
இந்திய பணத்துக்கு பதினாலு கோடி ரூபாய்.
அவளின் பெயர் அலீக்சான்டிரா. ரொமானியப் பெண்.இன்னும் கன்னி கழியாதவள்.அவளுக்கு ஏனிந்த நிலை? யாரும் கட்டாயப்படுத்தினார்களா?
இல்லை.! ஏலம் போவது அவளது சொந்த முடிவு! இவள் மட்டுமில்லை. இவளைப்போல இன்னும் முன்னூறு கன்னிப்பெண்கள் ஏலம் போவதற்கு தயாராக இருக்கிறார்கள்.இந்த புனித காரியத்தை செய்வதெற்கென எழவெடுத்த ஒரு நிறுவனம் இருக்கிறது.'சின்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் ' என்பது அந்த நிறுவனத்தின் பெயர்.
அலீக் என்ன சொல்கிறாள்?
"நான் ஏழ்மையின் மடியில் வளர்ந்தவள்.எனக்கு பதினைந்து வயது ஆகும்போதே எனக்கு இந்த எண்ணம் வந்து விட்டது. கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்தேன்.ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒரு கோடீஸ்வரன் என்னை 2.3.மில்லியன் ஈரோ நாணயத்துக்கு ஏலம் எடுத்திருக்கிறார்.( என்னுடைய கணக்குப்படி இந்திய நாணயத்துக்கு 149327506 ரூபாய் ஆகிறது. நான் கணக்கில் வீக்.)இதை வைத்துக்கொண்டு என்னுடைய பெற்றோரை காப்பாற்ற முடியும்.சொந்தமாகவீடு வாங்குவேன்.
என்னுடைய முடிவை இந்த சமுதாயம் ஏற்காது என்பது தெரியும். ஆனாலும் என்னை மாற்றிக்கொள்ள முடியாது! யாரோ ஒருத்தனுக்கு கன்னி கழியப் போகிறேன்.அது இப்படி போவதில் என்ன தப்பு?" என்கிறாள்.
என்னமோடா நாராயணா! இந்த கண்றாவி சமுதாய சீர்கேடு இந்தியா பக்கமும் வந்து விடக்கூடாது.
இங்கே ஏற்கனவே கலாச்சார சீர்கேடுகள் சினிமா வழியாக வந்து இருக்கின்றன. நாகரீகம் என்கிற பெயரில் நமது பண்பாடு கற்பழிக்கப் பட்டிருக்கிறது. துறவிகள் என்கிற பெயரில் கற்பு சிதைக்கப்படுகிறது. அத்தகைய நாசகாரன்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள்.
எச்சரிக்கையாக இருப்போமாக.!