எல்லா மக்களுக்கும் வணக்கம்.
புது வருசம் பொறந்தாச்சு! நீங்க என்ன உறுதி மொழி எடுத்திங்கன்னு ஆளாளுக்கு கேட்டு தொலச்சிருப்பாங்க, ஆனா யாருமே உண்மையை சொல்லப்போறதில்ல.எவனாவது இந்த வருசத்திலிருந்து நான் சரக்கடிக்க மாட்டேன்,தம் அடிக்கமாட்டேன்னா நம்ப முடியும்கிறிங்களா? அடுத்த நாளே யாருக்கும் தெரியாம வேற ஏரியாவ்ல போய் போட்டுட்டு வந்திருவான்.
எந்த கவர்மெண்டு ஆபிசராவது லஞ்சம் வாங்க மாட்டேன்னு பெத்த பிள்ளையை போட்டு தாண்டுவானா?
எந்த அரசியல்வாதியாவது போய் சொல்லப்போறதில்ல. மக்கள் பணத்தை மூட்டை அடிக்கமாட்டேன்னு சொல்வானுகளா? நான் கொள்ளை அடிச்ச பணத்தை ஜனங்க முன்னாடி ஒப்படைக்கபோறேன்னு வாய் வார்த்தையாவது சொல்வானுகளா?
ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டேன்னு பொதுஜனம் சொல்லத்தயாரா? கொடுக்கமாட்டேன்னு அவுக அவுக ஆத்தா மேல, பொண்டாட்டி பிள்ளை மேல சத்தியம் பண்ண வேட்பாளர்கள் ரெடியா?
மாட்டானுக.
இந்த வருசத்திலேர்ந்து சர்க்காருக்கு ஒழுங்கா கணக்கு காட்டுவேன்னு மைக் போட்டு யாராவது சொல்வானுகளா?
மீடியாவ்ல பிரபலங்கள் சினிமா புள்ளிகள் சொல்ற உறுதி மொழி எல்லாம் அப்படியே நடக்கிதா? என்கதையை திருடிட்டான் கொரியாவ்லயிருந்து சுட்டுட்டான்னு தானே சொல்றானுக.
அரசியல்வாதிகள் தனக்கு இத்தனை சின்னவீடு இருக்குன்னு கட்டுன பொண்டாட்டிகிட்ட சொன்னதுண்டா? தாலி கட்டுனவளுக்கே விசுவாசமில்லாதவன் நாட்டு மக்களுக்கா விசுவாசமாக இருப்பான்?
அப்புறம் எதுக்கு உறுதிமொழி புண்ணாக்குன்னு பந்த உருட்டிப் பாக்கிறீங்க?
சாதி மதத்தை வச்சு அரசியல் பண்ணிட்டு இருக்கிறவங்க திருந்துனாதான் சிலது சாத்தியம் ஆகும். எல்லாமே உருப்படியா நடக்கணும்னா அது நம்ம காலத்தில நடக்காது.அதுனால நீங்க புது வருச உறுதிமொழி எடுக்கப்போறேன்னு சொல்லி வாயை விட்டுட்டு பிறகு மனசாட்சியிடம் மன்னிப்பு கேட்டு தலை குனியவேண்டியிருக்கும்.
நான் சொன்னது சரின்னா நாலு வார்த்தை எழுதுங்க. இல்லேன்னா திட்டுங்க. ரெண்டுல ஒன்னு செய்யுங்க.நானாவது திருந்தப்பார்க்கிறேன்.
புது வருசம் பொறந்தாச்சு! நீங்க என்ன உறுதி மொழி எடுத்திங்கன்னு ஆளாளுக்கு கேட்டு தொலச்சிருப்பாங்க, ஆனா யாருமே உண்மையை சொல்லப்போறதில்ல.எவனாவது இந்த வருசத்திலிருந்து நான் சரக்கடிக்க மாட்டேன்,தம் அடிக்கமாட்டேன்னா நம்ப முடியும்கிறிங்களா? அடுத்த நாளே யாருக்கும் தெரியாம வேற ஏரியாவ்ல போய் போட்டுட்டு வந்திருவான்.
எந்த கவர்மெண்டு ஆபிசராவது லஞ்சம் வாங்க மாட்டேன்னு பெத்த பிள்ளையை போட்டு தாண்டுவானா?
எந்த அரசியல்வாதியாவது போய் சொல்லப்போறதில்ல. மக்கள் பணத்தை மூட்டை அடிக்கமாட்டேன்னு சொல்வானுகளா? நான் கொள்ளை அடிச்ச பணத்தை ஜனங்க முன்னாடி ஒப்படைக்கபோறேன்னு வாய் வார்த்தையாவது சொல்வானுகளா?
ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டேன்னு பொதுஜனம் சொல்லத்தயாரா? கொடுக்கமாட்டேன்னு அவுக அவுக ஆத்தா மேல, பொண்டாட்டி பிள்ளை மேல சத்தியம் பண்ண வேட்பாளர்கள் ரெடியா?
மாட்டானுக.
இந்த வருசத்திலேர்ந்து சர்க்காருக்கு ஒழுங்கா கணக்கு காட்டுவேன்னு மைக் போட்டு யாராவது சொல்வானுகளா?
மீடியாவ்ல பிரபலங்கள் சினிமா புள்ளிகள் சொல்ற உறுதி மொழி எல்லாம் அப்படியே நடக்கிதா? என்கதையை திருடிட்டான் கொரியாவ்லயிருந்து சுட்டுட்டான்னு தானே சொல்றானுக.
அரசியல்வாதிகள் தனக்கு இத்தனை சின்னவீடு இருக்குன்னு கட்டுன பொண்டாட்டிகிட்ட சொன்னதுண்டா? தாலி கட்டுனவளுக்கே விசுவாசமில்லாதவன் நாட்டு மக்களுக்கா விசுவாசமாக இருப்பான்?
அப்புறம் எதுக்கு உறுதிமொழி புண்ணாக்குன்னு பந்த உருட்டிப் பாக்கிறீங்க?
சாதி மதத்தை வச்சு அரசியல் பண்ணிட்டு இருக்கிறவங்க திருந்துனாதான் சிலது சாத்தியம் ஆகும். எல்லாமே உருப்படியா நடக்கணும்னா அது நம்ம காலத்தில நடக்காது.அதுனால நீங்க புது வருச உறுதிமொழி எடுக்கப்போறேன்னு சொல்லி வாயை விட்டுட்டு பிறகு மனசாட்சியிடம் மன்னிப்பு கேட்டு தலை குனியவேண்டியிருக்கும்.
நான் சொன்னது சரின்னா நாலு வார்த்தை எழுதுங்க. இல்லேன்னா திட்டுங்க. ரெண்டுல ஒன்னு செய்யுங்க.நானாவது திருந்தப்பார்க்கிறேன்.