
ஆந்திர சூப்பர்ஸ்டார்களில் ஒருத்தரான பவனின் முன்னாள் மனைவி. கணவனை கை கழுவினாலும் சினிமாவை விட்டு விலகல.இவரு எந்த மரத்துக்கு அடியில உக்காந்தார்னு தெரியல. ஞான ஒளி ஏணி போட்டு இறங்கி தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் போட்டிருக்கு.
''என்னமோ தெரியல. எனக்கு காலம்பற எந்திரிச்சி கோவிலுக்கு போயி சாமியை கும்பிட்டாத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு.நான் தீவிர பக்தை இல்லைன்னாலும் கடவுள் சந்நிதானத்துக்கு போனதும் எதோ ஒரு சக்தி எனக்குள்ள வந்திருது. திருமலை கோவிலுக்கு போகணும்" என்கிறார் ரேணு.
அதென்னமோ தெரியல. கருப்பசாமி,பத்திரகாளி கோவிலுக்கு எந்த சினிமாக்காரரும் போனதா தெரியல. ஏழுமலையானை கும்பிடறுதுன்னா கோடிகளை கொட்டிக் கொடுக்கிறாங்க.அது கருப்பா வெள்ளையான்னு அந்த எழுமலையானுக்கு தெரியுமாங்கிறதும் டவுட்டுதான்!
இது இப்படின்னா இன்னொரு நடிகை ராகுல் பிரித் சிங்னு ஒரு நடிகை. இவங்கதான் இப்ப ஆந்திர ரசிகர்களுக்கு லட்டு.மத்த நடிகைகளுக்கு வேட்டு. முன்னணி நடிகைகள் எல்லோருக்கும் ஒவ்வாமை.தயாரிப்பாளர்கள் எல்லாரும் கால்ஷீட் கிடைக்காதான்னு பசியாவரம் வாங்கி வச்சிருக்காங்க. ஐம்பது லட்சம் வாங்கிக்கிட்டிருந்த ராகுல் இப்ப ஒன்னரை கோடி கேட்கிறார். கவர்ச்சிக்கு எல்லை இல்லை என்பதால் நடிகர்களும் இவரையே சிபாரிசு செய்கிறார்கள்..
நடிகைகள் பலவிதமுங்க.!