செவ்வாய், 28 அக்டோபர், 2014

மக்கள் முதல்வரா? ஊழல் முதல்வரா?

தமிழக அரசியலில் எப்படியாவது முன்னாள் முதல்வர் 'ஜெ'வை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதில் திமுகவை விட தேமுதிகவும் விஜயகாந்தும் முனைப்புடன் இருக்கிறார்கள்.
திமுகழகம் ஜெயலலிதாவை எதிர்ப்பதில் பின்தங்கியே இருக்கிறது.இன்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தால் நாளை திமுகவும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டும் என்கிற பட்டாகத்தி தலைக்கு மேல் தொங்குவதே காரணம்.
2 ஜி  இமாலாய ஊழல் இந்திய அளவில் அவர்களின் கவுரவத்தையே சுத்தமாக துடைத்தெறியும் ஆபத்து இருக்கிறது.
இதனால் ஜெயலலிதாவை கேப்டனின் தொலைக்காட்சி குற்றவாளி என்பதாகவே சொல்லி செய்தி வாசிக்கிறது.
இந்த தைரியம் திமுகவின் ஆதரவு சன்  தொலைக்காட்சிக்கும் இல்லை.கலைஞர் தொலைக்காட்சிக்கும் இல்லை.
அவர் மக்கள் முதல்வர் அல்ல.ஊழல் முதல்வர் என பகிரங்கமாக் விஜயகாந்த்  பேசுகிறார்.
இதற்கெல்லாம் பதில் சொல்ல அதிமுகவினர் கொதித்து எழ  நினைத்தாலும் அது அவர்களின் தலைவிக்குதான் தீங்கு என்பதால் தணிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதை திமுகவினால் பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதால் புதிய கூட்டணி பற்றி பேச வேண்டியதாகி இருக்கிறது.
இதைதான் கையறு நிலை என்பார்களோ! வலிமையான் ஒரு கட்சி சரிவிலிருந்து  மீண்டெழ வாய்ப்பு இருந்தும் அதை பயன் படுத்தமுடியவில்லை என்பது அதிமுகவுக்கு சாதகம் .
தேமுதிகவுக்கு ஆதாயம்.!

என் நலனும் மென்முலையும்...!

மார்கழி நெருங்குகிறது.
பேராசிரியர் சாயபு மரைக்காயரின் ஆண்டாளின் இலக்கியத்திறனை  நாடி,தேடி வாசித்தேன்.,அவரின் என்னுரையை அடிக்கடி வாசிப்பேன்.'இற்றை  நாளில் நாகரீகம் என்கிற பெயரால் நம்மனோர் பலர் சீரிய நெறிமுறையை ,பண்பாட்டை மறந்து வருகிறார்கள்..பக்தி நெறி அழியுமானால் மனித சமுதாயத்தில் எஞ்சியுள்ள பண்பாடுகளும் அழியும்' என அவர் அச்சில் வார்த்திருப்பது ,அஞ்சியது எங்கே நிகழ்ந்து விடுமோ ஈகிற அச்சம் என்னுள்ளே!
முன்னெல்லாம் மார்கழி மாதத்தில் ஆதித்தன் கண் விழிக்கும் முன்னதாகவே மகளிர் கண் மலர்ந்து நீராடி வாசலில்  கோலமிட்டிருப்பர் .பசுஞ் சாணத்தை கோலத்தின் மத்தியில் வைத்து பூசணிப் பூவை வைத்திருப்பர.
இப்போதெல்லாம் தமிழர்கள் மறந்து விட்டனரோ என நினைக்கத் தோன்றுகிறது.
ஆன்மீக நூல்களெல்லாம் அதிசயமாக பார்க்கப்பட்டன.
மாணிக்க வாசகர் தன்னை தலைவியாக பாவித்துப் பாடினார் .'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் "என அப்பர் நெக்குருகினார்.நம்மாழ்வார் புள்ளினங்களை தூது விட்டார் காதலை சொல்ல.! நாயகி நானிருக்கிறேன் என நெக்குருகி பாடவில்லையா?
"என்னுடைய பெண்மையும்
என் நலனும் மென்முலையும் 
மன்னுமலர்மங்கை மைந்தன் கணபுரத்துப் 
பொன்மலைபோல் நின்றவன் 
போன்கைத்தளம் தேயாவேல் 
என்னிலைதான்?வாளா  எனக்கே பொறை யாகி!"
எப்படியெல்லாம் திருமங்கையாழ்வார் ஏங்கியிருக்கிறார்
ஆண்டாள் கண்ணனையே மணாளனாக மனதினில் வரித்துக் கொண்டு  மாலை சூடி  மகிழ்ந்தவள்..கறபனையில் அவனுடன் கூடி கலந்தாள் '
"கொங்கை மேல் குங்குமத்தின் 
குழம்பழியப் புகுந்து ஒருநாள் 
தங்குமே லென்னாவி 
தங்குமென் ருரையீரெ" .
என முகிலை தூது விடுகிறாள்.
ஒரு கட்டத்தில் அவளுக்கு கோபம் வந்து விடுகிறது..கண்ணனின் கரமும் செவ்வாயும் படாத கொங்கைகள் இருந்தென்ன இல்லாமல் போனாலென்ன பிய்த்து எரிந்து விடுவேன் என எச்சரிக்கிறாள் கண்ணனை!
அவள் காமம் மிகுந்தவளோ?
இப்படியெல்லாம் பாடியிருக்கிறாள் என பலர் என்னலாம்.கண்ணனை கடவுளாக நாம் பார்த்தால் அவளோ காதலனாக ,கணவனாக பார்த்திருக்கிறாள்.
இன்றைய திரைப்பட நடிகர்கள் பலரை பல பெண்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறார்கள்?
அன்றைய ஆணழகன் தியாகராஜ  பாகவதரை மனதிற்குள் மணந்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பதை அன்றைய ஆண்கள் அறியாதவர்களா?
இதையெல்லாம் தற்கால நாகரிகத்தில் கடந்து போகிற சலனங்கள் என்கிறபோது  ஆன்மிகம் உச்சத்தில் இருந்து,இலக்கியம் உயர்வாக மதிக்கப்பட்டபோது ஆண்டாள் பாடியது ம் மகிழ்ந்ததும் பிழையாகுமா?



புதன், 15 அக்டோபர், 2014

வக்கிர மனிதர்கள்.

வக்கிர மனிதர்கள்.!
காலை மாலை நாளிதழ்களில் அடிபடுவது அந்த மனிதனை பற்றிதான்!
கடன் வாங்க வந்த பெண்களை தனது காமத்தின் வடிகாலாக மாற்றிக் கொண்டான் என்கிற செய்தியை விலாவரியாக படிக்கநேர்ந்தது..
மறைமுகமாக அவனின் 'ஆண்மையை" பெருமைப்படுத்துவது மாதிரி இருந்தது.20க்கும் அதிகமான பெண்களை அவன் கற்பழித்து விட்டதாக சொல்லியிருக்கிறார்கள்.
அவன் செய்தது கடுமையான தண்டனைக்குரியதுதான் என்றாலும் மரண தண்டனையா கொடுக்கப்போகிறார்கள்.?
கர்ப்பகிரகத்தில் உடலுறவு வைத்துக்கொண்ட அர்ச்சகருக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்?
பெண்களை போகப் பொருளாக மாற்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அதில் வறுமையும் ஒன்று தானே! அதை வக்கிர மனிதர்கள் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.
இதில் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்,
அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
சமுக சேவகர்களும் இருக்கிறார்கள்.அவர்களின் வக்கிரம் கண்டுகொள்வதில்லை..
வட்டிக்கு கடன் கொடுத்தவன் பெண்மையை பலி கொண்டது இன்றுதானே கண்டு கொள்ளப்பட்டிருக்கிறது? இது நாள் வரை அவனை அனுமதித்தது இந்த  சமுகமதானே?
யாரையோ அவன் பகைத்துக் கொண்டதால் அவனை பொறி வைத்து பிடித்திருக்கிறார்கள்.
தொடக்கத்திலேயே அவனை கண்காணித்திருந்தால்  எத்தனையோ பெண்கள் காப்பாற்றப்ப ட்டிருப்பார்களே!
வக்கிரமனிதர்களை  வளர்ப்பது ஒரும் வகையில் நாம்தான்.
சினிமா வக்கிரங்களை கிசு கிசு என்கிற பெயரால் மறைப்பது நியாயமா?