கோவில் கருவறையில் காம சேட்டைகள் செய்பவனைக் கூட நம்பிவிடலாம். ஆனால் அரசியல்வாதிகளை மட்டும் நம்பிவிடக்கூடாது என்கிறது இந்திய அரசியல் நாகரீகம்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ஐம்பது கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் என சொல்லி தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ். இந்திய துணைக்கண்டம் முழுமையும் அநியாயத்துக்கு பரபரப்பு பற்றி எரிந்தது. ஆனால் தற்போது அது பா.ஜ.க.வின் அரசியல் நாடகத்தில் வருகிற ஒரு சீன்தான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
வலிமையுடன் இருக்கும் திமுகவை எதிர்ப்பதற்கு ஒன்று பட்ட அதிமுகதான் சரியாக இருக்கும்.ஆனால் சசி, தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தினர் யாரும் அந்த கட்சியில் இருக்கக்கூடாது.அது பலவீனம் என்று கருதுகிறது . அவர்கள் இல்லாத அதிமுகவில் வேண்டிய இடங்களை கேட்டுப் பெற முடியும் என்று பா.ஜ.க.நம்புகிறது. அதற்காகவே தினகரன் கைது படலம் என்கிறார்கள் விவரம் தெரிந்த அரசியல் ஆய்வாளர்கள்.
இதற்கு தினகரன் இணக்கம் தெரிவித்ததால்தான் தினகரனுக்கு எதிராக எழுதப்பட்ட எப்.ஐ.ஆர். மிகவும் இலேசாக இருக்கிறது. சுலபமாக வெளியில் வந்து விட முடியும் .முதல் தகவல் அறிக்கை ஸ்ட்ராங்காக இல்லை என்கிறார்கள் சட்டம் படித்தவர்கள். நடப்பதெல்லாம் நாடகமே என்றால் இந்த அரசியல் நாகரீகம் தேவையா?நீதி மன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு ஒருவரை ஜுடிசியல் கஸ்டடியில்தான் வைத்திருக்க வேண்டும்.ஆனால் தினகரனை போலீஸ் கஸ்டடியில் வைத்தது ஆச்சரியம் என்கிறார்கள்.
இணக்கமாக இருப்பதுபோல நடித்து விட்டு உள்ளடி வேலைகளில் இறங்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
அதான் ஃ பெரா இருக்கிறதே..

வலிமையுடன் இருக்கும் திமுகவை எதிர்ப்பதற்கு ஒன்று பட்ட அதிமுகதான் சரியாக இருக்கும்.ஆனால் சசி, தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தினர் யாரும் அந்த கட்சியில் இருக்கக்கூடாது.அது பலவீனம் என்று கருதுகிறது . அவர்கள் இல்லாத அதிமுகவில் வேண்டிய இடங்களை கேட்டுப் பெற முடியும் என்று பா.ஜ.க.நம்புகிறது. அதற்காகவே தினகரன் கைது படலம் என்கிறார்கள் விவரம் தெரிந்த அரசியல் ஆய்வாளர்கள்.
இதற்கு தினகரன் இணக்கம் தெரிவித்ததால்தான் தினகரனுக்கு எதிராக எழுதப்பட்ட எப்.ஐ.ஆர். மிகவும் இலேசாக இருக்கிறது. சுலபமாக வெளியில் வந்து விட முடியும் .முதல் தகவல் அறிக்கை ஸ்ட்ராங்காக இல்லை என்கிறார்கள் சட்டம் படித்தவர்கள். நடப்பதெல்லாம் நாடகமே என்றால் இந்த அரசியல் நாகரீகம் தேவையா?நீதி மன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு ஒருவரை ஜுடிசியல் கஸ்டடியில்தான் வைத்திருக்க வேண்டும்.ஆனால் தினகரனை போலீஸ் கஸ்டடியில் வைத்தது ஆச்சரியம் என்கிறார்கள்.
இணக்கமாக இருப்பதுபோல நடித்து விட்டு உள்ளடி வேலைகளில் இறங்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
அதான் ஃ பெரா இருக்கிறதே..