
"தெரியும்பா. உன்ன விட்டா எங்களுக்கு வேற நாதி ஏது.? .அப்பா கவர்மெண்டுல வேலை பாத்திருந்தா பென்சனாவது வரும். லாரி ஆபீஸ்ல மானேஜர் வேலை.ராத்திரி பகல்னு கெடந்தார். சக்கையானதும் கையில கொடுத்த பணத்திலதான் இந்த வீட்டை வாங்கினார்.சொந்த வீட்லதான் ஆவி பிரியனும்னு ஆசை.அதான் இங்கேயே ரெண்டு பெரும் கெடக்கிறோம். உன் சந்தோசத்துக்கு குறுக்க நிக்க மாட்டன்பா!.அந்த பொண்ணையவெ கட்டிக்கோ .?"
பார்வை இல்லாத சாந்திக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தது. நண்பர்கள் அனைவரும் என்னுடைய மனைவியின் அழகைப் புகழ்ந்தார்கள். நான் கொடுத்து வைத்தவன் என்பதாக சொன்னார்கள். கோவில் சிலையை விட அழகாக இருக்கிறாள் என்று பொறாமை வருவதாகவும் சொன்னார்கள்..நவீன சிகிச்சை முறையில் பார்வையை பெற முடியும் என்றார்கள் இது போதாதா எனக்கு! எழுத முடியாத அளவுக்கு மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு. முதலிரவு எனக்கு.!
நான் அறைக்குள் சென்றதை உணர்ந்து எழுந்து நின்றாள் சாந்தி. ஒவ்வொரு அசைவையும் அவளால் உணர முடிகிறது.
"உக்காரு சாந்தி!"
"மாமா அத்த சாப்பிட்டாங்களா?"
"ம்ம்.! இந்நேரம் படுத்திருப்பாங்க. பத்து மணிக்கு மேலதான் நல்லநேரம்னு அய்யர் குறிச்சு கொடுத்திருக்காரு.அதான் லேட்!" பக்கத்தில் அமர்ந்து தோள் அணைத்தேன். எனக்கு சிலிர்த்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.மெல்லிய நடுக்கம் .எங்கள் குடும்பம் பற்றிய எல்லா விவரங்களையும் முன்னதாகவே சொல்லி விட்டதால் அதைப் பற்றி பேச வில்லை.அவள் தலையில் வைத்திருந்த சாதி மல்லிகையின் மணம் என்னை என்னவோ செய்கிறது. எழுந்து நின்றவள் என்னை கைகளால் தடவி, என் பாதம் அறிந்து கண்களில் ஒற்றிகொண்டு எழுந்தாள்.அவளது நெருக்கம் எனக்குள் போதையாகியது. நெஞ்சு படபடக்கிறது.
"அவசரமா?" என்னுடைய கையை அழுத்துகிறாள்.
பொய் சொன்னேன். "இல்லம்மா!"
"மடியில படுத்துக்கவா..?.தூங்கறதுக்கு முன்னாடி அம்மா மடியிலதான் படுத்துப்பேன்."
படுக்கவைத்தேன். ஆதரவாக தலையை தடவி, கன்னம் தொட்டேன்.
" சந்தோஷமா இருக்குங்க."என்றவளின் கண்களில் நீர் வழிவதை உணர முடிந்தது. "எதுக்கு சாந்தி அழற?"
"கண்ணு தெரியாத எனக்கு இப்படி ஒரு வாழ்வா? உங்களை பாக்க முடியலியே! நீங்க கருப்போ செவப்போ தெரியாது.......குட்டையா நெட்டையா, முரடரா, நல்லவரா ,கெட்டவரா..... எதா இருந்தா என்ன எனக்கு நீங்கதாங்க கடவுள். கடேசி வரை வச்சு என்னை காப்பாத்துவிங்கள்ல."? என் மடியில் முகம் புதைத்து விம்மி அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என்பது தெரியவில்லை. எனக்கு பேச்சும் உடனடியாக வரவில்லை.நான் அவளை கை விட்டால் மனிதனே இல்லை என்பதை மனம் அறைந்து சொன்னது.....
மெர்சல் படத்துக்கு எப்படி தளபதி விஜய்க்கு மத்தியிலும் மாநிலத்திலும் இருந்து நெருக்கடிகள் வந்ததோ அதைப் போல அறம் படத்துக்கும் தொல்லைகள் வரலாம் என எதிர்பார்க்கிறார்கள். அந்த படத்தில் நயன்தாரா பேசியிருக்கிற வசனங்கள் சமூக அவலங்களை கடுமையாக சாடி இருக்கிறதாம்.இந்த படத்தில் அரசு அதிகாரியாக வருகிறார்.அதாவது நேர்மையான கலெக்டர்.
"