திங்கள், 31 அக்டோபர், 2016

பூனை பிரியாணி சாப்பிட்டிங்களா?

நச்சையே நக்கி நக்கி சாப்பிடுறவன்டா மனுசப் பய!

பூனை பிரியாணியை சும்மா விடுவானா? தம் கட்டி சாப்பிட மாட்டான்!

போன தீபாவளிக்கு டாஸ்மாக் வியாபாரம் 215 கோடி!

ஐநூறு கடையை  அம்மா லாக் பண்ணிவிட்டதாக  அறிக்கை விட்டாங்க. காலம் நேரம் சாதகமாக இல்லாமல் போய்விட்டது! காய்ச்சல், சளி,மூச்சு திணறல் என்று அம்மா அப்போலோவில் படுத்துவிட தமிழக குடிமகன்களின்  கவலை அதிகமாகிவிட்டது.

அதனால் தமிழ்நாட்டில் இந்த வருட தீபாவளி சரக்கு விற்பனை 250 கோடி.!

அதே நேரத்தில் சிக்கன் மட்டன் விலையும் உயர்ந்து போய்விட்டது.இதனால்  பிரியாணி விலையும் 175,250 என்று ஏரியாவுக்கு ஏற்றமாதிரி உயர்ந்து விட குடிமகன்களின் வயிறும் குமுற ஆரம்பித்து விட்டது.

சாதாரண மனிதனின்  பலவீனத்தை பயன்படுத்தி பணமாக்கும் சமுதாய வீரர்கள் வாழ்கிற பூமியாச்சே!

புடிடா பூனையை! போடுடா பிரியாணியை! என்று பூனையை பிரியாணி பண்ணி விட்டான்.

ஆட்டுக் கறிக்கும் பூனைக் கறிக்கும் வித்தியாசம் காண்பது அரிது என்கிறார்கள். மெதுவாக இருக்குமாம்.

இதைவிட மக்களின் அறியாமையும் இந்த பூனை பிரியாணியில் அடங்கி இருக்கிறது. ஆண்மை விருத்தி, ஆஸ்துமா நிவாரணி, கை கால் மூட்டு வலி இவைகளுக்கு பூனைக்கறி நல்ல மருந்து என்கிற மூட நம்பிக்கை மக்களின்  அறிவை முடக்கிப் போட்டுவிட்டது. ரெட்டேரி,பல்லாவரம் ஏரியாக்களில்  பூனை வேட்டை  படுவேகமாக நடந்து வருகிறது.

மதுவுக்கு பூனை பிரியாணி  சென்னையில்!

இனி பூனை வரும்போது மனிதன் குறுக்கே வந்துவிட்டால் பூனைக்குத்தான்  கேடு!

சிவாஜியை வெல்வேன் என்று சொன்ன நடிகர் யார்?

"அய்யான்னு ஏன் வளையிறிங்க.நிமிந்து நில்லுங்க சார்னு சொன்னா போதும் " என்று போலீஸ்காரரை பார்த்து இன்ஸ்பெக்டர் சொல்வாரா? அப்படி சொல்வறேயானால் காலம் மாறுதுன்னுதானே அர்த்தம்?

சென்சார் போர்டு குழுவில் உயரிய பொறுப்பில் இருந்துவருகிற எஸ்.வி.சேகர் படத்தயாரிப்பாளர்களைப் பார்த்து "எஜமானேன்னு ஏன் தணிக்கை குழுவிடம் கெஞ்சி கூத்தாடுறிங்க?அப்படி செய்யாதிங்க "என்று சொன்னால் என்ன அர்த்தம்?

படத்தயாரிப்பாளர்களுக்கு முதுகு எலும்பு வளைந்துதான் இருக்கிறது.! அது தணிக்கை குழுவிடம் செல்கிற போது மேலும் அதிகமாகவே வளைந்துவிடும். இவர்களிடம்அ திமுக மந்திரிகளும் தோற்றுப் போவார்கள் என்றுதானே பொருள் கொள்ளமுடியும்?

திட்டிவாசல் என்கிற படத்தின் பாடல்கள் வெளியீட்டுக்கு வந்த எஸ்.வி.சேகர்  அப்படி சொன்னதிலும் காரணம் இல்லாமல்  போகாது.

"தயவு செய்து ரிலீஸ் தேதியை நிர்ணயம் செய்துவிட்டு சென்சாரிடம் போகாதீர்கள். அங்கு போய் கெஞ்சி கூத்தாடாதீர்கள். கட் கொடுத்தால் ஏன் எதற்கு என்று தைரியமாக கேளுங்கள். நியாயமான காட்சிகள் என்றால்  போராடுங்கள்.

நடிகர்களுக்கும் ஒரு அறிவுரை.வரும்போதே சிவாஜிகணேசனை மிஞ்சி விட்டேன் என்கிற எண்ணமெல்லாம் வேண்டாம். அவர் எவரெஸ்ட், அவரோடு கம்பேர் பண்ணாதிங்க.மேலும் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஷூட்டிங் இல்லை.அவசியமே இல்லாத இடங்களிலெல்லாம் கேரவான் கேட்காதிங்க. என் படத்துக்கு என் பையன் கேரவேன் கேட்டான் .சம்பளத்தில் பிடிப்பேன் பரவாயில்லையா என்றதும் வேணாம் வெட்டவெளியே சுத்தமான காத்துதான்னு சொல்லிட்டான்" என்று  சேகர் சொன்னபோது  நடிகர் சங்கத் தலைவர் நாசர் முகத்தில் புன்னகை.

அது சரி சிவாஜியை மிஞ்சுவதாக சொன்னவர் யாரு?

சிரிங்க சார்...முடியலியா திட்டுங்க!

நானும் மெனக்கெட்டு சிரிப்பு எழுதிப்பார்க்கிறேன் .பின்னூட்டமே வரமாட்டேங்கிது.என்னை ஆதரிக்கிற கரங்களும் எழுபதிலியே இருக்கு. இதிலும் நான் ஒதுக்கப்பட்டவன் தானா?? சாதியை சொல்லலிங்க.நான் மதுரை சைவாள்.!
*************************
அவன்: " காரியம் ஆகணுமே என்பதற்காக என் பெஞ்சாதியை தங்கம்டினு  கொஞ்சுனது தப்பா போச்சுய்யா"?

மற்றவன்: "என்னவோய்? ஏன் தப்பா போச்சு?"

அவன்: "சொத்த பல்லை எடுத்திட்டு தங்கப்பல்லு கட்டச்சொல்றாய்யா!"
*******************************************************************************

அச்சச்சோ கருவாட்டு கொழம்பு!
------------------------

காதலன்: " இன்னிக்கி உங்க வீட்ல கருவாட்டுக் கொழம்பாடி டார்லிங்?"

காதலி.: " சூப்பர்டா! எப்படிடா கண்டு பிடிச்சே?

காதலன்:" பெரிய கம்ப சூத்திரம் பாரு! உன்னை கிஸ் பண்ணினதுமே ஒரே கப்பு! வாயை கழுவாம வந்திட்டியாடி?"

காதலி:???????
****************************************************************************

நடிகையின் பிறந்த நாள்!
------------------------

"என்னடா மச்சான் ...யாருக்கு பெர்த் டே கிப்ட்?"

"நடிகை குல்மா மொத்வானிக்கு பதினெட்டு வயசு ஆகிடுச்சாம். அதான் !"

"உனக்கும் அவளுக்கும் என்னடா சம்பந்தம்?"

"என்  மாமனாருடன் ஒண்ணா படிச்சவளாம். டை அடிக்காம அவளை பார்க்கிறதுக்கு வெட்கப்பட்டு என்கிட்டே கொடுத்தனுப்புராறு!"
******************************************************

இனி எனது சொந்த அனுபவம்.
-------------------------------------------
நான் ஒரே ஒரு நிமிடம்தான் உயிர் வாழ்வதாக இருந்தால்  அந்த அறுபது வினாடிகளும் என் காதலை சொல்வதற்கு போதாது என் காதலி!
DAMN, THAT SMILE!

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

இடைத் தேர்தலில் அதிமுக வெல்லுமா ?

தமிழகத்தில் நடைபெறவிருக்கிற இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுமா ,அல்லது முக்கிய எதிர்கட்சியான திமுக.வெல்லுமா?

மூன்று தொகுதிகளிலும் தங்களின் பலம் இதுதான் என்பது தெரிய வந்த பின்னரும் தேமுதிக , பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன.

இடைப்பட்ட காலத்தில் அவர்களது கட்சி 'அபார வளர்ச்சி' பெற்றிருக்கலாம்  என்பது அவர்களது நம்பிக்கை.

"பணம்,அதிகார துஷ்பிரயோகம்,ஆளும் கட்சியினரின் அடாவடித்தனம், நேர்மையாக தேர்தல் நடக்காது என்கிற நம்பிக்கையின்மை "----இவையெல்லாம் பாமக,தேமுதிக ஆகிய கட்சிகளின் இன்றைய நம்பிக்கை. அதிமுகவை தங்களால் வீழ்த்த முடியாது என்பது அவர்களுக்கு தெரியாமல்  இல்லை. இருந்தாலும் அதிமுகவை விட திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அவர்களது முக்கிய நோக்கம்.

தங்களின் துணையின்றி திமுக வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் உணர்த்தியாக வேண்டிய கட்டாயம் அந்த இரு கட்சிகளுக்கும்!. பொதுத் தேர்தலில் கூட்டணி அமையலாம். அப்போது  திமுகவை அச்சுறுத்தி அதிக எண்ணிக்கையில் சீட்டுகள் பெறுவதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறார்கள்.

ஆனால் திமுக நிலைமை அப்படியில்லை.மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கியிருக்கிறது. விடியல் வெகு தொலைவில் இல்லை என்கிற போது சாமப்பொழுது  எப்படி இருந்தால் என்ன என்பதே அவர்களது நிலை!

 முதல்வர்ஜெயலலிதாவின் உடல் நலமின்மை மக்கள் மத்தியில் ஒரு வித மனமாறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு எந்திரம் செயல்படவில்லை. தேக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். அரசு ஊழியர்களும்  அதை அறிந்தே இருக்கிறார்கள்.

ஆனால் அதிமுக  இப்போது முன்னிலும் 'தீவிரமாக' அரசு எந்திரங்களையும், காவல் துறையையும் பயன்படுத்துகிற வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதிமுகவில் உடன்பிறவா சகோதரியின்  கைதான் ஓங்கி இருக்கிறது.அவரால் எதையும் சாதிக்க முடியும். முதல்வர் முழுமையாக உடல் நலம் பெற்று திரும்புகிறவரை சகோதரிதான் எல்லாமே! பொம்மைதான் ஓ.பி.எஸ்.இவரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகமும் தோழியின் விரல் அசைவில்இயங்குகிறது.முதல்வரின் உடல் நலமின்மை சகோதரியை  விசுவரூபம் எடுக்க வைத்திருக்கிறது.

அதனால் மிகவும் கடுமையான எதிர்ப்பை வலிவுடன் தாங்கும் சக்தி உள்ள  திமுகவுக்கு இடைத்தேர்தல் முடிவு எப்படியும் இருக்கலாம்.

அதிமுகவினர் வெடியுடன் காத்திருக்கிறார்கள்,

மாவீரன் பிரபாகரனை பற்றிய . தெலுங்கு படம்.எச்சரிக்கை தேவை.

'ஒக்கடு மிகிலடு' ----தெலுங்கில் இந்த பெயரில் ஒரு படம்.

மாவீரன் மட்டுமல்ல,உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராகவும் மதிக்கப்படுகிற  காவல் தெய்வம்தான்  பிரபாகரன்.

அவரைப் பற்றி ஒரு திரைப்படம் தெலுங்கு மொழியில் தயாராகி இருக்கிறது.
அந்த படத்தின் முதல் சுவரொட்டியில்' ஸ்ரீலங்காவின் சிவில் வாரை பற்றிய படம் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதுவே தவறு. விடுதலைப் போரை எப்படி அவர்களால் உள்நாட்டு கலகம் என  சொல்ல முடிகிறது?

தெலுங்கானா போராட்டத்தை அவர்கள் எப்படி கருதுகிறார்கள்?

ஒரே மொழி பேசுகிற அவர்கள் இடையில் நடந்த போராட்டம் எதை  அடிப்படையாக கொண்டது? சிந்தித்திருப்பார்கள் என நம்புவோம்!

விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழர்களை  இழிவு படுத்துகிற வகையில் இருக்காது என்று நம்புவோமாக.
*****************************
சமந்தாவை பற்றி......
---------------
சமந்தா -சைதன்யாவின் காதலைப் பற்றி உலகமே அறியும்.

முன்பெல்லாம் இதைப் பற்றி கேட்டாலே முகம் சுழிப்பார் சமந்தா .
இவரது கடந்த கால சித்தார்த் நட்பை பற்றி துளியும் கவலைப்படாமல் அக்கினேனி குடும்பம் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறது.

அது காதலுக்கு மரியாதை!

இதன் பிறகு தற்போதுதான் மனதை திறந்திருக்கிறார். அங்கு சித்தார்த் இடம் பெற்றிருக்கவில்லை.

"உங்களுக்கு பிடித்த முக்கியமான மூன்று எவை என்று சொல்ல முடியுமா? " என கேட்டதற்கு சமந்தா சொல்லியிருக்கிற பதிலில் சைதன்யாவுக்கு முதல் இடம்.

"சைதன்யா, அடுத்து மங்காட்டி ஐஸ் கிரீம். மூன்றாவது ஒர்க்!"

கேள்வி கேட்டவர் இத்தோடு நின்றிருக்கலாம்.

"ஏன்  சைதன்யா? என்னை பிடிக்காதா?"

"எட்டு வருஷங்களுக்கு முன்னர் உங்களை சந்திக்கவில்லையே? நல்ல நண்பராக இருந்திருப்பீர்" என்று  சொன்னதில் புத்திசாலித்தனமும் கலந்திருக்கிறது.!

சித்தார்த் எனது நண்பர்தான்.! காதலர் இல்லை!

வியாழன், 27 அக்டோபர், 2016

மடையா...மண்டை மேல என்னடா இருக்கு?

பொய் சொல்லக்கூடாது..புரியுதா?
**************************
ஜட்ஜ்:  "சாட்சிக் கூண்டில நின்னுக்கிட்டு பொய் சொல்லக்கூடாது. சத்தியம்  பண்ணிருக்கே!"

சாட்சி: " சொல்லமாட்டேன்  அய்யா!  என் சித்தப்பா ஒருதடவை  கோர்ட்டுல  பொய் சொல்லிருக்காரு!"

ஜட்ஜ் : "உங்க சித்தப்பா பொய் சொல்லிருக்காரா? அப்புறம்  என்ன நடந்தது?"

சாட்சி: " அவரு கேஸ்ல ஜெயிச்சிட்டாருங்க  அய்யா!"
****************************

ரகசிய கல்யாணம் !
------------------------------

சிநேகிதி :" உன்னோட ரகசிய கல்யாணத்தை யாருகிட்டேயாவது சொல்லிட்டியாடி?"

அவள்: " இல்லடி! இந்த ரகசியத்தை கேட்டு என் புருசன் அழனும். அவன் வரட்டும்னு  காத்திட்டிருக்கேன்டி!"

*****************************************

மலிவாக இருக்குடா!
-----------------------------

நண்பன்: " பெண்டாட்டியை ஊருக்கு அனுப்பிச்சிட்டு உன்னால  எப்படிடா சந்தோஷமா இருக்க முடியிது?"

அவன்: " செலவு கம்மியா இருக்குடா! வாழ்ந்து பாரு புரியும்!"

----------------------------------

அவன்: " சே...என்ன எண்பது கிலோ வெயிட்டா நானு? டயட்ல இருந்தும் பிரயோசனம் இல்லாம போச்சே"?

நண்பன்: மடையா! செருப்பை கழட்டிட்டு வெயிட் பார்க்கத் தெரிந்த முண்டத்துக்கு மண்டை மேல இருந்த ஹெல்மெட்டை  கழட்ட தெரியலியே?"

அவன்: ?????

---------------------------------- 

திரையுலக மார்க்கண்டேயனின் 75-ம் ஆண்டு பிறந்தநாள்விழா...

நீ என்ன சாதித்தாய் என கேட்டால் என்ன சொல்வோம்?

"படித்தேன்.பட்டம் பெற்றேன்.கல்யாணம் பண்ணிக்கொண்டேன்.
பிள்ளைகளை  பெற்றேன்.பேரன் பேத்திகளுடன் வாழ்ந்தேன்"

"எல்லோரும் சொல்வதுதான். இவைகளைத் தவிர வேறென்ன சாதித்தாய்? நீ  இந்த உலகிற்கு செய்திருப்பதென்ன? உன்னை நினைவு கொள்வதற்கு எதை  விட்டு சென்றிருக்கிறாய்?"

"என் பிள்ளைகளுக்கு சர்க்கரையை அள்ளிக் கொடுத்திருக்கிறேன்.சொத்து  கொடுத்திருக்கிறேன்!"

"வேற..வேற...?"

ஆட்சியில் இருந்து  விட்டு சென்றிருக்கிற அரசியல் தலைவர்களின் பிள்ளைகளை கேட்டால் "அப்பன் செய்த ஊழல்களுக்கு நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன் "என்பார்கள்.

ஆனால் சிவகுமாரின் பிள்ளைகள் சூர்யா,கார்த்தி இருவரும் நெஞ்சு நிமிர்த்தி  " சாகா வரம் பெற்ற ராமாயணம், மகாபாரதம் காதைகளை சுருக்கி சொல்லி விளங்க வைத்திருக்கிறார்.குறுந்தகடுகளாக காலம் நெடுகிலும் அவை  வாழ்ந்து கொண்டிருக்கும் வல்லமை பெற்றவை. அவரது சமகால கலைஞர்கள் யாரும் சாதித்திராத ஓவிய கலையில் தேர்ந்து சிறந்த ஓவியங்களை  அர்ப்பணித்திருக்கிறார். இவைகளுக்கும் மேலாக ஏழை எளிய மாணவ மாணவியர்க்கு கை கொடுக்கும் அகரம் அறக்கட்டளையை நிறுவி இருக்கிறார். எக்காலமும் தொடரும் அந்த அறப்பணி எங்களுக்கும் அல்லவா பெருமை சேர்த்து இருக்கின்றது ." என கர்வமுடன் சொல்வார்கள். வழி வழி வம்சமும் சொல்லி பெருமைப்படுகிற திரை உலகின் வரலாற்று நாயகன்தான் சிவகுமார்.

காந்தியைப் போல ,நேருவைப் போல கல்விக்கண் திறந்த காமராசரைப் போல  இவரது பெயரும் காலம் தொடர்ந்து பயணிக்கும்.

ஓவியங்களை வரைவோர் அருகிவரும் காலம் இது.

அதை தவிர்க்கிற வகையில் ஆண்டு தோறும் சிறந்த ஓவியர்களை தேர்வு செய்து  பரிசளிக்கப்போகிறார்கள் சூர்யாவும்! கார்த்தியும்!!

அரசு மறந்து விட்ட கடமையினை கையில் எடுத்திருக்கிற சகோதரர் சிவகுமாருக்கும் வாரிசுகளுக்கும் தமிழர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
கடமையை செய்கிறார்கள் பலனை எதிர்பார்க்காமல்!

இவர்களுக்கு திரையில்தான் நடிக்கவருமே தவிர மக்களிடம் நடிக்கத் தெரியாது.

காரணம் இவர்களுக்கு அரசியல் தெரியாது.

அடுத்து சிவகுமார் ஆய்வு செய்யப்போவது தமிழரின் அறநூலான திருக்குறள்.

வாழ்க என வாழ்த்துவோம்!

புதன், 26 அக்டோபர், 2016

நடிகைகளின் அந்தரங்கம் பேசுகிறது.

அடுப்பில் நெருப்பு எரிந்தால் உலை கொதிக்க செய்யும். கொதி  நிலை தாண்டுகிறபோது உலை  வழிந்து நெருப்பை  அணைக்கப்பார்க்கும்.!

அதைப்போலத்தான் மனித மனங்களும்!

தாங்குகிற சக்தியை கடக்கிற நிலையில் மனதில் கொதிப்பவை வெளியே வந்து விழும்.

அப்படித்தான் அனுஷ்கா சர்மாவும் ,கங்கணா ரணாவத்தும்!

அனுஷ்காவை பற்றிய காதல் கதைகளை பக்கம் பக்கமாக  பூடகமாக  ஊடகங்கள் எழுதித் தள்ளின.

அவையெல்லாம் உண்மைதானா?

"நான் மிகவும் பிராக்டிகலான பெண்.! கண்டவுடனேயே காதல் என்பதெல்லாம்  கட்டுக்கதை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.நான் ஒன்றும் முட்டாள் இல்லை. பார்த்ததுமே காதல் வயப்படுவதற்கு! அப்படியெல்லாம் விழுந்து விடமாட்டேன்." என்று அழுத்தமுடன் சொல்லியவரிடம் " இதெல்லாம்  காதலில் அடிபட்டவரின் வார்த்தைகளாக தெரிகிறதே?" என்றதும் அந்த நடிகை சிரிக்கிறார் கலகலவென!

"நான் காதலிக்கவே இல்லையே. காதலித்தால் அல்லவா தோற்பதற்கு!" என்கிறார்.

அப்படியானால் விராட் கோலி?
*******************

கங்கணா ரணாவத் பற்றி தெரியுமா?

தமிழ்ப்படத்திலும் நடித்திருக்கிறார்.

 போலியாக சிரிப்பவர்களுக்கு விருது கொடுத்தால் யாருக்கு கொடுக்கலாம் என்று இவரிடம் கேட்டதற்கு பட்டென சொன்ன பதில் 'பிரியங்கா சோப்ரா"

அப்படி என்ன இவர்களுக்குள் முட்டல் மோதல்?

செவ்வாய், 25 அக்டோபர், 2016

என்ன கொடுமைடா கோவாலு...!திரிஷா கண்டிக்கலியே!!

நம்மை சுற்றி என்ன நடக்கிறது ?

இணைய தளங்களை பார்க்கிறபோது  நெஞ்சே வெடித்து விடும் போல்  இருக்கிறது. நாளேடுகளை வாசிக்கிறபோது ரத்த நாளங்கள்  வெடிக்கிற  அளவுக்கு  வெப்பம் ஓடுகிறது.!

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையோ ?

ஒருதலைக்காதல் என்று  பெண்களை குத்திக் கொள்கிறார்கள். கற்பழித்து  நார் நாராக கிழித்து எறிகிறார்கள்.

இனி இத்தகைய செய்திகள் பழசாகிவிடுமோ என்னவோ!

பயம் வந்து விட்டது  சகோதர,சகோதரிகளே!

மனிதனை மிருகம் என விலங்கினம் சொல்லிவிடுமோ என்னவோ!

நாயை புணர்ந்திருக்கிறான் இருபத்தி இரண்டு  வயது இளைஞன்!!

ஹைதராபாத்தில் நடந்திருப்பது மனித இனத்திற்கு நடந்திருக்கும் இழுக்கு. விலங்கினத்துக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து.

டில்லியை சேர்ந்தவன்.

வேலை தேடி ஹைதரபாத்  வந்திருக்கிறான்.அலைந்திருக்கிறான்.

வறுமைதான். ஆனால் அந்த நிலையிலும்  உடலுக்கு பசி.

தெருவில் திரிந்த நாயை புணர்ந்திருக்கிறான். அவனது வன்கொடுமையை தாங்காது நாய் செத்ததோ,அல்லது செத்த நாயை புணர்ந்தானோ தெரியாது. போலீசில் சிக்கிவிட்டான்.

நல்ல மனநிலை உள்ளவன்தான் என்கிறது போலீஸ்!

அண்மையில்  சென்னையிலும் கொடுமை நடந்திருக்கிறது

மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இருவர் மாடியிலிருந்து  நாயை  தூக்கி தரையில் வீசி  அதை படம் பிடித்திருக்கிறார்கள்..இவர்கள் மனிதர்களுக்கு எப்படி மருத்துவம் செய்வார்களோ?

நல்ல வேளை. நாய் சாகவில்லை. கால் முறிந்துவிட்டது.

குற்றம் செய்திருப்பவர்கள் பெரிய இடத்துப்பிள்ளைகள். காவல் துறைக்கு எப்போதுமே கார் வைத்திருப்பவர்கள் மீது கருணை உண்டு.

தண்டிக்கப்படுவார்களா , மன்னிக்கப்படுவார்களா என்பது காவல்துறைக்கு மட்டுமே தெரியும்.

என்ன கொடுமைடா கோவாலு? இதை திரிஷா கூட கண்டிக்கவில்லையே!

சனி, 22 அக்டோபர், 2016

கொ.ப.செ. ஜெ. அந்த நாள் ஞாபகம் வந்ததே!

'முதல்வர்' ஜெயலலிதாவை  பற்றி எனக்கு அதிகமாக தெரியாது.

ஆனால் அவர்' கொள்கை பரப்பு செயலாளராக' இருந்தபோது வாரம் இருமுறை சந்திக்கும் வாய்ப்பினை மூன்று மாத காலம் பெற்று இருந்தவன் நான்!

அவ்வப்போது கார்டனுடன் தொலைபேசியில் பேசவும் இயலும்!

அந்த காலத்தில் பூசாரிகள் யாரும் இடையில் இருந்தது இல்லை.

அன்புடன் பேசுவார்.

நான் 'தேவி' வார இதழில் திரைப்பட  செய்தியாளராக பணியாற்றினேன். நண்பர் திரு.ஜேம்ஸ் செய்தி ஆசிரியராக இருந்தார். ஆசிரியர் பொறுப்பில்  ஐயா .பா.ராமச்சந்திர ஆதித்தனார்.இவருக்கு  .தமிழ் மீது தனித்த பற்று உண்டு. அதனால்தான் அவர் தமிழ் ஈழத்தை விரும்பினார்.விடுதலை இயக்கங்களை  ஆதரித்து எழுதவும் பணித்தார். அதனால்தான் மாவீரன் பிரபாகரனை  சந்திக்கிற வாய்ப்பும் எனக்கு  கிடைத்தது.

ஒரு நாள் ஐயா அழைப்பதாக கூறவே நான் மாலைமுரசு அலுவலகம் சென்று  அவரது  அறையில் சந்தித்தேன்.

"அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிவித்திருக்கிறார். நமது 'தேவி'யில் ஜெயலலிதாவின் கேள்வி-பதில் வந்தால் சிறப்பாக இருக்கும்.ஜேம்சும் இதைத்தான் சொல்கிறார். நீங்கள் அந்த அம்மாவை சந்தித்துப் பேசிப்பாருங்களேன்?"என்றார்.

கார்டனுடன் தொடர்பு கொண்டு பேசிய அரை மணி நேரத்தில் பதில் வந்தது.

"அம்மா  வரச்சொல்றாங்க!"

அப்போது என்னிடம் 'சுவேகா" என்கிற மொபெட் இருந்தது.  அந்த காலத்தில்  அவ்வளவாக போக்குவரத்து நெரிசல் இல்லை.ஆயிரம் விளக்கில் இருந்து  கார்டனுக்கு பத்து நிமிடத்தில் சென்று விட்டேன்.

வரவேற்பு அறையில் அமர்ந்தேன். பணியாள் முதலில் தண்ணீர் கொடுத்து விட்டு "காப்பியா,டீயா?" என கேட்க எல்லாமே நடந்து முடிந்த அடுத்த கால் மணி நேரத்தில் அம்மா  வந்து விட்டார்,

அறிமுகம் செய்து கொண்டேன்.

"தேவியின் வாசகர்கள் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று ஐயா விரும்புகிறார்?"

மறு நொடியே பதில் வந்தது. "ஒ.கே.! அறிவிப்பு போட்டுவிட்டு அதன்பின்னர் அந்த கேள்விகளை அப்படியே கொண்டு வந்து விடுங்கள். நீங்களாக கடிதங்களை தேர்வு செய்ய வேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன்.அடுத்த நாள் போனில் தகவல் சொன்னதும் பதிலை வாங்கி செல்லுங்கள். புகைப்படங்களை நானே தந்து விடுகிறேன்"என்றார்.

மகிழ்வுடன் திரும்பி ஐயாவிடம் சொல்ல அந்த வாரமே 'தேவி'யில் அறிவிப்பு வெளியானது.

குவிந்த கடிதங்களை கொண்டுபோவதும் பதில்களை வாங்கி வருவதுமாக  மூன்று மாதங்கள் ஓடியது. வாரம் தோறும் என்னை அழைத்து கருத்துகளை  கேட்பார். நானும் எனக்கு தெரிந்த அரசியலை அவரிடம் சொல்வேன்.

அதிமுகவில் என்ன அரசியல் நடந்ததோ தெரியாது. வலம்புரி ஜான் என்பவர்  அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் " அதிமுக எதிர்ப்பு பத்திரிகையில்  கொ.ப.செ. எழுதலாமா?" என கண்டித்து  ஒரு கட்டுரை வெளியானது.

மறுநாளே என்னை போனில் அழைத்து " மணி..இந்த வாரத்துடன் கேள்வி பதிலை நிறுத்தி விடுவோம். காலம் கனிந்து வரும்போது எழுதுகிறேன். ஆசிரியரிடம் சொல்லி விடுங்கள்!"என்றார்.

இந்த வார்த்தை இன்னமும் என் நினைவுகளில் கல்வெட்டாய் பதிந்து இருக்கிறது.

ஆசிரியரிடம் சொன்னபோது மெல்லிய சிரிப்பு !

அதற்கு பின்னர் மேடத்தை சந்திக்கவே இல்லை.

காரணம் அரசியல்!

இங்கு வெளியிடப்பட்ட படம்தான் அன்றைய தேவியில்  முதலில் வந்தது.

முதல்வருக்காக அதிமுக தொண்டர்கள் கோடிக்கணக்கில் காணிக்கை.!

ஆங்கில ஹிந்து நாளிதழில் வெளியாகிய செய்தி.

தமிழக முதல்வர் நலம் பெற்று போயஸ்கார்டன் திரும்ப வேண்டும் என்பதற்காக  கர்நாடக மாநிலம் சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் உள்ள விநாயகர் சிலைக்கு நாற்பத்தி இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 614 மதிப்புள்ள தங்க வெள்ளி நகைகளை ஜெயா பப்ளிகேஷன் சார்பிலும்,1.18 கோடி மதிப்புள்ள தங்க வெள்ளி நகைகளை ஆஞ்சநேயர் சிலைக்கும் கொடநாடு எஸ்டேட் சார்பிலும் வழங்கப்பட்டதாக சாமுண்டீஸ்வரி ஆலயத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறைவன் யாரையும் கை விட மாட்டார் !

முத்தம் கொடுக்க யாருடி கற்றுக் கொடுத்தா?

ரெண்டு பிள்ளை பெத்தால் பிரச்னையா?
------------------------------------

அவள்: " வக்கீல் சார்! எனக்கு உடனடியா டைவர்ஸ் வாங்கணும். பைல் பண்ணுங்க?"

வக்கீல்: "கல்யாணம் ஆகி ஒரே வருசத்தில ரெட்டை பிள்ளை பெத்த மகராசி! எதுக்குமா டைவர்ஸ்?"

அவள்: "அதான் பிரச்னையே! இன்னொரு பிள்ளைக்கு யாருடி அப்பன்னு  கேட்டு இம்சை பண்றான்!

*************************

கணவன்: இவ்வளவு  டீப்பா கிஸ் பண்றியே! கில்லாடிடி! யாரிட்ட கத்துக்கிட்ட?"

மனைவி:" வாக்குவம் கிளீனர் சேல்ஸ்மேன் கிட்ட ஒரு வாரம் ட்ரெய்னிங்  எடுத்தேன்!"

**************************

நண்பன்: " இன்னிக்கி  நாலைந்து  முத்தம் கொடுத்துதான் அவளை  எழுப்பினேன். என்னை பின்னி எடுத்துட்டாடா!"

அவன்: " அவ்வளவு  முரட்டு முத்தமாடா?"

நண்பன்: " அத  வேலைக்காரியிடம்தான் கேக்கணும்!"

*************************

எஜமானி.: " பெட்ரூமை நல்லா பெருக்குனியாடி? "

வேலைக்காரி: " இதாம்மா  உங்ககிட்ட பிடிக்காதது! சந்தேகம்னா  பெட்டுக்கு கீழே  பாத்துக்குங்க."

****************************

எனது வலைப்பூ வாசகர்களே!
           எனது அன்பான வணக்கம். ஒரு எழுத்தாளனை ( என்னை நீங்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். அது விதி!)  ஊக்கப்படுத்தும் வகையில்  பாராட்டக்கூடாதா? சரி பிடிக்கலையா.. இப்படி அறுக்காதேன்னு அட்வைஸ்  பண்ணலாம்ல! தாயில்லா பிள்ளை சார்! 

வெள்ளி, 21 அக்டோபர், 2016

திருந்தவே மாட்டாய்ங்களா?

வெள்ளிக்கிழமை. சுத்த ,பத்தமா ( அதென்ன பத்தமா...புரியல) இருந்து  கந்த சஷ்டி கவசம் கேட்டு , சாமியை கும்பிட்டு விட்டு ஆபீசுக்கு புறப்பட..

"மாப்ளே..கெளம்பிட்டியா...கமிஷனர் ஆபீஸ் பக்கம்தானே உன் ஆபிசு..அங்க  ஏறங்கிடறேன். தட்கல்ல  டிக்கட் எடுக்கணும்.அப்படியே பொடி நடையா நடந்து எக்மோர் போயிடறேன்"என்று நட்பு ஒன்று கட்டையை போட்டது.

 என் பெண்டாட்டியை கூட ஏற்றியதில்லை..இன்று ஒரு கழுதையை ஏற்றவேண்டியதாயிற்று. கேப்டன் வீட்டுக்கு வந்தவன் அப்படியே  ஒரு ஆட்டோவை பிடித்து போகவேண்டியதுதானே! இன்னிக்கி மேஷ ராசிக்கு என்ன பலனோ!அதாங்க என் ராசி!

' உங்க ஊரை பாத்துத்தாண்டா எங்க ஊரு பொம்பளைங்க கெட்டு போயிட்டாளுங்க! வடகம் காயப்போட்ட சேலைத்துணிய மொகரைய  மறைச்சு மண்டைய மூடிட்டு நடந்து போறாளுங்க. பைக்ல போறவளுக்குதான் தூசி அடிக்கிதுன்னா நடந்து போறவளுக்குமா? என்ன கர்மமோ மாப்ள."என்று நூறு அடி ரோடுலேயே தொன தொனப்பை ஆரம்பிச்சிட்டான்.

"பேசாம வாடா! டிஸ்டர்ப்பா இருக்கு! "

"அது எப்படிடா கம்முன்னு வர முடியும்? பேச்சு தொண இருந்தாதானே பின்பாரம் இருக்கிறது தெரியாம ஓட்டுறதுக்கு சவுரியமா இருக்கும்"

"ஏன்டா ..திருந்தவே மாட்டியாடா! "

"மாப்ள..நீ மெட்ராஸ் வந்ததுமே ரொம்பத்தான் மாறிட்ட..அங்க பாரு! புருசன  ராத்திரி பூரா தூங்கவிடாம பண்ணிட்டு ஆபீஸ் போறப்பவும்  அட்டை மாதிரி கழுத்தை கட்டிப்பிடிச்சுகிட்டு போறத! வெக்கமே படமாட்டாளுகளா? அட  அவதான் அப்படி ஒட்டிக்கிட்டு இருக்கான்னா இந்த  நாதாரி நாயி கழுத்தை விடுடின்னு சொல்ல மாட்டானா?"

"எரிச்சலா இருக்குடா ..பேசாம வாடா?"

"இன்னும் கொஞ்ச தூரம்தான் உங்கூட வரப்போறேன். கேட்டா  வெயிட்டு  ஏறங்கிடுமா? சாண் மொளம்தான் கூந்தலு. அதக்கூட  முன்னாடி  இழுத்து விட்டுக்குராளுக. சரிடா  மாப்ள. உங்கிட்ட கேக்கனும்னு ஒன்னு நெனச்சேன். லெக்கின்ஸ்னு ஒன்ன மாட்டிக்கிறது சரி. அத  ஒடம்பு  தோது வாதா இருக்குறவ போட்டா அழகா இருக்கும். கெழவிகள்லாம் போட்டா பாக்கிற பயல்களுக்கு கண்ணுதாண்டா மாப்ள  அவிஞ்சு போகும். அதாண்டி மாப்ள  ஒங்க ஊர்ல ஒழுங்கா மழை பேயல. "

என்னால் அடக்கமுடியவில்லை. அமிஞ்சிக்கரையில் இறக்கிவிட்டு விட்டு
"மச்சான்! நீ பஸ்ச புடிச்சு எக்மோர் போயி சேரு! "என்று பதிலுக்காக கூட காத்திராமல் வண்டியை கிளப்பினேன்.

திருந்தவே மாட்டாய்ங்களா?

வியாழன், 20 அக்டோபர், 2016

நான் 'ரொமாண்டிக் ' நடிகை-----ஸ்ருதி!

கட்டுனவன்  கம்பு கொடுத்தால் கூரை  ஏறி சண்டை போடுவாளாம் !

கிராமத்து பக்கம் இப்படி ஒரு சொலவடை  உண்டு. இது யாருக்கு பொருந்துமோ ,இல்லையோ  நம்ம சமந்தாவுக்குப் பொருந்தும்.

"அடுத்த வருஷம்தானே கல்யாணம் அது வரைக்கும் சும்மா இருந்தா எப்படி? படத்தில நடி  டார்லிங்" என்று நாகசைதன்யா  கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதால்  மாந்தோப்புகளாக பார்த்து குயில்   கூவத் தொடங்கி இருக்கிறது.

விஷாலின் படத்தில் நடிப்பதற்கு கையெழுத்து போட்டாச்சு.!

"கவர்ச்சியா நடிக்கணும்! ஒ.கே.யா?"

"அதுக்கும் அவர் சரி சொல்லிருக்கார்"

அப்புறம் என்ன கொய்யாப்பழத்துக்கு ஆசைப்பட்டவனுக்கு  ஆப்பிளே கிடைக்கும்போது மாட்டேன்னு சொல்லுவானா?

போட்டு அமுக்கு! கவர்ச்சி ஆடைகளுக்கு காஸ்டியும் டிசைனரிடம்  சொல்லு  என்று விஷால்  ஆர்டர் போட்டுவிட்டதாக தகவல்.

அடுத்த  நியூஸ் நம்ம  ஸ்ருதிஹாசனை பற்றியது....

அப்படியே அப்பா கமல்ஹாசனே தான்!

கடலில் முங்கு நீச்சல் அடிக்கிற ஆளுக்கு  ஏரி என்னங்க  சுண்டைக்கா!

அப்படித்தான்யா நானு என்று தைரியமாக ஸ்டேட்மென்ட் விடக்கூடியவரின்  மூத்த பெண்ணாச்சே!

"நான் ரொமாண்டிக் பொண்ணு! காதல் காட்சிகளில் கவர்ச்சியா நடிப்பேன்.ஆனால் அதுக்கு ஒரு இன்ஸ்பிரேசன் வேணுமே! மோசமான தோற்றம் உள்ளவரா இருந்தா எப்படி ரொமான்ஸ் வரும்? அப்படிப்பட்ட  ஆளுடன் நடிக்க மாட்டேன்.ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது துள்ளலைத்தான்!" என்கிறார்  ஸ்ருதி!

வாழ்த்துகள்மா!

அடுத்து ஒரு போட்டோ.!

சீனியர் சிட்டிசென்ஸ்  இருக்காங்க. யாரையாவது உங்களுக்கு  அடையாளம் தெரியுதா?


புதன், 19 அக்டோபர், 2016

அம்மாவின் உண்மையான விசுவாசிகள் எங்கே?

அம்மா ஜெ இப்போது போல  எந்த காலத்திலும்  மருத்துவமனையின்  பாதுகாப்பில் இருந்தது இல்லை. தனது  உடல் நலத்தில் அவ்வளவு எச்சரிக்கையுடன் இருப்பவரை  மிகவும்  வருத்தியது  சொத்துக் குவிப்பு  வழக்கும்  சில நாட்கள்  சிறை வாழ்க்கையும்தான்!

ராணி மாதிரி  வாழ்ந்தவர்.

அவர் அரசியலுக்கு வந்த பின்னர் எதிரிகளும் சேர்ந்தே வளர்ந்தார்கள். நெற்பயிர்  இடையே களையும் சேர்ந்தே வளருவதைப் போல!

. அவருக்கு  நூற்றுக்கு நூறு உண்மையான  விசுவாசிகள் என்றால் எதையுமே  எதிர்பார்க்காமல்  வாக்களிக்கிற அப்பாவி கிராமத்து மக்கள்தான்! அவர்கள்தான் உண்மையாகவே  பிரார்த்தனை செய்கிறார்கள். குடும்பத்துடன்  கோவிலுக்கு செல்கிறார்கள்.

ஆனால் எந்த அமைச்சரும் மனைவி, மக்களுடன் கோவிலுக்கு சென்றதாக  நான் பத்திரிகைகளில் செய்தி படித்ததில்லை. ஒருவேளை  நான் படிக்காமல் விட்டிருக்கலாம்.அப்படி சென்றிருந்தால் அது பாராட்டுக்குரியதுதான்!

மருத்துவமனைக்குள் செல்லமுடியாமல் வெளியில் வெயிலில் காய்ந்தபடி  உள்ளே சென்று திரும்புகிற தலைவர்களிடம் 'அம்மா எப்படி இருக்காங்க?" என்று கண்ணீர் விட்டபடி தேம்புகிறார்களே அவர்கள்தான்  உண்மையான  விசுவாசிகள்.அவர்களது  பிரார்த்தனைதான்  முதல்வரை காப்பாற்றி  வாழவைத்திருக்கிறது. அவர்களது சட்டைகள்தான் பளபளப்பின்றி இருக்கிறது.பகட்டு இல்லாமல்!

உண்மையானவர்களை கண்டு கொள்கிற வாய்ப்பு  விசுவாசிகளுக்கு கிடைத்திருக்கிறது.

அம்மா நலம் பெறுவார் என நெஞ்சார நம்புகிறவர்களே  விசுவாசிகள்.


அழகான பெண்டாட்டியா இருக்கணும்னா...?

"அவளிடம் பெரிய மர்மம் இருக்கும் போலிருக்குடா...ஊமை குள்ளி ?"

"கொஞ்ச நாள் பழக்கத்திலேயே அப்படி என்ன மர்மத்தை கண்டே?"

"பெரிய ரகசியம்டா!"

"அப்படி என்ன பெரிய ரகசியம்?"

"பிறப்பு  பத்தி!"

"இப்படியெல்லாம் ஒரு பெண்ணை பத்தி அபாண்டமா சொல்லாதே!"

"பின்னே...பிறந்த வருஷத்த சொல்ல மாட்டேங்கிறாளே!"
****************

அப்பா: " மகனே! உனக்கு  எப்படிப்பட்டவ  மனைவியா வரணும்னு  கடவுளிடம் கேப்பே?"

மகன்: "அழகானவளா....அன்பானவளா...அடங்கிநடக்கிறவளா....பணக்காரியா 
இருக்கணும்னு  வேண்டிப்பேன்"

அப்பா: " நீ  கொடுத்து வச்சவன்டா! நான்தான் பாழாபோயிட்டேன்!"
******************

"நண்பா...உன்னை பார்க்கிறபோதெல்லாம்  அந்த ஞானிதான் ஞாபகத்துக்கு வர்றாருடா! பெரிய மேதை!"

"ரொம்பவும் புகழாதேடா! யாரு மச்சி  அந்த மேதை?"

"டார்வின்!"
***************

"எனக்கு வந்து பிள்ளையா பிறந்திருக்கியே? என்னோட  சின்ன வயசிலே  ஒரு பொய் கூட  சொன்னதில்ல!"

"அப்ப எந்த வயசிலேர்ந்து ஸ்டார்ட் பண்ணுனே டாடி?"
********************

"அந்த கேண்டில் லைட் வெளிச்சத்தில  நீயும் அவனும் எப்படிடி  படிக்க முடியிது?"

"லிப் ரீடிங் படிக்கிறதுக்கு  அந்த வெளிச்சம் போதும்"!
****************
படம்  உதவி. நெட்டில் சுட்டது.

தீபாவளி அப்போலோவிலா, போயஸ் கார்டனிலா?

போயஸ் கார்டனில் சில மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தீபாவளிக்குள் முதல்வர் திரும்பலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

'அப்போலோவில் முதல்வருக்கு மிகவும் உயர்தரமான ,சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்கிற மன நிறைவுடன் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பெய்லேயும், டெல்லி டாக்டர்களும் தங்களது இருப்பிடத்துக்கு  இன்று புறப்பட்டு விட்டார்கள்.

தற்போது அப்போலோவில் சிங்கப்பூர்  பிசியோதெரபி வல்லுனர்கள் மட்டுமே  இருக்கிறார்கள். தேவைப்படும் அவசியத்தில் முதல்வரை சிங்கப்பூர்  அழைத்து செல்லவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவசியமில்லாது  போகுமானால் .முதல்வரின் இல்லத்தில் வைத்தே அந்த சிகிச்சையை  தொடர முடியும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இது பற்றி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. தற்போது அப்போலோ மருத்துவமனை  டாக்டர்களே தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

முதல்வர் படுத்த நிலையிலிருந்து எழுந்து நடக்க மேலும் சில சிகிச்சைகள் அளிக்கப்படும் என தெரிகிறது.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

மாமா உன் பொண்ணைக் கொடு..!

" மாமா...உங்க  மகளை  நான்  டீப்பா  காதல் பண்றேன். அவளுக்காக  என்  உயிரையும்  கொடுக்கத்தயாரா  இருக்கேன்!"

"அவசரப்பட்டு சொல்றியா தம்பி?"

"அப்படியெல்லாம் இல்ல மாமா...இப்பவே  உயிரை விடவா?"

"தப்பு பண்ணிடாதேடா  சண்டாளா! இப்படித்தான் ஒருத்தன் ஏற்கனவே  உயிரை விட்டிருக்கான்!"
************************************

"உங்க  பொண்ணை கல்யாணம் பண்ணிக்க  ஆசைப்படுறேன்."

"குடும்பம் நடத்துற அளவுக்கு உனக்கு சக்தி  இருக்கா?"

"நான்  உழைப்பை  நம்புறவன். என்னால  முடியும்!"

"அது சரிப்பா! நாங்க  ஏற்கனவே  எட்டு பேராச்சே!"
**************************************************

"கண்ணே...நீ எழுதிய  காதல் கடிதங்களை எல்லாம்  ஏன் திருப்பிக் கேட்கிறே? நான்  பின்னாடி  கோர்ட்டுல  காட்டிருவேன்னு  பயப்படுறியா? நான் அப்படிப்பட்ட  ஆளு இல்ல டார்லிங்!"

"ஐயோ...அப்படியெல்லாம்  நான் நினைக்கவே இல்ல. அந்த லெட்டரை எல்லாம் நான் காசு  கொடுத்து  எழுதி வாங்கினது. அது  வேறு  யாருக்காவது  கொடுத்து ட்ரை பண்ணலாம்னுதான்!
*****************************

" நீங்க  எப்படி  எங்கப்பாவை  கொடுமைக்காரன்னு  சொல்லலாம்?"

"அடி போடி ! நீ இல்லாம  நான்  உயிர் வாழமாட்டேன்னு  சொன்னதுக்கு  அந்தாளு  சொல்றார், வேணும்னா  காரியத்தை  அவர்  பண்றாராம்."
***********************************

"டே..நண்பா...நான் ஒரு அழகான ஏழைப்  பொண்ணை லவ் பண்றேன். ஒரு  பணக்காரப் பொண்ணு என்னை லவ் பண்றா! நீயா  இருந்தா  என்ன பண்ணுவே?"

"நான்  அந்த  பணக்காரப் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு  அழகான  ஏழைப் பொண்ணுக்கும் புருசனா இருப்பேன்!"

அப்போலோவுக்கு மோடி வராதது ஏன்?

செய்தியாளர்களும் ஊடகங்களும் பெரிதும் எதிர்பார்த்த பிரதமர் மோடியின்  வருகை  ஏமாற்றத்தை அளித்து விட்டது.

அமைச்சர் பொன்னார் சொன்ன சொல்லும் பொய்த்துவிட்டது.

பிரதமர் வராமல் போனதற்கு யார் காரணம்?

மோடி வந்தால் அவர் முதல்வர் ஜெ.யை பார்ப்பது தவிர்க்க இயலாலது. ஆளுனரை தடுத்ததைப் போல பிரதமரை தடுக்க முடியாது. டாக்டர்கள் மருத்துவ அறிக்கை வெளியிடாமல் இருந்ததற்கு  காரணம் சொல்லியாக வேண்டும். ஆப்பிள் சாப்பிட்டார் ,பேசினார் என்பதெல்லாம் அறிக்கையாக  சொல்லப்படவில்லை.

இது பற்றியெல்லாம் பிரதமரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்பதை தடுக்கவும் முடியாது.

தற்போது நோய் தொற்று ஆபத்து இருப்பதால் மிகவும் பாதுகாப்பான  நிலையில்  முதல்வர் வைக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். டாக்டர்களும்  பாதுகாப்பு உடைகள் அணிந்தே செல்கிறார்களாம்.

.நவீன மருத்துவ சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிற நிலையில் முதல்வரின் அருகில் பிரதமர் செல்வதை தடுக்க இயலாது என்பதால் மருத்துவர்கள் சொல்கிறபோது மோடி வந்தால் போதும் என அதிமுக.நிர்வாகிகள்  மருத்துவமனை நிர்வாகத்திடம்  அறிவுறுத்தியதாக  சொல்லப்படுகிறது. அந்த நிர்வாகிகள் யார் என்பது தெரியவில்லை.

இதனால்தான் பிரதமரின் வருகை தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.என்கிறார்கள்.
இதனால்தானோ என்னவோ இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் என்பதாக மாநில தலைமை அறிவித்திருக்கிறது.

மக்கள் நலக் கூட்டணி ஒதுங்கப்போவதாக திருமா சொல்லிவிட்டார்.

பாமகவும் அதிருப்தியில் இருக்கிறது.பணப்பட்டுவாடா நடப்பதை தடுப்பதற்கு  வழி வகை செய்யப்படவில்லை என்பதாக குற்றம்சாற்றியுள்ளார்.

ஆக அதிமுக---திமுக இடையேதான் கடுமையான போட்டி இருக்கும்.

ஆளுனரின் பங்கு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

பார்க்கலாம்.

திங்கள், 17 அக்டோபர், 2016

கவியரசர் கண்ணதாசனுக்கு அஞ்சலி.

திரைப்படக் கவிஞர் வேல்முருகன் எழுதிய கண்ணதாசனுக்கு  அஞ்சலி.
நாலுபேருக்கு நன்றி
அந்த நாலுபேருக்கு நன்றி 
என்று பாடினாய்
அதனைக்கேட்ட ஒரு நாலுகோடி பேராவது
அந்த ரெண்டுபேருக்கு நன்றி 
உன்னைப் பெற்ற ரெண்டு பேருக்கு நன்றி சொல்வார்கள்

என் தாத்தா காலத்தில் 
என் அப்பா அம்மா காதலிக்க
பாட்டையையும் கொடுத்தாய்
என் பாட்டியை இழந்து வாடிய எம்பாட்டனுக்கு
உன் பாடலால்
அமைதியையும் கொடுத்தாய்.

உலகத்து தங்கச்சிக்களுக்கெல்லாம்
உன்பாட்டு ஓர் அன்னை 
அண்ணன் தங்கை
பாசம் என்றாலே
திசை காட்டும் உன்னை.

அண்ணன் தம்பி அக்கா தங்கைக்கு என
ஓடிஓடி உழைத்தவர்களை
அக்குடும்பம் நடுத்தெருவில் நிறுத்தும்போது
'போனால் போகட்டும் போடா' என்று தேற்றியதில்
கோபத்தை மறந்து 
சிரித்தவர்கள் எத்தனையோ..
கவிஞரைப் பாட எடம் பத்தலையே..

நீ நிரந்தரமானவன்
எப்ப செத்த ?
எந்த நிலையிலும் 
மக்கள் மனங்களில் நிப்ப..! 
    வேல்முருகன்.

முதல்வர் ஜெயலலிதாவும் இடைத்தேர்தலும்....

அனேகமாக  இந்த செய்தியை நீங்கள்  வாசிக்கிற நேரத்தில் பிரதமர் மோடியின்  சென்னை வருகையின்போது  அவரது  அஜெண்டா என்னவென  என்பது  இறுதியாக்கப்பட்டிருக்கலாம்.

பிரதமரின் அப்போலோ விசிட்டின்போது முதல்வரின் உடல்நலம் பற்றிய  முழு விவரமும் இப்போதே தயாரிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அன்றே  முதல்வர் ஜெ. அவித்து மசித்த ஆப்பிள் உட்கொண்டதாக  கூறப்பட்டது.

தொண்டையில் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறபோது இது எப்படி சாத்தியம் ஆகும் என சிலர் சந்தேகப்பட்டனர். உணவுக்குழாயில் எத்தகைய  அறுவையும் நடக்கவில்லை.சுவாசக்குழாயில் மட்டுமே துளையிடப்பட்டதாக சொல்லப்பட்டது  என்பதை அவர்கள் மறந்திருக்கலாம்.

தமிழக சட்டசபையில் காலியாக இருக்கிற மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு  அடுத்தமாதம் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா தொகுதிகளுக்கு செல்ல இயலுமா என்கிற வினா  அழுத்தமுடன் இருக்கிறது. அறிக்கை மட்டுமே அவரால் கொடுக்க முடியும் என்பதே இன்றைய நிலை.

அது குறித்தும் எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்பலாம்.

அதிமுகவினர் அம்மாவின்  உடல் நலக்குறைவை  காரணம் காட்டி வாக்குகளை சேகரிக்க  முயலுவார்கள்.

ஆக இந்த மூன்று தொகுதிகளிலும் பாஜக  வேட்பாளர்களை நிறுத்துமா என்பதை மோடியின் வருகைதான் முடிவு செய்யும்.

ஆனால் திமுகவுக்கு இடைத்தேர்தல்  அமில சோதனைதான்!

'எம்ஜிஆர் படுத்துக் கொண்டே ஜெயித்தார்.அம்மாவும் அவரது வழியிலேயே  படுத்தபடியே  ஜெயிப்பார் ' என்று  பிரசாரம் செய்வதற்கு தயாராகவே  இருக்கிறார்கள்.

தேர்தல் நேர்மையாக நடக்குமா என்பது திமுகவின்  சந்தேகம்.

 இந்த இடைத்தேர்தலில்  திமுகவை காங்கிரஸ் ஆதரிக்குமா  ஒதுங்கி நிற்குமா என்பதை முன்னதாகவே முடிவு செய்திருப்பார்கள். ராகுல் காந்தியை திருநாவுக்கரசர்  சந்தித்துப் பேசியபோதே  முடிவு எடுக்கப்பட்டிருக்கும்   அனுதாபம் ஓங்கி நிற்கிற நிலையில் அதிமுகவை எதிர்க்க ராகுல்  விரும்பமாட்டார்.

எதிர்கால நன்மையைக் கருதி  மோடியின் கருத்தை அதிமுக ஏற்றுக்கொள்ளும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.

இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர்  சிகிச்சை பெறும் படங்கள் வெளியாகும் என்றும் நம்பலாம்.

எம்.ஜி.ஆர். கழுத்தில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்ற போது அந்த படங்களை  திமுக பயன்படுத்தியதை மறந்து விட முடியுமா?

இவ்வளவு சாதகமான நிலை இருக்கிறபோது மோடியின் முடிவு என்னவாக  இருக்க முடியும்?

பொதுவாக  இன்றைய நிலையில்  அதிமுகவுக்கு  வாய்ப்புகள் அதிகம்தான். ஆனால் எதிர்வரும் காலத்தில் பாஜகவின் ஆதரவு தேவைப்படலாம் அல்லவா?

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

மோடியின் அப்போலோ விசிட். அரசியல் மாற்றம் நிகழும்!

பிரதமர் மோடி சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை பார்க்கப் போகிறார்  என்பது சாதாரண  விஷயம் அல்ல.அதில் எத்தனையோ  அதிசயம்,எவ்வளவோ  அரசியல்  கலந்திருக்கும் என்பதை தொடர்புடையவர்கள் உணர்ந்தே  இருப்பார்கள்.

நம்மை போன்ற சாமான்யர்களுக்கு  தெரிவதெல்லாம்  சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்து முதல்வரும் ,ஆட்சியினரும் விலக்கப்பட்டு வருகிறார்கள் என்பதுதான்!

முதல்வரின் உடல்நலத்தின் மீது தொடர்புடைய கட்சிக்கு மட்டும் அக்கறை இருப்பதாக சொல்ல முடியாது. மத்திய அரசுக்கும்  அந்த பொறுப்பு இருக்கிறது.

இதனால்தான் பாஜகவின் தலைமை தனிக்  கவனம் செலுத்தி வருகிறது.மக்களின் மத்தியில் நல்லெண்ணத்தை விதைக்க  இதை விட  வேறு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.

அகில இந்திய பாஜக தலைவர் வந்து அப்போலோ போய் மருத்துவர்களை  பார்த்து கேட்டறிந்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தந்த தகவலுடன்  டில்லி திரும்பி இருக்கிறார்,பிரதமரை சந்தித்து தனக்கு கிடைத்த விவரங்களை விளக்கமாக சொல்லி இருக்கிறார்.

இதற்கு பின்னரே மோடியின் வருகை பற்றி மத்திய அமைச்சர் பொன்னார் அறிவித்திருக்கிறார்.

ஆளுநரிடம் தகவலை சொன்னது போல பிரதமரிடம்  அப்போலோ மருத்துவர்கள்  சொல்லிவிட முடியாது. எய்ம்ஸ் மருத்துவர்களின்  முழு அறிக்கையும்  அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.ஆகவே  முதல்வரை பார்க்கவிடாமல் பிரதமரை தடுக்க இயலாது. பிரதமரின் விருப்பம் எதுவென நம்மால் சொல்லமுடியாது.

முதல்வர் உடல் நலத்தில்  முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் பலன்தான்  பிசியோதெரபி மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள். முக அசைவுக்கு கூட  சிகிச்சை அளிப்பதில் அவர்கள் வல்லவர்கள் என சொல்லப்படுகிறது. அத்தகையவர்களை கொண்டு அளிக்கப்படுகிற சிகிச்சையின் பலனாக  மேலும் முன்னேற்றம் ஏற்படுகிற வாய்ப்பு இருக்கிறது என நம்பலாம்.

இத்தகைய சூழ்நிலையில்தான்  பிரதமர் மோடி வருகிறார். ஓபிஎஸ் முதல்வரின் பொறுப்புகளை ஏற்ற பின்னர் பிரதமரை சந்திக்கிற வாய்ப்பு.

எதிர்கால அரசியலை மனதில் வைத்துக் கொண்டும்   சாணக்கியராக மோடி செயல்படுவார் என நம்பலாம். .அவருக்கு அதிமுக எம்.பி.க்களின் ஒட்டு மொத்த ஆதரவு தேவை. காங்.கட் சியை  பாராளுமன்றத்தில் பலவீனப் படுத்தியாக வேண்டும்.

எம்.பி.க்களை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தவர்  உடல் நலமற்று இருக்கிற  நிலையில்  யாருடைய வழி காட்டுதலின்படி நடக்கவேண்டும்  என்கிற கேள்விக்கும் மோடியின் வருகையினால் பதில் கிடைத்துவிடும் என்று  அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

தெளிவான பதில் கிடைக்கும் பட்சத்தில் திமுகவின்  அரசியல் எந்த திசையில் செல்லும் என்பதற்கும் விடை கிடைத்துவிடும்.

பார்க்கலாம்.

காதல் ...காமம் ..மறுபார்வை!

பெண்களில் வீணைகளும் உண்டு.
 மத்தளங்களும் உண்டு.
ஆண்களில் பெரும்பாலோர் சிட்டுக் குருவிகள்.
 நின்று,நிதானமாக ஆட வேண்டும் என்கிற எண்ணம் இல்லாதவர்கள்.
 வெகு சிலரே விளையாட்டு வீரர்கள்.
 நாட்டுப் புற பாடல் ஒன்று உண்டு.
 ''பொட்டலிலே கிணறு வெட்டி,
 போர்க் காளை ரெண்டும் கட்டி ,
 காப்புப் போட்ட கறுத்த மச்சான்
 கமலைக் கட்ட தெரியலியே!''
 எவ்வளவு ஏகடியம் !எகத்தாளம்!!
 காதலனுக்கு தொழில் அனுபவம் இல்லையாம்!
 எப்படி அழுத்தம் கொடுத்து சொல்கிறாள் பாருங்கள்!
 இப்படிப் பாடுகிறவள் நிச்சயம் மத்தளமாக தான் இருப்பாள்.
 இன்னொருத்தி-
 ''கடகெம்பு நொறுங்குது ,
 கண்ணாமுழி பிதுங்குது ,விட்டு,விட்டு புடிச்சாலாகாதா,-ஆ பூனை மாமா,
 விட்டு,விட்டு புடிச்சாலாகாதா?''என்கிறாள்.
 இந்த கொங்கு நாட்டுப்புறப் பாடலில் வல்லவனின் 'தொழில்'திறமை தெரிகிறது.
 அவளது நிறைவும் தெரிகிறது.
 சிற்றின்பம் தான் பேரின்பம் என்பது எனது கருத்து.
 வாழும் காலத்திலேயே சொர்க்கத்தைப் பார்த்து விடலாம் .
 திருவில்லிபுத்தூர் ஆண்டாளே அந்த சொர்க்கத்திற்காகத்தானே ஏங்கியிருக்கிறாள்
''பருத்து வளர்ந்திருக்கிற எனது மார்பகங்களின் துன்பம் போகவேண்டும்.
அதற்காக அந்த கோவிந்தனுக்கு'அந்தரங்க தொண்டு'செய்ய வேண்டும்.இப்பிறவியில் செய்யாமல் அதன் பின்னர் கிடைக்கும் பரமபதத்தில் என்ன தவம் வேண்டிக்கிடக்குது?'
''கொம்மை முலைகள் இடர் தீரக்
கோவிந்தற்கு .ஓர் குற்றேவல்
 இம்மைப் பிறவி செய்யாதே
 இனி போல் செய்யும் தவம்தான் ஏன்?''என்று கேட்கிறாள்.
ஏக்கமும் இருக்கிறது,கோபமும் கூடவே இருக்கிறது.
 ஆதங்கமும் தெரிகிறது.
 இத்துடன் நின்றாளா?
 இல்லை!
 ''அவனிடம் என்னை இழந்து விட்டேன்.ஆனால் அவனுக்கு என்னைப் பற்றிய கவலை இல்லை.இங்கே ஒருவள் ஏங்கிப் போய் கிடக்கிறாள் என்பது தெரியாதா அவனுக்கு?
 நேரில் வந்தால் அவனுக்குப் பயன்படாத எனதிரு மார்பகங்களை வேருடன் பிடுங்கி  அவனது மார்பில் எறிவேன் ''என்கிறாள்.
 ''கொள்ளும் பயன் ஒன்று இல்லாத
 கொங்கை தன்னைக் கிழங்கோடும்
 அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்து என் அழலைத் தீர்வனே''
 இந்த பாடலில் இருப்பது காதலா, காமமா?
 இரண்டும்தான் என்றாலும் உச்சம் தொடுவது காமம்தான்!
 ''இன்பம் தருபவைகளை இந்திரியங்களால் நுகர்வதால் ,கேட்பதால்,அல்லது எண்ணுவதால்  காமம் தலை எடுக்கிறது ''என்கிறது கீதை!
காதல் என்பது வேறு
 காமம் என்பது வேறு.
 இவை தியரி.
 செக்ஸ் என்பது பிராக்டிகல் .
 மனது ,வயது சார்ந்ததுதான் செக்ஸ் .
 மறுக்கவில்லை
ஆனால் உடம்பு முற்றி தளர்ந்து விட்டால்?
அது  அவனவன் அல்லது அவனவள்  விதி  என கொள்வதா?

வலைப்பூ  வாசிப்பவர்களே..இது எனது  முந்தைய பதிவு.
படித்துப் பார்த்தேன், பகிர்வதற்கு ஆசை.
உங்கள் கருத்துகளுக்காக  காத்திருக்கிறேன்.

சனி, 15 அக்டோபர், 2016

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் குற்றவாளியா ?

2011--ம் ஆண்டு.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டில் வருமான வரி  வீரர்கள்  ரெய்டு நடத்தியபோது அங்கு இரண்டு யானை தந்தங்கள்!

தேடிப்போனது வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பதை கண்டு பிடிக்க! .மாட்டியதோ  தந்தங்கள்.குறைந்த பட்சம் தங்கத்தையாவது கைப்பற்றி  இருக்க வேண்டும்.புலி வேட்டைக்குப் போனவன் பெருச்சாளியை பிடித்திருந்தாலாவது  பெருமைப் பட்டுக்கொள்ளலாம். ஆனால் சுண்டெலியை பிடித்துவிட்டு ஒரு வழக்கையும் பதிவு செய்து விட்டார்கள்.

மோகன்லால் வீட்டில் மட்டுமில்லாமல் பணக்காரர்கள் வீட்டில் பெருமைக்காக  யானை தந்தங்களை வாங்கி அழகுப் பொருளாக வைத்திருப்பார்கள். இது கேரளத்தில் சகஜம்.

பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள்  எப்.ஐ.ஆர்.போட்டதுடன் சரி! கடமை  முடிந்தது. அன்று ஊறப்போட்டவர்கள்தான்.  அண்மையில்தான் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள்.எந்த அளவுக்கு ஊறி இருக்கிறது என்று பார்த்தார்களோ என்னவோ?

"நான் யானையை சுட்டுகொன்று  தந்தங்களை வைத்திருக்கவில்லை. காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன்" என்று மோகன்லால் சொல்லியதையும்  ஏற்காமல் வழக்குப் போட்டவர்கள் அந்த  குற்றத்தை  நிருபித்திருக்க வேண்டாமா?

மானை சுட்ட சல்மான்கானையே நிரபராதி என்று சொல்லவில்லையா? குடிபோதையில் காரை ஓட்டி சாகடித்ததும் சல்மான் இல்லை என்று தீர்ப்பு எழுதிய நாடுதானே இது?எதையாவது சொல்லி பிரபலங்களை  மேலும்மேலும் புகழேணியில் ஏற்றி விடுவதுதானே  வழக்கம்?

ஆனால் மோகன்லால் குறுக்கு வழியில் போகாமல் கேஸ் போட்டவர்களே நிரூபிக்கட்டும் என்று  இருந்து விட்டார்.

அன்றைய முதல்வர் உம்மன்சாண்டியின் கவனத்துக்கு போனது. பாரஸ்ட் இலாகா மந்திரியை கூப்பிட்டு என்னன்னு கவனிய்யா என்று சொல்ல  அவரும் அதிகாரிகளைவிரட்ட  அவர்கள் பைலை புரட்டுவதற்குள்  மக்கள் ஆட்சியையே மாற்றி விட்டார்கள்.

தேசிய விருது பெற்றவர் என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை,உங்கள் புலனாய்வை சீக்கிரமே முடியுங்கள் என்று கோர்ட்டு சொல்லி இருக்கிறது.

மோகன்லால் குற்றவாளியா இல்லையா என்பது எப்போது தெரியும்?

வெயிட் பண்ணிப்பார்ப்போம்.

இடுப்பு வேட்டியை காங்.கட்சியிடம் இழக்குமா தி.மு.க.!

அதிமுக பலவீனப்படுமேயானால் அது திமுகவுக்குதான் பலன்தருமே தவிர  வேறு எந்த கட்சியும்  ஆதாயம் பெறுகிற வாய்ப்பு இல்லை. அதிமுகவின்  சாம்சனாக  திகழ்கிற முதல்வர்  ஜெ.யின் உடல் நலக்குறைவை பயன் படுத்தி  மிகவும் திறமையுடன் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது  மத்தியில்  அரசு செலுத்துகிற பா.ஜ.க.

இதனால் அதிமுகவின் வலிமையாக இருந்து கொண்டிருக்கும்  ரத்தத்தின் ரத்தமான  உறவுகளின்  கனிவு  நிறைந்த பார்வை பாஜக பக்கம் திரும்புவதற்கு  வாய்ப்பு இருக்கிறது. அம்மாவுக்கு கை கொடுத்துவரும் தாமரை கட்சிக்கு ஆதரவாக இருந்தால் என்ன என்கிற மனநிலைக்கு வருகிற நிலைமை வரவே வராது என சொல்ல முடியாது.

முதல்வர் ஜெ.யிடம் இருந்த பொறுப்புகள் ஒ.பி.எஸ்.சிடம் சென்றதற்கு கவர்னர்தான் காரணம் என்பதாக  புலனாய்வு பத்திரிகைகள் அழுத்தமுடன் சொல்லி வருகின்றன.ஒ.பி.எஸ்.சிடம் பொறுப்புகள் போனதை சசிகலா விரும்பவில்லை என்றும் எழுதுகிறார்கள்.

இது முதல்வரின் உடல் நலத்தை வைத்து நடத்தப்படுகிற  அரசியல்.

இது ஒரு பக்கம் என்றால்   இன்னொரு பக்கம் தி.மு.க.வுடன் உரசிப்பார்க்கிறது  காங்.கட்சி!

திருநாவுக்கரசர்  கட்சி தலைவராக நியமிக்கப்பட்டதுமே கட்சிக்கு புதிய பலம் வந்து விட்டதாக நினைக்கிறார்கள். திருச்சியில் நடந்த போராட்டத்தில் ப.சிதம்பரம் பங்கு பெற்றமையால் கோஷ்டிகளே  இல்லாமல் போய்விட்டதைப் போல ஒரு வித மாயை.!

அழுக்கு போக குளிச்சவன் இல்லை என்பதை போல கோஷ்டிகள் இல்லாத காங்கிரசே இல்லை என சொல்லலாம்.

தனித்து நிற்கும் வலிமை இல்லாத தேசிய இயக்கம் காங்கிரஸ்.

அதிமுக பக்கம் போகும் வாய்ப்பு இல்லாத நிலையில் இவர்களுக்கு நிழல் தரக்கூடியது  தி.மு.க.தான்!

அண்மையில் நடந்த காங். மாவட்டத்தலைவர்கள் கூட்டத்தில் திமுகவுடன் கூட்டு சேருவதற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர்  மட்டும்தான் ஆதரவு தெரிவித்தாராம். மற்ற மாவட்ட தலைவர்கள் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்திருக்கும் நிலையில் அவர்களுடன் கூட்டு வைத்தால் தி.மு.க. வின்  நிலை என்ன ஆகும்?

"தோளில் போட்டுக் கொள்ளும் துண்டு மாதிரிதான் ஆட்சியும்.! தூக்கி வீசி விட்டு போவோம்.கொள்கை என்பது இடுப்பு வேட்டி மாதிரி. அதை ஒரு போதும் இழக்கமாட்டோம்"என்று சொல்கிறவர்கள் திமுகவின் உடன் பிறப்புகள்.

''திமுகவினால்தான் அதிக இடங்களை இழந்தோம் என்று குற்றம் சாட்டியுள்ள  கட்சியுடன்  மறுபடியும் கூட்டு வைப்பார்களா?

காங்.மேலிடம் சொல்கிறபடிதான் காங்.கட்சி நடக்கும் என்பது திமுகவின் சப்பைக்கட்டுவாக இருக்குமேயானால்........

ப.சிதம்பரமே மேலிட பேச்சை கேட்பாரா என்பது சந்தேகம்தானே?

ஒரு தலை காதல்....செல்பி மோகம்...உயிர் பலி!

அது அடுக்கு மாடி  குடியிருப்பு.

பர்வேஷ் கான்  வயது  22. அழகாக இருப்பான். கால்பந்து விளையாட்டு  கற்றுத்தருகிற கோச் .

அதே அடுக்கு மாடியில்தான் அவளும் குடியிருக்கிறாள். இருவருமே  இஸ்லாமியர்கள். இரு வீட்டார்களும் நன்கு பழகி வந்தனர்,

இந்த நவீன கால நாகரீக வாழ்வில் அத்து மீறிப் பழகுவது கூட  அன்பின் வெளிப்பாடுதான் என சொல்லிக் கொள்வார்கள்.

அவள் அத்து மீறத்துடித்தாள். அவன் இணங்கிப் போக மறுத்தான்.

அவள் அவனை ஒருதலையாக காதலித்தாள்.

அவன் மறுதலித்து வந்தான்.

"மணந்தால் உன்னைத்தான் மணப்பேன்; இல்லையேல் மரணிப்பேன் " என  மிரட்டினாள்.

தன்னுடைய பெற்றோரிடம் ஆசையை வெளிப்படுத்தினாள்.அவர்கள் பர்வேஷின்  பெற்றோரிடம் பேசினார்கள். அவனது எதிர்ப்பையும் மீறி  நிக்காஹ்  நிகழ்ந்தது.

கண்ட பலன் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை. சின்னஞ்சிறுசுகள்தான்.  பகலில் அடித்துக் கொண்டு இரவில் கூடி மகிழ்வார்கள் என அனுபவஸ்தர்கள்  கண்டு கொள்ள வில்லை.

இரண்டே மாதங்கள்தான். அதற்குள் அவள் எத்தனையோ தடவை தாய் வீட்டுக்கு சென்று விடுவாள்.

அன்றும் அப்படித்தான் அவள் அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள்.

அதிகாலையில் பர்வேஷ்  தன்னை செல்பி எடுத்துகொண்டு அதில் சிறு குறிப்பையும் இணைத்து மனைவிக்கு அனுப்பிவிட்டான் .அவன் அனுப்பிய சிறுகுறிப்பு " நான் தற்கொலை செய்து கொள்கிறேன்"

அவளோ வேடிக்கை காட்டுவதாக நினைக்க அவன் வினை முடித்துக் கொண்டான்.

இந்த கொடிய நிகழ்வு நேற்று மும்பையில் !

ஒருதலை காதலிலும் செல்பி மோகம் விடவில்லையே!

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ரெமோ.வெட்டி வம்பு .விவகாரம் தேவைதானா?

விகடனில் ரெமோ திரைப்படத்தை ரொம்பவே வாரி இருந்தார்கள். சொறி சிரங்கு வந்தவனின் கையில் செந்தட்டியை யாரோ கொடுத்தது போலிருந்தது  விமர்சனம்.! பெண்களை காப்பாற்றுவதற்கு  இவர்களை விட்டால் வேறு யாருமே இல்லை என்பதுபோல சமூக அக்கறை கொப்பளித்தது!

கல்யாணம் ஆனவளை ஒருவன் டார்லிங் டார்லிங் என்று கூப்பிடுவானாம்  அவளும் ஜெய்ஹிந்த் விலாஸ் மாளிகையை கைப்பற்றுவதற்கு யாரோ ஒருவன் வீட்டில் வைப்பாட்டி மாதிரி வாழ்ந்து கொண்டிருப்பாளாம்.இது விகடனின் தொலைக்காட்சி தொடர்.இன்னும் எவ்வளவோ அழுக்குகள் அவர்களது  தொடர்களில்.!

அவர்களது விமர்சன நெறி யாரால் எழுதப்பட்டதோ தெரியாது.

ஆனால் சினிமாவில் பெண்கள் உயர்வுடன் சித்தரிக்கப்படுவதில்லை என்பது  உண்மை.  பெண்கள்  போகப் பொருளாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.

அவள் தாலி கட்டுபவனுக்காகவே காத்திருப்பாள். அவனுடைய  உடல் பசி அடங்குவதற்காகவே அவள் காத்திருக்க வேண்டும். அதற்காக அவளுக்கு மட்டும் 'கற்பு' கவசம். அவனுக்கு இல்லை.

இப்படி எத்தனை கதைகள்!

பாடல்களிலும் பெண்மை கொச்சைப் படுத்தப்பட்டதே!

''காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை.இங்கு
காவல் காக்க கடவுளையன்றி ஒருவரும் இல்லை.
காட்டி காட்டி மறைத்துக் கொள்ளும் சுயநலம் இல்லை.
அதில் கலந்து விட்டால் காலம் நேரம் தெரிவதுமில்லை" என்று ஒரு பாட்டு. சரோஜாதேவி பாடுவதைப் போல அமைந்திருக்கும்.

இன்றுவரை இப்படி எத்தனையோ பாடல்கள். பெண்ணியம் பேசும் பெண்களும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லை என்பதுதான் கொடுமை.

ஆண்டாளின் பாசுரத்தில் இல்லாததையா  இன்றைய கவிஞர்கள்  எழுதிவிட்டார்கள் என சிலர் சொல்வார்கள்.

ஆக ஆண்டாண்டு காலமாக இருந்துவருகிற  கொடுமையை பற்றி   திடீரென  ஒரு  படத்துக்காக  குமுறி இருப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

 வன்புணர்வு  செய்தவனுடன்  பாதிக்கப்பட்ட பெண் சமரசம் செய்து கொள்ளலாம்" என்பதாக நீதிபதி  கருத்து சொல்கிறார்.

பவித்ரா என்கிற பெண் கணவனுடன் வாழ மறுத்து விவாகரத்து கேட்டால் " மண விலக்கு என்பது கடையில் விற்கும் சரக்கா "என்று இன்னொரு  நீதிபதி  கேட்கிறார் .ஆக சமூகத்தின் பார்வையே  மாறிக் கொண்டிருக்கிறது.

பெண்கள் ஒரு சேர குரல் கொடுக்கப்போவதுமில்லை. விழிப்புணர்வு ஏற்படவும் வழி இல்லை.

 விகடனின் விமர்சனம் யாரையோ குஷி படுத்துவதற்காக  எழுதப்பட்டிருக்கிறது.என்று  விட்டுவிடவேண்டும் .

 சல்மா, பால பாரதி போன்றவர்கள் விலகி நிற்பதே நல்லது. 

வியாழன், 13 அக்டோபர், 2016

பாரதிராஜா சாட்டையை சுழற்றுவாரா?

ஒரு காலத்தில் இன, மொழி உணர்வுடன் தமிழ்ச்சினிமா இருந்தது. அது ஒரு பொற்காலம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என பெருமை பேசினார்கள். அதாவது  இவர்கள் வள்ளல்களாம். வந்தேறிகளுக்கு இவர்கள் வாழ்வு கொடுத்திருக்கிறார்களாம். வாய்தான் கிழிந்தது. இப்போது  என்ன ஆயிற்று?

வந்தேறிகளின்  ஆசியில் இவர்கள்  வாழ்கிற நிலை!தமிழர்கள் எடுக்கும் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுப்பது அயல் மாநிலத்தாரின் கைகளில்! அவர்கள் கொடுத்தால் உன்னுடைய படம் ஓடும் .கொடுக்காவிட்டால்  சாம்பிராணி புகையை போட்டு பெட்டியை மூட வேண்டியதுதான்!

கேட்டால் கலைக்கு மொழிகள் இல்லை என்கிற சித்தாந்தம்.

முன்பெல்லாம் பாரதிராஜா மேடையேறும் போதெல்லாம் . "பிற மாநில நடிகைகள் தமிழ் பேச கற்றுக்கொள்ளவேண்டும் "என்று எச்சரிப்பார். அவர் இப்போதெல்லாம் அதிகமாக மேடை ஏறுவதில்லை. அவரைப் போல தைரியமுடன் பேசுவதற்கும் ஆள் இல்லை.

ஆனால் ஆந்திராவில் தாசரி நாராயணராவ் என்கிற பிரபல இயக்குநர் நம்ம பாரதிராஜாவாக அங்கு மாறியிருக்கிறார்.

அண்மையில் ஒரு படவிழாவில் பேசிய அவர் மொழி உணர்வுடன் எச்சரித்திருக்கிறார்.

கவலையுடன் அவரது கருத்து பதிவாகி இருக்கிறது.

"தெலுங்கு பட உலகம் மெதுவாக இங்கிலிஸ் மயமாகி வருகிறது.பிற மாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் முதலில் தெலுங்கு மொழியை  கற்றுக்கொள்ளவேண்டும்.இது எனது தாழ்வான கோரிக்கை. கடுமையான எச்சரிக்கை.அறிவுரை.! நான் பங்கு கொள்ளும் சினிமா விழாக்களில்  நடிகைகள் தெலுங்கில் பேசாவிட்டால்  அந்த விழாவை புறக்கணித்துவிட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன்" என எச்சரித்திருக்கிறார்.

இவர் முன்னாள் மத்திய மந்திரியாகவும் இருந்திருக்கிறார்.

இவரைப் போல  தமிழ் நாட்டில் எச்சரிப்பதற்கு  எந்த இன மான தமிழர்  இருக்கிறார்?

பாரதிராஜாவை விட்டால் வேறு நாதி இல்லையா?

வெட்கமாக இருக்கிறது.

அப்போலோ மருத்துவர்களின் மன உறுதி.

இது எனது 501-வது  பதிவு.

இந்த பதிவை தொடங்குவதற்கு முன்னதாக  எனது  வலைப்பூக்களை  ரசித்தவர்களின் எண்ணிக்கை 102985.ஆக  இருந்தது. அது உயரும் என நம்புகிறேன். ஆதரவு  தேவை. தொடர வேண்டும்.

ஏனைய சகோதரர்களுடன் ஒப்பிடுகையில்  எண்ணிக்கை மிகவும் குறைவுதான். வலைப்பூவை  தொடருகிறவர்களும் அறுபதுதான். ஆனாலும் அந்த  எண்ணிக்கையும்  உயரும்,, கூடும் என்கிற நம்பிக்கைதான்!

நம்பிக்கைதானே வாழ்க்கை. அந்த நம்பிக்கையில்தானே தமிழக மக்களும்  இருக்கிறார்கள்.

மருத்துவம் செய்ய வருகிறவர்களை சந்தேகிப்பது தர்மத்தையே சந்தேகிப்பது போலாகும்.அதை  அரசியல் தலைவர்கள்  தவிர்க்க வேண்டும் .நம்மை நாமே  சந்தேகிக்கலாமா? இது அரசியல் அல்லவே! மருத்துவம்.

மத்திய அரசு இதுநாள்வரை முதல்வரின் உடல் நலம் பற்றிய விவரம் அறியாமல் இருக்குமா என்ன? அறிந்திருப்பதால்தானே தொடர் மருத்துவம் அளிப்பதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை  அனுப்பியிருக்கிறது..

மருத்துவர்கள் மிகவும் மன உறுதியுடன்தான் இருக்கிறார்கள்.தனிப்பட்ட  யாருடைய கட்டுப்பாட்டிலும் அவர்கள் இயங்கவில்லை.

 பல்வேறு  மருத்துவ சாதனங்கள் வந்திருக்கின்றன.

ஒரு சிகிச்சை தொடரும் போது அதனால் எந்த வித பக்கவிளைவும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமுடன் செயலாற்றுகிறார்கள் என்பதாக  ஆளும் கட்சியினர்  சொல்கிறார்கள்.

நீண்ட நாள் சிகிச்சை தொடரும் என்றாலும் முதல்வர்  ஜெயலலிதா நலமுடன் போயஸ்கார்டன்  திரும்புவார் என்பதை  இன்று சென்னை வந்துள்ள லண்டன் டாக்டரும்  டெல்லி மருத்துவமனை டாக்டர்களும் நம்புகிறார்கள்.

அந்த நம்பிக்கை அடிப்படையில்தான்  முதல்வரின் பொறுப்புகளை ஆளுநர்  உரியவரிடம் ஒப்படைத்திருக்கிறார் எனவும்  சொல்லப்படுகிறது..

தொடக்கத்தில் இருந்த பரபரப்பு  தற்போது அடங்கி பிரார்த்தனை ,வழிபாடு என பயணிக்கிறது.

இந்த வழிபாடு நிகழ்வுகளில் மெய்யன்பர்கள் ,பொய்யன்பர்கள் என இனம் பிரிக்க முடியாத அளவுக்கு எல்லோருமே  ஒன்று பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு  அம்மாவின் தலைமை  தேவை.

புதன், 12 அக்டோபர், 2016

எனது பார்வையில் அம்மணி. விமர்சனம் அல்ல!

'மழையும் இல்லையே,வெயிலும் இல்லையே வானவில் வந்தது ஏன் அம்மணியே!'----நா.முத்துக்குமாரின் கவிதை வரிகள் காதுகளில் பதிவு ஆகும்போதே  மனதுக்குள் வித்தியாசமான தளம் ராஜபாட்டை ஆகிறது.இந்நாட்டு மன்னனோ ,மகராசியோ யாரோ ஒருவர் அதில் நடை போடப்போகிறார் என்பது மட்டும் புரிகிறது.

அது ஒரு மூதாட்டிதான் என்று  முடிவு எழுதப்படுகிற போது ஏனோ என் அடிமனதில்  ஒரு வித வலி! இதுதான்  விதி எனப்படுவதா? அல்லது  மூதாட்டியின் வெறுமையின் வெளிப்பாடா?

சொல்லத்தெரியவில்லை!

சாலம்மாளுக்கும் அம்மணிக்கும் இடையே  அப்படி என்ன பாசம்,பற்று?

இயக்குநர் லட்சுமிராமகிருஷ்ணனின் சாலம்மா கேரக்டரும்,சுப்புலட்சுமியின்  அம்மணி கேரக்டரும் வெவ்வேறு தடங்களில் பயணிக்கிறது. சாலம்மா அரசு  மருத்துவமனையில் கூட்டிப்பெருக்கும் ஆயா . குடுகுடு கிழவி அம்மணி வீதியில் குப்பை பொறுக்குகிறவர்.

சாலம்மாவின் பிள்ளைகளுக்கு அம்மாவின் ஓய்வு கால பணத்தின் மீதுதான்  கண்.அது இளையவனுக்கு சாதகமாகவும் ,மூத்தவனுக்கு பாதகமாகவும்  அமைகிறபோது அந்த தாயின் எதிர்காலம் என்ன ஆகும்? இதை எல்லாம் அருகில் இருந்து பார்க்கும் அம்மணி கிழவிக்கு என்ன தோன்றும்?

ரயிலில் அடிபடும் அம்மணியின் மரணம் சாலம்மாவின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவது நாம் எதிர்பாராதது.

ஜிகினா சுந்தரிகளின் குலுக்கல் நடனமில்லாமல், முகர்ந்து பார்க்கும் காதல் காட்சிகள் இல்லாமல் .ஒருவனே பத்து பேரை பந்தாடும் பொய்மை கலவாமல் மனங்களின் போராட்டத்தை மட்டுமே வைத்து தமிழில் ஜெயிக்கமுடியுமா?

இயக்குநர் லட்சுமிராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் மட்டுமே சொல்ல முடியும்.

விருதுகள் வழங்கும் குழு பரிசுத்தமானதாக இருந்தால் ?

வழங்கப்படலாம்.




செவ்வாய், 11 அக்டோபர், 2016

அதிமுகவை வளைக்கும் பாஜக!

கடுமையான  எதிரியாக இருந்தாலும் காலம் நேரம் கருதி கை கோர்ப்பதுதான் அரசியலில்  'ராஜதந்திரமாக' கருதப்படுகிறது,

தற்போதைய எதிரியை வீழ்த்துவதற்கு நேற்றைய எதிரி நண்பனாகலாம்.

என்னுடைய பலம் அவனது எதிரியை வீழ்த்துவதற்கு தேவையாக இருக்கிறது. அதனால் எனது பலவீனங்களை கண்டு கொள்ளமாட்டான். எனக்கு சாதகமாகவே செயல்படுவான்.

இத்தகைய ஒரு நிலைதான் தமிழகத்தில் இருக்கிறது.

 காங்கிரசின் மிரட்டலை பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வினால் சமாளிக்க முடியவில்லை. அதிமுகவின் வலிமையான ஆதரவு  கிடைக்குமேயானால்  காங்கிரசின் முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடமுடியும்.

கேட்டுப்பார்த்தும் கிடைக்காத  அந்த ஆதரவு வலிய வரும் வாய்ப்பு  அமைகிற போது  வழியை அகலப்படுத்துவதில்  தவறில்லையே!

தமிழகத்தில் நிலவுகிற இறுக்கமான சூழலை பாஜக பயன்படுத்தலாம் என்பது அரசியல் கட்சி தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது. பிரதமர் மோடியைத் தவிர பாஜக தலைவர்கள்  சென்னை அப்போலோவுக்கு சென்று முதல்வர்  ஜெ.யின் உடல்நலம் பற்றி அக்கறையுடன் விசாரிக்கிறார்கள். இதில்  அரசியல் இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. இருபது நாட்களை கடந்தும் முதல்வரின் உடல்நலம் பற்றி திட்டமான அறிக்கை  அரசு சார்பில்  அறிவிக்கப்படவில்லை.

ஒரே ஒரு சசிகலாவை தவிர வேறு யாரும் முதல்வர் அம்மாவை பார்க்கவும்  முடியவில்லை.

சென்னை வரவிருக்கும் அமித்ஷாவினால் மட்டும் பார்க்கமுடியுமா?

அதிமுகவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் சக்தி சின்னம்மா தான்! அவரும் அமித்ஷாவும் சந்தித்துப் பேசும் நிலை ஏற்பட்டால் ?

இரும்புக்கோட்டை ரகசியம் வெளியில் வந்துவிடும். !

திங்கள், 10 அக்டோபர், 2016

சிவன் கட்டளை. அன்னையை கொன்றேன்.!

மூட நம்பிக்கை எனும் புழு மூளையைக்  குடைந்துவிடுமானால் ஒருவன்   சிந்திக்கும் ஆற்றலை எந்த அளவுக்கு இழக்கிறான் என்பதை அந்த செய்தியை படித்ததும் அறிந்து  அதிர்ந்துவிட்டேன்.

கடவுளை எந்த வடிவத்திலும் வழிபடு.அது உன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் கிடைத்திருக்கிற  உரிமை,

ஆனால் அந்த நம்பிக்கையை அடுத்தவர் மீது பிரயோகிப்பதற்கு யார் அதிகாரம்  கொடுத்தது?

அவனின் பெயர் பாலாஜி.

பள்ளி பருவம்  ஆஸ்டலில் கழிந்தது.

அம்மா லலிதாவின் சொல்லே அப்பாவுக்கு  வேதம்.

பாலாஜிக்கு பக்தியில் நாட்டம். சிவனை வழிபட்டான்.

சிற்றின்பம் மறந்தான்.பெற்றோர் சொல் கேளான்.

அன்னை வெறுக்கத் தொடங்கினாள்.அதற்கு அப்பனும் துணை.

எந்த வயதில் இல்லறம் புக வேண்டுமோ அதை தவிர்ப்பவன்  வாழ்க்கை  தடம்  புரண்டுவிடும்.

பெற்றோர் வழி காட்டுதல் முறையின்றி  இருக்குமேயானால் பிள்ளையின் வாழ்க்கை  அழிவை நோக்கித்தான்  பயணிக்கும்.

ஒரு நாள்.......

அம்மா லலிதாவை மகன் பாலாஜி துடிக்க துடிக்க கொலை செய்து விட்டான்.

"நான்தான் அவளை கொன்றேன். அவள் என்னுடைய அம்மாதான்.ஆனாலும் கொன்றுவிட்டேன்!"

ஏன் கொலை செய்தானாம்,அன்னையின் மீது அவனுக்கேன் அத்துனை  கொலை வெறி?

அவன் சொன்ன பதில்தான் அவனது மூளைக்குள் மூடப்புழு குடைந்திருப்பதை உணர்த்தியது.

"நான் தினமும் வணங்கும் சிவன்தான் என்னுடைய அன்னையை கொன்று விடும்படி  கட்டளையிட்டான்.அவனது ஆணையை நிறைவேற்றுவது  அவனின் பக்தனின் கடமை. அதைத்தான் செய்தேன்!"

பக்தி முற்றினால் ?

இறைவன் எவனும் உயிர்ப்பலி  கேட்பதில்லை. ஆட்டை வெட்டு மாட்டை வெட்டு என பலி கேட்காத கடவுள் மனித உயிரையா பலி கேட்பார்.

இல்லை.இல்லவே இல்லை.

  

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

இவள் கண்ணகியா, இல்லை சீதையா?

"குடிக்காதே! வேணாம்.உனக்கு மட்டும் கேடு இல்லை.நம்ம குடும்பமே நாசமா போயிடும் .போகாதே!"

தாலியை காட்டி கெஞ்சுகிறாள் பெண்டாட்டி. பெயர் பொன்னம்மாள்.

"நான் சம்பாதிக்கிறேன்.மாடு கணக்கா உழைக்கிறேன்.உடம்பு வலிக்கிதிடி!"என்கிறான் புருஷன் பால்ராஜ்.

பொன்னம்மாளுக்கு வயது இருபத்திஆறுதான் . கான்வென்ட் பள்ளியில்  ஆசிரியை.

"உடம்பு வலிக்கிதா..வா  நான் சுடுதண்ணி வச்சு குளிப்பாட்டுறேன். தலைவலி தைலத்தை கலந்தா வலி போயிடும். வாய்க்கு ருசியா சமைக்கிறேன் .சொல்லு மீனா,கோழியா?"

"சரக்கு போட்டுட்டு வாரேன். கோழி குழம்பு வச்சு மீனை வறுத்து வை. சூப்பரா  இருக்கும்."

''ஊர்ல இருக்கிறவங்கெல்லாம் டீச்சர் புருஷன் குடிகாரன்னு பேசுறது உன் காதுல  ஏறலியா? உன்னை டாஸ்மாக் குருவின்னு சின்னபுள்ள கூட  கேலி  பண்ணுதுய்யா....ரோட்டுல தல நிமிந்து நடக்க முடியல! இன்னிக்கி ரெண்டுல  ஒன்னு பாத்திடனும்னுதான் லீவு போட்டு உட்காந்திருக்கேன்.இன்னிக்கி நீ குடிக்க போகக்கூடாது."

பொன்னம்மாள் ஒரு முடிவுக்கு வந்தவளாக பேசுகிறாள்.

அவனோ குடிக்காமல் விடப்போவதில்லை என்கிற முடிவுக்கு எப்போதோ வந்து விட்டான்.

"போனா என்னடி செய்வே? அம்மா விட்டுக்குத்தானே போவே.! போ...ஒரு வாரம் கழிச்சு வா. இல்லேன்னா ஒரு மாசம் கழிச்சு வா! நீ இல்லேன்னா  ஒண்ணும் குடி முழுகிப் போகாது. போய்த்தொலை. நான் நிம்மதியா  கு டிச்சிட்டு வாரேன்"

ஆவேசம் வந்தவளாக  மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீது  ஊற்றிகொண்டாள் பொன்னம்மாள்.

பொன்மேனியை  தீ நாக்குகளுக்கு  ஆகுதியாக்கும்  முடிவில்!

, " இப்ப சொல்லு...இதை மீறியும் நீ போகத்தான் போறியா?"

"என்னடி சீன் காட்டுறியா? போடி வெக்கம் கெட்ட நாயே!" என திட்டிவிட்டு வாசல்படி தாண்டி நடக்கிறான்.

அவளுக்கு எங்கிருந்துதான்  அந்த தைரியம் வந்ததோ.... அப்படியே அவனை பின் தொடர்கிறாள். வழி நெடுகிலும்  போகாதே ,,திரும்பிடு என்று அழுதபடியே !
அவன் கொஞ்சமும் கவலைப்படாமல் டாஸ்மாக்கில் நுழைய, இவளோ  அந்த இடத்திலேயே தன்னை கொளுத்திக்கொண்டுவிட்டாள்.

புனிதவதி  தீ குளிக்கிறாள்.

இது கற்பனை அல்ல. உண்மையில் நடந்த நிகழ்வு.

சென்னை  எக்ஸ்பிரஸ்  நாளேட்டில் வந்திருந்தது.

இவளை  சீதையில் சேர்ப்பதா, அல்லது  கண்ணகியில் சேர்ப்பதா?

பொன்னம்மாள்  நவீன சீதை.இவளது சாபம் என்னவாக  இருக்கமுடியும்?

சனி, 8 அக்டோபர், 2016

முதல்வர் ஜெ எழுந்து வர பிரார்த்திப்போமாக!

உண்மை உறங்கும்போது வதந்திகளுக்கு உயிர் வந்துவிடும்.

நொடிப்பொழுதில் உலகை சுற்றி விடும். உண்மை விழிக்கும்வரை வதந்திகளுக்கு ஆயிரம் வாய்கள்.! யாராலும் அடக்க முடியாது. அது சில  நேரங்களில் உண்மையாகிப் போவதால்!

முதல்வர் ஜெ.யை  பற்றி தாண்டவமாடுகிற வதந்திகள் பொய்தான் என மெய் ஞான அடிகளான அரசியல் கட்சி தலைவர்கள் சொல்லிவருவது எல்லாமே  உண்மையாகி ஜெ எழுந்து வரட்டும்.

அகில இந்திய தலைவர்கள் எல்லாம் அப்போலாவின் விசிட்டர்களாகி பிரார்த்தனை செய்வதெல்லாம் பலிக்கவேண்டும் என்பதே மக்களின் தவம்.அதிலும்  ராகுல் காந்தி அவரது கூட்டணி கட்சித்தலைவர் கலைஞரை  கூட  பார்க்காமல் முதல்வரின் உடல் நலம் பற்றி அறிந்து கொள்வதற்காக மட்டுமே வந்திருக்கிறார் என்பதை அடிக்கோடிட்டு கொள்ளவேண்டும்.

அவர்கள் அனைவரும் முதல்வரை பார்த்தார்களா அல்லது மருத்துவர்களைப்  பார்த்து கருத்துகளை கேட்டார்களா என்பதைப் பற்றி விவாதிப்பது  அவசியமற்றது.

ஸ்டாலின் , தா. பா, திருமா,வைகோ,சீமான்   என இன்ன பிற தலைவர்கள்   அரசியல் ஆதாயம் கருதாமல் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சென்றிருக்கிறார்கள்,

ஆகவே அவர்களையும் நம்புவோம்.

முதல்வரின் உடல் நிலையை வைத்து  யாரும்  அரசியல் நடத்தவேண்டாம்  என்பதே நாட்டு மக்களது விருப்பம்.

அதிலும் இந்த சுப்பிரமணிய சுவாமியின்  ஆலோசனையை யாரும் கேட்கக்கூடாது .

அப்போலோ மருத்துவமனையின் அறிக்கைப்படி " முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக" சொல்லப்பட்டு வந்த நிலையில் அண்மையில் வெளியிட்ட  அறிக்கையில் "கண்காணிக்கப்படுகிறது" என்பதாக ஒரு மாற்றத்தை சொல்லியிருக்கிறார்கள்.

இதனுடைய உண்மையான பொருள் மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்!

முன்னேற்றம்தான் என சொல்லிவந்தவர்கள் அதை மாற்றி கண்காணிக்கப்படுகிறது என்று சொல்வதால் மக்கள் மத்தியில் குழப்பம்  ஏற்படலாம்.

அதை போக்குவது மருத்துவர்கள் கடமை மட்டுமில்லை அரசின் கடமையும் ஆகும்.

செயற்கை சுவாசத்துக்கு பதிலாக சுயமாக முதல்வர் அம்மா மூச்சு விடவேண்டும் அதுதான் உண்மையான  மாற்றம். அது விரைவிலேயே நிகழும் என நம்புவோமாக.

ஆக முதல்வர் அம்மா எழுந்துவர பிரார்த்திப்போமாக..

திராவிட கட்சிகளை மன்னிக்கவே முடியாது.

தமிழகத்தின் பல்வேறு  சமூக அவலங்கள், சீர்கேடுகளுக்கு  இடம் கொடுத்ததே, திராவிட கட்சிகள்தான்.! ஆட்சியையும் ,கட்சியையும்  காப்பாற்றிக் கொள்ள மதவாத கட்சியான பா.ஜ.க.வேர் பிடிப்பதற்கு  நிலம் கொடுத்து ,நீர் ஊற்றியவர்கள் அவர்கள்தான்!

ஏனைய மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்.வலுவாக தளம் அமைத்துக்கொண்ட பிறகு தமிழகத்தில் பிராமணர்கள் வசம் இருந்த பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். காலை, மாலைகளில்  'ஸாகா" அமைத்தது..ஊர்வலம் நடத்தியது. .இருந்தாலும்  அது வலிமை பெறவில்லை.. ஜனசங்கம் அரசியல் ரீதியாக  இறங்கியதும் ஆபத்தை உணர்ந்த தந்தை பெரியார்  அதை தலை தூக்காமல் தடுத்தார்,பொதுவுடமை இயக்கங்களும்  முழு மூச்சுடன் மத வாதத்தை  எதிர்த்தன. ஆட்சிகள் மாற்றம் வந்தது.

அறிஞர் அண்ணாவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்களின் பாதுகாப்புக்காக ,அரசியல் வளர்ச்சிக்காக  பிஜேபிக்கு ஆதரவளித்தார்கள். எத்தகைய பேரிடருக்கு தாம்பூலம் வைத்து வரவேற்பு அளித்திருக்கிறோம் என்பது தெரிந்தே அந்த குற்றத்தை செய்தார்கள்.

தமிழகத்தின் நலம் பின்னுக்கு தள்ளப்பட்டது,தனி நபர் நலன் முன்னிலை  பெற்றது. மத்தியில் தங்களின் செல்வாக்கு சொல்வாக்கு இரண்டும் குறையாமல் இருந்தால் அது போதும் என்று கரையான் புற்றுக்குள் பாம்பு  வளர்த்தார்கள்.

காங்., பிஜேபி மாறி மாறி மத்தியில்ஆட்சிக்கு  வந்தாலும் மாநிலத்தில் திராவிட கட்சிகளை தவிர வேறு கட்சிகள் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை நன்றாக அறிந்திருந்த தேசிய கட்சிகளுக்கு திராவிட கட்சிகளின் தோள்கள்  சுகமான சுமைதாங்கிகளாக இருந்து வருகிறது. மத்தியில் வலிமையாக இருக்கும் கட்சிக்கு பல்லக்கு சுமப்பதற்கு  திராவிட கட்சிகள் தயங்கியதில்லை.

இதன் விளைவுதான் பிஜேபி தமிழகத்தில் ஆணிவேர் பிடித்து இருக்கிறது. மதவாதங்களுக்கு இடம் தராத மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தனது  நிம்மதியை இழப்பதற்கு  அடிப்படையாக இருந்தது  திராவிட கட்சிகள்தான் என்பதை  மறுப்பதற்கில்லை.

எதிர்வரும் காலங்களில் மதவாதிகளால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்படுமேயானால் அதற்கு முழுக் காரணம் திராவிட கட்சிகள்தான்.

அவர்களை மன்னிக்க முடியாது.

ரெமோ, தேவி, றெக்க--எது பெஸ்ட்?

நவராத்திரி தொடர்விடுமுறையை கணக்கில் எடுத்துக் கொண்டு தீபாவளிக்கு முன்னதாகவே  கல்லா கட்டுவதற்காக  வெளியாகிய படங்கள்தான் ரெமோ,தேவி,றெக்க.! நான் எழுதப்போவது  விமர்சனம் அல்ல! ஒரு சாதாரண  தரை டிக்கெட் ஆசாமியின் பார்வை எப்படி இருக்கலாம் என்கிற கற்பனையே!

மக்கள் செல்வன் விஜயசேதுபதியின் இரண்டு படங்கள் வெள்ளித்திரையில் மின்னிக் கொண்டிருக்கும்போதே மூன்றாவதாக வந்திருப்பதுதான் றெக்க.தற்போதைய தமிழ்ச்சினிமாவில் இது அசாதாரணம்.பக்கத்து வீட்டுப்  பையன் என்கிற இமேஜ் இன்றுவரை இவருக்கு கை கொடுத்து வருகிறது. 'செம' என்பது இவரது தேசிய வார்த்தை.'இது எப்டி இருக்கு?'என்பது ஒரு காலத்தில் ரஜினிக்கு புகழ் தேடித் தந்ததை போல. இவரது  'செம'!

நம்ம வீட்டுப்பையன் என்கிற இமேஜ் சிவகார்த்திகேயனுக்கு.! எவ்வளவுதான்  சேட்டை பண்ணினாலும் வீட்டார்கள் கோபிப்பதில்லை. அதில் இருக்கிற  குறும்புத் தனத்தை தேடிப்பிடித்து ரசிப்பதைப் போல இவரது படத்துக்கும் ஆதரவு இருக்கிறது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்கிற புகழ் மட்டுமே பிரபுதேவாவுக்கு! அடிஷனல் குவாலிபிகேஷன் நயன்தாராவின் முன்னாள் காதலன். நடனம் ஆடுவதில் இன்றுவரை இவரை எந்த நடிகரும் விஞ்சவில்லை. குறிப்பாக 'தேவி'யில் இவரது ஆட்டம் பலருக்கு சவாலாகத்தான்  இருக்கும்.

ஆக மூன்று படங்களின் கதாநாயகர்களின் படங்களும் வெவ்வேறு ஜார்னர்!

வி.சேதுபதியின் படம் வழக்கமான ஒன்றுதான்! காதலர்களை சேர்த்துவைத்து  சமூக சேவை செய்பவர். சொந்த தங்கையின்  திருமணம்  வில்லனின் கை வாளில் தொங்குகிறது.இதிலிருந்து எப்படி மீள்கிறார் ,லட்சுமிமேனனை கைப்பற்றுகிறார் என்பது  மீதி ! பல படங்களை நினைவு படுத்துகிற காட்சிகள் ! ரசனை மிகுந்தவர்களின் கதாநாயகனான  இவரை ஜனரஞ்சகமான நாயகனாக மாற்றுகிற முயற்சியே இந்தப்படம் என நினைக்கிறேன்.

காதலை வெறுக்கிற சிவகார்த்திகேயன் வேலை தேடும் முயற்சியில் நர்ஸாக வேடமிட்டு நடிக்கப்போய் கீர்த்தியின் மீது காதல் கொள்கிறார். ஏற்கனவே  நிச்சயிக்கப்பட்டவர் கீர்த்தி. அது எப்படி மறுக்கப்பட்டு சிவகார்த்திகேயனுடன்  சங்கமம் ஆகிறது என்பது சுருக்கம்.படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சிவகார்த்திகேயனின் நர்ஸ் வேடம்தான். கீர்த்தியுடன் பல இடங்களில் யார் அழகு என கேட்க வைக்கிறார். ஒப்பனை, பி.சி.ஸ்ரீ ராமின் ஒளிப்பதிவு  இரண்டும் கண்களை குளிரவைக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பும் பேச வைக்கிறது. படத்தில் லாஜிக் குறைகள். ஏனைய படங்களை  ஒப்பிட செய்யும் காட்சிகள் என குறைகள். உதாரணமாக  அவ்வை சண்முகியில் மணிவண்ணன் கமலை விரட்டியபடி காதலிப்பதைப் போல இதில் யோகி பாபு!

தேவி யில் லாஜிக் ஓட்டையை தேடவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அது ஆவி படம்.மற்ற ஆவி படங்களில் இருந்து வேறுபட்டிருப்பது  இதன் சிறப்பு. நடிப்பு ஆசை நிறைவேறாமல் போன ரூபியின் ஆவி தமன்னாவின் உடலில் புகுந்து கொண்டு இம்சிப்பதுதான் கதை.

கதைக்களம் மும்பை. பிரபுதேவாவின் அற்புதமான நடிப்பு ஆடல் என வெடிக்கிறது. தமன்னாவின் உடல் அழகு தெறிக்கிறது.காமடிக்கென தனி நடிகர்கள் தேவைப்படவில்லை. இருந்தாலும் ஆர்.ஜே .பாலாஜியை  அளவுடன் திறந்துவிட்டிருக்கிறார்கள்.படம் ஓடி முடிந்தது தெரியவில்லை.
காரணம் இரண்டு மணி நேரம்தான் படம் ஓடுகிறது.

மூன்று படங்களையும் பார்த்துவிட்ட நான் என் நண்பர்களுக்கு  பரிந்துரைத்தது தேவி,ரெமோ,றெக்க என்கிற வரிசையில்தான்!  

வெள்ளி, 7 அக்டோபர், 2016

அழகு திமிர் இரண்டும் சேர்ந்த கலவை நயன்!

பாகுபலிக்கு அடுத்து  தமிழில் மிரட்டலாக தீபாவளிக்கு வரவிருப்பது 'காஷ்மோரா"

கார்த்திக்குடன் , நயன்தாரா,ஸ்ரீ திவ்யா இருவரும் நடித்திருக்கிற படம். கார்த்தியின் சின்னம்மா மகன்தான் தயாரிப்பாளர் பிரபு.

"பிரமாண்டமான படத்தை பெரிய பட்ஜெட்டில் கொடுக்கிறோமே ,தம்பி பிரபு  தாங்குவானா என சந்தேகப்பட்டேன்.கடவுள் அருளால் படத்தை முடித்துவிட்டான். எங்களின் மூன்று வருட உழைப்புதான் காஷ்மோரா" என தொடக்கத்திலயே சொல்லிவிட்டார் கார்த்தி.

ரவுத்திரம்,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் எதையும் வெளிப்படையாக பேசிவிடுவார். ஒளிவு மறைவு  எதுவும் கிடையாது.

"ராணி ரத்னமா தேவி கேரக்டருக்கு யாரை போடலாம் என யோசித்தபோது தயாரிப்பாளர் பிரபுதான் நயன்தாராவின் பெயரை சொன்னார். அந்த கேரக்டருக்கு  அவரை விட வேறு யாரையும் நினைக்கமுடியவில்லை. அழகு, திமிர், இரண்டும் கலந்த கேரக்டர். நான் எந்தவித உள் அர்த்தத்துடன் சொல்லவில்லை.இந்த படத்தின் டெக்னிஷியன்கள் அத்தனை பேரையும் தூக்கி சுமந்தவர் கார்த்திதான்! மூன்றுவிதமான  கேரக்டர்கள்.ராஜ்நாயக் கேரக்டரை எப்படி செய்வாரோ என்கிற சந்தேகம் இருந்தது. அவ்வளவு கனமான கேரக்டர்.தயங்கினேன். ஆனால் கேரக்டரை உள்வாங்கி அவர் நடித்தது  எனது பயம் அர்த்தமற்றதாகிவிட்டது.லுக்,பாடி லாங்குவேஜ்  இரண்டும் பிரமிப்பூட்டியது." என்றார்  இயக்குநர் கோகுல்.

லலிதானந்த் , முத்தமிழ் இருவரும் பாட்டு எழுதியிருக்கிறார்கள்.

இந்த படத்தின் இன்னொரு பெருமை கம்ப்யுட்டர், வி.எப்.எக்ஸ் எல்லாமே  தமிழ்நாட்டில்தான்! ஐந்து சதமே வெளிநாட்டில் செய்யப்பட்டிருக்கிறது.

புதன், 5 அக்டோபர், 2016

தனுஷின் முழு நீள அரசியல் படம்.பஞ்ச் வசனங்கள்!

அரசியல் என்றாலே அலறி ஓடுகிறவர்கள் மத்தியில் "முழுக்க முழுக்க  இது  அரசியல் படம்" என்று  சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்! அது  தனுஷிடம்  அதிகமாகவே  இருக்கிறது. அவரது 'கொடி" படம்  அரசியல் படம். அதுவும் வெற்றிமாறன் தயாரிப்பு!

முதன் முதலாக இரட்டை வேடம் போட்டிருக்கிறார் தனுஷ்.

தாடி வைத்த தனுஷ்தான் அரசியல் பேசுகிறவர். அனேகமாக  அணு உலை எதிர்ப்பு  போராட்டம்  நடத்திய  உதயகுமாரின் கேரக்டரை  எதிரொலிக்கும்  கேரக்டராக  இருக்கும் என்பது ஊகம்! எது  எப்படியோ கொடி பறக்கிறபோது அதனுடைய  வண்ணம் தெரிந்து விடப்போகிறது.

''யாரையும் காயப் படுத்தாது. அரசியல் மட்டும் பேசும். எவரையும் பிரதிபலிக்காத முழு அரசியல் படம். முதன் முதலாக நான் இரட்டை வேடம்  ஏற்றிருக்கிற படம். படத்தில் பஞ்ச் வசனங்கள்  இருக்கிறது." என்றார்  தனுஷ்.
நெடிய இடைவெளிக்குப் பின்னர் திரிஷாவுக்கு வாய்ப்பு  அளிக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க.....

கபாலி நடிகை ராதிகா ஆப்தே யை பற்றி நீல வண்ணத்தில்  செய்தி.

இணைய தளங்களில் வெளியாகிய  ராதிகா ஆப்தேயின் நிர்வாண படங்களை  பற்றி  செய்தியாளர்கள்  விடுவதாக இல்லை.கிண்டி கிழங்கு எடுக்கிறார்கள்.
குறும்புக்கார செய்தியாளர்  அன்று மாட்டியிருக்கிறார்.

" என்னங்க மேடம்...நியூட் பட வீடியோ தீயா பத்தி எரியுதே?" என்று கேட்ட மறு நொடியே அங்கு நிலம் இரண்டாக பிளந்திருக்கிறது.

"உன்னுடைய கேள்வி மிகவும் ரிடிகுலஸ் என்பது உனக்கு தெரியாதா? உன்னை மாதிரியான ஆட்களால்தான்  கான்ட்ர வர்சியே வருது" என்று  செம  வாரு வாரியிருக்கிறார்.

வித்தியாசமான  நடிகைதான்!



திங்கள், 3 அக்டோபர், 2016

'தல' அஜீத்தின் தலை எழுத்து மாறுகிறது.!

அஸ்ட்ராலஜியை  அரசாங்கமே நம்புகிறபோது மனிதர்கள் நம்பமாட்டார்களா  என்ன?

 டைரக்டர்களின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு  வாய்ப்பு கொடுக்கிற புண்ணியவான்கள்  இருக்கிற சினிமா  பூமியாச்சே!

நல்லவேளை ..இன்னும் நடிகைகளின் பூப்புனித நேரம்தான் பார்க்கவில்லை.

கோலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்பதாக ரசிகர்கள் கொண்டாடுகிற 'தல' அஜித்  தனது  இரண்டாவது கட்ட படப்பிடிப்பை  ஹைதராபாத்துக்கு மாற்றி விட்டார். சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் உள்ள ஒரு இடத்தில் படப்பிடிப்பு  நடப்பதாக இருந்தது. அங்கு  சூப்பர்ஸ்டார் ரஜினியின்  படப்பிடிப்பும் நடக்க இருப்பதால்  நம்மால் மற்றவர்களுக்கு தொல்லை எதற்கு என்று இவர் மாறி ஹைதராபாத் போகிறார். ஐந்தாம் தேதியில்  ஷூட்டிங்.

தற்போது அஜித் தனது ஓய்வு நேரங்களில் தனது கையெழுத்தை வேறு  ஸ்டைலில்  எழுதிவருகிறார். அதுவும் கண்களை மூடிக்கொண்டு என்கிறார்கள்.காரணம்  ஜோதிட நம்பிக்கைதான்!  

ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பின்  தொகுப்பை பார்த்த சிறுத்தை சிவா  அசந்து போய் இருப்பது சத்தியமான உண்மை.

"நாம்தான் இயக்கியிருக்கிறோமா" என்கிற சந்தேகம் கொள்வது  இயல்புதான்! தமிழ்ப்படங்களில் புதிய  சகாப்தம் என்கிறார்கள்.படத்தின் 'ரஷ்' பார்த்தவர்கள்.

சனி, 1 அக்டோபர், 2016

வெட்கக்கேடு...! நாம் எப்படி உருப்படுவோம்?

அக்டோபர் இரண்டு.

நாட்டுத்தந்தை காந்தியடிகள், ஆண்மை மிகு லால்பகதூர் , கர்மவீரர் காமராஜர்  இவர்களை நினைவு  கொள்கிற நாள்! அதாவது இன்று மட்டுமே நினைக்கப்படுகிற தலைவர்கள்.விடுதலைப் போராட்ட தளபதிகள். இந்த தேசம்  மறக்கக்கூடாத தலைவர்கள். இந்திய துணைக்கண்டத்தில்  வாழ்கிற  மாணவர்கள் அனைவரும் இவர்களை வெறும் பெயரளவிலேயே தெரிந்து வைத்திருக்கிற தியாகிகள்.!

இவர்களது வீரப் போராட்டமோ ,,எப்படி சிறைப்பட்டு சித்திரவதை அனுபவித்தார்கள் ,என்பதோ ,இந்த தேசம் காப்பாற்றப்படுவதற்காக  எப்படி செயல்பட்டார்கள் என்பதோ...எந்த மாணவனுக்காவது முழுமையாக தெரியுமா?

யாராவது ஒரு நடிகனைப் பற்றி கேளுங்கள். விளக்கமாக சொல்வான். நடிகனது, பிறப்பு, வளர்ப்பு, படங்களின் பட்டியல் என பக்காவாக தெரிந்து  வைத்திருப்பான்.ஆனால் தலைவர்களின் வரலாறு சுத்தமாக தெரியாது, அரசியல்தலைவர்கள், ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டாமா?

அவர்களுக்கு கையூட்டு பெறுவது மட்டுமே தெரியும். நடிகனது பிறந்தநாள் விழாவுக்கு தலைமை தாங்குவார்கள். தேர்தல் வந்தால் செல்வாக்குள்ள  நடிகர்களைத் தேடி ஓடுவார்கள். நாடு நாசமாவது  இவர்களால் தான்!

உலகத்தில் மிகவும் மோசமான சர்வாதிகாரிகளில் ஹிட்லரும் ஒருவன்.

அவனது 'மெய்ன் காம்ப்' என்கிற 'எனது போராட்டம் ' புத்தகத்தின் தமிழாக்கத்தை இன்று வாசித்தேன். காந்தியடிகளின் நாளில் சர்வாதிகாரியை  புரட்டலாமா என சிலர் நினைக்கலாம்.

கல்வி கற்றுக் கொடுப்பது பற்றி அந்த கொடியவனின் பார்வை என்னவாக இருக்கும் என்கிற  உந்துதல்தான் காரணம். ச.சுப்ரமணியம் மொழிபெயர்த்திருந்த அந்த புத்தகத்தில் ஹிட்லரின் கருத்து..

"பள்ளிக்கூடங்களில்  உலக சரித்திர பாடம் கற்றுக்கொடுக்கும் முறை  மிகவும் அதிருப்திகரமாக இருக்கிறது,சரித்திர பாடம் கற்றுக்கொடுப்பதன்  நோக்கம் சில தேதிகளையும்  சம்பவங்களையும்  மாணவர்கள்  உருப்போட்டு  மனப்பாடம் செய்ய வேண்டுமென்பதல்ல. ஒரு தளபதியோ, அல்லது வேறொருவரோ பிறந்த தினம்,ஒரு மன்னரின் பட்டாபிசேக  நாளை அறிந்து கொள்வதில் மாணவர்களுக்கு  என்ன சிரத்தை இருக்க முடியும்? அவை அவ்வளவு முக்கியமான விஷயங்களா?
 சரித்திர  பிரசித்தமான சம்பவங்களுக்கு  காரணங்களையும்  அச்சம்பவங்களை உருவாக்கிய  சக்திகளையும்  ஆராய்ந்தறியும்படி செய்வதுதான்  சரித்திர பாடத்தின் தத்துவம்"

ஹிட்லரின் கருத்து  ஜெர்மனிக்கு மட்டும்  பொருந்தக் கூடியது என்பதாக நான் கருதவில்லை.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், ஜெய்ஹிந்த்செண்பகராமன், இப்படி இன்னும் எத்தனையோ  தியாகிகளை  நமது இளைய தலைமுறை  தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நமது சட்டமன்ற உறுப்பினர்கள்,மக்கள் சபை உறுப்பினர்கள்,நமது அமைச்சர்கள் இவர்களில் எத்தனை பேருக்கு   இந்திய விடுதலைப் போரும்,அதில் பங்கேற்ற தலைவர்களின் தியாகமும் எந்த அளவுக்கு தெரியும்? நான் அறிந்தவரை பொதுவுடமை கட்சி தலைவர்களுக்கு  உலக அரசியல் மட்டுமல்ல , உள்ளூர்  அரசியலும் தெரிந்திருக்கிறது. பாஜக வினர் ஆர்,எஸ்.எஸ் .தலைவர்களை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆட்சி பீடத்தில் அமரும் வாய்ப்பு பெற்ற திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு  தெரிந்திருந்த போதிலும்  அவர்கள் ஆட்சியில் அமரும் போது சரித்திர தலைவர்களை  மேலெழுந்தவாரியாக  மட்டுமே காட்டுவார்கள்.

இந்த நிலை மாறவேண்டும்.





நடிகர் திலகத்திடம் மாட்டிய நிருபர்கள்!

அக்.1.....

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள். எண்பத்திஎட்டு  ஆண்டுகள்..

அவரைப் பற்றி  நிறைய எழுதலாம்.இருந்தாலும் அவருடன் அந்த பொன் மாலைப் பொழுதில்  வாய் விட்டு சிரித்து  உரையாடிய  நாளை மறக்க முடியாது.

 திரைப்படப் பத்திரிகையாளர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை தொடங்கிய பின்னர்  அவரது ஆசியை பெறவேண்டும் என நான் ஆசைப்பட்டேன். மற்றவர்களும் விரும்பினார்கள்.நிர்வாகிகள் மட்டும் சந்தித்தால் போதும் என  முடிவு செய்து அன்னை இல்லத்துக்கு சென்றோம்.

அண்ணனுடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. கிச்சன் வரை சென்று அவருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறேன்.அம்மா தான் பரிமாறுவார்.

"எனக்குதான் சுகர்.அவனுக்கு எதுவுமில்ல. கூட ரெண்டு இட்லி  வைம்மா" என கமலா அம்மாவிடம் சொன்னதை எப்படி மறக்க முடியும்?

அத்தகைய உறவு  இருந்ததால்  அன்னை இல்லத்தின் மாடியில்  அவரை சந்தித்தோம்.

சிம்மத்தின் குரல்.கம்பீரம் குறையாமல் அதே நேரத்தில் கனிவான  குரலில்  "வாங்க..வாங்க..என்ன எல்லோரும் ஒண்ணா கிளம்பி வந்திருக்கிங்க?"
என்று வரவேற்றார்.

அங்கிருந்த சோபாக்களை பத்திரிகை சகோதரர்கள் நிரப்பினார்கள்.

"ண்ணே! நாங்க எங்களுக்காக ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம்.உங்களின் ஆசி  வேணும்.நான் தலைவர்'" என்றதும் மேலும் கீழுமாக என்னை பார்த்தார்.

"அப்ப..உன்னை இனிமே நான் வாங்க போங்கன்னுதான் சொல்லணும். ஏன்னா  நீங்க தலைவராச்சே?"

சற்றும் நகைக்காமல் என்னை பார்த்தார். " படவா! அப்பறம் இவுகளை  பத்தி  சொல்லு,!"

''இவரு பேரு பிஸ்மி! எதையுமே  ஸ்ட்ரைட்டாதான் எழுதுவாரு."

"ஓ....! அப்ப மத்தவங்கள்லாம் கோணலாதான் எழுதுவாங்க. இவரு மட்டும் நேரா  எழுதுவாராக்கும்? "

இப்படி  நையாண்டியாக  அன்றைய மாலை நேரம் கடந்தது.

மற்ற சகோதரர்களை வழி அனுப்பிவிட்டு நான் மட்டும் தனியாக சந்தித்தேன்.

என்னை அவர் தனியாக சந்திக்க விரும்பியதால் ...!

''எதுக்குடா ..கிசுகிசு எழுதி மத்தவனுங்க வயித்தெரிச்சலை வாங்கிக் கட்டிக்கிறே? எல்லோரும் கம்ப்ளெயின்ட் பண்றானுங்க.அப்படி எழுதி  என்னத்த  கோட்டை கட்டிக்கப்போறே? " என்று அன்புடன் கண்டித்தார்.

ஆனால் பத்திரிகைகளின் பொருளடக்கத்தில் கிசுகிசுவும் நிரந்தர  இடம் பெற்றுவிட்டதால் தவிர்க்க முடியவில்லை. அதற்கு பின்னர் சில காலம் அவரின் கண்களில் சிக்காமலேயே  ஸ்டுடியோ ரவுண்டு போய் வந்தேன்.

ஆனால் இன்றைய வளரும்  நடிகர்கள்  பத்திரிகையாளர்களை விட்டு விலகியே  பழகுகிறார்கள்.