அகவை எழுபத்தி ஐந்து எனக்கு!
கர்வமுடன் சொல்வேன் எழுபத்தி ஐந்தை தொட்டு
விட்ட இளைஞன் நான் என்று.!

..எண்ணங்களுக்கு வயது கிடையாது மூப்பு கிடையாது.அந்த சாதியை சேர்ந்த எழுத்தாளன் நான்.!
எண்ணங்கள் இளமையாக இருப்பதால் நானும் இளைஞனே!
பத்திரிகையாளன் மெத்த படித்த
மேதாவிகளிடமும் பேசுவான்.ஆட்சியாளனிடமும் வினவுவான்.பாமரனிடமும் பேசுவான்.அவனுக்கு
ஏற்ற தாழ்வு என்பது எதுவும் இல்லை.
நான் அரசியல் பத்திரிகையாளனாக இருந்த போது
கர்ம வீரர் காமராஜர் ,மூதறிஞர் ராஜாஜி,முரட்டு முதல்வர் பக்தவச்சலம்,கலைஞர்
கருணாநிதி ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ,செல்வி ஜெயலலிதா ,தோழர்கள் பி.ராமமூர்த்தி
,கே.டி.கே.தங்கமணி , மோகன் குமாரமங்கலம் என இன்ன பிற தலைவர்களுடன் வாதாடி இருக்கிறேன்.உரையாடி
இருக்கிறேன்.
திரை உலகில் நடிகர் திலகம் முதல் இன்றைய
இளம் நாயகர்கள் வரை எனக்கு நன்கு தெரிந்தவர்கள்.ஜூலை 21 -தான் எனது பிறந்த நாள் என்றாலும் முந்தைய நாள் சனிக்கிழமையன்றே என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மதுரை அரசினர் விடுதியில் தங்கி இருந்த
அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்களிடம் அரிசி பிரச்னையை பற்றி கேட்ட போது “நீ
என்ன வக்கீலா,போ..போ “என பதில் சொல்ல மறுத்து விட்டார்.அன்றைய கால கட்டத்தில் நான்
‘தமிழ்நாடு’நாளிதழில் செய்தியாளன்
அந்த நாளிதழ் தனது பதிப்பை நிறுத்திய
பின்னர் “மாலைமுரசு”நாளிதழ் என்னை ஏற்றுக் கொண்டது.
தினத் தந்தி,மாலைமுரசு ஆகிய நாளிதழ்களின்
செய்தியாளர்களை பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அனுமதிப்பதில்லை என்கிற நிலைபாட்டில் எம்.ஜி.ஆர்.அவர்கள் இருந்த கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
மதுரை பாண்டியன் ஹோட்டலில்
பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
அண்ணன் மதுரை முத்து கூட்டி இருந்தார்.திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த பின்னர் அவர் முதன் முதலாக நடத்துகிற பத்திரிகையாளர்கள் சந்திப்பு.
எனக்கு சொல்லப்படாவிட்டாலும் சென்று விட்டேன்
தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்
செய்தியாளர்கள்!
.மற்றவர்கள் என்ன நடக்கப் போகிறதோ என எதிர்பார்த்திருந்த நிலை.
.மற்றவர்கள் என்ன நடக்கப் போகிறதோ என எதிர்பார்த்திருந்த நிலை.
“நான் மணி.!மாலை முரசு.!”
அறிமுகம் செய்து கொண்டேன்.
அறிமுகம் செய்து கொண்டேன்.
முத்தண்ணன் பக்கமாக திரும்பிய எம்.ஜி.ஆர். சட்டென
என்னைப்பார்த்து “உங்களை கூப்பிட்டிருக்க மாட்டாங்களே...என்னுடைய செய்திகளை தப்பா
போடுவீங்களே?”என்றார்.
என்ன சொல்லப் போகிறானோ என எதிர்பார்த்து சக
நண்பர்கள்.பாலகுருவா ரெட்டியார்,அண்ணன் காளிமுத்து ,மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் முகத்தில் குழப்பக் குறி.
“தலைவர் எம்.ஜி.ஆர் .பாண்டியன் ஹோட்டலில்
நிருபர்களை சந்திக்கிறார் என கேள்விப்பட்டுதான்
வந்திருக்கிறேன்.என் டியூட்டி நியூஸ் கேதர் பண்ணுவது.அனுமதித்தால்
பார்த்தது கேட்டதை எழுதுவேன்.இல்லாவிட்டால் கேள்விப்பட்டதை எழுதுவேன்.”
எம்.ஜி.ஆரும்,முத்தண்ணனும் அவர்களுக்குள்
பேசுகிறார்கள்.அவருக்கே உரிய கவர்ச்சியான அந்த மென்சிரிப்புடன்”உக்காருங்க”என்றார்.
அந்த நிகழ்வுக்கு பின்னர் எம்.ஜி.ஆர்.மதுரை
வந்தால் “எங்கே மணி ?’என கேட்காமல் இருக்கமாட்டார்.அந்த அளவுக்கு நான் அவரின் அன்புக்கு
ஆளாகி விட்டேன்.அப்படி ஒரு சம்பவத்தில்தான் தினமலர் புகைப்படக்காரர் நண்பர் ராமகிருஷ்ணன்
எடுத்த புகைப்படம்தான் இங்கிருப்பது. அண்ணன் நடிகர் திலகத்தின் பரம ரசிகன் நான் என்பது தெரிந்த பின்னரும் என் மீது மிக அன்புடன் இருந்தார் மக்கள் திலகம்.அதற்கு
இன்னொரு நிகழ்வும் சான்று.
சுற்றுப்பயணத்தின் போது என்னை நட்டாற்றில் விட்டு சென்ற கட்சி பத்திரிகையாளர் கார்க்கியை தற்காலிக நீக்கம் செய்த கண்டிப்பு நிறைந்த எம்.ஜி.ஆரை பார்த்து விக்கித்துப் போன அந்த நிகழ்வையும் இனி சொல்வேன்.
சுற்றுப்பயணத்தின் போது என்னை நட்டாற்றில் விட்டு சென்ற கட்சி பத்திரிகையாளர் கார்க்கியை தற்காலிக நீக்கம் செய்த கண்டிப்பு நிறைந்த எம்.ஜி.ஆரை பார்த்து விக்கித்துப் போன அந்த நிகழ்வையும் இனி சொல்வேன்.