுவுமில்லை.நொடிப்பொழுதில் உயிர் பறந்து விட்டது.நீண்ட நேரம் மரத்தின் மறைவில் பதுங்கி இருந்து நேரம் பார்த்து சுட்டுத் தள்ளிவிட்டான்.
தனது டிரைவர் பொன்னய்யனை கைது செய்து சந்தனக்கட்டை 'லோடை'கைப்பற்றியதற்காக மோகனய்யாவுக்கு மரணதண்டனை.
சுந்தர்,சுவாமிநாதன்,ஆண்டியப்பன்,மாரியப்பன்,குருநாதன்,ஆத்தூர் கொளந்தை ,பெருமாள்,கோபாலன் இத்தனை பேரும் சேத்துக்குளியுடன் கை கலக்காத குறை.!கத்திக் கொண்டிருந்தார்கள்.
"அவனுங்கள விடக்கூடாது.இப்பவே தீர்த்துப் புடனும்.எச்சக்காசுக்காக துப்பு சொல்றானுவ.பொஞ்சாதியையும் வித்துப் புடுவாணுக.ஈனப்பயளுவ.!" என்று கொதிக்கிறான் ஆத்தூர் கொளந்தை .
" நா மட்டும் அவனுகள சும்மா விட்ரனும்னா சொல்றேன்.அண்ணன் வரட்டும் ஒரு வார்த்த சொல்லிட்டு பொங்க வச்சிரலாம்."என்று ஆத்திரத்தை அடக்க பார்க்கிறான் சேத்துக்குளி.
பொங்கல் விழாவுக்கு பத்து பத்து நாட்கள் இருந்தது.கோட்டையூர் அய்யணன்,குணசேகரன்,முத்துக்குமரன்,தனபாலன்,அய்யன்தொரை என்கிற ஐந்து பேரும் போலீசுக்கு துப்பு சொல்லும் 'இன்பார்மர்கள்'கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை பொங்கல் நாளில் வீரப்பன் கடத்த இருப்பதாக இவர்கள் போலீசுக்கு சொல்லி விட்டதால் முக்கிய வழிகளை மறித்து 'ரிசர்வ் போலீஸ்' முகாம்கள் அமைத்து விட்டது.
இதனால்தான் வீரப்பன் கோஷ்டிக்கு அப்படி ஒரு வெறி.!
-----இன்னும் வரும்.