பெருச்சாழி.
அண்மையில் நான் பார்த்த படம்..கேரளத்து உச்ச நடிகர் மோகன்லால் நடித்திருக்கிற படம்.அருண் வைத்யநாதன் எழுதி இயக்கியிருந்தார்.படம் காமடி இனம் சார்ந்தது. அரசியல்வாதிகளுக்கு ஆலோசனைகளை அள்ளிவிடுகிற மோகன்லாலை கலிபோர்னிய மாகாணத்து கவர்னர் பதவிக்கு போட்டியிடுகிற ஒருவர் அழைத்து வெற்றிக்கு வழிகளை வகுத்துக் கொடுக்குமாறு கேட்கிறார்.கைக்கு அருகில் வருகிற வெற்றி கடைசி நிமிடத்தில் திசை மாறிவிடுகிறது.அது ஏன்,எதனால் என்பது ஒரு சின்ன டிவிஸ்ட்..முன்னதாகவே சொல்லியிருக்கிறேன் இது காமடி இனத்தை சார்ந்தது என்பதை,!
பொதுவாக நமது திரைப்படங்களில் தேடினாலும் கிடைக்காத அரிய வஸ்து லாஜிக் என்பது.!
பொழுது போக்குவதில் லாஜிக் என்ன வேண்டிக்கிடக்கிறது என்பது எனது கருத்து.
அறிவுஜீவிகள் மட்டுமே கேட்கிற வஸ்து லாஜிக்.நான் அறிவு ஜீவி அல்லன்.ஒரு பாமர ன் .ரசிகன். நெற்றிக்கண் ,நான்கு கைகள்,பத்துத்தலைகள் பற்றி எல்லாம் அறிவு ஜீவிகள் லாஜிக் பார்ப்பதில்லை.
நம்மை அறியாமலேயே மனம் ஒன்றி சிரிக்கிற காட்சிகளில் லாஜிக் இல்லையே என கவலைப் படுவார்கள்.
இலவசங்களை நையாண்டி செய்தால் இதெல்லாம் அமெரிக்காவில் நடக்குமா என்பார்கள்..அவர்களை அறியாமலேயே நம்மை தாழ்த்துகிறோமே என நினைப்பதில்லை.
இப்படி எல்லாம் குற்றம் சொல்வதால் அவர்களை எல்லாம் தெரிந்தவர்கள் என மற்றவர்கள் நம்புகிறார்கள்.
குற்றம் சொல்பவர்கள் குப்புற விழும்போதுதான் சுய ரூபம் வெளிப்படுகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்.
பெருச்சாழியில் மோகன்லால் செய்த கேரக்டரை நமது முன்னணி நடிகர்கள் செய்வார்களா? கமலை தவிர!
மாட்டார்கள்.இமேஜ் போய்விடும் என்பார்கள்.
அப்படி என்ன இமேஜ் இருக்கிறது?
பத்துப் பேரை தன்னந்தனியாக நின்று சாய்ப்பதுதான் இமேஜ்!
100 நாட்கள் ஓடிய காலம் மறைந்து ஒரு வாரமாக மாறிவிட்ட நிலையில் இமேஜ் என்ன வேண்டிக்கிடக்கிறது?
கதாநாயக வழிபாடு என்கிற குழிக்குள் விழுந்துகிடப்பவர்கள் உண்மையான ரசிகர்களாக மாறும்வரை ரசனை என்பது இங்கு கேள்விக்குரியதுதான்!

பொதுவாக நமது திரைப்படங்களில் தேடினாலும் கிடைக்காத அரிய வஸ்து லாஜிக் என்பது.!
பொழுது போக்குவதில் லாஜிக் என்ன வேண்டிக்கிடக்கிறது என்பது எனது கருத்து.
அறிவுஜீவிகள் மட்டுமே கேட்கிற வஸ்து லாஜிக்.நான் அறிவு ஜீவி அல்லன்.ஒரு பாமர ன் .ரசிகன். நெற்றிக்கண் ,நான்கு கைகள்,பத்துத்தலைகள் பற்றி எல்லாம் அறிவு ஜீவிகள் லாஜிக் பார்ப்பதில்லை.
நம்மை அறியாமலேயே மனம் ஒன்றி சிரிக்கிற காட்சிகளில் லாஜிக் இல்லையே என கவலைப் படுவார்கள்.
இலவசங்களை நையாண்டி செய்தால் இதெல்லாம் அமெரிக்காவில் நடக்குமா என்பார்கள்..அவர்களை அறியாமலேயே நம்மை தாழ்த்துகிறோமே என நினைப்பதில்லை.
இப்படி எல்லாம் குற்றம் சொல்வதால் அவர்களை எல்லாம் தெரிந்தவர்கள் என மற்றவர்கள் நம்புகிறார்கள்.
குற்றம் சொல்பவர்கள் குப்புற விழும்போதுதான் சுய ரூபம் வெளிப்படுகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம்.
பெருச்சாழியில் மோகன்லால் செய்த கேரக்டரை நமது முன்னணி நடிகர்கள் செய்வார்களா? கமலை தவிர!
மாட்டார்கள்.இமேஜ் போய்விடும் என்பார்கள்.
அப்படி என்ன இமேஜ் இருக்கிறது?
பத்துப் பேரை தன்னந்தனியாக நின்று சாய்ப்பதுதான் இமேஜ்!
100 நாட்கள் ஓடிய காலம் மறைந்து ஒரு வாரமாக மாறிவிட்ட நிலையில் இமேஜ் என்ன வேண்டிக்கிடக்கிறது?
கதாநாயக வழிபாடு என்கிற குழிக்குள் விழுந்துகிடப்பவர்கள் உண்மையான ரசிகர்களாக மாறும்வரை ரசனை என்பது இங்கு கேள்விக்குரியதுதான்!