

இது சரிதானா,நியாயம்தானா என அலசுவதைவிட அந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக எந்த கட்சி இருக்கிறது என எவருமே நினைப்பதில்லையோ என தோன்றுகிறது.
தனி மனித விமர்சனம் தான் மேலோங்கி இருக்கிறது
"ஊழல் மலிந்த கட்சி திமுக. கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தின் கையில் சிக்கி இருக்கிறது.அதிகாரப்பகிர்வுகள் அவர்களுக்குள்ளேயே நடக்கிறது."என அதிமுகவினர் சொல்கிறார்கள்.



இவர்கள் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டாலும் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஊழலை ஒழிப்பதற்கு எந்த வித முனைப்பும் காட்டுவதில்லை.சோதனை,வழக்கு பதிவு என செய்திகளுக்குள் முடக்கி விடுகிறார்கள்.

இந்த இரு கழகங்களுக்கு மாற்றாக ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு எந்த கட்சி வலிமையாக இருக்கிறது?
யோசியுங்கள்?

பிடிக்காது.எந்த கழகத்துடன் இந்த கட்சி கூட்டணி வைக்குமோ அந்த கட்சிக்கு இவர்களின் தோழமை அவசியப்படுகிற பட்சத்தில் பதவி கிடைக்கலாம்.அந்தளவில் ஆட்சிக்கு வரலாம்.வரப்போகிற தேர்தலில் இதை நிபந்தனையாக வைப்பார்கள் என தோன்றுகிறது.
அடுத்து பா.ஜ.க.!அகில இந்திய கட்சி என்றாலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அளவுக்கு கூட வளர்ச்சி இல்லை.மேலும் இதை மதவாத கட்சியாக பார்க்கிறார்கள்.
அடுத்து தே .மு.தி.க.!
அணிக்கு தலைமை தாங்கும் நிலை இல்லை !
கழகங்களால் கூட்டு மறுக்கப்பட்டு தனிமைப்படும் கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அந்த உதிரிகளுக்கு தலைமை தாங்கலாம்.இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்குமா?
மதிமுக,பா.ம.க.,இடது வலது கம்யூ.கட்சிகள் ,இசுலாமிய அமைப்புகள் ,தொல்.திருமா. இவை எல்லாம் ஒன்றிணைந்து வந்தாலும் அந்த அமைப்பில் தே .மு.தி.க.அமைப்பு சேருமா?
யார் தலைமை என்பதில் சண்டை வரும்.வைகோவா,விஜயகாந்தா,டாக்டர் ராமதாசா யார் அணிக்கு தலைவர் என்பதில் சிக்கல் வரும்.
எல்லாம் சரி இந்த கட்சிகள் ஒன்று சேருமா?சேரவே சேராது.!
தனித்து ஆட்சியை பிடிப்போம் என பா.ம.க.சொல்கிறது/.
பாடம் கற்பிப்போம் என விஜயகாந்த் சொல்கிறார்.
மொத்தத்தில் 'தமிழின நலம்'மறக்கப்பட்டு சுயநல கழகம் ஏதாவது ஒன்றே ஆட்சியில் அமரும் வாய்ப்பு ஏற்படலாம்.