ஞாயிறு, 29 மார்ச், 2015

லட்சுமிராய்க்கும் திரிஷாவுக்கும் அப்படி என்ன சண்டை?..

சவுகார்பேட்டை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக ஸ்ரீகாந்த் லட்சுமிராய் இவங்கள்லாம் பிரசாத் லேப் வந்திருந்தாங்க.ஒரு குரூப்பா போய் சந்திச்சு பேசுனோம்.நண்பர் ஒருத்தர் ''நீங்களும் திரிஷாவும் பார்ட்டிக்கு ஒண்ணாத்தானே போவிங்க! அவங்க கல்யாணத்தைப் பத்தி சொல்லுங்க"ன்னு   கேட்டார்.
படக்குன்னு "அவங்களைப் பத்தி எதுக்கு இங்கு கொண்டு வர்றிங்க"ன்னு முகத்தில வெறுப்பை காட்டிட்டார் ராய்.
"ஏம்மா??"
"எனக்கு  எப்படி பிரண்ட்சா இருந்தாங்க என்பதே ஆச்சரியமா இருக்கு. என்ன நடந்தது  எப்படிங்கறதெல்லாம் எல்லோருக்கும் தெரியும் .எனக்கு பொய் பேசறவங்களை பிடிக்காது! பிடிக்காது ! விட்ருங்க"
திரிஷாவை பத்தி பேசுவதை ராய் விரும்பவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
சிலர் அதற்கான காரணங்களை யூகமாக சொன்னார்கள்.
தனது பொருளை மற்றவர்கள் அபகரித்துக் கொள்ளும்போது வருகிற கோபம்தான் அது என்றார்கள். 
வருண் மணியனை முதலில் காதலித்தவர் ராய் என்றும் அது தெரிந்திருந்தும்  திரிஷா  சொல்லாமல்  மறைத்து  வ.ம.வை கைப்பற்றிவிட்டார் என்பதும் திரை உலகில் பரவி வருகிறது.
அடுத்து டாப்சி என்ன சொல்வாரோ என்பது தெரியவில்லை.
பல விதமான கதவடைப்புகள் நடந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
உண்மை வெளிச்சத்துக்கு வந்தே தீரும் .

திங்கள், 16 மார்ச், 2015

சின்னத்திரை நடிகர்கள் என ஒதுக்காதீர்கள்.

புளியங்கொம்பை பிடித்திருக்கிறோம் என்கிற தெம்பில் சில பெரிய திரை தம்பிகள் சின்னத்திரை நடிகர்களை மதிப்பதில்லை.தப்பித் தவறி செட்டுக்குள் வந்துவிட்டாலும் கால் மேல் கால் போட்டபடி தெனாவட்டாக பார்ப்பார்கள்."எப்படி போகிறது லைப் ?" என  நக்கலாக கேட்பார்கள் .பலதடவை  நேரில்  பார்த்தவன் நான்..
ஆனால் 'ஆயா வட சுட்ட கதை 'யை பார்த்த எனக்கு தெனாவட்டு தம்பிகளுக்கு  ஆப்பு ரெடியாக இருப்பதாகவே ...அதுவும் அத்திமரத்து ஆப்பாகவே தெரிகிறது.
சிறப்பாக சின்னத்திரை நடிகர் நடித்திருக்கிறார்கள்.அதிலும் அந்த பரட்டை சரியான காமடியனாக வரலாம். வாய்ப்புகள் கிடைக்குமானால் இன்னொரு சூரி ரெடி.மணியாக வருகிற நடிகரும் செம போடு போடுகிறார்.
இப்படியொரு போட்டி இருந்தால்தான் வளருகிறபோதே வாலாட்டுகிறவர்களுக்கு பயம் இருக்கும்.அகந்தை அகலும்.என்னை விஞ்சுகிறவர் எவருமில்லை என்கிற மனப்பான்மை ஒழியும்.இதே நேரத்தில்  முன்னேறி வருகிற சின்னத்திரை நடிகர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.சின்னத்தரை நடிகர்களாக மாறி விடக்கூடாது .
எதோ தோன்றியது .சொல்லிவிட்டேன்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

என்ன மனிதர்கள் இவர்கள்?

என்ன மனிதர்கள் இவர்கள்?
இனத்தையும் ,மொழியையும் வைத்து  பிழைப்பு நடத்துகிறவர்கள் நமக்கு எப்படி வழிகாட்டுபவர்களாக இருப்பார்கள்?
நம்மை வைத்து அவர்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.பதவிகளை அடைவதற்கு மொழியும் இனமும் பயனாகிறது..அந்த மொழிக்காக இனத்துக்காக  எதுவும் செய்வதில்லை. எழுத்து வியாபாரிகள் என தெரிந்தும்  அவர்களின் வசீகர வார்த்தைகளிலும் ,கழுத்து நரம்பு புடைக்க கர்ஜிக்கும் பொய்மையிலும்  முட்டாளாகிப் போகிறோம்.நாம் உண்மையை உணர  மறுக்கிறோமா? அல்லது அடிமாடுகளாகிப் போனதால் ஆற்றாமையில் அமிழ்ந்து போனோமா?
நாம் திருந்த மறுக்கிறோம்.
அடிமை வாழ்வின் சுகமே இறுதி என நினைக்கிறோம்.
நாம் உயரவேண்டும் என்றால் 'உணர்ச்சி வயப்படுதலை" விட்டு வெளியேற வேண்டும்.
எனது மொழியை காக்க இன்னொருவனின் துணை தேவையில்லை.
எனது இனத்தை காக்க என்னுடைய கரமே போதும்.
வாளை சுழற்றுவதற்கு எனது கரம் வலிமையாகவே இருக்கிறது .
எனது நிதியை உனக்கு தரவேண்டியதில்லை என்கிற உறுதி வேண்டும்..
அரசியல் என்பது லாபகரமான தொழிலாகிவிட்டது..பேசத்தெரிந்தவன் தலைவன்.,குனிந்து கொடுப்பவன் தொண்டன்.
ஊழல் என்பது அரசியலில் கிரிக்கெட் மாதிரி.!
மாறி மாறி திறமைசாலிகளின் கைகளில் ஊழல் கொழிக்கிறது..
நீதியால் ஊழலை ஒழிக்கமுடியாது..
ஆகவே நாம் திருந்த வேண்டும் .என்ன மனிதர்கள் இவர்கள் என ஊழல் சுதாடிகளை ஒதுக்க வேண்டும்.இல்லையா?
நாமும் ஊழலை கற்றுக்கொள்ளவேண்டும்,
...