டி .ராஜேந்தர் எதற்கும் அஞ்சாதவர்.ஆட்சியில் இருப்பவர்களின் ஆத்திரத்துக்கு ஆளாக வேண்டுமே என்கிற அச்சமின்றி அவர்களையும் விமர்சிப்பவர்.
அதனால் இழந்தது எவ்வளவோ..
பிரதிபலன் எதிர்பார்ப்பதில்லை. தவறிழைத்தவனை தட்டிக் கேட்கும் போது,அவன் நண்பனாக இருந்தாலும் சமரசம் என்பதில்லை.
தமிழனாக ஆண்மையுடன் நிமிர்ந்து நிற்பவர் டி .ஆர்.
இவரின் பிள்ளைதான் சிலம்பரசன்.
அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீரத் திருமகன் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் சிங்கள வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட படம் வெளியாகி இருந்தது.
பன்னிரெண்டு வயதான அந்த பாலகன் ஏதுமறியாமல் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்தது.அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது.
அப்பாவி பாலகனை ஐந்து குண்டுகளால் சாய்த்து வீழ்த்திய மற்றொரு படத்தை பார்த்தபோது........
கொதிக்காதவன் தமிழனே இல்லை.
அந்த படம் வெளியான நாளில் ஐதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில்.இருந்தார் சிம்பு.'வாலு 'படத்தின் படப்பிடிப்பு.
பாலகனின் பால்மணம் மாறாத முகத்தை பார்த்ததும் சிம்புவுக்கு கோபமும் சோகமும் ஒரு சேர தாக்கியது.
தன்னால் நடிக்க இயலாது என்பதை உணர்ந்தார் .உணவு துறந்தார்.அன்றைய நாள் கோபத்தின் வெளிப்பாடாக சோகத்தில் புதைந்தது.
இவருக்கு இருந்த உணர்வு பலருக்கு இருந்திருக்கலாம்.ஏனோ தெரியவில்லை வெளிக்காட்டிக் கொள்ள இயலவில்லை.
வீரமும் விவேகமும் சிம்புவின் லட்சணம் !

பிரதிபலன் எதிர்பார்ப்பதில்லை. தவறிழைத்தவனை தட்டிக் கேட்கும் போது,அவன் நண்பனாக இருந்தாலும் சமரசம் என்பதில்லை.
தமிழனாக ஆண்மையுடன் நிமிர்ந்து நிற்பவர் டி .ஆர்.
இவரின் பிள்ளைதான் சிலம்பரசன்.
அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீரத் திருமகன் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் சிங்கள வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட படம் வெளியாகி இருந்தது.
பன்னிரெண்டு வயதான அந்த பாலகன் ஏதுமறியாமல் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்தது.அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது.
அப்பாவி பாலகனை ஐந்து குண்டுகளால் சாய்த்து வீழ்த்திய மற்றொரு படத்தை பார்த்தபோது........
கொதிக்காதவன் தமிழனே இல்லை.
அந்த படம் வெளியான நாளில் ஐதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில்.இருந்தார் சிம்பு.'வாலு 'படத்தின் படப்பிடிப்பு.
பாலகனின் பால்மணம் மாறாத முகத்தை பார்த்ததும் சிம்புவுக்கு கோபமும் சோகமும் ஒரு சேர தாக்கியது.
தன்னால் நடிக்க இயலாது என்பதை உணர்ந்தார் .உணவு துறந்தார்.அன்றைய நாள் கோபத்தின் வெளிப்பாடாக சோகத்தில் புதைந்தது.
இவருக்கு இருந்த உணர்வு பலருக்கு இருந்திருக்கலாம்.ஏனோ தெரியவில்லை வெளிக்காட்டிக் கொள்ள இயலவில்லை.
வீரமும் விவேகமும் சிம்புவின் லட்சணம் !