புதன், 30 நவம்பர், 2016

ஏட்டுக்கும் எழுத்துக்கும் கற்பு தேவை.

படிப்பதற்கு சற்று சலிப்பு தரலாம்.

ஆனால் சில உண்மைகள் கசந்தாலும் அது காலம் காலமாக இருந்து வருபவை.இலக்கியத்திலிருந்து எடுத்துக் கையாள்வது வேறு.அதையே  தனது படைப்பாக திரிப்பது திருட்டு.மேலை நாட்டு கதைகளை திருடுவது தமிழ்ச்சினிமாவுக்கு புதிது இல்லை. இதைப் போல இலக்கிய வரிகளை தனது பாடல்களில் சொந்த சரக்கு என சொல்லி பெயர் பெறுவது இன்றும் நடக்கிறது.

பேராசிரியர் தி.ராஜகோபாலன் எழுதிய ஒரு கட்டுரையை இன்று காலை  வாசிக்க நேர்ந்தது,அதை பகிர்ந்து கொள்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. தவறு என நினைத்தால் மன்னித்துவிடுங்கள்.

இதோ அவரது கருத்துகள்.!

"முதுமொழிகளை நாடித் திருடி,ஒருபடி நெருடிக்  கவிபாடித் திரியும் சில புலவர் ' , 'தெரியும் அருமை        பழைய மொழியைத் திருடி நெருடிக் கவி பாடி'என அருணகிரியார் அடையாளம் காட்டுகிறார்.

சீத்தலைச் சாத்தனார் திருக்குறளில் இருந்து ஒரு செய்தியை எடுக்கிறபோது 'அறம் பாடிற்று  அன்றே ஆயிழை கணவ'என்றார்.

பாரதி தனது பாஞ்சாலி சபதம் வியாசரைத் தழுவியது.தமிழ் நடை மட்டுமே தன்னுடையது என்றார்.

'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே  நில்லென்று எனக்  கூறி நிறுத்தி வழிச்சென்றவரே ' எனும் வரிகளை பல்லவியாக அமைத்தபோது இதனை நாட்டுப்புறப் பாடலில் இருந்து எடுத்தேன்' என கம்பீரமாக  ஒப்புக் கொண்டார் கண்ணதாசன்.

ஒரே ஒரு பாடல் பொருளை வைத்துக் கம்பர் பாடிவிட்டார் என கேட்ட ஒட்டக்கூத்தர் தாம் பாடிய இராமாயணத்தில் உத்திர காண்டத்தைத் தவிர  மற்றவற்றை எரித்துவிட்டார்.

கண்ணகி காதையை சீத்தலைச்சாத்தனார் பாடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அத்துயரக் கதையைக் கேட்ட  இளங்கோவடிகள் "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் " எனத் தொடங்கிவிட்டதால் சாத்தனார் மாதவி மகள் மணிமேகலை காப்பியத்திற்கு மாறிவிட்டார்.

ஆனால் நம் முன்னோர்கள்  காத்த கண்ணியம் இன்றில்லை!

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமன்று.ஏட்டுக்கும் எழுத்துக்கும்  கூடத் தேவை.

இவ்வாறு பேராசிரியர் தி.இராசகோபாலன் கவலைப்பட்டு எழுதி இருந்தார்.

காலங்கள் கடந்தும் எழுத்துத்திருட்டு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 

திங்கள், 28 நவம்பர், 2016

காமக் கொடூரன்களை காய் அடியுங்கள்!---நடிகை போர்க்குரல்!!

போகத்துக்குரியவளா பெண்?


போகிற போக்கில் சிறுநீர் கழித்துவிட்டுப் போவதைப் போல் ஆகிவிட்டது பெண்களுக்கு எதிரான வன்முறைகள்.!

தன்னை கற்பழித்துவிட்டான் என புகார் தெரிவித்தால் அவன் உன்னை எங்கெங்கு தொட்டான், அப்படி தொடும்போது சுகமாக இருந்ததா இணங்கித்தானே அவனுடன் இருந்திருக்கிறாய் என 'நாகரீகமாக ' வழக்குரைஞர்கள் கேட்கிறபோது 'தொழில் தர்மத்தின் உயரம்' எத்தனை  பெண்களின் கற்பு, ஒழுக்கத்தைக் கொன்று விட்டு அதன்   மீது அமர்ந்திருக்கிறது என்பது புரிகிறது!

காமுகர்களின் எளிதான இலக்குகளாக தலித் பெண்கள்தான் இருக்கிறார்கள். உயர்சாதியினரின் அரக்கத்தனத்துக்கு இரையாவது  அவர்கள்தான்!

அண்மையில் கேரளத்தில் தலித் பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு  அவளை கொலை செய்து விட்டார்கள்.அறிவு ஜீவிகள் அதிகம் வாழ்கிற  மாநிலம் என்கிற பெருமை வேறு!

பெரும்பாவூர் வந்திருந்த முன்னாள் நடிகை மீரா ஜாஸ்மின் பெண்ணியக்கவாதிகளை  அழைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை  சந்தித்தார்.

அவர் சொன்ன ஆலோசனை  ஒருவகையில் ஏற்புடையதாகவே இருந்தது.

''அப்பாவிப் பெண்களை வன்புணர்வு செய்கிறவர்கள் வாழ்நாள் முழுவதும்  வலியை சுமந்தாக வேண்டும். அப்போதுதான் அத்தகைய கொடூரன்களுக்கு அச்சம் இருக்கும்!

அவர்களை காயடித்து விடுங்கள்! இதுதான் ஒரே வழி! இதைத் தவிர  வேறு  வழி இல்லை!"என அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார்  மீரா ஜாஸ்மின்!

வரவேற்க வேண்டிய யோசனை!

நடிகை டாப்சி முன்யோசனையாக சில சொல்லியிருக்கிறார்.

"வன்முறையாளர்களிடம் இருந்து தப்புவதற்கு சில மரண அடிகளை பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும்!"

சரிதானே! என்ன சொல்கிறீர்கள் மக்களே?


ஞாயிறு, 27 நவம்பர், 2016

அம்மாவை மறக்கடித்த மோடி வித்தை!

தமிழக   அரசியல் தலைவர்கள்  'அம்மா'வையும்  மறந்து விட்டார்கள். அப்போலோவையும் மறந்து விட்டார்கள். அவர்களுக்கு இப்போது செலெக்டிவ்   அம்னிஷியா ! தற்போது  நினைவில் இருப்பது 'நமோ  நமோ' தான்!

மளிகைக்கடை மாதிரி தெருவுக்கு ஒரு கட்சி   நடத்துகிறவர்களைக் கூட விடாமல் தினமும்  அழைத்து வந்து அம்மாவை  நேரில் பார்த்தது போல  ரிப்போர்ட் கொடுக்க வைத்த சீசன்  தற்போது முடிந்திருக்கிறது.  கட்சியின் மந்திரவாதிகளின்  வசம் அப்போலோ  முதலாளி  கை பாணமாகி விட்டார்.

500,1000 ரூபாய்  நோட்டுகள் செல்லாது என கடந்த எட்டாம் தேதி பிரதமர்  மோடி அறிவித்த பிறகு எம்பெருமான் உலக பெருமுதலாளி ஏழுமலையானே நிர்க்கதியாக நின்று விட்ட பிறகு அம்மாவை பற்றிய கவலை எவர்க்கும் இல்லாது போயிற்று!

தமிழகத்தின் தேசிய சரக்குக்கடையே படுத்து விட்டது. கடந்த மாத டாஸ்மாக்  வியாபாரத்தை விட நடப்பு நவம்பரில் முப்பது சதவிகிதம் வியாபாரம் கம்மி என்கிறது ஒரு மீடியா. தமிழ்நாட்டு அரசுக்கு மூவாயிரம் கோடி இழப்பு  என்கிறார்கள்.

விற்பனை வரி வருவாய் குறைந்திருக்கிறது. கார் ,வீடு,பத்திரப்பதிவுகளில்  சறுக்கல். பத்திரப்பதிவில் எண்பத்தி ஐந்து கோடி குறைவு என்கிறார்கள்.

பிரதமர் மோடியினால் நிகழ்ந்திருக்கும் பொருளாதார இழப்பு பற்றி தமிழக  அரசு எவ்வித அறிக்கையும் கொடுக்கவில்லை. ஸ்தம்பித்து கிடப்பது பொருளாதாரம் மட்டும் இல்லை. ஏழை எளியவர்களின் வாழ்க்கையும்தான். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக சொல்லி  சாமான்யர்களின் நடைமுறை வாழ்க்கையையும் மோடியின் திட்டம் முடக்கிப் போட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வாராக்கடன் என சொல்லி விஜய்மல்லையா போன்ற பணமுதலைகளை காப்பாற்றி இருப்பது  ஒருவகையான அரசியல் சாணக்கியம்தான்!

தமிழக அரசியல் கட்சிகள் பெயருக்குத்தான் எதிர்ப்பு காட்டி வருகின்றன.
நாளைய தேர்தல் கூட்டணி பற்றிய கவலையில் மக்களின் நலனை மறந்து விட்டார்கள். மக்களும் நாளைக்கே தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் யார் இரண்டாயிரம் தருவார்களோ அவர்களுக்கே வாக்கு போடுவார்கள்.

அது அவர்களின் தேர்தல் கால வருமான உயர்வு!



சனி, 26 நவம்பர், 2016

எல்லா புகழும் அந்த மோடிக்கே மச்சான்!

கிச்சு கிச்சு மூட்டுறேன்!
-----------------------------
கணவன்: " சிகரெட்  குடிக்காதேடா  பன்னாடைன்னு  உன்  பிள்ளைக்கு  புத்திமதி  சொன்னா  அந்த  புறம்போக்கு  எனக்கு  புத்தி  சொல்றான்டி! "

மனைவி: " அப்படி  என்னங்க  என் பிள்ளை  சொன்னான்?"

கணவன்.: " சின்னப்பயல்களுக்கு  அழகு  சிகரெட்டும்  பீடியும். ! பெரிசுகளுக்கு  அழகு  பெண்டுகளை  தேடுறது....போய்யா...போய்  தேடுய்யான்றான்!"
****************************
கியூ வரிசையில செட் ஆயிடுச்சு!
-----------------------
நண்பன்.: " உன்  லவ்வர்  சூப்பர்  பிகர்டா! எந்த  காலேஜ்ல டா  மச்சான்  பிடிச்சே?"

மற்றவன்.: " செல்லாத  ரூபாயை  மாத்துறதுக்கு  பாங்க்  கியூவ்ல  நின்னப்ப  
எங்க  லவ்  ஸ்டார்ட்  ஆகிடுச்சு  மச்சி! எல்லாப்புகழும் அந்த  மோடிக்கே! "
**************************
கீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்டாட்டி வேணும்!
-------------------
அப்பா.: " உனக்கு பொண்ணு பார்க்க போறம்டா மகனே! எப்படிப்பட்டவ  பொண்டாட்டியா வரணும்னு  ஆசைப்படுறே?"

மகன்.: "அழகில கீர்த்தி சுரேஷ் மாதிரி! சைஸ்ல திரிஷா மாதிரி ! பழகுறதில ஹன்சிகா மாதிரி! .....!"

அப்பா.: கஷ்டம்டா மகனே! சட்டப்படி  ஒரு பொண்ணைத்தான் கட்டிக்க  முடியும்!"

மகன்.: ??????????????????
************************
கடவுள்.: " பக்தா.! உன்  கடும்தவத்தை  மெச்சினோம்! உனக்கு  என்ன  வேண்டும்? கேள் ?"

பக்தன்.: " ஜனார்த்தன்  ரெட்டி மாதிரி  ஒரு  மாமனார்  வேண்டும்  பிரபோ!"

கடவுள்: " எம்மால்  முடியாது. நீ  மோடியை  நோக்கி  தவம் செய்!"
----------------------------------------------------------------------
வலைப்பூ  நாயகர்களே!  உங்க  பதிவை  கொஞ்சம்  போடுங்க  சாமி! கொலைப்பட்டினியா  கெடக்கேன்!

எத்தனை கொலை முயற்சிகள்...மாபெரும் போராளியை சாய்க்க!

சின்னஞ்சிறு நாடுதான் கியூபா. அமெரிக்க வல்லரசுக்கு சவாலாக திகழ்ந்தது.

 அந்த ஜீவ பூமியை கழுகின் கூரிய நகங்கள் கொத்திப்போக துடித்தது.

சிம்மமாக சிலிர்த்து கர்ஜித்தார்  மகத்தான போராளி பிடல்காஸ்ட்ரோ!

ஆதிக்க வெறியர்களின் கொள்ளிக்கண்கள் படாமல் பாதுகாத்தார். அதற்கு  சர்வாதிகாரமும் அவருக்கு தேவையாக இருந்தது.மக்களும் அவரது பக்கம்.அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் முள் செடியை அல்ல , மரத்தையே நட்டு வைப்பதில் கைதேர்ந்தது  அமெரிக்க உளவுத்துறை ! துரோகிகளின் துணையுடன் பொருளாதாரத்தையும் சிதைக்கும் ஆற்றல் அந்த வல்லரசுக்கு உண்டு.

அந்த அரக்கனையே மண்டியிட வைத்த மாவீரன் பிடல்  இன்று நம்மிடையே  இல்லை.தனது தொண்ணூறாவது வயதில் இயற்கையின் கரங்களில் ஒப்படைத்துவிட்டார்.

சர்ச்சிலும் சுருட்டு குடித்தார். அதில் எவரும் விஷம் கலக்கவோ,வெடி வைக்கவோ எண்ணியதில்லை.

ஆனால் சுருட்டும் தாடியும் அடையாளமாக கொண்ட இந்த அதிசயமனிதனை கொல்வதற்கு விஷம்,வெடி இரண்டையும் வெவ்வேறு கட்டங்களில் முயற்சி  நடந்தது,

ஆச்சரியப்படாதீர்கள். அறுநூறு முறை பிடல்காஸ்ட்ரோவை சுட்டுக் கொல்வதற்கு உளவுத்துறை முயன்றிருக்கிறது.

150000 டாலர்கள் கூலிப்படைக்கு  கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்டிருந்தனர். அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு நியூயார்க் வரும்போது தீர்த்துக் கட்டவும்  முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அந்த சிவப்பு சிந்தனையாளனுக்கு முடிவு கட்ட வல்லரசுகளால் முடியவில்லை.

கண்ணீர் விட்டு கதறிய பிரியாமணி!

முள்ளம்பன்றி மேல் பட்டுத்துணியை போர்த்தி மறைத்தாலும் முள்ளின் முனை தெரியாமலா போகும்?

வதந்திகள் படிப்பதற்கும் கேட்பதற்கும் சுவையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபரை காயப்படுத்தாமல் அது காயப்படுத்தாமல் விடுவதில்லை.

வதந்திகளும் கிசுகிசுக்களுமே வாழ்வின் அங்கமாகிப் போகுமானால் மனம் மரத்துப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

திரை உலகில் சிலரின் மனம் ரணமாகி இருந்ததும் தெரியும். சிலர் துடைத்துக் கொண்டு வாழ்க்கையை தொடர்வதும் தெரியும்!

இவர்களில் முதல் வகை  நடிகை பிரியாமணி .என்றாலும் பல நேரங்களில் 'டோன்ட் கேர் பெண்ணாகவும் இருந்திருக்கிறார். ஒருவேளை அவரை பாதிக்காது இருந்திருக்கலாம்.காதலித்தவரையே கல்யாணம் செய்து

கொண்டவர் பிரியாமணி.

அவரே மனம் திறந்து ஒரு சம்பவத்தை சொன்னார்.

"நவ வசந்தம் படத்தில் தருணுடன் இணைந்து பணியாற்றியபோது நடந்தது. தமிழ்ப்பத்திரிகை நிருபர் ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி நொறுக்கிவிட்டது. ஆடம்பரக் கார் வாங்கித் தந்தாராமே என்றதும் என்னால் தாங்க முடியவில்லை. வீட்டுக்கு சென்றதும் கதறிக் கதறி அழுதேன். என் அப்பாதான் எனக்கு ஆறுதல் சொன்னார் .என்னால் மறக்கமுடியாத சம்பவம் அது" என்கிறார் பிரியாமணி!

நடிகை என்றாலே சொர்க்கத்தில் வாழ்கிறவர்கள் என்றுதான் எல்லோருமே நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் கொடுக்கிற விலை?

நரகம் என்பதை நகரத்திலேயே அனுபவித்து விடுகிறார்கள்.

அண்மையில்  பாகிஸ்தானில் கோர ...கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

கிஸ்மத் பெய்க் என்றொரு நாடக நடிகை.!

நாடகத்தில் நடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது ஒருவன் அவளை பின் தொடர்ந்திருக்கிறான். காருக்குள் இருந்தவளை பதினோரு தடவை சல்லடையாக சுட்டுக் கொன்றுவிட்டான்.

காரணத்தை தேடுகிறது பாக்.போலீஸ்! 

கேப்டன் என்ன செய்யவேண்டும்?

சுழன்று அடிக்கும் சுழல் காற்றைப் போல கேப்டனின் தேமுதிக.!

வீச்சுப் பலம். திமுக,அதிமுக என வலிமையான மரங்களின் வேர்களையே ஆட்டிப் பார்த்துவிட்டது. சுழலும் புயலும் நிரந்தரம் இல்லை என்றாலும் அதனுடைய  வீச்சு சேதாரத்தை அதிகமாக்கியது. கலைஞரையும் , அம்மாவையும் அச்சப் படுத்தியது என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

வளமும் பலமும் பார்த்தே ஆதரவை நல்கும் மீடியாக்களும் கேப்டனுக்கு லாலி பாடின!  மீடியாக்களின் தயவில் கட்சியை வளர்க்கும் சின்ன கட்சிகளும் விஜயகாந்தின் துணையுடன் தங்களின் தோற்றத்தை பிரமாண்டப்படுத்திக் கொண்டன.

ஆனால் விஜயகாந்தின் சுகவீனம் அவரை மட்டுமல்ல அவரது கட்சியையும் அவருடன் சேர்ந்தவர்களையும் படுக்கவைத்துவிட்டது.இடைத்தேர்தல் முடிவுகள் சிக்கன் குனியாவா பன்றிக் காய்ச்சலா என இன்னமும் ஆராய்ச்சி கூடத்தில்!

விஜயகாந்தின் குடும்ப அரசியல்தான்  தேமுதிகவின் வீழ்ச்சிக்கு அடித்தளமாகி இருக்கிறது என்பது  சத்தியம் .தொண்டர்கள் திருமதி பிரேமலதா அம்மையாரின் பிரவேசத்தினால் மிரண்டு போயிருக்கிறார்கள். எவ்வளவு வேப்பிலை அடித்து மந்திரித்தாலும் மிரட்சி நீங்கப்போவதில்லை என்கிறார்கள்.

கேப்டனை பார்த்துதான் அவரின் அரசியலை ரசிகர்கள் நம்பினார்கள்.அவரது படத்தின் வசனங்களும் காட்சிகளும் அவரது இமேஜை உயர்த்திக் காட்டின. எதையெல்லாம் படங்களில் கண்டித்தரோ அவையெல்லாம் அவரது கட்சிக்குள்ளேயே அரங்கேறியது .

அது வீழ்ச்சிக்கு விதை ஆகியது.

கிட்டத்தட்ட அதிமுகவின் அம்மாவும் சின்னம்மாவும் போல தேமுதிகவிலும் !

கூட்டணி சேர்ந்த வைகோவின் வாக்குமூலம் விஜயகாந்துக்கு மிகுந்த பின்னடைவு!

முதல்வர் பதவிக்கு கேப்டன் தகுதி இல்லாதவர் என்பதைப் போல  மறைமுகத் தாக்குதலாகவே வைகோவின் வாதம் அமைந்திருந்தது.

அவரது அரசியலே தாக்குவதும், தாக்கியவரை தாங்குவதும்தான்! அவரது  கூடாரம் காலியாக கிடப்பதைப பற்றிய கவலை இல்லாமல் அடுத்தவரின்  கூடாரம் பற்றி கேலி பெசுகிரவர்தான் வைகோ!

இவர்களைப் பற்றி கவலைப்படாமல் தேமுதிகவின் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவை ,நம்பிக்கையை கேப்டன் பெற்றாக வேண்டும். அது முடியுமா, ?

களம் இறங்கிப் போராட வேண்டும். முடியுமா ?

செவ்வாய், 22 நவம்பர், 2016

அதிமுகவின் சுப்ரீம் பவர் சசிகலாதான்!

ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்துப் பார்த்தால் .....

என முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன். ஒரு தொகுதியில் திமுக  வர வாய்ப்பு இருக்கலாம் என சொன்னது பொய்யாகிப் போனது.

மூன்று தொகுதியிலும் ஆளும் அண்ணா திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

"படுத்துக் கொண்டே ஜெயிப்போம் " என சொல்லி வருகிறார்கள்.அது இயல்புதான்!

கடுமையான பணத் தட்டுப்பாடு, ஐநூறு, ஆயிரம் ரூபா தாள்கள்  வெறும் காகிதமாகிப் போன நிலையில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்ட நிலையில் பாஜகவுக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது.

இது பாஜகவின் வளர்ச்சியை மட்டும் காட்டவில்லை. தேமுதிகவின் கடுமையான வீழ்ச்சியையும் படம் பிடித்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியின்  எதிர்காலத்தையும் கேள்விக்குறி கவ்வி இருக்கிறது. அந்த கூட்டணி எதிர்வரும் காலத்தில் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியிடம் சரண்  அடைந்தால் மட்டுமே வாழ்வு என்பதையும் சுட்டி இருக்கிறது.

ஆட்சியில் இருந்ததால் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.அதிகாரபலம் பண பலம் இரண்டும் அந்த கழகத்துக்கு துணையாக இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது. சசிகலாவின் சாணக்கியம்  கழகத்தவரிடம் ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கிறது. முதல்வர் முழுமையாக குணம் அடையும்வரை அவர்தான் அதிமுக.!

திமுகவின் உள்கட்சி பிரச்னை ,கட்டுக்குள் அடங்காத போக்கு அந்த கழகத்தை காவு வாங்கிவிட்டது. அனுசரித்துப் போதல் என்பது தொண்டர்களைப் பற்றியதாகவே இருக்கவேண்டும்.ஆனால் தனிப்பட்டவரை சார்ந்து போவதே  அனுசரித்துப் போவது என அர்த்தம் கற்பித்ததால் அந்த கழகத்தில் ஆதிக்க போக்கு தலை தூக்கி இருக்கிறது.இது அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம்.

ஒரு பாமரனின் நிலையில் இருந்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன்.

தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள்.


திங்கள், 21 நவம்பர், 2016

ரஜினியின் படம் வடஇந்தியர்கள் துவேஷம்., ஹன்சிகாவின் கல்யாணம் ?

தமிழ்நாடு என்றால் வடநாட்டவர்களுக்கு இட்லிவடைதான் தெரியும்! நடிகர்கள் எவ்வளவுதான் உலகத்தரத்தில் படம் கொடுத்திருந்தாலும்  பாராட்டுகிற எண்ணமே வடநாட்டு பத்திரிகைகளுக்கு  இருந்ததில்லை.

ஷங்கரின் டூ பாயின்ட் ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர்கள்  அவ்வளவாக பாராட்டவில்லை. அழையா விருந்தாளியாக வந்த சல்மானையும் வறுத்து எடுத்துவிட்டார்கள்.

ஆறு கோடி செலவில் விழா எடுத்திருந்தும் நிறைவாக இல்லை. விழாவில்  குளறுபடி .அடிக்கடி இடையூறுகள் என குற்றம் கண்டுபிடித்தே எழுதி இருக்கிறார்கள்.

ரஜினிகாந்தின் அவையடக்கமான பேச்சை அக்ஷ்யகுமாருக்கு சாதகமாக மாற்றி ' படத்தின் ஹீரோவே அக்ஷய்தான்' என்பதாக குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். அமிதாப்பச்சன் கலந்து கொள்ளாததையும் மிகைப்படுத்தியிருக்கிறார்கள்

இப்படியெல்லாம் எழுதினாலும் நாம்தான் கலைக்கு மொழி இல்லை எல்லோரும் கலைஞர்கள்

என்று பொய்யை பூசிக்கொள்கிறோம்.

நமக்குள் எங்கேயோ பலவீனம் பதுங்கி இருந்து கொண்டிருக்கிறது.கேரள சகோதரர்களுக்கு இருக்கிற ஆண்மை நமக்கு இல்லை.

இன்னொரு செய்தி ஹன்சிகாவுக்கு போதிய படங்கள் இல்லை என்பதால்  மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆனால் இந்த தகவலை  ஹன்சிகாவின் அம்மா மோனா மறுத்து இருக்கிறார்.

"என் மகளுக்கு இருபத்தி நாலு வயதுதான் ஆகிறது. அதனால கல்யாணத்துக்கு என்ன அவசியம்?" என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் ஹன்சிகா அப்படி கேட்கவில்லையே!

ஞாயிறு, 20 நவம்பர், 2016

ராகுல்காந்திக்கு திருமணம் எப்போது?

இந்தியாவே எதிர்நோக்கி இருப்பவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். முக்கியமானவர். காங்கிரஸ் பேரியக்கத்தின் நம்பிக்கை.ஆசியஜோதி நேருகுடும்பத்தின் வாரிசு.

தற்போது வயது நாற்பத்தி ஆறு! இன்னும் இந்த கன்னக்குழி அழகனுக்கு  மணம் நடக்கவில்லை!

நாட்டு பிரச்னைகளில் உயிரைப் பற்றிய கவலை இல்லாமல் ,தீவிரவாதிகளின்  மிரட்டலுக்கும் பயப்படாமல் பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி மக்களுடன் கை குலுக்குவது தாத்தா அப்பா அப்பத்தா காட்டியவழி!

இதை எதிர்க்கட்சிகள் ' நாடகமாடுவதாக " சொல்கிறார்கள். அது அவர்களது  பாணி!

இன்னும் அவருக்கு மணம் நடக்கவில்லை என்பதைக் குறித்து அம்மா சோனியா காந்தியும் ,காங்.கட்சியும் கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை. ஒரு வேளை மனதுக்குள் புகைந்து கொண்டிருக்கிறார்களோ என்னவோ?

 ராகுலை பற்றிய தகவல்களை தேடியபோது அவரது பெண் சிநேகிதிகளைப்
பற்றிய  செய்திகள் கண்ணில் பட்டது.

2012- ஜூன் மாதம் சண்டே கார்டியனில்  ஆப்கன் இளவரசி  நோயல்ஜாகரும் ராகுல்காந்தியும் டில்லி அமன் ஹோட்டலில் சேர்ந்து  காணப்பட்டார்கள். இதே ஜோடியை பிரான்சிலும் ஒன்றாக பார்த்ததாக எழுதப்பட்டிருந்தது. நோயல் மதம் மாறி கத்தோலிக்கராகிய  பின்னர் இருவரும் சேர்ந்து சர்ச்சுக்கு போனார்கள் .ஆனால் எகிப்திய இளவரசர் முகமதுவை நோயல் மணந்துகொண்டு   அந்த நட்பு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

1998-ல் வெரோனிக் கார்செலி என்பவரை கேம்பிரிட்ஜில் சந்தித்திருக்கிறார்  ராகுல். 1998-ல்  அம்மா சோனியாவுக்காக தேர்தல் பிரசாரம் செய்தபோது  ராகுலுடன்  வெரோனிக்கும் இருந்திருக்கிறார். இந்திய இங்கிலாந்து உலக கிரிக்கெட் போட்டியை  பார்ப்பதற்கு  இருவரும் பர்மிங்காம்  சென்றிருந்தனர். அவர்களது புகைப்படம்  வைரல் ஆகியது.

அந்தமானில் இருவரும்  ஓய்வு எடுத்தார்கள்.லட்சத் தீவு , கேரளம் ஆகிய இடங்களில் சகோதரி பிரியங்கா குடும்பத்துடன்  இவர்கள் இருவரும் சேர்ந்து  காணப்பட்டனர்.

இதற்கு பின்னர் அந்தப் பெண்ணைப்பற்றிய பெயர் மற்றும் இதர தகவல் பிழையாக வெளியானது .அதை மறுத்து ராகுல்காந்தியே பேட்டி அளித்திருந்தார்.

"அவர் எனது கேர்ள் பிரண்ட்.பெயர் வெரோனிக்.ஸ்பானிஷ் . ஆர்க்கிடெட். நல்லவர்." என்றார்.

அவரைப் பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை,

சனி, 19 நவம்பர், 2016

சின்ன வெங்காயம் சிற்றின்பம் பெருக்குமா...இடைத்தேர்தல் முடிவுகள்?

இன்னும் இரண்டு நாளில் முடிவுகள் தெரிந்துவிடும்!இடைத்தேர்தலின் பலன்கள்!

ஆண்டியின் கோவணத்தை அவிழ்த்தால் அதிசயமா நடக்கும்?

இப்படித்தான் முடிவுகள் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்!

அதிகார மீறல், பணத்தட்டுப்பாடு நெருக்கடியில் தாராள பணப் புழக்கம்,காவல்துறையின் ஒத்துழைப்பு,அமைச்சர்களின் நேரடிப் பார்வை -இவ்வளவும் அதிமுகவுக்கு ஆதரவு!

இவைகளுக்கு தி.மு.க.வினால் பதிலடி கொடுக்க முடிந்ததா? தடுக்க முடிந்ததா? இடைத்தேர்தல்தானே...என்ன மாற்றமும் ஏற்படப்போவதில்லை  என்கிற மனப்பான்மையுடன்தான் வேலை செய்தார்கள்.

ஜெயித்தால் படுத்தபடியே ஜெயித்தோம் என்றே  மனசாட்சியை மண்மூடி  புதைத்து விட்டவர்கள் சொல்லப்போகிறார்கள்.

ஆளும் கட்சியும் அதிகாரவர்க்கமும் சேர்ந்து செய்த அடாத செயல்களால்  வெற்றி பெற்றார்கள் என எதிர்க்கட்சியினர்  சொல்வார்கள்.

ஆனால் இவைகளையும் மீறி  எதிர்பாராதவை நிகழ்ந்து விட்டால்?

நடக்குமா? வாய்ப்பு இருக்கிறது!

திருப்பரங்குன்றம் தவிர்த்து மற்ற இரு தொகுதியிலும்.....  ஒன்றிலாவது  வரலாம்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி கட்சிக்காரர்களுக்கு இருந்த கவலை மக்களிடம் காணப்படவில்லை.

அவர்கள் அன்றாடம் பட்டுக்கொண்டிருக்கும் அவதிகளுக்கு வழி தேடுகிறவர்களாக மாறி இருக்கிறார்கள்.

உண்மையிலேயே வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கிற மக்கள் விழித்தெழும்  வரை மத்தியதர மக்களும் படித்த வாக்காளர்களும் அளிக்கிற வாக்குகள்  பலன் இன்றியே போகும்.

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறவர்கள் அனைத்துக்கட்சிகளின் விசுவாசிகளாக மாறிக்கிடப்பதால் ஜனநாயகம் போதையிலேயே கிடக்கிறது..

சின்ன வெங்காயம் சிற்றின்பத்தை பெருக்கும் என்பது பெருங் குடிகாரனுக்கு  பொருந்தாது,!

எனது கருத்தில் மாறுபடுகிறவர்கள் இருப்பார்கள் என நினைக்க வில்லை.!

ஆளும் அதிகாரவர்க்கத்துக்கும் திமுகவுக்கும் நடக்கிற பலப் பரீட்சையில்
அதிசயம் நிகழாது!

"உங்களுடன் நான் படுத்துக்கலாமா?"--நடிகையிடம் கேட்ட நடிகர்!

இமாச்சல பிரதேசத்தில் படப்பிடிப்பு!

அமிதாப்பச்சன் ---ஜீனத் அமன் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

படப்பிடிப்பு முடிந்தது.

நடிகை ஜீனத் தனது அறைக்கு திரும்பியபோது  ஒரு குரல் !

" நீங்க  ரூமில் தனியாத்தான் படுத்துப்பிங்களா"?

"ஆமா ...நான் மட்டும்தான் படுத்துப்பேன்."

"அப்ப நான் உங்க கூட  படுத்துக்கலாமா?"

இந்த கேள்வியை ஜீனத் எதிர்பார்க்கவில்லை.

"படுத்துக்கலாம்! ஆனா நீ இன்னும்  பெரியவனாகல! அப்ப வந்து கேளு!" என்று சொல்லி அந்த சிறுவனின் தலையில் செல்லமாக தட்டினார் ஜீனத் அமன்.!

அந்த சிறுவன்  அபிசேக் பச்சன் .அவருக்கு வயது ஐந்து!












'



விலைமகளுக்கு தூக்கு ! பிரதமரின் கொடுமையான தீர்ப்பு.!

வேடிக்கையான வழக்குகள்.! விசித்திரமான தண்டனைகள்!

பழைமையான கதைகள், சரித்திர நிகழ்வுகள், நடைமுறை வாழ்க்கை என  சகலத்திலும்  காணப்படும் ஆச்சரியங்கள்!

அதில் ஒரு ஆச்சரியம்தான் இந்த கான்ஸ்டான்டியா ஜோன்ஸ்.

லண்டனில் வாழ்ந்த பிரபலமான விலைமகள்!

பிரபுக்கள் ,அதிகாரிகள் மட்டும்  வந்துபோகும்  பிரத்யேக பிறவி!

அப்படி வந்துபோன ஒரு பிரபு தனது  இழிகுணத்தைக் காட்டிவிட்டான்.

இங்கிலாந்து பிரதமர் ராபர்ட் வால்போலிடம் மட்டமான  புகார்.!

"நான்  சுவர் ஓரமாக நின்றிருந்தேன். ஜோன்ஸ்  நெருங்கி வந்தாள். ஒரு கையால் என்னை........பிடித்துக்கொண்டு என் பையில்  இருந்த முப்பத்தி ஆறு  ஷில்லிங்க்சை

  திருடிச்சென்று விட்டாள்"

இதுதான் அந்த ஜென்டில்மேன் கொடுத்த புகார்.

அந்த காலத்தில் திருடுவது என்பது தாராளமாக  இருந்ததுதான்! விபசாரமும்  அப்படிதான் இருந்தது!

ஆனால் பிரதமருக்கு  அது  கொடுமையான குற்றமாக தெரிந்திருக்கிறது!

பிரபுவிடம் திருடியதற்காக  ஜோன்ஸ்க்கு மரண தண்டனை!

இருபது தடவை சிறை சென்றிருந்தவளுக்கு தூக்கு!

முப்பது வயதான அந்த இளம்பெண்ணை  டிசம்பர் இருபத்தி இரண்டாம் தேதி 1738-ம் ஆண்டு  தூக்கில் போட்டு விட்டார்கள். 278 -ஆண்டுகள்.!

இப்படி  நீதி எத்தனையோ  தடவை கொலைகளை செய்திருக்கிறது.  

ஷாஜகான் --துக்ளக் உயர்வான காதல் யாருடையது?

உயர்வான  காதல் ,தாழ்வான  காதல் என  உண்மைக் காதலை பிரிக்கமுடியாது. காதல் என்பது  உயர்வானது ,கண்ணியமானது. அவ்வளவுதான்!

காமத்தின்  அடிப்படையில் வருவது  காதல் இல்லை. அது உடல் பசிக்கான  இரையைத்  தேடுவதாகும்.

காதலின்  மேன்மையை  சொல்வதுதான்  தாஜ்மஹால் என்பார்கள். 

அது  சரியானதுதானா? மும்தாஜின்  இழப்பை  தாங்க இயலாமல்தான்  ஷாஜகான்  தாஜ்மகாலை எழுப்பினாரா?

மும்தாஜ்  மரணித்த இடத்தில்  அந்த கனவு மாளிகை  அமையவில்லை  என்பது  சரித்திரம்.

அவள்  மரணத்தை  தழுவியது  ஜூன்  17 -ம்  நாள்  1631.

அவள்  ஷாஜகானின்  முதல் மனைவி  இல்லை. ஏழு மனைவிகளில்  அவள்  நான்காமவள்.

பதினான்காவது  தடவையாக  கரு தரித்தபோது  அதை  தாங்கும் வலிமை  அவளுக்கு இல்லை.  கருப்பை பலவீனம்  அடைந்திருந்தது.  அதனால் மரணம் சம்பவித்தது.

முகலாய மன்னர்களுக்கு  காதல் என்பதை  விட  காமத்தை  தணித்துக்கொள்வதற்கு  பெண்கள்  தேவை!  அதனால் தான்  மாமன்னன்  அக்பரின்  அந்தப்புரத்தில்  5000 மனைவிகள்! 

அக்பருக்கு சரசமிடத் தெரியாது.  பஞ்சணையில்  படுத்துறங்கும்போது  பக்கத்தில்  எத்தனையோ  மனைவிகள்! ஆனால் முன்னூறு பெண்கள்தான்  மனைவியராகவும்  ஆசை நாயகியராகவும்  வாழ்ந்தனர் என்கிறார்  பெல்ஜியம்  வரலாற்று  ஆசிரியர் டிரிக்  காலியல். 

ஆக  அக்பர்  அத்தனை மனைவிகளுடன்  வாழ்ந்தார் என்பதால்  அது  காதலின்  வெளிப்பாடு  என சொல்ல முடியுமா?

ஆனால் பிருஷ் ஷா  துக்ளக்  இளவரசனாக  இருந்தபோது  காட்டுக்கு  வேட்டை ஆடச்செல்வது  வழக்கம். நாட்டில் இருந்ததை விட  காட்டில்  இருந்ததுதான்  அதிகம்.

ஒருநாள்  வேட்டை ஆடியபோது  காட்டுக்கு மத்தியில்  குடிசைகள்  அமைத்து  மக்கள்  வாழ்வதைப் பார்த்தான். அவர்கள்  புலம் பெயர்ந்தவர்கள் அல்லது  வாழ்வதற்கு  வழி தேடி  வந்தவர்கள்.

அவர்களுக்கு  குஜ்ரி  என்பவள்  தினமும்  பால் விற்பனை  செய்து வந்தாள். 

வழியில்  அவளைப் பார்த்த  துக்ளக்  ஆசைப் பட்டார். அவளும்  இணங்கினாள். இதை  காதல்  என்றும் சொல்லலாம். 

தன்னுடன்  டில்லிக்கு  வந்துவிடும்படி  அவளை  துக்ளக்  வற்புறுத்தியபோது  உடன் செல்ல குஜ்ரி  மறுத்து விட்டாள்.

இதனால்  அவளுக்காக  ஹிசாரில்  ( ஹரியானா.) ஒரு மாளிகை  எழுப்பினான்  துக்ளக்..

அது  இன்றும்  குஜ்ரி மஹால்  என அழைக்கப்படுகிறது

அவளுடன்  துக்ளக்  வாழ்ந்தான் ,அன்பை  பொழிந்தான். 

ஷாஜகானைப்  போல  மனைவி  மாண்டபின்னர்  மாளிகை  அமைக்கவில்லை. ஆனால்  வாழ்வதற்காகவே  மாளிகையை  கட்டினான்.

மார்பிளால்  கட்டப்பட்டதால்  தாஜ்மகாலுக்கு  பெருமை. 

அன்பின்  வெளிப்பாடு  குஜ்ரி மகால்.

இப்போது  சொல்லுங்கள்  எது  உயர்வு ?

.

செவ்வாய், 15 நவம்பர், 2016

கணவனை கொன்றவனை கடவுளுக்கு இரை ஆக்கு!

ராணி  ஜெரோபியா!

ரோமன் பேரரசுக்கு எதிராக புரட்சி  செய்தவள்!

ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் பெண்களும்  என்பதில் மூன்றாம்  நூற்றாண்டிலேயே முனைப்பு  காட்டியவள்.

முகம் கருப்புதான் ,ஆனால் முத்து போன்ற பற்கள்.! அழகி. ஆனாலும் குரலில் சற்றே  ஆண்மைத்தனம். நான்கு  மொழி  தெரிந்தவள். புத்தகம் எழுதியிருக்கிறாள்.

குதிரையில்  அமர்ந்தபடியே  சிங்கங்களையும் , கரடிகளையும்  குத்தீட்டியால்  குத்தி சாய்த்த வீரமிக்கவள்!

பெர்சியாவையும்  கடந்து  போர்  புரிந்தவள்.

எகிப்தின் கிழக்குப்பகுதியை  கைப்பற்றி  தன்னை  ராணியாக  அறிவித்துக் கொண்டாள். போரில் கணவனை  கொன்றவர்களை  கண்டுபிடித்து  அவர்களை  கடவுளுக்கு  பலி  கொடுத்தாள்.

இவள்  சிறை பிடிக்கப்பட்டபோது  தங்கச்சங்கிலியினால் பிணைக்கப்பட்டு  ரோம் நகரில் தெருக்கள்  வழியாக  அழைத்துச்செல்லப்பட்டதாகவும்   இல்லை அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும் எழுதுகிறார்கள்.

இவள்  கிளியோபாட்ராவுக்கு  உறவு!

நடிகைன்னா கேவலமா....பிரிச்சி மேய்ந்தார் ஸ்ராவ்யா ரெட்டி....

ஸ்ராவ்யா ரெட்டி.!

ஆந்திராவின் அமர்க்களம். பார்ப்பதற்கு முயல் மாதிரி இருந்தாலும் பாய்ந்தால் சிறுத்தைதான்!
அண்மையில் பேஸ்புக்கில் தனது படத்தை வெளியிட்டிருந்தார்.

கவர்ச்சி என்பது இன்றைய திரை உலகத்தில் தவிர்க்க இயலாத அம்சமாக இருக்கிறது.!

இடுப்பும் ,எடுப்பும் கவிதைகளை வரவழைத்தால்
அந்த நடிகை கண்டிப்பாக உச்சத்தில்தான் இருப்பார்  என்பது எழுதப்படாத சட்டமாக  இருக்கிறது. அத்தகைய நடிகையின் கவர்ச்சி படத்தைப் பார்த்தால் எளியவனும் சுருண்டு விடுவான்!

படத்தை பார்த்தவர்கள் 'கவர்ச்சியை' வர்ணித்தார்களே தவிர ஸ்ராவ்யாவை புகழ்ந்தவர்கள் வெகு சிலரே!

கச்சுக்குள் கிடக்கும் கர்வமே என்று வார்த்தைகளால் வரைந்து தள்ளி விட்டார்கள்.

புகழ்வதற்கும் எல்லை உண்டே....அதை கடந்ததும் பொங்கிவிட்டார்!

"என்னய்யா  உங்ககிட்ட  என்னை பாராட்டுங்கய்யான்னு  கேட்டேனா? என்னுடைய உடல் அழகை ரசிங்கப்பான்னு  சொன்னேனா? எனது  மார்பகத்தை  நீங்க ஒன்னும் புகழ வேணாம்! எனக்கு   ஐ ஹாவ்  அமேஸிங்  பூப்ஸ். அதனால் உனக்கு என்ன? உங்க அம்மாவிடம் இல்லையா? போங்கப்பா! உங்க அம்மாவிடம் போய்  அவங்க 'அளவை' கேளுங்க "

இப்படி சுனாமியாக கிளம்பியிருப்பவரை பார்த்து 'டோலிவுட்' ஆச்சரியப்பட்டு கிடக்கிறது.!

சனி, 12 நவம்பர், 2016

வச்சுடாய்ங்கண்ணே ஆப்பு ...ஜல்லிக்கட்டுக்கு!

''அண்ணே. ஜல்லிக்கட்டுக்கு  வச்சுட்டாய்ங்கண்ணே ஆப்பு?"

மதுரை ,முகவை மாவட்டங்களில்  இருந்து  சிலர்   வருகிற  தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கு முன்னதாகவே இப்படி  குமுறினாலும் அது வியப்புக்குரியது இல்லை! 2014-ல்  ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட  தடை  வருகிற புத்தாண்டிலும் தொடரலாம் என்பதே இன்றைய மார்க்கெட் கலவரம்.!

பா.ஜ.க.அமைச்சர் மதிப்புமிகு பொன்னார் அவர்கள் என்னதான் வாக்குறுதி கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் செவி சாய்ப்பது மாதிரி தெரியவில்லை.

"பழந்தமிழரின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு"

"சரி! பதினாறாம் நூற்றாண்டில் அடிமைகளைப் போல மனிதர்கள் நடத்தப்பட்டார்கள். அது கரெக்ட் என்று சொல்வீர்களா?"

உச்ச நீதிமன்ற நீதிபதி பகிரங்கமாகவே ஓப்பன் கோர்ட்டில் இப்படி கேட்டிருக்கிறார்.

பாஜக என்ன சொல்கிறது?

"மராத்தான் ஓட்டங்கள் நடக்கிறதே...ஐஸ் கட்டியை கை,தலையினால் உடைக்கவில்லையா? அது மாதிரிதான் ஜல்லிக்கட்டும்!"

சாமர்த்தியமான பதில்தான் என  'பேஷ் பேஷ் ...பலே பாஜக" என முதுகை தட்டிக்கொடுத்தால் உச்சந்தலையில் ஓங்கி விழுகிறது சம்மட்டி!

"அது மனிதர்களின் தனிப்பட்ட விருப்பம். இஷ்டப்பட்டு கஷ்டங்களை  தாங்குகிறார்கள். ஆனால் காளைகள் விருப்பமுடனா ஜல்லிக்கட்டு  நடக்கிறது? சொல்லுங்கய்யா! அதை கட்டாயப்படுத்துவது  சரியா?"

இதுவும் உச்ச மன்ற நீதிபதியின் கேள்விதான்!

"மாண்பமை நீதிபதி அவர்களே! ஜல்லிக்கட்டு என்பது  விளையாட்டுதான்!" என்று மத்திய அரசு சொல்ல அதற்கு அந்த நீதிபதி வைத்தார் ஆப்பு.!

" அப்படியானால் வீடியோ கேம்ஸ் விளையாடுங்க! ஒரு பக்கம் பசுவை அன்புடன்  பாதுகாக்க சொல்கிறீர்கள். மறுபக்கம் மனிதர்களின் பொழுதுபோக்கு கருவியாக காளைகளை பயன்படுத்தப் பார்க்கிறீர்கள். சட்டப்படி அனுமதிக்கமுடியாது" என்கிறார்  நீதிபதி.

இவை அனைத்துமே உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கருத்துதான்!

இதை மத்திய,மாநில அரசுகள் எவ்வாறு  எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான்  நமது எதிர்பார்ப்பு.

தமிழர்களின் வீர விளையாட்டை காப்பாற்றவேண்டிய அதிமுக அரசு ஆழ்ந்த  உறக்கத்தில் !

யார் எழுப்புவது?


காதலில் மன்னன் கம்பனா, பாரதியா?

வலைப்பூவின் எனது இனிய உறவுகளே,

ஞாயிறு  வணக்கம்.

எனது முந்தைய பதிவுகளை பார்த்துக் கொண்டிருக்கும்போது என்னை மிகவும்  நேசிக்க வைத்தது ....யோசிக்க வைத்ததும் இந்தப் பதிவுதான்!

காதல் இல்லாத வாழ்க்கை தனிமையில் பாலையில் கருகுவதற்கு  சமம் என  கருதுபவன்.

காதலின் உச்சம் காமம்.

ஆக, காதலைப் பாடாதவர் யாருமில்லை.அதை கடக்காமல் துறவும்  சாத்தியமில்லை.

தமிழுக்கு வேதம் கொடுத்த வள்ளுவன் காதலின் ஒழுக்கம் பற்றி கற்றுக்கொடுத்திருக்கிறான்.

வடக்கின் வால்மீகியை புரட்டிப் போட்ட கம்பனும் காதலின் கரை தொட்டிருக்கிறான்.

'இவருக்கு இணையாக எவரும் இல்லை' என்று சொல்லப்படுகிற  பாரதியும் பாடி இருக்கிறான்,

அவரது தாசனும் பாடி இருக்கிறார்.

வழித்தோன்றலான வைரமுத்துவும் பாடி இருக்கிறார்.

இன்னும்...இன்னும்..எத்தனையோபேர்!

ஆனால் 'காதல் பேச்சு' என்பது என்ன?

எப்போது பேசுவது....எப்படிப் பேசுவது 'காதல் பேச்சு'?

'கண்ணே,மணியே, கற்கண்டே ,கனியமுதே" எனப் பேசுவதுதான் காதலா?

கடற்கரை,கோவில்,திரைப்பட அரங்குகள்  என்று ஓரம் கட்டிப் பேசுகிறோமே , அதுவா காதல் பேச்சு?

"இல்லை...இல்லவே இல்லை" என அழுத்தமுடன் மறுப்பவன் பாரதி!

படித்தவரோ,படிக்காதவரோ,...பட்டிக்காடோ.. பட்டணமோ..பேசத்தெரிந்தவர் அல்லது பேசத்தெரியாதவர் இவர்களில் எவராக இருந்தாலும் ' காதல் பேச்சில்  கரைந்து விடவேண்டும். அது எப்படி?"என்பதை கற்றுக்கொடுத்துவிட்டு 'அதுதான்யா காதல் பேச்சு" என்கிறான் எக்ஸ்பெர்ட் பாரதி!

அது எப்போது...எங்கே என்பதுதான் வில்லங்கமே!

"பாதி நடுக் கலவியில் காதல் பேசி" என்கிறார் பாட்டுக்கரசன் !

'என்ன இது முடியுமா?"

'முடியும்! அதுதான் காதல் பேச்சு'

மஞ்சத்தில் கணவன் மனைவி இருவரும் தங்களை மறந்து ,துன்பம் நீங்கி, அக்கம் பக்கம் மறந்து, யாரை காயப்படுத்துகிறோம்,என்ன செய்கிறோம் என்பது அறியாமல் எப்படி சொல்வது எதை சொல்வது புரியாமல் இன்பத்தின் எல்லையில் சுகத்தின் உச்சம் தொட்ட நிலையில் 'புதுப்புது வார்த்தைகளை' உளறுகிறானே  அதுதான் 'காதல் பேச்சு' என்கிறான் பாரதி!

"பாதி நடுக்கலவியிலே, காதல் பேசி
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போல
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலை கருதுவரோ?"

எப்படி எனது பாரதி. அவன்தான் மன்னன் காதலில்!

வலைப்பூ உறவுகளே !

இதில் முரண் படுகிறீர்களா?

சிவனை தூண்டி விடும் நாரதர்

நாரதர் கலகம் நன்மையில் முடியுமா?

சிவன்: " ஏன் நாரதா ...பதற்றமும் பரபரப்பும்? மூச்சிரைக்க வருகிறாயே?"

நாரதர்.: " இந்த பூலோக மனிதர்களுக்கு  நீங்கள் என்றால் மிகவும்  இளக்காரமாக இருக்கிறது? பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது!"

சிவன்: " விவரமாக சொல்லு எதனால் எம் மீது அவர்களுக்கு  பயம் இல்லை என்பதாக சொல்கிறாய்?"

நாரதர்: " பின்னே என்ன பிரபு? அரசு செல்லாது என்று அறிவித்த ரூபாய் நோட்டுகளை கூட தங்களின் உண்டியலில் போடாமல் அந்த திருப்பதி நாமக்காரரின் உண்டியலில்தானே போடுகிறார்கள். செல்லாத நோட்டும்  உங்களுக்கு கிடையாதா பிரபு?"
****************************************
திமிர் பிடித்த ப்ரொட்யூசர்?

நடிகர்.: " யோவ்...மானேஜர்? அந்த ப்ரொட்யூஸரின்  திமிரை பார்த்தாயா....? எனக்கு தர வேண்டிய பாலன்ஸ் தொகையை ஐநூறு ,ஆயிரம் ரூபா நோட்டு கட்டுகளாக அனுப்பி வைத்துவிட்டதுடன் நில்லாமல்  ,கணக்கு சரியாகிவிட்டது என்று கடிதம் கொடுத்து அனுப்பி இருக்கிறான்யா!"

மானேஜர்.: ????????????????????????
*********************************************
மோடி பெயருக்கு ஸ்பெஷல் அர்ச்சனை!

அர்ச்சகர்.: " யார் பேருக்கு  அர்ச்சனை?"

பெரியவர்.: " எல்லாம் அந்த மோடி  பேருக்குத்தான் சாமி!"

அர்ச்சகர்.: " எதுக்காக இந்த வேண்டுதல்?"

பெரியவர்.: " வரதட்சணையை  இப்ப தர வேண்டாம்.தனக்கு டைம் சரியில்லைன்னு மாப்ளை  சொல்லிட்டாரே.! அதுக்குதான்!"

அர்ச்சகர்.: "???????????????????????
************************************************
டல் அடித்த மாமூல்!

மனைவி.: " என்னங்க வீசுன கையும் வெறுங்கையுமா மணி ஆட்டிட்டு வந்து  நிக்கிறீங்க?"

சப்-இன்ஸ்பெக்டர்.: " கடுப்பை கெளப்பாதேடி! ஓடி ஒளிஞ்ச எல்லா பயலுகளும்  500,1000 ரூபா தாள்களாக கொண்டாந்து  தள்ளுரானுகடி!"

மனைவி.: " நாசமா போறவனுங்க!"
**********************************




செல்லாத நோட்டு அறிவிப்புக்கு அதிமுக ஆதரவா,எதிர்ப்பா?

விற்பனை இல்லாத கடையில் விலைவாசி பட்டியல் எழுதி வைத்தால் என்ன, எழுதாமல் விட்டால்தான் என்ன என தமிழக அரசு நினைத்து விட்டதோ என்னவோ?

முதல்வர் ஜெயலலிதா வகித்த பொறுப்புகளை எல்லாம் சுமந்துகொண்டு இருக்கிற ஓ.பி.எஸ். இன்னமும் மவுனசாமியார் மாதிரியே  இருந்து கொண்டு  இருக்கிறார்,

இந்தியாவையே உலுக்கி எடுத்துவிட்ட 500, 1000 ருபா நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பினால் தமிழகமே கிட்டத்தட்ட முடங்கி விட்டதாகவே சொல்லலாம். வேறு பல பதிவர்கள் இதை பற்றி விரிவாகவே அலசிவிட்டதால்  அதை மறுபடியும் கசக்க விரும்பவில்லை.

ஆனால் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

முதல்வர் ஜெயலலிதாவை கேட்டு அவரது  கருத்தினை அறிக்கையாக  தந்திருக்கலாமே! ஒருவேளை அந்த அறிக்கை எனது ஊனக்கண்களால் பார்க்க இயலாது போயிற்றோ என்னவோ? அப்படி வந்திருந்தால் எனது  தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு தெரிந்தது " புதிய ரூபா தாள்களில் எழுதினால் செல்லாது போய்விடும்"என்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்கிற 'வாட்ஸ் அப்' பகிர்தல்தான்!

வணிகம் இல்லாமல் கடைகள் அடை பட்டுள்ளன. அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பஸ் பயணம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வு சொல்லவேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறதா  இல்லையா?

இன்னும் எத்தனை காலம் இப்படியொரு அவலம்?

அரசுதான் உரியவர் இல்லாத கடையாக இருக்கிறது என்றால் ஆளும் அதிமுகவின் கருத்து என்ன?

அவர்களுக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற  கவலை.

உருப்படுவோம் !

'ஸ்ரீ' இல்லாததால் ஐயப்பன் பக்தர் ஜேசுதாஸ்க்கு வந்த சோதனை!

" யார் என் பாடலில் குறை கண்டது?"

சிவபெருமான் சிவாஜி கணேசன் கனன்று  நெற்றிக்கண் திறந்தது மாதிரி எதுவும் நிகழவில்லை !

ஆனால் ஜேசுதாஸ் பாடிய 'ஹரிவராசனம் ...விஸ்வமோகனம்' என்கிற  பாடலில் குறை கண்டிருக்கிறார்கள்.

பல்லாண்டுகளாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் அதிகாலையில் ஒலிபரப்பாகி வந்தது அந்த பாடல். ஜேசுதாஸ் மனம் கசிந்து பாடியிருந்தார். அய்யப்பனது பக்தர்கள் அனைவர்க்கும் அது அமுதகானமாக திகழ்ந்தது. சபரிமலை சீசன் காலத்தில் எல்லைகள் கடந்து ஒலிபரப்பாகிய பாடல்.

இந்த பாடலில் 'பிழை 'இருப்பதாக இப்போது சொல்கிறார்கள்.நல்ல வேளை இந்த பிழைக்காக பகவான் ஐயப்பன் யாரையும் தண்டித்துவிடவில்லை .அவரை  துடியான தெய்வம் என்பார்கள்.

சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தலைவர் ,பாடகர் கே.ஜி.ஜெயன்தான்  தகவலை வெளியிட்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அந்த பிழை எப்படியோ உயிர் பிழைத்து வாழ்ந்திருப்பது ஆச்சரியம்தான்!

"அந்த பாடலில் 'ஸ்ரீ 'என்பது விடுபட்டிருக்கிறது பல இடங்களில் !சின்னத்திருத்தங்களுடன்  அதை தலைமை தந்திரியிடம் காட்டி அனுமதி பெற்று ஜேசுதாசை மறுபடியும் பாட செய்வோம்.அடுத்த ஆண்டு மகர விளக்குக்கு முன்னதாக இந்த பணி நிறைவு பெற்று விடும்" என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கு முந்தைய ஆட்சிகாலத்தில் தென்படாத குற்றம் பொதுவுடைமைக் கட்சியின் காலத்தில்தான் ...அதுவும் பாஜக பிரமுகர் ஒருவரது பார்வையில்தான் பட்டிருக்கவேண்டுமா?

நல்லா இருக்குய்யா உங்க சம்ஸ்கிருத பற்று...!

கடவுளையாவது வாழ விடுங்கய்யா!

 

வெள்ளி, 11 நவம்பர், 2016

சிலைகளுக்கு உயிர் வந்தால்....?

நிலையாய் நிற்கும் சிலைகளுக்கு உயிர் வந்தால் என்ன நிகழும் என்பது  முக்கியம் இல்லை.!

அவைகளை ஆடவரும் பெண்டிரும் எப்படியெல்லாம்  கையாள பார்ப்பார்கள் என்பதும் ,அதைப்போல சிலைகளுக்கு எவ்வித ஆசைகள் ஏற்படலாம் என்பதையும்   இந்த சிலைகளை பார்த்து  கற்பனை செய்து கொள்ளுங்கள்!  இதைப்போல  சென்னையில் உள்ள பல சிலைகளுக்கு  உயிர் வருமேயானால்  யார்...யாரை பாராட்டும் , திட்டும் ,ஆத்திரப்படும்  என்பதை கற்பனை செய்யமுடியுமா?

உதாரணமாக பத்தினித் தெய்வம் கண்ணகிக்கு உயிர் வருமேயானால்  யாரை  பார்த்து சாபமிடும்?

பாரதியாரின்  சிலை பேசும் சக்தி பெறுமேயானால்  எப்படி கவி பாடும்?

அண்ணா யாரை பார்த்து கண்ணீர்  வடிப்பார்?

காமராஜர் சிலைக்கு உயிர் பெரும் ஆசை  வருமா?

எம்.ஜி.ஆர். அழுவாரா,ஆத்திரம் கொள்வாரா?

அவ்வையார் என்ன செய்வார்?

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

கற்பனை செய்ய முடிகிறதா?

அல்லது என்னடா இந்த 'புத்திசாலி "(?) இப்படியெல்லாம்  பதிவிடுகிறேன்  என  நினைக்கத் தோன்றுகிறதா?





வியாழன், 10 நவம்பர், 2016

கறுப்புப் பண நடிகர் குடும்பம்.?

ஆப்புலேயே  ஸ்ட்ராங் அத்தி மர ஆப்புதான்! மரத்தின் பால் பெவிகாலை விட  அழுத்தமுடன் ஒட்டி விடும்.அசைக்க முடியாது.

கடந்த மூணு நாளா ஏழை எளிய நடுத்தர வகுப்பு மக்கள் பிச்சைக்காரர்களாக  மாறி இருக்கிறார்கள். பஸ்ல போனவனை பாதி வழியிலேயே எறக்கி விட்டுடுறான். ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்தால் சர்வர்" சில்லறை இருக்காயா" என கேட்டு  மரியாதைக்கு சல்யூட் அடிக்கிறான். சலூனுக்கு போனால் நூறு ரூபா நோட்டா வச்சிருக்கியான்னு அதட்டுறான். மளிகைக்கடைகள்  மரண நாள் மாதிரி கடைகளை அடைத்துவிட்டு முழு  அடைப்பு கொண்டாடிவருகிறார்கள்.

என்னய்யா நடக்கிது?

திடீர்னு ஐநூறு ,ஆயிரம் ரூபா நோட்டெல்லாம் செத்துப் போச்சு ,தெவசம்தான்  இன்னும் பண்ணல!

இந்த செல்லாத நோட்டுக்கு விஷ ஊசி போட்டது யாரு? ஐடியா கொடுத்தது  யாரு?

மோடியா?

இல்லிங்க.! அனில் போகில் என்கிற ஆடிட்டர்.

ரெண்டு நிமிஷம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்த மோடி இரண்டு மணி நேரம்  விவாதித்து முடிவை எடுத்திருக்கிறார்கள்.

கறுப்புப் பணம் வைத்திருக்கிற கோடீஸ்வரர்கள் எத்தனை பேர் மாட்டுவார்கள்  என்கிற ஐடியா  அரசுக்கு இருக்கா?

அதானி மதானி யோகா சாமியார் போன்ற கோடீஸ்வரர்கள்  சுத்தமானவர்களா? அவர்களிடம் பிளாக் மணியே இல்லப்பா என்று மோடி  சார் சொல்ல முடியுமா ?

உத்தர பிரதேசம் பரேலியில் ரோடு ஓரமா சாக்கு சாக்காக ஐநூறு, ஆயிரம் ரூபா நோட்டுகளை வெட்டி அழுக்காக்கி எரித்திருக்கிறார்கள்  ரிசர்வ் வங்கிக்கு தகவல் போயிருக்கிறது.எந்த ஏழை இப்படி எரிச்சான் என்பது தெரியாதா? அட போங்க ராசா! காசிக்குப் போறேன்னு கிளம்பிப் போன மதனையே இன்னும் கண்டு பிடிக்கமுடியல. மனுசனை பிடிக்க முடியாத இந்திய துப்பறியும் சாம்புகளா  எரிந்த நோட்டுக்கு சொந்தக்காரனை கண்டு பிடிக்கப்போகிறார்கள்?

இன்னிக்கி ஒரு செய்தி. ஆந்திராவில் அந்த டாப் நடிகரிடம் இருபத்தி ஐந்து கோடி கருப்புப்பணம் இருக்காம். ஆடிட்டர்களுடன் டிஸ்கஷன் நடப்பதாக  எழுதுகிறார்கள். அதையாவது கண்டு பிடிப்பார்களா?

கண்டெய்னர்களில் பாதுகாப்பாக  கொண்டு செல்லப்பட்ட கோடிகள்  இந்த மாதிரியான  செல்லாத பூகம்பத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக  முன் கூட்டியே திட்டமிடப் பட்டிருக்குமோ?

சந்தேகம் வரத்தான்யா செய்யும்?

புதன், 9 நவம்பர், 2016

லாட்ஜ் ஓய்பிடம் ஏண்டா அடி வாங்குனே?

 எங்கேடி காணோம்?

அவள்: '' டெய்லி நம்மோடு  வருவாளே  சுமதி...எங்கேடி  அவளை  காணோம்?"

இவள்: "உலகே மாயம்...வாழ்வே மாயம்னு  ரயிலில் பாடிக்கிட்டு காசு கேப்பானே அவனோடு ஓடிப் போயிட்டா. டெய்லி அவனுக்கு ஆயிரம் ரூபா  கலெக்ஷன் ஆகுதாம்!"
*********************************************
அவளிடம் ஏண்டா அடி வாங்குனே?

" போயும் போய்  லாட்ஜ் ஓய்பிடம்  அடி வாங்கலாமா? ஏண்டா அடிச்சா? நைட்  சந்தோஷமாகதானே இருந்தே?"

"நைட்டுக்கு ஐநூறு ரூபாயும் , டிப்சும் ஐநூறும் சேர்த்து  ரெண்டு ஐநூறு ரூபா  நோட்டு கொடுத்தேன். செல்லாத நோட்டை கொடுத்து  ஏமாத்தப் பாக்கிறியான்னு அடிக்கிராடா? ரூம் பாய் விடிஞ்சதும்  அவகிட்ட நியுஸ் பேப்பரை கொடுத்திருக்கிறான்."
***************************************************

குடும்பத்தில  சண்டைன்னு  ......

"உன்  ஆத்துக்காரர் பாட்டு பிராக்டிஸ்  பண்றப்ப ஏண்டி வெளியே  வந்திடறே?"

"நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறோம்னு பக்கத்து ஆத்துல இருக்கிறவா நினைச்சிடக்கூடாதுடி!"
**********************************************************

அவளை  அடிச்சிட்டு  ....

"அவளை ஏன் அடிச்சு மாமனார் வீட்டுக்கு அனுப்புவானேன்...இப்படி டாஸ்மாக்ல வந்து உக்காந்து புலம்புவானேன்?"

"அவ திரும்பி வந்திடக்கூடாது என்கிற கவலைடா மச்சி! விடிஞ்சதும்  வீட்டு  வாசலில்  வந்து நின்று  விடக்கூடாதே?"
********************************************  

கமல் கதறி அழுதது எப்போது?

விபத்துகள் எதிர்பார்த்து வருவதில்லை. வீட்டுக்குள் அடங்கிக்கிடந்தாலும்  பாத்ரூம் செல்லுகிறபோது வழுக்கி விழுந்து முடக்கிப் போட்டுவிடும்.

அது வலிந்து  தேடிக்கொண்டதில்லை. கவனமின்மை ,மன அமைதியின்மை காரணமாக இருக்கலாம்.அதை  நாம் விதி எனவும் சொல்லிக்கொள்வோம்.

ஆனால் பிற மனிதர்களால் ஏற்படும் வலி இருக்கிறதே.....மனதை கீறி புண்ணாக்கிவிடும்.தழும்பேறி தடம் பதித்துவிடும். சதா உறுத்திக்கொண்டே  இருக்கும்.

மண நாளோ,பிறந்த நாளோ எதிர்வரும் நேரத்தில் திட்டமிட்டே  மனவலியை  உருவாக்குவது ஒரு சிலருக்கு மகிழ்ச்சியை தரலாம். அதற்காகவே காத்திருந்தது போல செயல்படுவார்கள்.

அது வன்புணர்வை விட கடுமையானது.

கால் முறிந்து உலகநாயகன் கமல்ஹாசன் தனது வலிகளை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

"எனது காலில் மல்டி பிராக்சர்ஸ். வலியில் உயிரே போய்விடும் போல் இருந்தது. மயக்கத்தில்தான் வைக்கப்பட்டிருந்தேன். இந்த வலியை சொல்லிவிடலாம். மற்ற வலிகளை நான் பொதுவில் வைப்பதில்லை. எனது  பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூற வருகிற நண்பர்கள், ரசிகர்களுடன் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புவேன்.

பிறந்த நாளன்று  நான் கண்ணீர் விட்டதில்லை. ஆனால் அதுவும் ஒரு பிறந்த நாளன்று நடந்துவிட்டது. எனது பதினாறாவது பிறந்தநாள் அன்று  எந்த திசையில்,எப்படி செல்வது என்று புரியாத நிலையில் அறையை பூட்டிக்கொண்டு  கதறி அழுதிருக்கிறேன்.அது ஒன்றுதான்  எனது பிறந்தநாள்  அன்று அழுதது.

பொதுவாக எனது வாழ்நாள் முழுவதும் சோதனைகள்தான்."

இதுதான்  கமல்ஹாசனின் வேதனை.
 

காந்தி அடிகளின் பேரனுக்கா இந்த கொடிய நிலை?

நிச்சயமாக  நெஞ்சு வெடித்துவிடும் உண்மையான காந்தியவாதிகளுக்கு!

காந்தி அடிகளின்  கம்பு பிடித்துச்செல்லும் அந்த சிறுவன் பெயர் கனுபாய் ராமதாஸ் காந்தி. தேசத்தந்தையின்  பெயரன்.

மத வெறியன் நாதுராம் கோட்சேயின் கூப்பிய கரங்களுக்குள் இருந்த கைத்துப்பாக்கிக்கு காந்தி  பலியாகியதும் 'இனியும் இந்தியாவில் இருப்பது  சரியல்ல'  என நினைத்து மனைவி சிவலட்சுமியுடன் அமெரிக்கா சென்று  விட்டவர்,

நாசாவின் விஞ்ஞானி.உயர் நிலை பதவி.போர் விமான தயாரிப்பு தொடர்பான  ஆராய்ச்சி. நாசா இவரின் திறமையை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க பாதுகாப்புத் துறையில் முக்கிய அதிகாரியாக இருந்தார். மனைவியுடன் நாற்பது ஆண்டு காலம் இனிமையான வாழ்க்கை. உலகம்  முழுவதும் வரவேற்கப்பட்ட விஞ்ஞானி.

2014- ஈட்டிய பொருளை எல்லாம் இந்தியாவுக்கு கொண்டு செல்வது முறையல்ல என கருதினார்.

"எங்கள் செல்வங்களை கொள்ளை கொண்டு போகவோ ..வெள்ளையனே வெளியேறு "என முழங்கிய காந்தியாரின் பேரன் ஆச்சே!

செல்வங்களை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்தார்.

உறவுகளும் கண்டு கொள்ளவில்லை.காந்தியார் வளர்த்த காங் .கட்சியும் கண்  திருப்பவில்லை.

புதுடெல்லியில் உள்ள குருவிஷ்ரம் முதியோர் காப்பிடத்தில் கணவன்-மனைவி இருவருமே  அடைக்கலம் புகுந்தனர்.

மனைவி சிவலட்சுமி 'பயோ கெமிஸ்ட்ரி'யில் டாக்டரேட் பெற்றவர். எண்பத்திஏழு வயது கணவருக்கு ஒரே ஆறுதல் இவர்தான்! காந்தியாரின் குஜராத் மாநிலத்தின் மண்ணில் மரணிக்கவேண்டும் என்று நினைத்திருந்த அந்த மாமனிதருக்கு திடீரென மாரடைப்பு!

அப்போலோவிலா அனுமதி கிடைக்கும். எளியவர்களுக்கான மருத்துவமனையில்  இடம் கிடைத்தது.

மூளையில் ரத்த உறைவு. கோமா! வெண்டிலேட்டரில் உயிர் மூச்சு ஓடுகிறது. இனியும் உயிர் பிழைக்கமாட்டார் என கருதிய மனைவி வேண்டிலேட்டரை  எடுத்துவிடச்சொன்னார்.

கடந்த திங்கட்கிழமை உயிர் பிரிந்தது.

பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி?

காந்தியாரையே மறந்துவிட்டவர்கள் அவரது பெயரனையா நினைக்கப்போகிறார்கள்.? நெஞ்சு பொறுக்கவில்லை!

செவ்வாய், 8 நவம்பர், 2016

ஏய்...பாவிகளா..டில்லி தூசிக்கு அவ்வளவு பவரா?

500,1000  ரூபா நோட்டுகள் செல்லாது என்று மோடி சொல்லி அதுக்கு முப்பதாம்தேதி வரை கேடு  சாரி.... கெடு கொடுத்திருந்ததை கூட  ஜனங்க பொறுத்துக்குவாங்க.. ஆனா  டில்லி தூசியை சுவாசித்தால் பிள்ளை பிறக்காது என்று சொல்வதை எப்படிய்யா  பொறுத்துக்க முடியும்?

இந்தியாவில் பதினைந்து சதவிகிதம் ஆண்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்கிறது புள்ளி விவரம்.

தலைநகரில் இருக்கிற சத்ரிகா அகர்வால் என்கிற டாக்டர்தான் ஆண்மைக் குறைவு ஏற்படுகிற வாய்ப்பு அதிகம் என்கிறார்.

ஆண்களுக்கு மட்டும் அந்த மாசுப்படலம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை .பெண்களுக்கும் தாய்மைப் பேறு பாதிப்பு ஏற்படும் என்கிறார் அந்த டாக்டர்.

அட கொடுமையே!

ஆகவே நண்பர்களே ...மாசுப்படலம் தமிழ்நாட்டில் அரசியலில் அதிகம் என்றாலும் காற்றில் பரவி விடாமல் பாதுகாப்பது நமது கடமை.

 அது சரி..இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் எப்படி  ரூபாய் நோட்டு பிரச்னையை  தீர்ப்பார்கள். கள்ளப்பணம் வாங்கிய அதிகாரிகள் என்ன பண்ணப்போகிறார்கள்? மந்திரிமார்கள் பதுக்கிய பணத்தை எப்படி வெளிக்கொணர்வார்கள்? நம்ம நடிகர்கள்,நடிகைகளிடம் கணக்கில் வராத பணம் டன் கணக்கில் இருக்குமே!

எல்லாம் மோடி பார்த்துப்பார்!

திங்கள், 7 நவம்பர், 2016

என் புருஷனை மாத்திக்காட்டுங்க டாக்டர்!

ராத்திரியும் பகலும்.!
--------------------------
மனைவி: " டாக்டர்...ராத்திரி தூக்கத்திலும் என் பெயரை சொல்லிக்கிட்டே  இருக்கார். அவரை செக் பண்ணுங்க சார்?"

டாக்டர்: "என்னம்மா  நல்ல விஷயம்தானே! உன் மேல எவ்வளவு அன்பு இருந்தா தூக்கத்திலும் மறக்காமல் இருக்காரே!"

மனைவி: "ஆனா பகலில் என்னன்ன பெயரோ சொல்லி என்னை கூப்பிடுறாரே?"

டாக்டர் : ????????
----------------------------------
திருடன் மனைவியின் மனக்குறை.!
-----------------------------------------------------
அவள் : "உன் பொறந்த நாளுக்கு உன் புருசன் என்ன பரிசு கொடுத்தான்?"

அடுத்தவள்: "அந்த கொடுமையை ஏன் கேக்கிற.? ஆசையா கொடுக்கவந்த மனுசனை போலீஸ் கூட்டிட்டு போயிடுச்சு"!
---------------------------------------------------------------------------
மியூசிக் கிளாஸ் எப்படிம்மா போகுது?
---------------------------------------------
அப்பா: " பேபி! உன் மியூசிக் கிளாஸ் எப்படிம்மா போறது?"

மகள்: "சூப்பர்  டாடி! என்னோட மியூசிக் டீச்சருக்கு பக்தி அதிகம். நான்  பாடறச்சே  கடவுளே.கடவுளேன்னு பிரார்த்தனை பன்ரா!"

அப்பா:"??????????????????
-----------------------------------------
மனைவியிடம் சொல்லிடாதே!
-----------------------------

நர்ஸ்.: " சார்....குட் நியூஸ்! உங்களுக்கு டிவின்ஸ்!"

அவன்: காட் பிளஸ். இந்த நியூசை நான்தான் அவளுக்கு முதலில் சொல்லணும். நீ சொல்லிடாதே!"

நர்ஸ்:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
----------------------------------------
மக்கு பயலே!
------------------
வாத்தியார்: இந்த கணக்கையாவது கரெக்டா சொல்லு? உன் இரண்டு கையிலும் எத்தனை விரல்கள்?"

மாணவன்: "பத்து சார்!"

வாத்தியார்.: "குட்! அதில நாலு விரல் போயிடுச்சுன்னா?"

மாணவன்: " என்னால் வயலின் கிளாஸ்க்கு போகமுடியாது சார்!

வாத்தியார்:?!?!
_________________________________________--

ஞாயிறு, 6 நவம்பர், 2016

சும்மா இருக்கிற கமலை எழுப்பிவிடாதிங்கப்பா!

ஊரு உலகம் சும்மா கெடந்தாலும் இந்த ஜோசியப் புலிகள் சும்மா இருக்கிறதில்ல. எவனையாவது,அல்லது எவளையாவது சொறியனும்.

கால் உடைஞ்சி இப்பத்தான் குணமாகிட்டு வாரார் கமல்ஹாசன்! எதோ தாலி கட்டிக்கிட்டவ பிரிஞ்சி போனமாதிரி இவனுகதான் புலம்பிக்கிட்டு புதுசா  ஆளை தேடிக்கிட்டு இருக்கானுக.

போனால் போகட்டும் போடான்னு கமல்ஹாசனே நிம்மதியா தூங்கிட்டு இருக்கிறபோது " சார் உங்களுக்கு இன்னும் ரெண்டு பாக்கி இருக்குன்னு  " தூண்டி விடுறானுங்க. ராகு ,செவ்வாய்னு கிரகம் கிரகமாக போயி பொண்ணு  பிடிக்கிறாங்க சார்!

அந்தாளுக்கு சுத்தமா இந்த சமாச்சாரம்லாம் பிடிக்கவே பிடிக்காது. உலகநாயகன்  சுத்தமான பெரியாரிஸ்ட். கடவுளே இல்லைன்னு சொல்லிக்கிட்டு  இருக்கிறவர்.

 முதல் மனைவியை டைவர்ஸ் பண்ணிய போது சுத்தமா அந்த வீட்டை தொடச்சி எடுத்திட்டு போனாங்க. அப்ப சரிகா  நெற மாசம்.  வயித்தில ஸ்ருதி இருந்துச்சி. பிரசவத்துக்கு ஓசி கார்ல  கூட்டிட்டு போனார். படிப்படியா சொந்த முயற்சியில் இப்ப  உலக நாயகனாக  உசந்து நிக்கிறார்.

அவருக்கு இப்ப ராகு பார்வை வரப்போகுதாம்.அதனால வெளிநாட்டுப் பொண்ணு  வந்து சேருமாம். அதுவும் நிக்காதாம். செவ்வாய் பண்ற வேலையாம். அதுக்குப் பிறகு அரசியலில் இருந்து சக்தி வாய்ந்த பொண்ணு  கிடைக்குமாம்.

இப்படி கெளப்பிவிட்டு கமல் பெயரை கெடுக்கப் பார்க்கிறாய்ங்கய்யா!