இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கமும் தமிழக அரசும் இணைந்து கொண்டாடப்பட்ட அந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி அந்த விழா நடந்து முடிந்திருக்கிறது.

அமிதாப்,ஸ்ரீதேவி,ரேகா,மம்மூட்டி,மோகன்லால்,கே.விஸ்வநாத் .ஏ.வி.எம்.சரவணன்,கே.பாலசந்தர்,இன்னும் பலர் மரியாதைக்குரிய நூற்றாண்டு விழா விருதுகளை பெற்றனர்.
மிகவும் பெருமையாக இருக்கிறது.


மட்டற்ற மகிழ்ச்சி.
விழாவில் வரவேற்றுப் பேசிய வர்த்தக சங்கத் தலைவர் கல்யாண் சாதனையாளர்களை நினைவு கூர்ந்தவர் இரண்டு வரலாற்று நாயகர்களின் பெயர்களை சொல்லவில்லை.
நடிகர் திலகம் சிவாஜி சாதனையாளர் இல்லையா?
என்.டி ஆர்.சாதனை செய்யவில்லையா?
ஆஸ்கார் விருது வாங்கி இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரகுமான் பெருமைக்குரிய சாதனையாளர் இல்லையா?
கல்யாணை விட்டு விடுங்கள்.அவரின் பதவிக்குதான் மரியாதை.
முதல்வர் செல்வி.ஜெயலலிதா நினைவு படுத்தி தன்னுடைய உரையில் குறிப்பிட்டு இருந்தால் நிறைவு விழா இன்னும் சிறப்புற்றிருக்கும்.
அம்மையார் மறந்தது ஏன்?
நல்ல வேளை.குடியரசுத்தலைவர் சிவாஜி.என்.டி.ஆர்.இருவரையும் நினைவுபடுத்தி பெருமை சேர்த்துவிட்டார்.
விழாக்குழுவினர் சிவாஜிக்கு உரிய கவுரவத்தை கொடுக்கவில்லை.
கலைஞர் கருணாநிதியை புறக்கணித்தது போல நடிகர் திலகத்தையும் புறக்கணித்து விட்டார்கள்.
இவர்களுக்கு அரசியல் தேவை இல்லை.
ரகுமானுக்கு விருது வழங்க இவர்களுக்கு எது தடையாக இருந்தது என்பது தெரியவில்லை.
எம்.எஸ்.வி.க்கு கொடுத்து விட்டோமே பிறகெதற்கு ரகுமானும் இளைய ராஜாவும் என எண்ணி விட்டனர் போலும்.!