வெள்ளி, 12 ஏப்ரல், 2013

உலக நாயகனும் 'கண்டேன் சீதை'யும்.!

இலங்கைத்  தென்னகரில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை கண்ணால் கண்ட அனுமன் அதை இராமனிடம் சொன்னபோது  இராமன் அதிர்ச்சி அடைந்து விடக்கூடாது என்பதற்காக 'கண்டேன் சீதையை "என" கண்டேன் "என்பதை முன்னிறுத்தி சொன்னான் என்பதாக  உலக நாயகன் கமல் சொன்னார்.நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அவ்வாறு கூறியதை நானும் கேட்டேன் .
சீதையை என்பதை முதலில் சொன்னால் இராமனுக்கு அவளுக்கு என்னவாயிற்றோ என பதற க்கூடும் என்பதால் கண்டேன் என்பதை முன்னிறுத்தினான் என சொன்னார்.
இராமனிடம் சொல்வதற்கு முன்னரே அனுமன் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வானரப் படையிடம் சீதையைக் கண்ட செய்தியை சொல்லிவிட்டான்
இதன் பின்னரே இராமனை சந்திக்கிறான் .
கற்பினுக்கு அணியை கண்டேன் என்கிறான் அனுமன்.
ராவணனின் மனைவியும் கற்புக்கரசி தானே.அவளை சொன்னதாக ராமன் நினைக்க முடியுமா முடியாதா ?
அனுமன் சொல்கிறான்;
"கண்டெனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தென் திரை அலைகடல் இலங்கைத் தென்னகர்;
அண்ட நாயக !இனித் துறத்தி !ஐயமும்,
பண்டுள துயரும்"என்றும் அனுமன் பண்ணுவான் ."என்கிறான் கம்பன் .இதன் பின்னரே "உன் பெருந்தேவி என்னும்  உரிமைக்கும் 'என தொடருகிறான் .எந்த இடத்திலும் சீதை என பெயர் சொல்லவே இல்லை .
நற்பெரும் தவத்தள் ஆய நங்கை,இரும்பொறை,கற்பு எனும் பெயரது ஒன்று என இப்படிதான் சீதையை சொல்கிறான் ராமனிடம்.!
பின்னாளில் நாடகம் எழுதியவர்கள் இணைத்துக் கொண்டதுதான் "கண்டேன் சீதையை!"

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

இவனல்லவா தமிழின தலைவன்!

 "தென்றிசையைப்  பார்க்கின்றேன்;என் சொல்வேன் என்றன்
       சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா !
அன்றந்த  லங்கையினை  ஆண்ட மறத் தமிழன்
       ஐயிரண்டு திசைமுகத்தும் தன் புகழை  வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்
       குள்ள  நரிச்  செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என் தமிழர் மூதாதை !என் தமிழர் பெருமான்."பாவேந்தன் பாரதிதாசன் பாடியது சக்கரவர்த்தி இராவணனை என்றாலும் எனக்கென்னவோ உலகத் தமிழினத் தலைவன் பிரபாகரனை நினைத்துப் பாடியதாகவே உணர்கிறேன்.
         1986-ல்    முதன் முதலில் சந்தித்தது.'பேபி'யை!எல்லோருக்கும் இவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குள்ளமான உருவம்,காலில் செருப்பு இருக்காது.வன்னிக் காடுகளில் வெறும் கால்களுடன் நடந்து தன பாதத்தையும் இறுக்கமாக வைத்திருந்த  புலி.
சிங்கள விமானத்தை முதலில் தகர்த்த அஞ்சா நெஞ்சன்.
ஒருநாள் " தம்பி உங்களை பார்க்கணும் "என்று சொன்னார்.
அந்த மாவீரனை என்று காண்போம் என்று ஏங்கிக் கிடந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு நாளை.குறிப்பிட்டார்.
நானும் எனது புகைப்பட நண்பர் ஹமீதும் புறப்பட்டோம்.
 யாழ் தமிழர்க்கே உரிய வழக்குத் தமிழில் வரவேற்றார்.
பேசினோம் ,நிறைய,
எம் இனம் அந்நியன் சிங்களனிடம் அடிமைப் பட்டுக் கிடக்கும் அவல நிலையை எடுத்துச் சொன்னார்.புகைப் படங்களை கொடுத்தார். அத்தனையும் அன்று முன்னணியில் இருந்த 'தேவி'வார இதழில் தொடர்ந்து எழுதினேன்.
இன்று எவர் எவரோ வீரப்புலிகளின் நேரடி வாரிசுகளைப் போல் வீரம் கொப்பளிக்கப் பேசுகிறார்களே அவர்களெல்லாம்  அன்று அஞ்சிக் கிடந்தனர்.
பிரபாகரனை சந்தித்துவிட்டு  இனப்படுகொலை நடத்திக் கொண்டிருக்கும் ராஜபக்சேயையும் சந்தித்து பரிசுகள்  வாங்கியவர்கள்தான். இவர்களை இன்னமும் தமிழன் நம்பிக் கொண்டிருக்கிறான் .உணர்ச்சிகரமாக குரல் உயர்த்தி பேசுவதெல்லாம் உண்மை என நம்புகிறான்
இனப்படுகொலைக்கு யார் யார் காரணமோ,பதவியை காப்பதற்காக பொய்யாக நாடகமாடி நம்மை திசை திருப்ப பார்த்தார்களோ அவர்களை இந்த தமிழன் இன்னமும் நம்புகிறான்.
இந்த நிலை மாறுமா?
பொய்யர்களுக்கு வாக்களிக்காமல் அவர்களை புறக்கணிப்பார்களா
.