
"பத்திரிக்கை ஆபீஸ் பையனாச்சே வெவரமாத்தான் இருக்கான்."என்றவாறே அவனை உற்று பார்த்தேன்.
"என்ன சார் அப்பிடி பாக்கிறீங்க?நான் கேட்டது நெசம்தானே ?"

ஒரு வருசம்தாண்டா சேர்ந்து வாழ்ந்தாங்க.1991-ல் அந்தாளு தற்கொலை பண்ணிட்டார்.அந்த நேரத்தில ரேகா அமெரிக்காவில் இருந்தாங்க.ரெண்டு கலியாணம் தோல்வியில் முடிந்ததாக அந்த பொண்ணு சொன்னது.!ரெண்டு கலியாண மான்னு பத்திரிகைகளில் அலச ஆரம்பிச்சாங்க.முகேஷ் கலியாணம் இரண்டாவது கலியாணம்னா முதல் கலியாணம் யாருடன் நடந்ததுன்னு கேக்க ஆரம்பிச்சாங்க,அதுக்கு ஆன்சர் இது வரை கிடைக்கல.அக்டோபர் பத்தாம் தேதி வந்தா ரேகாவுக்கு 61 வயசு.!"
''தமன்னா காதலிக்கிறதா சொல்றாங்களே,யாரோட சார்?"
"அது தமாஷ்டா தம்பி! கிரிக்கெட் வீரர் விராத் கோக்லி யு டன் டேட்டிங் போனதா எழுதினாங்க.பிறகு அனுஷ்கா சர்மாவுடன் லவனு எழுதினாங்க. இந்த ரெண்டு பேரும் கோவாவில் ஒண்ணா சுத்துனதாகவும் சொல்றாங்க.
'தப்பிசன்டா சாமின்னு தமன்னா நிம்மதி பெரு மூச்சு விட்டிருக்கு."
''அப்படின்னா இதெல்லாம் காதல்னு சொல்லமுடியாதே?"
"கரெக்ட்.! சிம்பு மேட்டர்லே உனக்கு புரிஞ்சிருக்குமே! பிரபு தேவாவின் பேரை பச்சை குத்திக்கொண்ட நயன்தாரா அதை அழிக்கமுடியாமல் பரிதவிக்கிறது உனக்கு தெரியும் ல.!ஆனா நயனை இப்ப சிம்பு நிஜமாவே நேசிக்கிறதா ஒரு பேச்சு இருக்கு.!கை கூடுதான்னு பாக்கலாம்.! சரி.உன் வேலையை பாரு.!"