
மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல் என்பதாக ஏட்டுப்பள்ளியில் படித்திருக்கிறேன்.காலப்போக்கில் அரசியல் மாற்றங்களால் அந்த பொன்மொழி 'மந்திரிக்கழகு பெரும்பொருள் சேர்த்தல் 'என்று திரிந்து விட்டதோ என்னவோ!
அணைக்கு மூடி போடும் அறிவாளிகளை பெற்ற திருநாடு என்ற பெருமை நமக்கு மட்டுமே உண்டு.
சாதிக் கொடுமையைப் பற்றி 1989-ல் கமல் பேசிய போது சிலர் முணுமுணுத்தார்கள் .தற்போதைய ஜெயக்குமார்களைப் போலவே!
அப்போது அவர்களுக்கு கமல் சொன்னது......
" என்ன பெரிய பேச்செல்லாம் பேசுகிறான் இந்த நடிகன்" என்பவர்களுக்கு....
நல்ல விஷயத்தைப் பேச ஒருவன் மகாத்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.!என்னைப் போன்ற சற்றே பிரபலமான பாமரனும் பேசலாம்.அணுவை ஆராய்ந்து E = M C ஸ்கொயர் என்று முதன் முதலில் சொல்லவேண்டுமானால் ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞான அறிவாளி அவசியம்.அதை வழி மொழிபவனுக்கு ஐன்ஸ்டின் அளவுக்கு விஞ்ஞானம் தெரிந்திருக்க வேண்டியதில்லை..ஐன்ஸ்டினின் ரசிகனாக இருந்தாலே போதுமானது."
கமல் அரசியல் பேசலாமா என்பவர்களுக்கும் அவரை கண்டிப்பவர்களுக்கும் இது சரியான பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் மிகவும் ரசித்த அவரது கேள்வி -பதில்களில் சில இங்கே நினைவூட்டப்படுகிறது.
"அறிவாளி முட்டாளிடம் தோற்பது எப்போது?"
"மெஜாரிட்டி வெல்லும்போது!"
"உண்மையைச்சொல்பவர்கள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாவதேன்?"
"அதிகம் பழக்கமில்லாத வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதால் வரும் விளைவு.!"
"தங்களுக்கு பிடித்தது ராமாயணத்தில் வரும் ராமனா, பாரதத்தில் வரும் கர்ணனா?"
"நிஜமாய் வாழ்ந்த வால்மீகியின் பாத்திரம்."
"கடவுள் உங்கள் முன் தோன்றி 'உனக்கு தேவையான வரம் ஒன்று கேள்' என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?"
"எனக்கு ஒன்றும் வேண்டாம். மூட நம்பிக்கைகளையும், உன் பெயரையும் சொல்லி பல்லாயிரம் வருடமாய் ஊரை ஏமாற்றுகிறவர்களை நின்று கொல்லாதே, முடிந்தால் அரசன் மாதிரி இன்றே கொள் என்பேன்."
"ஒரு பெண் பிறந்ததுமே பூவும் போட்டும் சொந்தமாகி விடுகிறது.அப்படி இருக்க கணவன் இறந்ததும் அவற்றை இழக்கச்செய்யும் இந்தச்சமுதாயம் பற்றி?"
"இந்த சமுதாயத்தில் எந்த மதாசாரத்தில் அவள் பிறக்கிறாள் என்பதை பொறுத்தது. அவள் இழப்பதும் இழக்காமல் இருப்பதும்."
இப்படி இன்னும் பல இருக்கின்றன. அவசியம் ஏற்பட்டால் இன்னும் வரும்.!