புதன், 31 மே, 2017

மோடி- பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம்.!

  இந்திய தேசியத்துக்கு பெருமையா...பிரதமர் பதவியின் கவுரவம் காப்பாற்றப் பட்டிருக்கிறதா....தலைநகரத்தில் தமிழக விவசாயிகளை சந்திக்க மறுத்த பிரதமர் மோடி ஒரு இந்திய  நடிகையை இப்படிப்பட்ட கோலத்தில்தான் சந்திக்க வேண்டுமா?

பிரதமரை எப்படி எத்தகைய திருக்கோலத்தில் சந்திக்க வேண்டும் என்கிற விவஸ்தை பிரியங்காவுக்கு இல்லாது போயிருக்கலாம். ஆனால் பிரதமர்  அலுவலக அதிகாரிகளுக்கு தெரியாதிருக்குமா?

என்ன கொடுமை ! ஒரு ரசிகனைப்போல பிரதமர் மோடி இருப்பதும் அறை குறை உடையில் கால் மேல் கால் போட்டபடி பிரியங்கா இருப்பதும் தேசிய அவமானம் என்றே கருதுகிறேன்.வெளிநாட்டில் இருந்ததால்தான் அப்படி குட்டைக்கவுனும் வாழைத்தண்டு கால்களுமாக  திமிரோடு இருந்தார் என்று  யாராவது சொன்னால்....

இந்திய பாரம்பரியம் ,கவுரவம் ,பெண்களுக்கு உரிய பண்பு ஆகியவைகளுக்கு  வெளிநாட்டில் இடமில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

.

செவ்வாய், 30 மே, 2017

பி.ஜே.பி.யிடம் அதிமுக அடமானம்.சசி ,தினகரனுக்கு சலுகைகள்.!

அரசியலில் வதந்திகளும் சில நேரங்களில் உண்மை என்பதாக உரு பெறுவது  இயல்பு. அது சிலருக்கு லாபம்.சிலருக்கு இழப்பு.!

தற்போது பி.ஜே.பி.க்கு லாபம். அதிமுகவுக்கு நட்டம்.ஆனால்  நட்டத்திலும் லாபம் சசி அண்ட் தினகரனுக்கு என்கிறார்கள் அரசியல் ஆருடம் சொல்கிறவர்கள்..! எம்.ஜி.ஆர்.கடுமையுடன் போராடி வளர்த்த கழகம் இன்று சிலரின் அதிகார ஆசைக்கு அடிமையாக மாறி இருக்கிறது. மத்தியில்  முரட்டுத்தனமான மெஜாரிட்டியில் இருந்தாலும் பி.ஜே.பி.யின் வேட்பாளர்  குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற அதிமுகவின் உதவி தேவை.

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மர்ம மரணம் அடைந்த பின்னர் இரண்டாவது குற்றவாளியான சசிகலாவின் கைக்கு கழகம் போய் விட்டது.அவரையும் தற்போது திகார் சிறையில் உள்ள தினகரனையும் பகடைக்காய்களாக பயன்படுத்தி லாபம் அடைய பி.ஜே.பி. போட்ட திட்டத்தின்படி எடப்பாடி அரசு பி.ஜே.பி.யின் உண்மையான விசுவாசி ஆகி இருக்கிறது என்கிறார்கள். அடிமை ஆகி விட்டதால்தான் மத்திய அரசை விமர்சிப்பதிலையோ ? இருக்கலாம்.

ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அரசு கை விட்டது என்கிறார்கள். எடப்பாடியுடன் நல்லுறவு வைத்துக் கொள்ளாவிட்டால் வருமானவரித்துறை
அதன் வேலையை காட்டதொடங்கும் என்கிறார்கள்.இதனால் அதிமுகவின் பிளவுபட்டஇரண்டுஅணிகளும் குறைந்த பட்ச நிபந்தனைகளுடன்  ஒன்று  பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது.

மற்றொரு செய்தி அல்லது வதந்தி என எப்படி வேண்டுமானாலும்  வைத்துக்  கொள்ளலாம்.

சசியின் மீதான வழக்குகளில் ஒன்றிலிருந்து அவர் விடுவிக்கப்படலாம். இதே  சலுகை தினகரனுக்கும் வழங்கப்படும் என்கிறார்கள்.

ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள் இனி பி.ஜே.பி.க்கும் சேர்த்து உழைக்க வேண்டியது வரலாம்.அதனால் என்ன பழகிவிட்ட ஒன்றுதானே முதுகு வளைந்து நிலம் தொட்டு வணங்குவது...!

அமித்ஷாவின் அரசியலுக்கு  இரையாகி விட்டது   அதிமுக,!


ஞாயிறு, 28 மே, 2017

இயக்குநர் வே.பிரபாகரனும் ,இசைஞானியும்.!

இயக்குநர் வேலு பிரபாகரன் தன்னை  முழுமையான நாத்திகராக பிரகடனம்  செய்து கொள்பவர். எதிர் கருத்து இல்லை.வித்தியாசமான   திரைப்படங்களை இயக்குகிறவர் என சொல்லிக் கொள்பவர். மறுத்துச் சொல்வதற்கில்லை. அவரவர் பற்றி சொல்லிக்கொள்கிற உரிமை அனைவர்க்கும் உண்டு.

ஒரு இயக்குநரின் காதல் டைரி என்கிற பெயரில் உண்மைக்கதையை  இயக்கி இருக்கிறார். அதற்கான விழா.ஞாயிறன்று  சென்னை பிரசாத் லேப் தியேட்டரில்  நிகழ்ந்தது. இசைஞானி இளையராஜா,  பிரமாண்டமான படங்களை மட்டுமே தயாரித்து வருகிற கலைப்புலி தாணு  ஆகிய இருவரும் கலந்து கொண்டு சிறப்பித்த விழா.

ராஜா பேசுவார் என ஊடகத்தினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஏனோ பேச வில்லை.

பொதுவாக திரைப்படம் சார்ந்த விழாக்களில்  மேடை நாகரீகம் என்பது எப்போதோ தொலைந்து போனதாகவே இருக்கிறது. கால மாற்றம் அல்லது  நாகரீகம் இதில் ஏதோ ஒன்றின் பாதிப்பு  மேடையில் தெரியும். செழித்த மார்பகம் அல்லது தொடை தெரியும் அளவுக்கு  நடிகையர்  கலந்து கொள்வார்கள். ஆனால் இயக்குநரின் காதல் டைரி பட விழாவில்  நாயகி  பாந்தமுடன் புடவை கட்டி ஆச்சரியம் அளிக்க இயக்குநர்  பிரபாகரன் முக்கால்   டவுசர் அணிந்து வந்திருந்தார்.!

ஞானியின் பக்கத்தில் அமர்வதற்கு தயங்கியபடி ஒதுங்கியே நின்றவர் மேடை  நாகரீகம் மறந்தது எதனால்? தன்னை செக்ஸ் இயக்குநர் என்பதாக மற்றவர்கள் சொல்வதாக குறை பட்டுக்கொண்டவர் விழாவின் நாயகர்  ராஜாகலந்து கொண்ட விழாவில் முகம் சுளிக்கும் வகையில்?

இதனால்தான் ராஜா பேசாமல் சென்று விட்டாரோ?

பிராமணர்கள் பசு மாமிசம் சாப்பிட்டார்களா இல்லையா?

"என்னடா வீட்டுக்குப் போகாம பொட்டிக்கடை பக்கமா ஒண்டிக்கிட்டு 
நிக்கிறே?''

.'மதியாதார் வாசலை மிதியாதேன்னு'சொல்லிட்டா  என் பொண்டாட்டி... அதான் அவ அப்பன் வீட்டுக்கு கிளம்பிப்போனதுக்கு பிறகு  வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன்'!னான் ஒருத்தன்.

தாலி கட்டுன பொண்டாட்டிக்கு பயந்து அவன் எத்தனை நாளைக்கு அப்படி  ஒளிஞ்சி மறைஞ்சு வீட்டுக்குப் போயி சோத்தை தின்னுட்டு வாழமுடியும்?

' என் வீட்டுக்குள்ள வந்து போறதுக்கு நீ என்னடி சொல்றது.?'ன்னு ஒருநாள்  அந்த பயலுக்கும் தைரியம் பொறக்கும்ல! அவ இருக்கும் போதே உள்ளே போயி நீ போடி வெளியேன்னு சொல்ல மாட்டானா?

என் மாடு .நான் வைக்கோல் போட்டேன். தவிடு வச்சேன். வளர்த்தேன் .அத நான் விப்பேன்.நீ யாருடா தடுக்கிறதுன்னு  கட்டையை கையில எடுத்தா என்ன செய்வே?மகாபாரதத்தில் பசு மாமிசம் சாப்பிடுவதை பத்தி சொல்லிருக்கே?பிராமணர்கள் பசு மாமிசம் தின்னதா சொல்லிருக்கே.!ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் பசு கொல்லப்பட்டதாம்.அதனோட ஈரத் தோல்களிலிருந்து கசிந்த நீர்  நதியாக பெருகி ஓடுச்சாம்.அதனால 'சர்மணவதி' என்று பெயராம்.ரந்திதேவன் என்கிற மன்னனை பத்தி இப்படி சொல்லி இருக்கு.'"மகாநதி சர்மராஷே ருத்க்லேதாத் ஸங்ஸ்ரூசே யதஹ...த தஸ் சர்மண்வதி த்யேவம் விக்யாதா ஸூமஹாநதி" ( சர்ம=தோல்.ணவதி=வெளிப்பட்டு ஓடுதல்.) ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை படிங்க.

ரிக்வேத காலத்திலேயே பசு மாமிசம் தின்னிருக்காங்க.

ஒருவனுடைய சுதந்திரத்தில கைய வைக்கிறதுக்கு பேருதான் மத சார்பற்ற  கொள்கைன்னா அது தேவையே இல்லை.

புதன், 24 மே, 2017

கிட்ட வந்து படேன்...எதுக்குடி கிராக்கி பண்றே?

"ஏய்........?"

"ம்ம்ம்!"

"கேக்கிதுள்ள...கிட்ட வந்து படு!"

"முடியாது...வெக்கைய்ல வெந்திட்டிருக்கேன்..என்னால முடியாது!"

"என்ன மாதிரி பிரீயா கிட.! ஃபேன் காத்துல  கடல் காத்து மாதிரி இருக்கும்!"

"ஏற்கனவே  வேர்த்து உடம்பு உப்புக்காத்தில ஊறுன மாதிரிதான் இருக்கு.! இதுல பக்கத்தில வேற  வந்து படுத்து கச கசன்னு...! அந்த ஈர வெங்காயம் எல்லாம் வேணாம்!கைலிய எடுத்து கட்டுங்க. கர்மம்.!"

"இதெல்லாம் தாம்பத்யம்டி ! புரிஞ்சிக்க.! இன்னிக்கின்னு மூடு  ஊட்டி ரேஞ்சுக்கு இருக்கு! "

"எனக்கு  அடுப்புல படுத்திருக்கிற மாதிரி இருக்கு! வேணாம்யா! நெருங்காத! படிச்சு படிச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னேன். அத  வாங்கிட்டு வராதவரை என்கிட்டே அண்டாத! டிவியில் ஒவ்வொரு வாட்டியும் பாக்கிறவரை எனக்கு பத்திட்டுதான் வருது!"

"அவனுங்களை செருப்பால அடிக்கணும். என்னை மாதிரி தனியார் கம்பெனியில் வேலை பாக்கிறவனுக்கு ஏசி எல்லாம் ஈசி இல்லடி!"

"எதுக்கு வெட்டிப்பேச்சு. ஏசியோடு நாளைக்கு வந்தா சொர்க்கம். இல்லாட்டி தலகாணிய கட்டிக்கிட்டு படும்"

----- நடுத்தரமும் இல்லாம கடைநிலையும் இல்லாமல் புதிதாக கல்யாணம் கட்டிக்கிட்ட குடும்பத்தின் இரவு காட்சி. 


ரஜினியின் அரசியல்: சிலர் அலறுவது ஏன்?

ஒருவர் அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவரவர்  விருப்பம்.

தனது கட்சியின் பெயர்,கொள்கை,நோக்கம் இவை பற்றி எதையும் ரஜினி  சொல்லாத நிலையில் தாமாகவே கற்பனைக் குதிரையில் பயணிப்பது ,கண்டிப்பது, தமிழர் ,தமிழர் அல்லாதவர் என சிலர் குதிப்பது அறியாமையின் உச்சம்.அவரது செல்வாக்கினை பயன்படுத்திக்கொண்டு தமது வாக்கு வங்கியை வளர்த்துக் கொண்டவர்களுக்கு ரஜினியை விமர்சிக்கும் தகுதி  இல்லை என கருதுகிறேன்.தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்று  மூச்சு முட்ட குரல் கொடுக்கிறவர்கள் சாதிய அரசியலை கையில் பிடித்திருக்கிறவர்கள்தான்!

 திராவிடக் கட்சிகளை இன்று கிழித்தெறிந்து வாய்ப்பந்தல் போடுகிற சில  கட்சியினர் அந்த திராவிடக் கட்சிகளால் பலன் பெற்றவர்கள்.பதவிச் சுகம் பெற்றவர்கள்தான்!போயஸ் தோட்டம் ,கோபாலபுரம் என தேடிச்சென்றவர்கள் அவர்கள்தான்!

இல்லை என்று சொல்ல முடியுமா?

அதிமுகவின் இமாலய ஊழலுக்கு அடிகோலிட்டவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்கள்தான். அவர்கள் உயிருடன் ஆட்சியில் இருந்தபோது  வாய் திறந்தது உண்டா?

ரஜினி தமிழர் அல்லர் என்று கூச்சலிடுகிறவர்கள், ஈழத்தமிழர்களை கொன்றொழித்த கொடியவன் ராஜபக்சேயுடன் கை குலுக்கியவர்கள் என்பதை  மறக்கவில்லை.நினைவுப் பரிசுகளை சுமந்து வந்த "தன்மான தமிழர்கள்!"

அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்த முதல் குற்றவாளி ஜெயலலிதா  என்று நீதிசபை தீர்ப்பு எழுதியிருக்கிறது. கூட்டாளிகளான சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் சிறைச்சாலையில்!

ஆனால் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து திரும்பி வந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.இதை தமிழர்களுக்காக கட்சி நடத்துகிறோம் என போர்டு வைத்திருப்பவர்கள் கண்டித்தார்களா? ஜெ.கன்னடத்துகாரர் என்று கூவுகிறவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நீதி பிறழாமல் நெறி தவறாமல்,நேர்மையான ஆட்சியை கொடுக்க வேண்டும்  என்று விரும்புகிற ரஜினி அதற்கான முயற்சியில் இறங்கி விட்டார். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சகாயம் அவர்களிடம் ஆலோசனை கலந்திருக்கிறார்  என்கிறார்கள்.ஆனால் அதை அந்த அதிகாரி மறுத்திருக்கிறார் .அது சரியானதும் கூட! ஆளும் அரசுக்கு விரோதம் என்று சிலர் சொல்லக்கூடும்.

தனிக்கட்சி ஆரம்பித்து தளர்ந்து போன தலைவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமில்லை. ஆந்திரத்திலும் உண்டு. சிரஞ்சீவியின் தோல்வி, அவரது  தம்பி  பவன் கல்யாணின் அரசியல் கட்சி இளைஞர்களின் மத்தியில் செல்வாக்கு  பெற்று இருப்பதன் காரணம் இவைபற்றி எல்லாம் ரஜினி கேட்டு அறிந்திருக்கிறார்.

தன்னுடைய கட்சியில் சேர விரும்புகிற இளைஞர்களுக்கு  பவன் கல்யாண் பரீட்சை நடத்துகிறார்  என்பது எனக்கு புதிதாக தெரிகிறது.அது மட்டுமல்ல  தனது கட்சியின் செலவுக்காக தன்னுடைய படத்தின் வருவாயிலிருந்து  ஒரு  குறிப்பிட்ட பெருந்தொகையை  சேமித்து வருகிறார் என்பதும் ஆச்சரியமாக  இருக்கிறது.

அரசியல் அறிந்தவர்கள், நிர்வாகம் தெரிந்தவர்கள், சட்டம் ஆய்ந்தவர்கள் என பல தரப்பினரிடமும் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் ரஜினி. அவர்  வருவதால் நல்ல மாற்றம் ஏற்படும் என்கிற போது நலிந்த கட்சியினர் மட்டும்  கூச்சல் போடுவதேன்?

தனது செல்வாக்கினை மத சார்பான பாஜகவுக்கு ரஜினி பயன்படுத்தினால்  அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ரஜினிக்கு நன்றாகவே  தெரியும். அந்த தவறை அவர் செய்ய மாட்டார் .தலைமையை இழந்த அதிமுக  இன்று பிஜேபியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பதை  அறியாதவர் அல்லர் ரஜினி.

ரஜினியின் அரசியல் நிறம் இதுதான் என்பது தெரியாத நிலையில் எதிர்ப்புக் குரலை உயர்த்துவது ----அதில் சுயநலம் இருப்பது மாதிரி தெரிகிறது.
   


ஞாயிறு, 21 மே, 2017

சசியிடம் கருணாஸ் புலம்பல்.!

"ஓ.பி.எஸ் .அணி,எடப்பாடி அணி மட்டுமில்ல ..இப்ப மூணாவதாக தோப்பு  வெங்கடாசலம் அணி ஒன்னு பார்ம் ஆகி இருக்கு. எத்தனை அணி வந்தாலும்  நான் உங்க பக்கம்தான்" என்று பெங்களூரு ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்கு  சத்தியம் பண்ணி கொடுத்திருக்கிறார் நடிகர் கருணாஸ்.

அதிமுக சின்னத்தில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர்  கருணாஸ்.முக்குலத்தோர் புலிப்படை என்கிற அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் பெங்களூரு போனவர் அப்படியே ஜெயிலுக்கும் சென்று  சசியை  சந்தித்திருக்கிறார்.

"தொகுதிக்குள் போனா ஒ.பி.எஸ்.அணியை சேர்ந்தவங்க பிரச்னைகள் பண்றாங்க.என்ன பண்றதுன்னே புரியல." என்று சொல்லி இருக்கிறார். அதற்கு  சசி "பொறுமையா இருங்க. நேரம் வரும். அதுவரை எடப்பாடிக்கு  ஆதரவாக இருங்க .கட்சி இப்ப நெருக்கடியில் இருக்கு. சின்னம் பற்றிய சிக்கல், தினகரன்  கைது ,கட்சிக்குள் கோஷ்டிகள் இதெல்லாம் நல்லதில்ல.மனசுக்கு  வேதனை.
கட்சி தொண்டர்கள் கடிதங்கள் எழுதி இருக்காங்க. பதில் அனுப்பிட்டிருக்கேன் .அவங்கல்லாம் கட்சி தலைமையை ஏற்க வெளியில் வரச்சொல்றாங்க.நல்ல  நேரம் வரும்" என்று சொன்னதாக தெரிகிறது.



வியாழன், 18 மே, 2017

ரஜினியின் பகுத்தறிவை சந்தேகிக்கும் முன்னாள் நீதிபதி!

உயர்ந்த பதவிகளில் சிலர் எப்படி இருந்தார்கள் என்கிற சந்தேகம் சிலரின்  பதிவுகளை படிக்கிறபோது ஏற்படுவது உண்டு,

சாமான்யனின் ஒரே நம்பிக்கை நீதி சபை. மகான்கள் அமர்ந்து தீர்ப்பு எழுதுகிறார்கள் என்று நம்புகிறான்.தோளில் கிடக்கும் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு தெய்வத்தின் சன்னதியில் நிற்பது போல குனிந்து நிற்பான். அந்த மகான்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்று வந்த பிறகு அவர்கள் சாதிகள்  சார்ந்து பேசும்போது அவனது நம்பிக்கை சமாதி நிலை அடைகிறது.

அரசியல்வாதிகளைப் போல பேசுகிறபோது இவர்களால் எப்படி  நேர்மையுடன் தீர்ப்புகள் எழுதப்பட்டிருக்கும் என  சிதைந்து போகிறான்! சாதிகளும் அரசியலும் சார்ந்தவர்களுக்கு ஆளுவோரின் அன்பளிப்புதான் அந்த பதவிகள்   என்றாகிவிட்ட பின்னர்  நீதி தேவதையின் கண்களை கட்டினால் என்ன,கட்டாமல் விட்டால் என்ன? உண்மையான  நடுநிலையாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லாது போகிறது.

உயர்நீதி மன்றத்திலும் உச்ச நீதி மன்றத்திலும் நீதிபதியாக அமர்ந்திருந்தவர்  மார்க்கண்டேய கட்ஜு.அண்மைக்காலமாக இவர் வெளியிடுகிற கருத்துகள்  புண் படுத்தும் விதமாகவே இருக்கிறது.

அமிதாப் பச்சன்,ரஜினிகாந்த், இருவரைப் பற்றி அவர் சொன்ன கருத்துகள்  கடுமையான கண்டனத்துக்கு உரியவை.

"ரஜினிக்கு அரசியல் தெரியாது" என்று சொல்லி இருந்தால் கட்ஜுவுடன்  விவாதம் செய்திருக்கலாம். "மண்டையில் எதுவும் இல்லை " என்று சொல்லி  இருப்பதால் கோடை வெயிலின் தாக்கம் கட்ஜுவின் முகுளத்தை பாதித்து  விட்டது என்று நாமும் சொல்லலாம் அல்லவா! அடுத்தவனின் வீழ்ச்சியில் அரசியல் வாழ்கிறது என்பதை கட்ஜு சொல்லி இருந்தால் வரவேற்று  இருக்கலாம்.



ஈழத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது  கட்ஜு என்ன  சொன்னார்? மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து தமிழர்களுக்கு துரோகம்  செய்தபோது இவரது வாய் மூடிக் கிடந்தது ஏன்?

இப்படி பல கேள்விகளை  நம்மால் கேட்க முடியும்.அது அவர் வகித்த பதவியை  இழிவு படுத்தியது போலாகிவிடும் அரசியல்வாதிகளின் கைக்குள் நீதி சிக்கி இருக்கிறது.அது வளைவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்பதை  மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.

 

திங்கள், 15 மே, 2017

எத்தனை அவதிகள் நித்தமும்!

எனக்கு நெடுங்காலமாக இருந்து வருகிற சந்தேகம்தான்! இன்றுதான்  பதிவு  செய்கிற வாய்ப்பு.!

பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயங்கவில்லை. தொழிலாளர்களின்  கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்பதால்.!

மக்கள் நலம் நாடுகிற அரசாக இருந்திருந்தால் மாற்று ஏற்பாடு செய்திருக்க  வேண்டும். அமைச்சர்  வார்த்தைகளால் சொன்னதை எழுத்து வழியாக கேட்டிருக்கிறார்கள்.

வாய்மையே வெல்லும் என்பதில் இந்த அரசுக்கு  நம்பிக்கை இருக்காது என்பதால் தொழிலாளர்கள் எழுத்தில் பதிவு செய்க என  கேட்டதில் என்ன பிழை?

தொழிலாளர்களுக்கு ஆதரவாகஅரசுடன் பேச்சு நடத்திய அத்தனை தொழிற்சங்கமும் அரசியல் சார்ந்தவை.மறுப்பதற்கில்லை. அவைகளுக்கு  மக்கள் நலனிலும் அக்கறை இருக்கும் .ஐயம் இல்லை.!

பேருந்து இயங்காததால் சாதாரணமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு  இருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கை ஆட்டோக்கள்!

இந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கும் அதே  தொழிற்சங்கங்கள்தான்  வழிகாட்டிகள்.

பேருந்துகள் இயங்காததால் அதை பயன்படுத்திக்கொண்டு அநியாயகட்டணம்  வசூலிக்கக்கூடாது என்று எந்த சங்கமாவது ஆட்டோக்களை வற்புறுத்தியது  உண்டா? சூரியன் சுட்டு எரிப்பது போதாது என்று ஆட்டோக்களும்  மக்களை  சுட்டு எரித்து கட்டணம் வசூலிக்காமல் இருப்பதற்கு வழி வகை செய்தது  உண்டா?

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மக்களை சுரண்டுவது என்ன நியாயம்?

ஒரு பக்கம் அரசும் மறு பக்கம் தொழிற்சங்கமும் இணைந்து மக்களை நசுக்குவது என்றால்.?

எத்தனை அவதிகள் நித்தமும்!

ஞாயிறு, 14 மே, 2017

ஜெ .வீட்டு சமையல்காரம்மா....பாவம்டா !

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்.------இன்னும் விலகவில்லை.

அவரது பணியாளர்கள் ஒவ்வொருவராக  கொல்லப்படுகிறார்கள்.அல்லது  அவர்களின் சாவும் மர்மமாக இருக்கிறது.---காரணம் தெரியவில்லை.

ஆள் அண்டா மாளிகையாக இருந்து வந்த கொடநாடு எஸ்டேட்டில்  கொலை கொள்ளை! ஐந்தே ஐந்து கைக்கடியாரங்கள்தான் காணவில்லை என்கிறது  போலீஸ்.-----புலன் விசாரணை புஸ்..புஸ்.!

தற்போது ஜெ.வீட்டில் சமையல்வேலை பார்த்து விலகி விட்ட கிழவியையும்  கொல்ல முயற்சி நடந்திருக்கிறது.----எப்.ஐ.ஆர்.போடுவதற்கு யாருடைய  விரலசைவுக்காக காத்திருக்கிறது காவல் துறை..

எல்லாமே மர்மம். எவனும் காரணம் சொல்வதாக இல்லை.

எண்பது வயது சமையல்கார கிழவி பஞ்சவர்ணத்தை கழுத்தை சீவி இருக்கிறார்கள். இரும்புத் தடியினால் மண்டையை பிளந்திருக்கிறார்கள். யாரால் ஏவி விடப்பட்ட கும்பலோ தெரியவில்லை. மனைவியின்  மரண ஓலம் கேட்டு வெளியில் வந்த கிழவரையும் போட்டு தாக்கிவிட்டது.

அக்கம் பக்கத்து ஆட்கள் திரண்டதும் கும்பல் ஓடி விட்டது. மாஜி குக் என்பதால் பஞ்சவர்ணத்தின் மகன் முருகேசனுக்கு உதவி பி.ஆர்.ஒ.பதவி கிடைத்திருக்கிறது.அது ஜெயலலிதாவின் கருணையினால்!

ஜெ.யின் வேலைக்காரர்களை விட்டு வைக்கக்கூடாது. அவர்கள் ரகசியங்களை சொல்லி விடுவார்கள் என்கிற அச்சம் ஒரு கும்பலுக்கு  இருக்கிறது. அந்த கும்பல்தான் அரசு அதிகார உதவியுடன் இத்தகைய  பாவச்செயல்களில் இறங்கி இருக்கிறது என்கிற சந்தேகம் மக்களுக்கு வருமா வராதா?

வரும்.வரத்தான் செய்யும்,!.

ஜெ,யின் படுக்கை அறை, அவர் பயன்படுத்திய பொருள்கள் எதையும் யாரும்  பயன் படுத்தக்கூடாது.வேதா நிலையம், கொடநாடு பங்களா ,சிறுதாவூர் பங்களா ஆகியவற்றில் சாந்தி பூஜை பரிகாரம்செய்யும்படி சோதிடர் சொன்னதாகவும் அதை சசிகலா கேட்கவில்லை என்பதாகவும் சொல்கிறார்கள்.

இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை.!

சனி, 13 மே, 2017

ஜெ. மாளிகையில் ஆவியின் அழுகுரல்,.!

ஆதி தமிழன் முதல் அண்மைக் காலத்  தமிழன் வரை  அனைத்து மதத்தினரும்  நம்புவது  ஆவியை!

அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள்  ஆவியாக வந்து பழி தீர்த்துக் கொள்வார்கள் என்பதை பச்சை குழந்தைகளுக்கும் பாலூட்டியபடியே  கதை சொல்லி  வளர்த்து வந்திருக்கிறார்கள்.இதிகாசமும் ஆவி, பேயை   காட்டி  இருக்கிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால்  ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது  இல்லை, அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட அவரது அணியினரும் லட்சக்கணக்கான  தொண்டர்களும் நம்புகிறார்கள்.

போயஸ்கார்டன் மாளிகையில் தள்ளிவிடப்பட்டு கீழே விழுந்ததில்  நினைவிழந்தார் .அந்த நிலையிலேயே கொண்டு செல்லப்பட்டதால்தான் மாளிகையில் இருந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படவில்லை என்பதும் ஒரு சந்தேகம்தான்! அப்போல்லோவில் எப்படிப்பட்ட  நிலையில் ஜெ. அனுமதிக்கப்பட்டார் ,வேதா நிலையத்தில் எத்தகைய மருந்து மாத்திரைகள்  கொடுக்கப்பட்டன என்பதற்கு  உரிய பதில்கள் கிடைக்கவில்லை.

இத்தகைய சந்தேகங்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்தான் ஆவியின் அழுகை சத்தம் போயஸ்கார்டனில் நள்ளிரவில் கேட்பதாக  சொல்கிறார்கள்.

ஒரு பெண்ணின் அழுகைக் குரல் என சொல்லப்படுகிறது. அப்படியானால் அது  அம்மாவின் குரலாகத்தான் இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

ஜெயாவின் மரணத்துக்குப் பின்னர் சிறுதாவூர் பங்களாவில்  தீ விபத்து. கொட நாடு பங்களாவில் மர்ம மரணங்கள், என அடுத்தடுத்து பலி வாங்கல்  நடந்து கொண்டிருக்கிறது. ஜெ.யின் சமாதியில்  காவல் பணியில் இருப்பவர்களும்  அடிக்கடி காய்ச்சலில் படுத்து விடுகிறார்களாம்.

ஆவியின் வடிவத்தில் வந்து ஜெ. பழி தீர்த்துக் கொள்வதாக சொல்வது உண்மையா ,பொய்யா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நானே வருவேன். என்று பாட்டு பாடுவதாக  சொல்லாமல் இருந்தால் சரி!




வெள்ளி, 12 மே, 2017

ஜெயா டி.வி.யில் நிர்வாக மாற்றமா?

ஜெயாவின் மர்ம மரணத்துக்குப் பிறகு எத்தனையோ மாற்றங்கள்! ஏமாற்றங்கள்.! எவன் செத்தால் எனக்கென்ன எனக்கு வேண்டியது  ஆட்சியும்  அதிகார மையமும்தான் என்று ஒரு கோஷ்டி யூதாசாக மாறியது.அதன் விளைவுதான் பளிங்கு மாளிகையில் சாணப்பூச்சு!


சாணத்தில் ஜனித்த புழுக்களை புனித பூக்களாக சிலர்  சிலாகித்தனர். சிறப்பு  வழிபாடுகள் இரவிலும் நடந்தன."மாற்றுக் கட்சிக்காரனை  பார்த்து சிரித்தாலே கட்டம் கட்டப்பட்ட" சர்வாதிகாரம் சரிந்து விட்டதால் உள்ளடி வேலைகள் லஜ்ஜை இல்லாமல் நடந்தன..

மாநில அரசும் மத்திய அரசும்    'அரசியல் இரகசிய உடன்படிக்கை ' க்காக  இருட்டு வீட்டுக்குள் முடங்கி  இருக்கும்  காரணத்தால் மக்களின் வேதனைக்குரல்  செவியை எட்டவில்லை.

சட்ட ஒழுங்கு சீரழிவு, விவசாயிகளின் தற்கொலை, குடிதண்ணீர் பஞ்சம், பாலியல் வன்கொடுமை,உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் டாஸ்மாக் சதிராட்டம்,
இப்படி இன்னும் பல அராஜகம் நடந்து கொண்டிருந்தும் பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி இருவரும் மோன நிலையில்.!

அவர்களுக்கு ஆட்சி முக்கியம். அதிகாரம் முக்கியம்.நாட்டைப் பற்றிய கவலை  அவர்களுக்கு இல்லை.

ஜெயாவுடன் இணைந்து சொத்து குவித்த சசியும்  தனது பிடியின் இறுக்கத்தை  தளர விடுவதாக இல்லை.  அரசு எந்திரம் வழியாக மோடி  அச்சுறுத்தினால்   சசி தனது  ராஜ தந்திரத்தால்  அவருக்கு தண்ணீர் காட்டுகிறார். உறவுக்காரர்கள்  பட்டியல் நீண்டு இருப்பதால் காய்களை மாற்றி காட்சிகளை  நடத்துகிறார்.

தினகரனை பிடிக்காதது போல சசி எழுதிய திரைக்கதைக்கு புதிதாக வசனம் எழுதுவதற்கு ஜெயா டி.வி.யில் ஒரு மாற்றம் என்கிறார்கள்.தினகரனின்  மனைவி அனுராதா வசம் இருந்த டி.வி. தற்போது விவேக் மனைவி கீர்த்தனா வசம். யார் வசம் இருந்தால் என்ன அது மன்னார்குடி வம்சம்தானே! வம்சாவளி ஆதிக்கம் என்பது தமிழர்களுக்கு புதிது இல்லையே!

பாஜகவின் பாசப்பார்வை தன் மீது பதிந்து விட வேண்டும் என்பதற்காக  எடப்பாடி எந்த எல்லைக்கும் போவார். பாக். எல்லைவரை பாத யாத்திரை செல்லவும் தயங்காத அதி புத்திசாலி. ஆனால் தினகரன் தனது ஊதுகுழலாக  நாஞ்சில் சம்பத்தை பயன்படுத்திக் கொண்டுஅவ்வப்போது  பயம் காட்டிக் கொண்டு  இருக்கிறார்.  தினகரன்தான் பட்டத்துக்கு உரியவர் என்பதாக பதாகைகள் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை அளக்க ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு ஒரு ஆடி கார் கொடுத்து விட்டால் நாணம் இன்றி நாணல் மனிதர் ஆகிவிடுவார்.

சிந்தாமல் சிதறாமல் மொத்த அதிமுக வையும் விழுங்குவதற்காக  ராஜரிஷி  அமித் ஷா வகுத்திருக்கும் வியூகம் வெற்றி பெறுமா, சிறைக்குள் இருந்தாலும்  சுக்கானை தன்வசம் வைத்திருக்கிற சசி கொடி  நாட்டுவாரா என்பது போகப் போகத்  தெரியும். ஆனால்  குடியரசு த் தலைவர் பதவிக்கு மோடி யாரை கை  காட்டுகிறாரோ அவருக்கு சலாம் போட்டுவிட்டு பரம விசுவாசிகளாகி விடுவார்கள் என்பது காலம் வகுத்திருக்கும் விதி.

ஜெ.வின் மர்ம மரண விசாரணை  கோரிக்கையும்  ஓசை இல்லாமல் மூச்சை  விட்டு விடும்.!

 அதுவரை  மக்கள் பொறுமை காட்டுவார்களா?

புதன், 10 மே, 2017

ஜெ.உயில் என்னிடம் இருக்கிறது.!

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவன் அரசியல் வாதியாக இருக்க  முடியாது.! வட்ட செயலாளருக்கே  அந்த வார்டில் இருக்கிற புறம்போக்கு  நிலம் எல்லாமே பதிவு செய்யப்பட்டு  பட்டாவாகி இருக்கும் என்கிறபோது  நாட்டை  ஆள்கிறவர்களுக்கு என்னவெல்லாம் சொந்தமாகி இருக்கும்? வீடியோ கடை வைத்திருந்தவருக்கு சாராய ஆலை சொந்தமாவது ஜீ பூம்பா மந்திரத்தினால் இல்லை.அரசியல் அதிகாரத்தினால் மட்டுமே சாத்தியம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என கருதப்பட்ட  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருமே குற்றம் செய்தவர்கள்  என்று  நீதி மன்றம் நால்வரையும் காராக்கிரகத்தில் தள்ளி கதவடைத்தது. ஊழ்வினை காரணமாக  ஜெயலலிதா உயிருடன் இல்லை.மற்றவர்கள் கர்நாடக மாநில  சிறைக்குள்.!

ஜெயாவின் திரண்ட சொத்துகளுக்கு வாரிசு யார்? அவர் எழுதிய உயில் எங்கே யாரிடம் இருக்கிறது என்கிற சந்தேகம் எழும்போதெல்லாம் சிலர்  சோ வை அடையாளம் காட்டினார்கள். அவரும் விண்ணுலகம் சென்று விட்டதால்  குருமூர்த்தியிடம் இருக்கலாம் என்றார்கள்.இப்படி ஹேஷ்யம் சொல்லிவந்த காலகட்டத்தில்தான்  ஜெ யின் கொடநாடு மர்ம பங்களாவில் கொள்ளை முயற்சியும் கொலைகளும் நடந்து இருக்கின்றன.

உயிலை தேடி நடந்தது தான் அந்த கொள்ளையும் கொலைகளும் என நம்பப்படுகிற நேரத்தில்.......

"அத்தையின் உயில் என்னிடம் இருக்கிறது. போயஸ்கார்டன் வேதா நிலையம்,ஜெமினி பார்சன்ஸ் காம்ப்ளக்ஸ்,ஹைதராபாத் திராட்சை தோட்டம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தம். சொத்துகள் எங்களுக்கே   என சொல்லிவிட்ட பிறகு எப்படி சசியும் அவரது குடும்பத்தாரும் அத்தையின் வாரிசு ஆக முடியும்?" என்கிறார் தீபக்.

உயில் பகிரங்கமாக வெளியாகும்வரை தீபக் சொல்வதை எப்படி நம்பமுடியும்?

அலிபாபாவின் குகைக்கு சரியான மந்திரம் யாருக்குத் தெரியுமோ...? ஒரு  வேளை மோடிஜிக்கு தெரிந்திருந்தால்?

கொடநாடு கொள்ளை முயற்சிக்கு ஒரு மூத்த அமைச்சர்தான் காரணமாக இருக்கும் என்று சசி தரப்பு கருதுவதாகவும்,

கேரளத்தில் இருக்கும் பிரபல புள்ளியின் மூளையில் ஜனித்த திட்டம் இது அவர்தான் ஜெ யின் முன்னாள் காரோட்டி காமராஜை பயன்படுத்தினார் என்று மற்றொரு தரப்பும்,

கோவை மர வியாபாரியும் அதிமுக அரசியல்வாதியுமான ஒருவரும் இதில்  பின்னப்பட்டிருக்கிறார் என இன்னொரு தரப்பும் சொல்கிறது.

யார் சொல்வது உண்மை என்பது ஜெ யின் ஆவிக்குத்தான் தெரியும். யாராவது ஆட்டையை போட நினைத்தால் அவர்களை அடையாளம் தெரியாமல் செய்துவிடும் ஆவி என்பதை புரிந்து கொண்டால் அவர்கள்தான்  புத்திசாலிகள்.!




வெள்ளி, 5 மே, 2017

திராவிட ன் --ஆர்யன் கதை எடுக்கிறாரா ராஜமவுலி?

பாகுபலி படம் எடுத்து உலகையே வியக்கவைத்திருப்பவர் இயக்குநர் ராஜமவுலி.

இவருக்கு பாகுபலி கதையை சொன்னவர் கே.வி.விஜயேந்திர பிரசாத். இவர்  ராஜமவுலியின் தந்தை.

இவரின் அடுத்த திட்டம் என்ன?

அவரே சொல்கிறார் கேளுங்கள்!

"தாய் வழியை முன்னிறுத்தி முன்னோர்கள் ஆட்சி நடந்தது. கவுதமி புத்ரா தனது தாயின் பெயரை சொல்லி விட்டுத்தான் தனது பெயரை பின்னால் சேர்த்துக்கொண்டான் .தாய் முராவின் பெயருக்கு பின்னால் சந்திர குப்தன் பெயரை வைத்துக்கொண்டு மவுரிய சந்திரகுப்தன் என்றழைக்கப்பட்டான். இந்த பெண் வழி மரபு எப்படி ஆண் வழி மரபுக்கு மாறியது? தெரியவில்லை!  திராவிடன்-ஆர்யன் கதையை சொல்ல விரும்புகிறேன்." என்று சொல்லி இருக்கிறார்.

இது வில்லங்கத்தில் முடியுமா?

தெரியவில்லை.!
 

சசிகலா காட்டம்.'தினகரனை ஆர்.கே.நகரில் நிறுத்தி இருக்கக்கூடாது!'

 அடித்து துவைத்தது காரணமா, அல்லது நைந்த துணி காரணமா?

எதுவாக இருந்தால் என்ன?  சட்டை கிழிந்து விட்டதே!

 புது சட்டையை தேடுகிறது சசிகலா அணி.!

"ஆர்.கே.நகரில் தினகரனை நிறுத்தியது தன்னிச்சையான முடிவு.அவரின் ( நடராசன்.) பேச்சை கேட்டிருக்கக்கூடாது. தினகரன் போட்டியிட்டதால்தான்  பிஜேபி காட்டமாகி விட்டது. பெரா வழக்கை கையில் எடுத்துக் கொண்டுவிட்டது . தினகரன்  ஜெயிலுக்கு போக அதுவே காரணமாகி  இருக்கிறது!"என்று தனது வழக்குரைஞர்களிடம் சசிகலா பொங்கியதாக சொல்கிறார்கள்.

போதி மரத்தடியில்தான் ஞானம் பிறக்கவேண்டும் என்பதில்லை. காராக்கிரகத்திலும் பிறக்கும் போல!

பிஜேபி அரசின் உருக்குப் பிடிக்குள் உடும்பு ஒன்று சிக்கி விட்டது என்பது  சசிக்கும் தெரியும்.. அமித் ஷாவின் சாணக்கியம் சலங்கை கட்டிக் கொண்டால் களத்தில்  இறங்க ஜி.கே. வாசனும்   இணக்கம் காட்டுவார் என்கிறார்கள். கோவைக்கு அமித் ஷா வருகிறபோது அறிவிப்பு வரலாம் என்பது ஆருடம்.!


தனது அணிக்கு பா.ம.க.வரும் என்று பிஜேபி நினைக்கிறது.தனித்து  நிற்கும்  அளவுக்கு பா.ம.க வலிமை பெறவில்லை என்பதால் அதன் கணக்கு தவறு  ஆகாது. அதற்கு  வழி இல்லை.. பாமகவுக்கு அமைச்சர் பதவி தேவை என்பது  கட்சியின் கட்டாயம்.




சசியின் இன்னொரு ஆதங்கமும் வெளியாகி இருக்கிறது.

"நாஞ்சில் சம்பத் ,ஆலடி குமார் இந்த இருவரைத்தவிர தினகரனுக்கு  யாரும்  ஆதரவாக இல்லையே! எடப்பாடியும் தினகரனுக்கு ஆதரவாக பேசுவதில்லை. எனது சொந்த சாதி எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடிக்கு ஆதரவாக இல்லை. ஆகவே  தினகரன் அரசியலில் இருப்பது அவசியம்.அவரை எப்படியும்  வெளிக்கொண்டு வரவேண்டும்.பெரா வழக்கில் வீடியோ கா ன்பரன்ஸ் வழியாக பேச ஒப்புக்கொண்டிருக்கிறேன்." என்று தனது வழக்குரைஞர்களிடம்   சொன்னாராம்.

எது எப்படியோ வறுமை, தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்சி- நிர்வாக முடக்கம், தணல் உமிழும் வெயில் என தமிழக மக்கள் செத்துக் கொண்டிருக்கிற நிலையில் அவைகளை பற்றிய கவலை இல்லாமல் எடப்பாடி அதிமுக இருக்கிறது.

வியாழன், 4 மே, 2017

உலகாயுதாவும் தமிழ்ச்சினிமாவும்..!

"நீ  ஒருநீளத் திரைப்படம் எழுதுவோன்
நீயே எண்ணி  நீயே எழுதுக!
உள்ள மதனை உறுதியால் தோண்டினால்
வெள்ளப் புதுக்கருத்து  விரைந்து பாயும்.
அயலார் பாட்டின் அடியைத் தொடாதே
அயலார் பாட்டின் சில சொல் அகற்றி
உன்பாட்டென்றே உரைக்க வேண்டாம்.
பிறரின் கருத்தைப் பெயர்த்தெழுதாதே"

தோழனிடம் பாவேந்தன் பாரதிதாசன் கேட்டுக் கொண்டபாடல் வரிகள்  ஏனோ அன்று  நினைவில் நின்றாடியது.

 தமிழ்த் தேசிய சலனப்படம் நூற்றாண்டு விழாவைத் தொடர்ந்து  'உலகாயுதா ' அமைப்பு ஓசையின்றி பாராட்டு விழாவை நடத்தி முடித்ததுதான்  பாவேந்தனை நினைவூட்டியதற்கான காரணம்.திரைத்துறைக்கு தொண்டாற்றிய தூய பெருமக்களைப் பாராட்டி பெருமைப் படுத்தினார்கள்.

மே முதல் நாள். தொழிலாளர் தினம். காமராஜர் அரங்கம். தேசியத் தலைவரின்  திருப்பெயர் கொண்ட அரங்கமோ பொதுவுடமை போராளி  ம.சிங்காரவேலரின் பெயரை அன்று  வரித்துக் கொண்டது.

உலகாயுதா அமைப்புக்கு  வடிவம் கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், மற்றும் இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன் ஆகிய படைப்பாளிகள் வழியாக  100 பேர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆளுக்கொரு பொற்பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்  விஜய்சேதுபதி.மொத்தம் நூறு  சவரன்.

பாரதிதாசனின் கருத்துக்கு நேர்மாறாக திரை உலகம் பயணித்துக் கொண்டிருக்கிற கால கட்டத்தில் இப்படி ஒரு சாதனையா?

திரைத்துறையின் வளர்ச்சிக்கு துணையாக நின்றவர்களை வலிந்து அழைத்து  வாழ்த்தி கவுரவிப்பது அரசின் கடமை.ஆனால் அரசுக்கு ஆட்சியாளர்களை  வாழவைப்பதற்கே காலமும் நேரமும் போதவில்லை என்கிறபோது இவர்களைப் பற்றி எப்படி நினைக்கும்?

ஆனால் விஜய்சேதுபதி நினைத்தார்.ஒரு தனி மனிதர்.தமிழ்ச்சினிமாவில்  அவர் இன்னும் தொலை தூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது.போட்டியும் பொறாமையும் அருகருகில்! கால் வாரும் நேரத்துக்காக காத்திருக்கிறது .இத்தகைய சூழலில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர்  சீனு ராமசாமியை மேடைக்கு அழைத்து தனது தாயின் கரத்தினால் பொற்பதக்கம்  வழங்க வேண்டும் என்பது நேர்த்திக்கடன் அல்லவே!

திரை உலகமே மறந்து விட்ட முன்னோடிகளை கவுரவிக்கவேண்டும் என்பது என்ன கட்டாயமா? மற்ற நடிகர்களைப்போல இவரும் இருந்துவிட்டால்  யார் கேட்கப்போகிறார்கள்.

"சினிமாவில் சம்பாதித்தேன். சம்பாதித்தை கொடுக்கிறேன்" என்று சொல்வதற்கும் ஒரு மனம் வேண்டும்.அது விஜய்சேதுபதியிடம் அதிகம்  இருக்கிறது. இந்த மனமே அவருக்கு விரோதிகளையும் உருவாக்கும்!

அன்று கவுரவிக்கப்பட்டவர்களுக்கு  தொப்பைகள் இல்லை. வற்றிய வயிறு ஒட்டிய கன்னம்,நடப்பதற்கும் முடியாமல் வாக்கர்கள் துணை என்றுதான்  காணப்பட்டார்கள்.

சேர்ந்திசை என்பதை நாட்டுக்கு தந்த இசைஅமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் ,ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ் ஆகியோரின் படங்களை திறந்து வைத்து பெருமைப் படுத்தினார்கள். ஆனால் அன்றைய விழாவுக்கு வரவேண்டிய  தமிழ்த்திரை நட்சத்திரங்கள் ஏனோ வரவில்லை.

பொதுவுடமை சார்ந்தவர்கள் நடத்திய விழா என்பதால் தவித்தார்களா?

புதன், 3 மே, 2017

சரியாக இந்தி எழுதாதவன் புருசனாக முடியுமா?

"என்னடா உங்க வெளங்காத ஞாயம்?"-கடுப்போடு வந்து  உட்கார்ந்தார்  ஏடாகூடம்.

"வரும்போதே வாய்  நெறைய கங்கு? எதுக்கு இப்படி பொங்கல்?"

"பின்ன என்னங்கானும்...மாடுன்னு  திட்டுனா கோபம் பொத்துக்கிட்டு வருது. ஆனா அதே மாட்டை லட்சுமின்னு கும்பிடுறிங்க.அப்புறம் ஏன்டா மாடுன்னு வஞ்சா பாய்றீங்க ? அந்த மாட்டை கொன்னா குத்தம் தின்னா பாவம்னு சொல்றீங்கள்ல! ஆனா எருமையை கொன்னா பாவம் இல்லயாக்கும்? "

"யோவ்.! மல்லிகைப்பூவ்ல மாலை கட்டலாம். நீ முருங்கப்பூவ்ல கட்டப்பாக்கிறியே? வெளங்குற மாதிரி சொல்லு. இத படிக்கிறவங்கள பாதியிலேயே  குளோஸ் பண்ண வச்சிடாதே?"

"கஜோல்னு ஒரு நடிகை. பிரண்ட்ஸ் வீட்டுக்கு  விருந்துக்கு போச்சு. டைனிங் டேபிள்ல என்னென்னவோ இருந்திருக்கு. அதில பீப் சூப்பும்  மணக்க மணக்க  இருந்துச்சாம். இத அந்த நடிகை வெள்ளந்தியா சொல்ல மத்த பயலுக கட்டி ஏறி காத அறுக்காத குறை. எப்படி மாட்டுசூப்பை குடிக்கலாம்னு சல்லடத்தை கட்டிட்டு கோதாவ்ல குதிச்சிட்டாய்ங்க! மன்னிச்சிடுங்க. வாய் தவறி பீப்னு சொல்லிட்டேன்.அது பப்பல்லோ சூப் ன்னு சொன்னபிறகுதான் பொங்குனவய்ங்க அடங்கியிருக்காய்ங்க! அப்ப எருமக்கறியை தின்னா  பாவம்  இல்லையா? எமனோட வாகனம் ஆச்சே!"

"எந்த கறிய திங்கிறது திங்க கூடாதுங்கிறதல்லாம் அவனவனோட தனிப்பட்ட  வெவகாரம்! உத்திரபிரதேசத்தில்   மதோரா பஞ்சாயத்தில் ஊர் கூடி தீர்மானம்  போட்டிருக்காங்க.முஸ்லிம்கள் பெரும்பான்மையா இருக்கிற பஞ்சாயத்து. அங்க யாராவது பசுவ வெட்டுனா ரெண்டரை லட்சம் அபராதம்னு சொல்லி  இருக்காங்க.இதுக்கு என்னத்த சொல்றது?"

"அந்த வெங்காயத்த நாங்களும் படிச்சோம். அதே பஞ்சாயத்தில் பொம்பள புள்ளைக செல்போனை வீட்டுக்குள்ளேதான் வச்சுதான் பேசிக்கணும். வெளியே எடுத்திட்டு போயி பேசுனா 2100 ரூபா தண்டம் கட்டணும்னு  சொல்லிருக்கே! வீட்டை விட்டு ஓடிப்போறத தடுக்குறாங்கய்ளாம். .இவிங்க  எந்த காலத்தில இருக்காய்ங்க. ?"

"யோவ் .ஏடாகூடம்...தமிழை சரியா எழுதத்தெரியாத பயலுக எக்கச்சக்கமாக  இருக்காய்ங்க.சரியா எழுத படிக்கத் தெரிஞ்சவனைத் தான் கல்யாணம் கட்டிப்பேன்னு எந்த பொண்ணாவது சொன்னதா ஞாபகம் இருக்கா?"

"இல்லியே!"

"உத்திரபிரதேசம்  குராவளிங்கிற ஊர்ல பொண்ணு  ,மாப்ள ரெண்டு வீட்டு சொந்தங்களும் பொதுவான எடத்தில கூடி இருக்காங்க. பொண்ணுகிட்ட இந்தியில் ஏதேதோ  எழுத சொல்லிருக்கான் மாப்ளையா வரப்போறவன்!. பொண்ணும் எழுதி இருக்கு.  அப்புறம் பொண்ணு எழுத சொல்ல அவனும் அட்ரஸ் உள்பட இந்தியில் எழுதி கொடுத்திருக்கான். அவன் எழுதிக் கொடுத்த  இந்தி தப்பு தப்பா இருந்திருக்கு! ஒழுங்கா எழுதத்தெரியாத பயல கட்டிக்க மாட்டேன்னு பொண்ணு நடைய கட்டிருச்சு. இந்த மொழிப்பற்று நமக்கு எப்பய்யா வரப்போகுது?"

நீங்களாவது சொல்லுங்க? மைல் கல் வரை இந்தி வந்த பிறகும் சும்மாதானே  இருக்கோம்?