சனி, 4 ஏப்ரல், 2015

கேப்டனுடன் பழகிய நாட்கள்.....

அந்த நாட்களை என்னால் மட்டுமின்றி கேப்டன் விஜயகாந்தாலும் மறக்க இயலாது.நடிகராக அவர் வலம் வந்த அந்த காலம் ஒரு பொற்காலம்தான். நடிகர் திலகம் கோலோச்சினாலும் தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கியிருந்தார் விஜி.நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு உச்ச நட்சத்திரங்களான கமல்,ரஜினி ஆகியோரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற பெருமை இவருக்கு மட்டுமே உண்டு..அவர் அரசியல் தலைவரான பின்னர் திரை உலகத் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதை போன்ற உணர்வு..அரசியல் அவரை முழுமையாக ஆட்கொண்டது.இன்றும் அவரது முழுக்கவனமும் அதில்தான்.இருக்கிறது.பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவராக செயல் பட்டாலும் சினிமாவில் நடப்பதை தனது நண்பர்கள் மூலம் அறிந்து கொள்கிறார்.அவருடன் எத்தனையோ அவுட்டோர் ஷூட்டிங் சென்றிருந்தாலும் சொக்கத்தங்கம் படப்பிடிப்பை மறக்க இயலாது. இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களை அவுட்டோருக்கு அழைத்து செல்லவே தயாரிப்பாளர்கள் அஞ்சுகிறார்கள்,சக பத்திரிகையாளரான தேவராஜ்,[தற்போது நடிகன்.கயல் தேவராஜ்,] பல குரலில் பேசுவதில் கில்லாடி.தாமரை மணாளனும் நடிகர் திலகமும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை பேசிக்காட்டும் போது சிரிப்பு பொத்துக் கொண்டு ஓடும்..அன்று .
கேப்டனை சந்தித்தபோது வழக்கமாக கேட்கிற கேள்விகளை கேட்டு முடிந்த பிறகு அரசியல் பிரவேசம் பற்றியும் கேட்டேன். அன்றுதான் சிக்கினார்,ஆண்டவன் கையில் இருக்கிறது  என்று சொல்லாம

ல் 'வருவேன்.ஆனால் எப்போது என்பதை சொல்லமுடியாது என எனக்கு சொன்னதை அன்றைய 'தேவி"வார இதழில் ஸ்கூப் செய்தியாக எழுதினேன்..நண்பன் தேவராஜ் சில கேள்விகளை கேட்டு நடிகை சவுந்தரியாவை கிளிசரின் போடாமலேயே கலங்க வைத்ததும் அங்குதான் நடந்தது. கேப்டனுடனுடன் பழகிய அந்த நாட்களை தனியாக புத்தகமே எழுதலாம்.அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.