தமிழர்களின் நம்பிக்கைகளில் திதி கொடுப்பதும் ஒன்று. மூதாதையர்கள் அன்றுதான் பூமிக்கு வருவார்களாம்.
தை அமாவாசையில் திதி கொடுத்தால் பணம்,சுகம் தேடிவருமாம்.
அதனால் எதை மறந்தாலும் மறப்பார்கள் புரட்டாசி, தை மாத அமாவாசைகலை மறக்கமாட்டார்கள்.
செப் .முப்பது அதிகாலை ஏழு மணிக்கே எழுந்து வடபழனி சிவன் கோவிலுக்கு சென்றால் ....கூட்டமான கூட்டம்.! எல்லாமே திதி கொடுப்பதற்குத்தான்!
அய்யருக்கு தட்சணை நூறு ரூபா. ஒரு ஆளின் கட்டணம்.
பந்தியில் உட்கார்வதுபோல இரண்டு வரிசை. ஒரு வரிசைக்கு இருபது பேர். ஆக நாற்பது பேர்! பரேடு எடுக்கும் அதிகாரி மாதிரி அய்யர்!
.அவர் மந்திரங்களை சொல்லிக்கொண்டே என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லிக் கொண்டு அடுத்தடுத்த பாட்ஜ்களை முடித்துக்கொண்டிருந்தார்.
தொடக்கத்தில் ஐந்து நிமிடங்கள் நீடித்த மந்திரங்கள் போகப்போக மூன்று நிமிடங்களில் முடிந்தது.ஒருவர் அமர்ந்து இருக்கிறபோதே அந்த இடத்தைப் பிடிப்பதற்காக வரிசையாக நின்றார்கள்.
காலையில் இருந்தே அகத்திக்கீரையை தின்று கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் தின்பதை நிறுத்தி அசை போட ஆரம்பித்து விட்டது.
"என்னங்க..பசு கீரையை எடுத்துக்கலியே?"
"பெரியவங்க கோவிச்சுக்குவாங்களோ"
"சித்தே முன்னாடி வந்திருந்தா பசு எடுத்திருக்கும்!"
ஈரமான தரையில் அமர்ந்து காரியம் செய்தது கூட பெரிய காரியமாக தெரியவில்லை. பசு கீரையை தொடவில்லையே என்பதுதான் அவர்களது கவலையாக இருந்தது.
ஆக மந்திரம் மட்டும் முக்கியமில்லை. கீரையை பசுவும் எடுத்து இருக்க வேண்டும் என்பது மனிதனின் நம்பிக்கையாக இருக்கிறது.
தை அமாவாசையில் திதி கொடுத்தால் பணம்,சுகம் தேடிவருமாம்.
அதனால் எதை மறந்தாலும் மறப்பார்கள் புரட்டாசி, தை மாத அமாவாசைகலை மறக்கமாட்டார்கள்.
செப் .முப்பது அதிகாலை ஏழு மணிக்கே எழுந்து வடபழனி சிவன் கோவிலுக்கு சென்றால் ....கூட்டமான கூட்டம்.! எல்லாமே திதி கொடுப்பதற்குத்தான்!
அய்யருக்கு தட்சணை நூறு ரூபா. ஒரு ஆளின் கட்டணம்.
பந்தியில் உட்கார்வதுபோல இரண்டு வரிசை. ஒரு வரிசைக்கு இருபது பேர். ஆக நாற்பது பேர்! பரேடு எடுக்கும் அதிகாரி மாதிரி அய்யர்!
.அவர் மந்திரங்களை சொல்லிக்கொண்டே என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லிக் கொண்டு அடுத்தடுத்த பாட்ஜ்களை முடித்துக்கொண்டிருந்தார்.
தொடக்கத்தில் ஐந்து நிமிடங்கள் நீடித்த மந்திரங்கள் போகப்போக மூன்று நிமிடங்களில் முடிந்தது.ஒருவர் அமர்ந்து இருக்கிறபோதே அந்த இடத்தைப் பிடிப்பதற்காக வரிசையாக நின்றார்கள்.
காலையில் இருந்தே அகத்திக்கீரையை தின்று கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் தின்பதை நிறுத்தி அசை போட ஆரம்பித்து விட்டது.
"என்னங்க..பசு கீரையை எடுத்துக்கலியே?"
"பெரியவங்க கோவிச்சுக்குவாங்களோ"
"சித்தே முன்னாடி வந்திருந்தா பசு எடுத்திருக்கும்!"
ஈரமான தரையில் அமர்ந்து காரியம் செய்தது கூட பெரிய காரியமாக தெரியவில்லை. பசு கீரையை தொடவில்லையே என்பதுதான் அவர்களது கவலையாக இருந்தது.
ஆக மந்திரம் மட்டும் முக்கியமில்லை. கீரையை பசுவும் எடுத்து இருக்க வேண்டும் என்பது மனிதனின் நம்பிக்கையாக இருக்கிறது.