சனி, 8 நவம்பர், 2014

கத்தி யாருடைய கதை?

கத்தி யாருடைய கதை?
இன்னிக்கு கோலிவுட்டில் இதுதான் ஹைலைட் சண்டை!
மீஞ்சூர் கோபி என்பவர் தனது கதை என்கிறார்.
இல்லை என மறுக்கிறார் முருகதாஸ்.
இருவரும் மீடியாக்களில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்!
அசிங்கமாக் இருக்கிறது.
பஞ்சாயத்தார்கள் பேசியதில் செலவுதான் அதிகம் தின்றது.!
கதைகளில் சொல்லப்படும் கட்டை பஞ்சாயத்து தாதாக்களை விட சினிமா தாதாக்கள் காந்தி நோட்டுகளிலேயே கவனமாக இருந்தார்களாம்.
ஒரு படம் வந்தால் அது காசு கறக்கும் காமதேனுவாக இருநதுவிட்டால் தன்னுடைய கதை என வக்கீல் நோட்டிஸ் விடுவது நோயாக பரவி வருகிறது.
யார் சொல்வது உண்மை என கண்டறிவதற்கு ஒரு கமிட்டியை போட்டு குற்றவாளியை கண்டு பிடிக்கும் கடமை தயாரிப்பு சங்கத்துக்கு உண்டு !
ஆனால் அங்கேயும் பல பிரிவுகள்!
தணிக்கை குழு அனுமதித்த பிறகும் தங்களுக்கு காட்டியபிறகே வெளியிட வேண்டும் என்கிற பயங்கர வாதம் குரல் வளையில்  கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறது.
இதை கண்டிக்க வேண்டிய -தண்டிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருந்தும் அக்கறை காட்டுவதில்லை.இப்படி ஒரு பயங்கரம் ஒரு முனையிலும் திருட்டு கதை என்கிற தீவிரவாதம் மறுமுனையிலும் தமிழ்சினிமாவை அச்சுறுத்தி வருகிறது.
எழுத்தாளர்களுக்கான சங்கம் கத்தி விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதும் தெரியவில்லை..
அந்த சங்கத்திலும் பிளவு என்கிறார்கள்.
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலும் அங்கு நடக்கவில்லையாம்!
அப்பா யார் என்பது குழந்தைக்கு தெரிவதே அம்மா சொல்லி  மட்டும்தான்!
இதை வாதாடி பெறுவதில் உண்மை இருக்குமா?