செவ்வாய், 24 செப்டம்பர், 2013

நடிகர் திலகம் மறக்கப்பட்டார்,

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கமும் தமிழக அரசும் இணைந்து கொண்டாடப்பட்ட அந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அந்த விழா நடந்து முடிந்திருக்கிறது.
மகிழ்ச்சி.!
இந்திய திரையுலகின் மரியாதைக்குரிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
மிகவும் பெருமையாக இருக்கிறது.
அமிதாப்,ஸ்ரீதேவி,ரேகா,மம்மூட்டி,மோகன்லால்,கே.விஸ்வநாத் .ஏ.வி.எம்.சரவணன்,கே.பாலசந்தர்,இன்னும் பலர் மரியாதைக்குரிய நூற்றாண்டு விழா விருதுகளை பெற்றனர்.
மட்டற்ற மகிழ்ச்சி.
விழாவில் வரவேற்றுப் பேசிய வர்த்தக சங்கத் தலைவர் கல்யாண் சாதனையாளர்களை நினைவு கூர்ந்தவர் இரண்டு வரலாற்று நாயகர்களின் பெயர்களை சொல்லவில்லை.
நடிகர் திலகம் சிவாஜி சாதனையாளர் இல்லையா?
என்.டி ஆர்.சாதனை செய்யவில்லையா?
ஆஸ்கார் விருது வாங்கி இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரகுமான் பெருமைக்குரிய சாதனையாளர் இல்லையா?
கல்யாணை விட்டு விடுங்கள்.அவரின் பதவிக்குதான் மரியாதை.
முதல்வர் செல்வி.ஜெயலலிதா நினைவு படுத்தி தன்னுடைய உரையில் குறிப்பிட்டு இருந்தால் நிறைவு விழா இன்னும் சிறப்புற்றிருக்கும்.
அம்மையார் மறந்தது ஏன்?
நல்ல வேளை.குடியரசுத்தலைவர் சிவாஜி.என்.டி.ஆர்.இருவரையும் நினைவுபடுத்தி பெருமை சேர்த்துவிட்டார்.
விழாக்குழுவினர் சிவாஜிக்கு உரிய கவுரவத்தை கொடுக்கவில்லை.
கலைஞர் கருணாநிதியை புறக்கணித்தது போல நடிகர் திலகத்தையும் புறக்கணித்து விட்டார்கள்.
இவர்களுக்கு அரசியல் தேவை இல்லை.
ரகுமானுக்கு விருது வழங்க இவர்களுக்கு எது தடையாக இருந்தது என்பது தெரியவில்லை.
எம்.எஸ்.வி.க்கு கொடுத்து விட்டோமே பிறகெதற்கு ரகுமானும் இளைய ராஜாவும் என எண்ணி விட்டனர் போலும்.!







ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஹிட்லரின் காதல் ..

ஹிட்லர் காதலிலும் கில்லாடியாகத் தான் இருந்திருக்கிறான்.
நேசித்த,தனை நேசிக்கும் காதலியைக் கூட சுத்தலில் விட்டவன்தான் அவன்.
படித்ததில் எனக்கு பிடித்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று!
1935-மார்ச் மாதம்.
 மியூனிச் நகரில்  வியர்ஜெக்ரி ஜெயடின் என்கிற ஹோட்டலில் நடந்த விருந்துக்கு வந்தான்.
ஹிட்லரின் அந்தரங்க ஆலோசகர்கள் உள்பட அத்தனை பிரமுகர்களும் அங்கு  அமர்ந்திருந்தனர் .
அவர்களில் ஒரு ஆரணங்கு .அவள் ஹிட்லரின் .அன்புக்குரியவள்.ஆருயிர்க் காதலி .பெயர் ஈவாபிரான்
உன்னை ஒரு வினாடிகூட பிரியமாட்டேன் என நெக்குருகி அவளை பஞ்சணையில் நெஞ்சணைத்து பந்தாடியவன் ஹிட்லர்.
என்னவோ தெரியவில்லை.ஈவாவை பார்ப்பதையே தவிர்த்து வருகிறான்.
'அவனை எப்படியும் சந்தித்து பேசிவிட வேண்டும் 'என்கிற முடிவுடன்தான்  ஈவா அந்த விருந்துக்கு வந்தாள் !
ஹிட்லரின் ஆசைக்குரியவள் அவள் என்பதால் அவளுக்கு மரியாதை கிடைத்தது..
அவனருகில் அமரவும் செய்து விட்டாள்!
பக்கத்தில் அமர்ந்தும் பலன் இல்லாமல் போகுமா?
அவள் இப்படிதான் நினைத்தாள் .ஹிட்லரோ திரும்பிக் கூட பார்க்கவில்லை.
பேசுவதற்கு முயற்சிக்கும் போது அவன் வேறு பக்கம் திரும்பி அவர்களுடன் பேசினான்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பக்கம் பக்கம் அமர்ந்திருந்தும் .அவளை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை .
விருந்து முடிந்ததும் எழுந்த முதல் ஆள் ஹிட்லர்தான்.அவசரமுடன் ஈவாவின் கையில்  கத்தை நோட்டுகள் அடங்கிய கவரை திணித்து விட்டு கிளம்பி விட்டான்.
 தன்னை எப்படி எல்லாம் கவனித்தான் என்கிற நினைவுகளில் மூழ்கினாள்
'சப்லிஸ்' என்கிற மது வகையை அவளுக்கு கொடுத்தது நினைவுக்கு வந்தது.
'செட்டர்னே'என்கிற பிரஞ்சு வகை பானத்தை வற்புறுத்திக் குடிக்க வைத்து
வித்தைகள் காட்டிய காமவிளையாட்டுகளை மறந்து விட்டானா ?
மனம் நொந்து போனாள் ஈவா.
முடிவு ?
தூக்க மாத்திரைகள்..ஆனால் சாகவில்லை.காப்பாற்றப்பட்டாள் .

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

காமம் உச்சம் போனால் பேச்சு எதற்கு?

நாளை விநாயகர் சதுர்த்தி..இன்றே வீடு தயாராகியது,விக்னேஸ்வரனை வரவேற்க.!
வில்லங்கம் எதையும் துணைவி கொண்டு வராதிருந்தால் போதும் என நினைத்து வள்ளுவனை கையில் எடுத்தேன்.
கண்களில் பட்ட குறள் ,
"கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின்   வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல."
எதை நினைத்து,அல்லது உணர்ந்து வள்ளுவன் எழுதியிருப்பான்?
உணராமல் ,அறிந்து உணராமல் எழுத இயலாது என்பது எனது கருத்து.
கற்ற வித்தையைத்தான் இன்றைய கவிஞர்கள் எழுதுகிறார்கள் !
அந்த கோணத்தில் வள்ளுவனின் இந்த  குறளை பார்க்கிறேன்.
இரவு வருகிறது.கணவன் -மனைவி இருவரும் ஒட்டி உரசிப் படுத்திருக்கிறார்கள்.
அவன் புரண்டு படுத்து அவளைப் பார்க்கிறான்.
என்ன சொல்ல வருகிறான் என எதிர்பார்த்து அவளும் புரண்டு படுத்து அவனை பார்க்கிறாள்.
இரவு விளக்கு வெளிச்சத்தில் அவளின் உதடுகள் மின்மினியாக ஒளிர்கின்றது.
சட்டென இறுக்கி  வாயுடன் வாய் பொருத்துகிறான்.இந்த திடீர் தாக்குதலை அவள் எதிர்பார்த்திருந்தாளோ , என்னவோ மறுப்பேதும் காட்டவில்லை
இணங்கிப் போனாள்.இறுக்கி முத்திடுகிறாள்.
கச்சுகளும் அவிழ்கின்றன.கணவன் என்ன நினைக்கிறானோ என அவளும் நினைக்கவில்லை.மனைவி என்ன எண்ணுவாளோஎன அவனும் நினைக்கவில்லை.
இருவரும் நினைப்பது  அவர்கள் அறியாமலேயே அரங்கேறுகின்றன.
பேச்சின்றி எல்லாமே இன்பமாய் முடிந்தன.
இதைத்தான் வள்ளுவன் சொல்லியிருப்பான் .காமம் விஞ்சும  போ து பேச்சு எதற்கு?

சனி, 7 செப்டம்பர், 2013

'விதி'க்கப்பட்டிருந்தால் மட்டுமே பிரம்மன் கோவில்...

முதல்வர் கூட இந்த கோவிலுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார்.ஆனால் போகமுடியவில்லை..இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்கிற விதி இருந்தால் மட்டுமே போக முடியும் என திருச்சியில் நான் சந்தித்த எல்லோருமே சொன்னார்கள்.
அது உண்மையாகக் கூட இருக்கலாம்.ஆனால் ஜெயலலிதா நினைத்தும் பிரம்மனின் கோவிலுக்கு செல்ல இயல வில்லை என்பது உண்மையாக இருக்க இயலாது.அது இட்டுக் கட்டிய கதையாகவே எனக்குத் தோன்றியது.
திருச்சியிலிருந்து சில மணி நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில்தான் திரு பட்டூர் இருக்கிறது.
அங்குதான் பிரம்மனுக்கு என சந்நிதி தனியாக இருக்கிறது.
மிகவும் பழைமையான ஆலயம்.தல புராணம் கேட்டேன் .விற்று விட்டது என சொன்னார்கள்.
சிவன் கோவிலில் பிரம்மனுக்கு தனி சந்நிதி.
பிரம்மனை தொழுது அர்ச்சனை செய்பவர்களுக்கு அரைத்த மஞ்சள் தருகிறார்கள்.பிளாஸ்டிக் பையில்.
அதை வாங்கிய சிலர் அவர்கள் கொண்டு வந்த ஜாதகத்தில் தடவிக் கொள்கிறார்கள்.
அதன் பின்னர் அவர்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.
நான் அங்கு சென்றபோது அவ்வளவாக கூட்டம் இல்லை.ஆனாலும் பழமையின் முதுமை இன்னும் மோசமாகிக் கொண்டிருந்தது.இந்து அறநிலையத் துறையின் 'ஐ.சி.யூ 'பிரிவில் சேர்க்கப்படவேண்டிய ஆலயம்.கைலாசநாதர் ஆலயத்தின் விமானம் மட்டுமின்றி கர்ப்பகிரகத்தின் நிலை கூட சிதிலம் அடைந்திருக்கிறது.
தற்போது அவசரமுடன் பாதுகாக்கப்படவேண்டியவர் நந்தி.
உண்மையான பசுவைத் தடவுவது போன்ற உணர்வு இருப்பதாக சொல்லி அந்த சிலையை தடவி ,தடவி ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கிறது.சிறுவர் சிறுமியர் முதல் பெரிசுகள் வரை நந்தியை சவாரி செய்யாமல் விடுவதில்லை.
படைப்புக் கடவுளின் ஆலயம் அரசினால் போதிய பராமரிப்பு இல்லாமல் பாழ்  பட்டுக் கொண்டிருக்கிறது.பிரம்மா தீர்த்தம் உள்பட!

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

நாகார்ஜுனாவை அமலா காதலித்த போது ...

.
அவர்கள் காதலிப்பது யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொண்டு பத்திரிகையாள ர்களிடம் சினிமா நடிகர்கள்- நடிகையர் பேசுவது வழக்கம்தான்.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
சத்தியம் செய்தார் அமலா! தனக்கும் நாகார்ஜுனாவுக்கும் காதலே இல்லை என சத்யா ஸ்டுடியோவில் வைத்து சத்தியம் செய்தார் !
நான் அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது போனில் அழைப்பு.
"மேடம், சத்யா ஸ்டுடியோவில் இருக்காங்க.கூப்பிட்டாங்க .கொஞ்சம் வந்திட்டுப் போங்க" என்று சொன்னவர் சுரேஷ் .இப்போது சென்னையில் இல்லை.தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி என்கிற பெயரில் ஆஸ்திரேலியாவில் இருக்கிறாராம்.இவர்தான் அன்று அமலாவுக்கு மானேஜர்.
எதற்காக கூப்பிடுகிறார்,காதலை கன்பர்ம் பண்றதுக்காக இருக்குமோ...எக்ஸ்குளூசிவ் மேட்டராக  தட்டலாம் என்கிற நினைப்புடன் சென்றேன்
என்னுடன் சகஜமாக பழகக் கூடியவர் அமலா.செய்திகளை கொடுப்பதில் எனக்கு முன்னுரிமை கொடுப்பார்.அந்த நினைப்புதான் எனக்கு,!
"ஷாட்டை முடிச்சிட்டு வந்திடறேன்.வெயிட் பண்ணுங்க பிளீஸ் "என்றதும் நிச்சயம் லவ் மேட்டர்தான் என்பது புரிந்துவிட்டது.
அந்த ஷாட் முடிய 15 நிமிடங்கள் ஆகியிருக்கும்.
பரபரப்புடன் வந்தவர் "வாங்க மேக்-அப் ரூமுக்கு போகலாம் "என அழைத்துச் சென்றார்.அந்த காலத்தில் கேரவன் வசதி கிடையாது.
"எல்லா பிரஸ்லயும் ராங் நியூஸ் போட்டுருக்காங்க,எனக்கும் நாகார்ஜுனாவுக்கும் எதுவும் இல்ல.நீங்க என்னுடைய பேட்டியாகவே இதப் போடுங்க"என்று அழுத்தம் கொடுத்து சொன்னார் அமலா.
அரை மணி நேரம் பேசியிருப்போம்.
எனக்கு ஒரே குழப்பம்.இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இண்டஸ்ட்ரிக்கு தெரிந்த விஷயம்.ஆனால் எதுவும் இல்லை என சத்தியம் பண்றாரே உண்மையாக இருக்குமோ நம்மிடம் அமலா  பொய் சொல்ல மாட்டாரே என்று நினைத்தபடியே அறையிலிருந்து வெளியே வந்தேன்.
எனக்கு நன்கு தெரிந்த கேமரா அசிஸ்டென்ட்சிரித்தபடியே "எப்பவாம் கல்யாணம் ,டேட் சொல்லிட்டாங்களா மன்னாரு?" எனக் கேட்டதும் அதிர்ந்து போனேன்.
மன்னாரு என்கிற புனை பெயரில் அப்போது சினிமாடைரி எழுதி வந்தேன் என்பதால் இண்டஸ்ட்ரி யில் சிலருக்கு மன்னாரு.பலருக்கு தேவிமணி.
சுதாரித்துக் கொண்டு "தேதி தள்ளிப் போகும் போலிருக்கே" என்றேன்.

'இருக்காது.இன்னிக்கி நாகார்ஜுனா மேரேஜ் பத்தி பேசுறதுக்காக வந்திருக்கார் /அடையாரில் தங்கி இருக்கார்"என தகவலை சொல்லிவிட்டு செட்டுக்குள் போய்விட்டார்.
விடுவனா?
அடையாறு போய்விட்டேன்.
கரெக்டா 7.20க்கு ரிசப்சனில் வைத்து பிடித்து விட்டேன்.
"கங்கிராட்ஸ் நாக் எங்களுக்கு எப்ப டிரீட் ?"என்றபடி கையைக் குலுக்க வந்தது வினை.
கையை நசுக்கியபடி "இதெல்லாம் உனக்கெதுக்கு.உன் வேலையைப் பார்"என ஆங்கிலத்தில் சொல்ல ,கை வலியையும் பொறுத்துக் கொண்டு
'" இதுவும் எனது வேலைதான்."என்று முகத்தில் கடுமையை காட்டினேன்.
ரசாபாசமாகி விடக்கூடாது என நினைத்தாரோ என்னவோ கையை விட்டு விட்டார்.எந்த பதிலும் சொல்லாமல் வெளியேறிவிட்டார்.