மதுரை மாநகரில் மையப் பகுதி.
வைகை ஆற்றுக் கரை யோரம்.முனிச்சாலை என்று சாலையை வைத்து அடையாளம் காட்டுவார்கள்.
ஆற்றில் வெள்ளம் வந்தால் ஒபுளா படித்துறையில் மக்கள் கூடிவிடுவார்கள் வேடிக்கை பார்க்க.!
சவுராஷ்டிர சமுதாய மக்களின் மண்டபம் கரையோரமாக இருந்ததால் அப்படி அழைக்கப் படுகிறது.
மண்டபத்தை ஒட்டி சின்னஞ்சிறு குடிசைகள். வாசலையொட்டியே கழிவு நீர் வாய்க்கால் வளைந்து வளைந்து சென்று ஆற்றில் கலந்துவிடும்.பன்னிகள் குட்டிகளுடன் அந்த குடிசைகளின் பக்கமாக திரியும்.சுத்தம் என்பதே அந்தப் பகுதியில் இருக்காது.அந்த குடிசைவாசிகள் தான் ஊரை சுத்தம் செய்கிறவர்கள் நகர சுத்தி தொழிலாளர்கள் என முனிசிபாலிடி சொல்லும்.இப்போது மாநகராட்சியாகிவிட்டதால் எப்படி அழைக்கப்படுகிறார்களோ தெரியாது.அந்த பகுதிக்கு சங்கிலி தோப்பு என்று பெயர்.கம்யூனிஸ் ட் கட்சியின் கோட்டையாக அந்த பகுதி இருந்தது அந்த காலத்தில்!
அவன் அந்த பகுதியை கடந்துதான் அவனுடைய வீட்டுக்கு செல்ல வேண்டும். இருட்டிவிட்டால் அந்த வழியில் தட்டுத்தடுமாறி நடக்கவேண்டும் .சிம்னி விளக்கை விட முனிசிபாலிட்டி தெரு விளக்குகள் படு மந்தம்.
இருட்டிலும் அவர்களுக்கு எப்படித்தான் கண் ...தெரிகிறதோ.!
ஆற்று மணலில் அமர்ந்து கொண்டு கச்சிதமாக ஊற்றிக் குடிப்பார்கள்.
"மாப்ள. ஜிஞ்சரு ....அடிக்கிறியா?"
"அது எப்படி இருக்குன்னு இன்னிக்கி பாத்துருவமே?"
"பிராந்தி மாதிரி வச்சு வச்சு குடிக்ககூடாது.ஒரே தம்ல உள்ள ஏறக்கிரு .கொஞ்சம் காரமா இருக்கும்.அயித்தான் ,இவனுக்கு ஒரு பீடிய குடு .எனக்கு பாசிங் ஷோ "என்று நண்பன் சொல்ல அவனுக்கு கரீம் பீடி கிடைத்தது.
நண்பன் சொன்ன மாதிரியே கிளாசை எடுத்ததும் தெரியாமல் குடித்ததும் தெரியாமல் காலி கிளாசை மண்ணில் வைத்தான் அவன்.
வயிறில் அக்னி !
அதை தணிக்க நாட்டுப்பழம்.மதுரையில் நாட்டுப் பழம் பேமஸ்.
இரண்டே அவுன்சில் அவனுக்கு சரியான போதை.
காசும் கம்மி.ஆனால் நிறைவான போதை.இந்த ஜிஞ்சரை சில மெடிக்கல் ஷாப்களில் தெரியாமல் விற்பார்கள்.எர்ஸ்கின் மருத்துவமனையில் சில கம்பவுண்டர்களை கணக்கு பண்ணி விட்டால் போதும்.அந்த ஆஸ்பத்திரிக்கு இப்போது ராஜாஜி மருத்துவமனைஎன பெயர். .அவனுக்கு மட்டுமில்லாமல் மக்களுக்கு அது இன்றும் பெரியாஸ்பத்திரிதான்.யாரும் பெயர் சொல்லி அவன் கேட்டதில்ல.
அண்மையில் அவன் அந்தப்பகுதிக்கு சென்றான்.பெரிய மாற்றம் எதுவும் இல்லை.குடிசைகளுக்கு பதிலாககுட்டி குட்டியான வீடுகள்.
நெல்பேட்டையை ஒட்டிய பகுதி என்பதால் இப்போது டெர்ரரிஸ்ட் ஏரியாவாம்.
ஆறு மொத்தமாக மாறி கிடந்தது. மணலை காணவில்லை.கட்டா ந்தரையாக ஆறு இருக்குமா?
மனிதர்களும் மாறி இருந்தனர்.
டாஸ்மாக்கில் நகரசுத்தி தொழிலாளர்களை பார்க்க முடிந்தது.
வைகை ஆற்றுக் கரை யோரம்.முனிச்சாலை என்று சாலையை வைத்து அடையாளம் காட்டுவார்கள்.
ஆற்றில் வெள்ளம் வந்தால் ஒபுளா படித்துறையில் மக்கள் கூடிவிடுவார்கள் வேடிக்கை பார்க்க.!
சவுராஷ்டிர சமுதாய மக்களின் மண்டபம் கரையோரமாக இருந்ததால் அப்படி அழைக்கப் படுகிறது.
மண்டபத்தை ஒட்டி சின்னஞ்சிறு குடிசைகள். வாசலையொட்டியே கழிவு நீர் வாய்க்கால் வளைந்து வளைந்து சென்று ஆற்றில் கலந்துவிடும்.பன்னிகள் குட்டிகளுடன் அந்த குடிசைகளின் பக்கமாக திரியும்.சுத்தம் என்பதே அந்தப் பகுதியில் இருக்காது.அந்த குடிசைவாசிகள் தான் ஊரை சுத்தம் செய்கிறவர்கள் நகர சுத்தி தொழிலாளர்கள் என முனிசிபாலிடி சொல்லும்.இப்போது மாநகராட்சியாகிவிட்டதால் எப்படி அழைக்கப்படுகிறார்களோ தெரியாது.அந்த பகுதிக்கு சங்கிலி தோப்பு என்று பெயர்.கம்யூனிஸ் ட் கட்சியின் கோட்டையாக அந்த பகுதி இருந்தது அந்த காலத்தில்!
அவன் அந்த பகுதியை கடந்துதான் அவனுடைய வீட்டுக்கு செல்ல வேண்டும். இருட்டிவிட்டால் அந்த வழியில் தட்டுத்தடுமாறி நடக்கவேண்டும் .சிம்னி விளக்கை விட முனிசிபாலிட்டி தெரு விளக்குகள் படு மந்தம்.
இருட்டிலும் அவர்களுக்கு எப்படித்தான் கண் ...தெரிகிறதோ.!
ஆற்று மணலில் அமர்ந்து கொண்டு கச்சிதமாக ஊற்றிக் குடிப்பார்கள்.
"மாப்ள. ஜிஞ்சரு ....அடிக்கிறியா?"
"அது எப்படி இருக்குன்னு இன்னிக்கி பாத்துருவமே?"
"பிராந்தி மாதிரி வச்சு வச்சு குடிக்ககூடாது.ஒரே தம்ல உள்ள ஏறக்கிரு .கொஞ்சம் காரமா இருக்கும்.அயித்தான் ,இவனுக்கு ஒரு பீடிய குடு .எனக்கு பாசிங் ஷோ "என்று நண்பன் சொல்ல அவனுக்கு கரீம் பீடி கிடைத்தது.
நண்பன் சொன்ன மாதிரியே கிளாசை எடுத்ததும் தெரியாமல் குடித்ததும் தெரியாமல் காலி கிளாசை மண்ணில் வைத்தான் அவன்.
வயிறில் அக்னி !
அதை தணிக்க நாட்டுப்பழம்.மதுரையில் நாட்டுப் பழம் பேமஸ்.
இரண்டே அவுன்சில் அவனுக்கு சரியான போதை.
காசும் கம்மி.ஆனால் நிறைவான போதை.இந்த ஜிஞ்சரை சில மெடிக்கல் ஷாப்களில் தெரியாமல் விற்பார்கள்.எர்ஸ்கின் மருத்துவமனையில் சில கம்பவுண்டர்களை கணக்கு பண்ணி விட்டால் போதும்.அந்த ஆஸ்பத்திரிக்கு இப்போது ராஜாஜி மருத்துவமனைஎன பெயர். .அவனுக்கு மட்டுமில்லாமல் மக்களுக்கு அது இன்றும் பெரியாஸ்பத்திரிதான்.யாரும் பெயர் சொல்லி அவன் கேட்டதில்ல.
அண்மையில் அவன் அந்தப்பகுதிக்கு சென்றான்.பெரிய மாற்றம் எதுவும் இல்லை.குடிசைகளுக்கு பதிலாககுட்டி குட்டியான வீடுகள்.
நெல்பேட்டையை ஒட்டிய பகுதி என்பதால் இப்போது டெர்ரரிஸ்ட் ஏரியாவாம்.
ஆறு மொத்தமாக மாறி கிடந்தது. மணலை காணவில்லை.கட்டா ந்தரையாக ஆறு இருக்குமா?
மனிதர்களும் மாறி இருந்தனர்.
டாஸ்மாக்கில் நகரசுத்தி தொழிலாளர்களை பார்க்க முடிந்தது.