செவ்வாய், 28 நவம்பர், 2017

சசி கூடாரம் காலியாகிறது!

                           "எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடந்திருக்கிறது" என்று இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும்  போகி  கொளுத்தி  சர்க்கரை பொங்கல் வைத்து  கொண்டாடுவதை விட  சிரம்  வெட்டி  ராம்லீலா கொண்டாடும் பிஜேபி தான்  சந்தோஷத்தில் திளைத்திருக்கிறது.
                         ஜெயலலிதாவின் மர்மச்சாவு அவர்களுக்கு திறவு கோல் கிடைத்ததைப் போலாகிவிட்டது. எந்த காய்களை எப்போது வெட்டித் தூக்கலாம் என்பது அவர்களுக்கு பால பாடம் அல்ல.பட்டம் பெற்றவர்கள். அத்வானியையே சிங்கிள் காலம் செய்தியில் கூட தனித்து வரமுடியாமல்  செய்து விட்டார்கள்.'ஆல்சோ ஸ்போக்' வரிசையில் சேர்த்து விட்டவர்களுக்கு  சசியை மண்டியிட வைக்க முடியாதா என்ன!
                    இன்று சசியின் உறவுக்கூடாரம் சட்டத்தின் பிடியில்.!
                    ஜெ.யை மறந்து " சின்னம்மா..சின்னம்மா " என கூவியவர்களும் " சின்னம் அங்குதானம்மா. ரெட்டை எலை வேண்டுமம்மா" என அணி தாவி விட்டார்கள்.
                  இரட்டை இலையை  ஏதோ மந்திரச்சொல் மாதிரி நினைத்துக் கொண்டு மடம் மாறியவர்களும் இருக்கிறார்கள். "இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது " என்று துண்டு போட்டுக் கொண்டவர்களும் இருக்கவே செய்வார்கள். "எதுக்கு தனிக்கடை.இனி போணி ஆகாது "என்று நம்பி ஓடி வந்தவர்களும் இருப்பார்கள். வந்தவர்களை தங்களின் அணிக்கு கொண்டு வருவதற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் பலப்பரிட்சையில் இறங்குவது அவர்களால் தவிர்க்க இயலாதது. இருவரிடமும் ஆள் அம்பு சேனை எல்லாமே இருக்கிறது.
               ஆனால் இரட்டை இலை வசியம் இனியும் செல்லுமா ?
               மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி  முடிவு எப்படி அமைந்தாலும் அது தமிழகத்தின் குரல் என்பதாக கருத முடியாது. ஆட்சி,அதிகாரம்,காவல் துறையின் துணை இவைகளுடன் பண நாயகம்தான்  வெற்றி பெற்றதாக நினைக்க முடியும்.
           ஆளுநரின் மாவட்ட ஆய்வு, பிஜேபியின் அதிமுக விமர்சனம் என தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாறுதல் அதிமுகவை மெது  மெதுவாக காலி செய்து விடும்.!
             மற்றொரு சுனாமியும் அதிமுகவை சுற்றி வளைத்து சூறையாட  காத்திருக்கிறது. புதை குழிக்குள் போன ஜெயலலிதாவின் பிம்பத்தை உடைக்கபார்க்கிறார்கள்.முன்னொரு காலத்தில் ஷோபன்பாபுவுடன் ஜெ.இணைந்து வாழ்ந்ததில் பிறந்த பெண் குழந்தை நான்தான் என உறவினர்களே  ஒரு பெண்ணை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். "அம்மா..அம்மா "என அழைக்கப்பட்டவர் நிஜத்திலும் ஒரு அம்மாதான்  எனச்சொல்லி செல்வி என்கிற அடையாளத்தை அழித்துப் பார்க்கிறார்கள். செத்துப்போனவரின் கண்ணியத்தை காவு கேட்பது யாருடைய திட்டம்  என்பது தெரியவில்லை.  அரசியல் எவ்வளவு  இழிவாக நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் அந்த கட்சி அமைதி  காப்பது வேதனை.! 
             என்ன நடக்கப்போகிறது ? அந்த பிரம்ம மகரிஷிக்கு மட்டுமே தெரியும்! 
 
     

சனி, 25 நவம்பர், 2017

அதிமுகவுக்கு வசந்த காலம் வருமா?

                                 " கடந்த காலம் கசந்த காலம்,
                                   வருங்காலம் வசந்த காலமாக இருக்க வேண்டும்"---என்பது  தனது  ஆசை ,விருப்பம் என கூறி இருக்கிறார் அதிமுகவின்  ஒ.பி.எஸ் .அணியை  சேர்ந்த மைத்ரேயன்.பாராளுமன்ற  உறுப்பினர்.  துணை முதல்வர் ஓபிஎஸ்.சின் ராஜகுரு என்று சொன்னாலும் தப்பு இல்லை. டில்லி தர்பாரில் இவருக்கென தனித்த செல்வாக்கு இருக்கிறது. இன்னும் சொல்வதானால் தம்பிதுரைக்கு  நேரடி போட்டியாளர் இவர்தான்!
                                    இரட்டை இலையை திரும்பப் பெறுவதில் இவரது அணுகு முறை அந்த இரட்டையர் அணிக்கு சாதகமாக அமைந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்கிற ஒற்றைத் தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்கி வந்த  கழகம் தற்போது ஓபிஎஸ்- இபிஎஸ் என்கிற இரட்டைத்தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்கவேண்டிய கட்டாயம். ரெட்டையரில் ஒருவர்  முறுக்கிக்கொண்டாலும் விபரீதம்தான்! அந்த அளவுக்கு இருவருமே கட்சியின் முக்கிய பொறுப்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய கட்டமைப்புக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் கழகத்தை தனது  ஆதிக்கத்துக்குள் அடக்கி விடவேண்டும் என்கிற நரித்தன்மை  இருவருக்கும்  இல்லை என சொல்லிவிட முடியாது.
                                   அவ்வப்போது  இபிஎஸ் சோதித்துப் பார்ப்பதும் அதற்கு ஓபிஎஸ் அணி எதிர்ப்பு காட்டுவதும் நிகழத்தான் செய்கிறது. அண்மையில் மதுரையில்  நடந்திருக்கும் முப்பெரும் விழாவுக்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. இருவருக்கும் துணை முதல்வர்க்கும் அழைப்பு இல்லை.இரட்டை இலை வந்து விட்டது. இனி எதற்கு  அந்த 'பீஸ் ' என நினைத்திருக்கலாம்.
                                  சிக்கல் வந்தால் கிண்டி, கிளறிவிட்டு ,அலசி அதில் பலன் பார்ப்பது ஊடகங்களின் தர்மமாக மாறி இருக்கிறது.அவற்றிலும்  கட்சி அரசியல் இருக்கிறது.
                                சென்னையில் ஆளுநரை சந்தித்துவிட்டு திரும்பிய மைத்ரேயன் அன்றைய பரபரப்புக்கு அவர்களது  கருவியாகி விட்டார். மதுரையில் நடந்த கொடியேற்று விழாவில்  ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொள்ள வில்லை என்பதை  சுட்டிக்காட்டி கருத்து கேட்க, அவரும் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
                          "இரட்டை இலை கிடைத்த வெற்றிக்குப் பின்னர் நடந்திருக்கும் முதல் நிகழ்ச்சி..போகிற வழியில் முதல்வர்  கொடி ஏற்றிவிட்டுப் போயிருந்தால் பரவாயில்லை. முப்பெரும் விழா என சொல்லி மீட்டெடுப்பு விழாவையும்  சேர்த்திருக்கிறார்கள்.அனைத்து தரப்புக்கும் சொல்லியிருக்கவேண்டும். இரட்டை இலைக்காக டில்லிக்கு அடிக்கடி சென்று வந்த குழுவில் நானும் ஒருவன்.எங்களுக்கு தகவல் கொடுத்திருக்க வேண்டும்.ஓபிஎஸ் அண்ணனுக்கு  தெரியாமல் இருந்திருக்கலாம்.ஆனால் மதுரை எம்பி,கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இருவருக்கும் சொல்லவில்லை. இருவரும் அண்ணனின் ஆதரவாளர்கள்.கடந்த காலம் கசந்த காலம்.வரும் காலமாவது வசந்த காலமாக இருக்க வேண்டும்." என்று சொல்லியிருக்கிறார்.
                        பொதுவாக பல அரசியல் திருப்பங்களுக்கு மதுரை காரணமாக இருந்திருக்கிறது.முப்பெரும் விழா அதற்கு கருவியாகி விட வாய்ப்பு இருக்கிறது.சிறு பொறிதான்.! அதுதானே பெருநெருப்பாக மாறுகிறது.!
 
                                 

பிஜேபியில் இணைவாரா அதிமுக அமைச்சர்?

                                      அதிமுக தொண்டர்களுக்கு அண்ணாவின் "ஆரியமாயை" புத்தகத்தையோ,அல்லது எம்.ஜி.ஆர் .எழுதிய 'நான் ஏன் பிறந்தேன்' நூலை  அல்லது ஜெயலலிதாவைப் பற்றிய ஏதாவது ஒரு அறிவுசார்ந்த புத்தகத்தை  அதிமுகவினருக்கு அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர்
கொடுத்திருந்தால்  அமைச்சரின்  கழகப்பற்றை பாராட்டியிருக்கமுடியும்? திருக்குறளை வழங்கியிருந்தால்  ஒருவேளை அவரது தமிழார்வம் தெரிந்திருக்கலாம்?
                                   அதிமுகவினருக்கு  தொடர்பே இல்லாத பகவத் கீதையை  அவர்களுக்கு கொடுத்துப் படிக்கச் சொல்லியிருப்பதுதான் விளங்காத புதிராக  இருக்கிறது.பிஜேபியினருக்கு கீதை வேத புத்தகம்.புத்தகத்தின் வேர் சமஸ்கிருதம். செல்லூர் ராசுவுக்குக் கொடுத்திருந்தால் சிறப்பாக  ஆய்வு  செய்யக் கூடும். தெளிந்த கருத்துகளை அவர்  நமக்கு அருந்தக் கொடுத்திருக்கலாம்.  கழக வரலாறு சரியாகத்தெரியாத தொண்டனுக்கு வேதப் புத்தகத்தை  கொடுத்து அவனை சத்திய சோதனை செய்திருப்பது ஏன்?
                                    புரியவில்லை.
                                   முன்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் இதே  அமைச்சர்தானே சோதனைக்கு ஆளானார்? அது என்னாயிற்று என்கிற முடிவு  தெரியாமலேயே இதோ இடைத்தேர்தல் அதே ஆர்.கே,நகருக்கு!
                                  கே.பி.சுந்தராம்பாள் பாடிய 'தப்பித்து வந்தானய்யா' என்கிற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
                                  கீதையை நம்பியதால் அல்லது பிஜேபியை நம்பியதால், சரி, இரண்டும் ஒன்றுதானே! யாருடைய உபதேசம் அவரை மாற்றி இருக்கிறது?
                                  அமைச்சர் அந்த சோதனையின் விளைவுகளில் இருந்து  மீண்டு விட்டார் என்று சாதாரணன் நினைக்கலாம்.
                                  பிஜேபியில் சேரக்கூடும் என்றும் அதே சாதாரணன் எண்ணினால் அதுவும் பிழை இல்லை.அவன் ஒன்றும் சாணி சயின்டிஸ்ட் இல்லையே?அதனால்தால் பிஜேபியில் ஐக்கியமாகலாம் என்பதாக குறுஞ்செய்தி அனுப்புகிறான்!
                                 எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடக்கும் இந்த கால கட்டத்தில்  இத்தகைய விபத்துகளை அம்மாவின் அடிமைகள் சந்திக்க வேண்டியதாக இருக்கிறதே!
                                                             

திங்கள், 20 நவம்பர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 13.) ரெட்டை இலை முடங்குமா,?

                                "  யாரை நோவது...அப்படி நொந்துகொள்வதால் என்ன நடந்துவிடப் போகுது .....நடப்பது நடக்கட்டும். எல்லாம்   ஆவி  காட்டிய வழியப்பா அதுவே நமது விதியப்பா " என அம்மாவின் மீது பழியை போட்டு  விட தயாராகி விட்டார்கள்.
                        கட்சிக்கு சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்பது இன்னமும்  டவுட் என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.டெல்லிக்கு முன்னர்  சென்றிருந்தபோது  முதல்வர் ,துணை முதல்வர் இருவரும் பிரதமர் மோடியிடம்தனித்தனியே  என்ன பேசி இருப்பார்கள் ,எதுவும் எழுதிக் கொடுத்து இருப்பார்களா, தற்போது நடந்திருக்கும் வருமானவரி சோதனையை நியாயப்படுத்துவது  எதனால், சிலர் ஜெ.யின் போயஸ் தோட்டத்தில் நடந்த ரெய்டை எதிர்ப்பதும், சிலர் வாய் திறக்க அஞ்சிக் கிடப்பதும் எதற்காக எனப் புரியாமல் பயந்து கிடக்கிறார்கள்.இப்படி விடை தெரியாமல் பல கேள்விகள்.
                   பிரதமரை சந்தித்தது மின்சாரத்துக்கு தேவையான நிலக்கரிஅனுமதி  கோரி மனு கொடுப்பதற்காகவே என்று ஒ.பி.எஸ்.சொன்னாலும் அப்படி மனு எதுவும் பெறப்படவில்லை என்பதாக பிரதமர் அலுவலகம் சொல்லிவிட்டது.
                     மொத்தத்தில் அதிமுகவின் எதிர்காலம் கணிக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. ஆளுநர் ஆய்வு செய்வதும், தமிழக பிஜேபியினர் ஆட்சிக்கு எதிரான தவறுகளை திரட்டுவதும் அதைத்தான் உறுதி படுத்துகிறது.
இடுப்பில் இருக்கிற வேட்டி உருவப்படுவதைக்கூட பெருமையுடன் சொல்கிறவர்களை எவருடன்  சேர்ப்பது? நினைத்தாலே நெரி கட்டுகிறது !
                அன்று அடிமை,விசுவாசி என விளம்பரங்களில் தங்களின் முகங்களைக் காட்டியவர்கள்  ஜெ.வாழ்ந்த காலத்தில்  பம்மி, பதுங்கி ,கை கட்டி ,வாய் பொத்தி ,தலை, தரையைத் தொட வணக்கம் சொன்னார்கள் .அவர்களை ஏன் அப்படி வைத்திருந்தார் என்பது தற்போதுதான் தெரிகிறது. அவர்களது பேச்சில் வழிகிற  பொது அறிவுப்புலமையும், நுண்ணறிவும் அடடே ரகம்.!
                   ஊழல் எங்கும் எதிலும் என்று குற்றம் சாட்டுகின்றன எதிர்கட்சிகள். தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது  ஊழல் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆனால் எதைப்பற்றியும் ஆட்சியில் இருக்கிற அதிமுகவினர் கவலைப்படவில்லை.
                முட்டைக்கு மட்டும்தானே அரசு காசு கொடுக்கிறது. நாங்கள்  புழுக்களையும் சேர்த்து இலவசமாகவே  தருகிறோம் என்று திருத்தணியில் சத்துணவுக் கூடத்துக்கு முட்டைகளை அனுப்பியிருக்கிறார் ஒப்பந்தகாரர்.  இவர் ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்டவர் என்கிறார்கள்.  

புதன், 15 நவம்பர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 12.) ஆளுனரால் அதிமுகவுக்கு ஆபத்து?.

                 "மனிதனின் சிறுநீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம் .ஆராய்ச்சி  நடந்து கொண்டிருக்கிறது." என்கிறார் பிஜேபி அமைச்சர் நிதின் கட்காரி. உடனே நம்மூர் மந்திரி வகையறாக்களுடன் ஒப்பிட்டு விடாதீர்கள். விவசாயத்துக்குத் தேவையான பாஸ்பரஸ் போன்ற அவசியமான பொருட்கள்  நமது சிறுநீரில் கலந்திருக்கின்றன.  இந்திய விடுதலைக்கு முன்னர் மனித கழிவுகளை ,மாட்டுச்சாணத்தை விவசாயத்துக்கு நம்மவர்கள்  பயன்படுத்தி  இருக்கிறார்கள்.நகராட்சியாக மதுரை இருந்த காலத்தில் குப்பைகளை மக்கச்செய்து கம்போஸ்ட் உரமென விற்கப்பட்டிருக்கிறது .
             ஆனால் மனித சிறுநீர் சேகரிப்பு என்பது சாத்தியமாகுமா?
             பத்து லிட்டர் கேனை கொடுப்பார்களாம் .அதில் சிறுநீரை சேர்த்து தாலுகா ஆபிசில் கொடுத்தால் லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் அரசு கொடுக்குமாம்.'முதலில் கிராம அளவில் சோதனை செய்யப்படும் என்கிறார்கள்.
          ஒவ்வொருவரும் காலைக்கடன் கழிக்க செல்லும்போது கையில் ஒரு  பாட்டிலையும் எடுத்துச்செல்லக்கூடிய காட்சியை பார்க்கிற வாய்ப்பு நமக்கெல்லாம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.கற்பனை செய்து பார்த்தால் ஆயிரம் கார்ட்டூன் போடலாம் போலிருக்கிறது..! பீர் விற்பனை அமோகமாக இருக்கவும் வாய்ப்பு  இருக்கிறது.ஆனால் சிறுநீரில்  ஊழல் கலந்து விடாமல்  பார்த்துக் கொள்ள வேண்டிய அடிஷனல் வேலைப்பளு  மாநில அரசுகளுக்கு! வருமானவரி சோதனைகளுக்கு இடம் கொடுக்காமல் எல்லாம் நடக்கவேண்டும்.
           பிரதமர் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் எதையும் சாதிக்க
வில்லை என்கிறது ஐ.நா.சபை. மாறாக மனிதக்கழிவுகளை மனிதனே அல்லும் நிலைதான் உருவாகி இருக்கிறது.அந்த திட்டத்தினால் தூய்மை மின்னவில்லை. மோடியின் கனவுத்திட்டம் முழு வெற்றி அடையவில்லை. என்கிறது ஐ.நா .சபை. என்ன செய்வது உடம்பு முழுக்க எண்ணையைத் தடவிக்கொண்டு உருண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும்.
           இதெல்லாம் கூட பரவாயில்லை. ஆளுநர் மாவட்டம் தோறும் விசிட்  அடிக்கப்போவதாக சொன்னதுதான் முதல்வரையும் அவரை சார்ந்தோரையும்  கலங்கடித்திருக்கிறது. புதுச்சேரியில் தலையை நீட்டிய ஒட்டகம் தமிழ்நாட்டுக்கும் வந்து விட்டதே ! எவ்வளவுதான் அடிவாங்கினாலும்  வலியை தாங்கிக் கொண்டு  சிரிப்பது மாதிரி நடிப்பது அவ்வளவு ஈசியா  என்ன? கடுப்பில் இருக்கிற மக்கள் அதிருப்தி  மனுக்களை அடுக்கிவிட்டால் இந்த மனிதர் டில்லி ஹெட் ஆபிசுக்கு ரிப்போர்ட்டை தட்டி விடுவாரே!
          மக்களை சந்தித்து ஆளுநர்  மனு வாங்குவது சட்டப் பிரச்னையா ?
          தெரியல..
*************************************************** .

             "என்ன  சொல்றீங்க?" 
             சாந்தியினால்  யூகம் பண்ண முடியவில்லை. மேட்னி  ஷோவுக்கு ஆசைப்படுகிறானா  புருஷன்.? நேற்று  இரவு  போதும் என்று  அவனே சொல்லி  களைத்துப்  போகும்  அளவுக்கு  இணக்கமாக  இருந்திருக்கிறாள்.. அவளுக்கே  ஆச்சரியம் ! இந்த அளவுக்கு ஒரு முரட்டு ஆணுடன் சல்லாபிக்க  தனக்கு  ஸ்டாமினா  இருக்கிறதே என அதிசயித்திருக்கிறாள் ஒருவேளை .அதை நினைத்துக் கொண்டு  ஆசைப்படுகிறானோ?
         மனதுக்குள்  கர்வம். வெளிக்காட்டுவதற்கு  விருப்பம் இல்லை. தலை  கவிழ்ந்தபடி  பேசினாள். " இத பாருங்க. உங்களுக்குத்தான்  பகல்.எனக்கு  பகலும் ராத்திரியும்   ஒண்ணுதான். கண்ணு தெரியாதவளுக்கு  பவர்ணமி என்ன அமாவாசை  என்னங்க?  இங்க நாம்ப ரெண்டு பேர்தானே  இருக்கோம்.படுக்கனும்னா  சொல்லுங்க.வாங்க!"  கையைப்பற்றியவள்  பெட்ரூமுக்கு அழைத்துப் போக சொன்னாள்.
           தர்மசங்கடம். ஆணுக்கு எப்படி ஆசை இல்லாமல் போகும்? ஆனால்  ஆசை  அதுமட்டும்   இல்லையே?
         " சாந்தி...." எச்சலை விழுங்கியபடியே  பேசினேன். சொல்லி விட வேண்டும்என்கிற முடிவுக்கு வந்தபிறகு எதற்கு தயக்கம்?
            " ஒரு படத்தில  ரஜினி  கடவுளே கடவுளேன்னு  சொல்லி ,பிரமை  பிடிச்சமாதிரி  போவாரே? கேள்விப்பட்டிருக்கியா?" 
            "ஆமா...படத்தைப் பார்க்கலேன்னாலும் என் பிரண்ட்ஸ்ங்க  சொல்லிருக்காங்க.குஸ்புவை  பாத் ரூமில் அப்படியே  முழுசா பாத்த பிறகு  பித்துப்பிடிச்ச மாதிரி அப்படி ரோட்டுல போவாராம். ஆமா  அதுக்கென்ன?" என்று  சாந்தி சொன்னாலும்  நான் விரும்புவதை  ஊகித்து விட்டாள் என்பதை அடுத்து வந்த கேள்வியிலிருந்து  அறிந்து கொண்டேன் .
            "அந்த மாதிரி  நானும் முழு நிர்வாணமா  நிக்கனுமாங்க?"என்றாள்.
            "ம்.!" 
           அவளுக்கு கோபம்  வரவில்லை.ஆச்சரியம்தான். .
          " பெத்த அம்மாகிட்ட கூட  ஒரு பெண் காட்ட மாட்டாங்க.. புருசனுடன்    படுக்குகிற போதுதான்  உடம்போடு உடம்ப  இறுக்கிக்குவா.லைட்டை போட்டா உடனே  போத்திக்குவா. இன்னிக்கி பாத்ரூமில் ரெண்டு பேரும் ஒன்னாத்தான  குளிச்சோம்.பாவாடைய  என்  நெஞ்சை  விட்டுஏறங்கவிட்டேனா.இல்லையே! நெஞ்ச தொட்டிங்க. எனக்கும் தொட மாட்டிங்களான்னு அந்த நேரத்தில ஆசை. இது  நமக்கு  இயற்கையாவே  இந்த வயசுக்கு வரும்! ஆனா  உங்களுக்கு வந்திருக்கிற  ஆசை  பொண்டாட்டிய  திருப்தி  படுத்த முடியாத  ஆம்பளைக்கு  வர  வேண்டிய  ஆசை. என் புருசனை நேத்து  ராத்திரியே  நல்லா புரிஞ்சிக் கிட்டேன். என்னை  ராத்திரி  முழுக்க சந்தோசப்படுத்தக்கூடிய ஆண் மகன்." என்றதும்  ஆடிப்போய்விட்டேன். என்ன பேச முடியும்?
           " சாந்திம்மா!" என்றபடியே  மார்புடன் அணைத்தபடி  முத்தமிட்டேன்.
             உப்பு கரித்தது. அவளது கண்ணீர்  உதட்டில் வழிந்ததினால்!

திங்கள், 13 நவம்பர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 11.) வருமானவரி துறைக்கு உதவிய ..?.

                             ஈரான் நாட்டில் நிலநடுக்கம் .நூறுக்கும் அதிகமானோர் பலி  என்கிறது ஊடகங்கள். .
                      நம் நாட்டிலும் ஒருவகையான அதிரடியான  நிலநடுக்கம்.                 
                      187 இடங்களில்  ஐந்து நாட்களாக தமிழ்நாட்டில்    ஒரே ஆளை மையமாக வைத்து பரவலாக  இடி மின்னலுடன் நிகழ்ந்திருக்கிறது  வருமான  வரியின் நிலநடுக்கம். அதில் எத்தனை பேர் பலி பீடத்துக்குப் போவார்கள், எத்தனை பேர் காயங்களுடன் தப்பிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
                       ஆறு மாதங்களாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையை  வைத்து இந்த அதிரடி வேட்டை நடந்ததாக சொல்கிறார்கள். இதில்  வேடிக்கை ,விபரீதம் என்னவென்றால் சசிகலா குடும்பத்தை சேர்ந்த சிலரே தகவல்களை  சப்ளை செய்திருப்பதாக ஒரு இணையதளம் பதிவு செய்திருக்கிறது.
                  ரத்த உறவுகளே தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் வருமானவரித் துறைக்கு தகவல்களை கொடுத்திருக்கலாம்.யார் பெரியவர் என்கிற ஈகோயுத்தத்தில் நடந்திருக்கலாம் என்கிறார்கள். சசியின் ஆஸ்தான ஜோதிடர் திருப்பாதிரிப்புலியூரில் இருக்கிறார் அவர் பேரிலும் பினாமி சொத்துகள் என்பதை போட்டுக்கொடுத்ததே சொந்த குடும்பம் வைத்த சூன்யம்தான் என்கிறார்கள். 
           கட்சியில் விசுவாசமாக இருந்தவர்க்கெல்லாம் கட்டம் கட்டியவர்களுக்கு தற்போது கட்டம் சரியில்லை என்பதுதான் வேடிக்கை மகாஜனங்களே!. 
                விறுவிறுப்பான திரைப்படத்தில் காமடி இல்லை என்றால் எப்படி ருசிக்கும்? இடையிடையில் சந்தானம் அல்லது சூரி வந்தாக வேண்டுமே! வந்தாரய்யா தெர்மாகோல் ராசா! 
             " உங்களைப் போல ஒருத்தர் இருந்தால் கட்சியை அழிக்கவே முடியாது, என்று அம்மா என்னைப் பார்த்துச் சொன்னார்" என்கிறார்  அமைச்சர் செல்லூர்  ராசு .இதுதான்  ஹைலைட்.!
             கட்சியை அழிக்கமுடியாத மாபெரும் சக்தியாக  ராசு இருக்கிறபோது  எப்படியய்யா எடப்பாடியை சி.எம்.ஆக்கினீர்கள் என்று மறைமுகமாக அவர் சொல்வது போல் இல்லையா என  உங்களில் யாராவது நினைத்தால் யாரும்  பொறுப்பு ஆக முடியாது.
         சோ உயிருடன் இருந்திருந்தால் இதைத்தான்  எழுதி கார்ட்டூன் போட்டிருப்பார் என்பதாக பலர் நினைக்கலாம்.
         "சிறகடி சிறகடி நான் இருக்கிறேன் சிறகடி" என்று எல்.ஐ.சி.விளம்பரத்தில் பாடுவது எனக்கென்னவோ இவர்களுக்காக பிரதமர் மோடி எழுதிய வரிகளாகவே தெரிகிறது.ஆளாளுக்கு அவர்களாகவே சூன்யம் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
                                                      பார்க்கலாம்!
********************************************************************************

            "மணி  என்னங்க?" கையைப்  பிடித்துக்கொண்டு  கேட்டதும்  புது மாப்பிள்ளையின்  எண்ணங்கள்  எப்படியெல்லாம்  போகும் என்பது  அனுபவசாலிகளுக்கு  தெரியும்.!
           ஆர்வமுடன்  கேட்டேன் , " எதுக்கு கேக்கிறே?"
            "கலைஞர் டி.வி. இசை அருவியில் இளையராஜா  பாட்டு  போடுவாங்க ...அதுக்குத்தான்...." என்றதும் என்னவோ போலாகி விட்டது. ஏமாற்றத்தை வேறு வகையில்  நிறைவேற்றும் தந்திரம்  எவ்வளவோ  இருக்கே!
           " ஆன் பண்றேன்"
            ட்யூன்  பண்ணிய  அந்த சேனலில் " நீ தானா  அந்தக் குயில்?" மலேசியா  வாசுதேவன்  காதலை  குழைத்து காதுகளில்  ஊற்றுகிறார் !
            "மனசுக்கு  நிறைவா  இருக்குங்க!.சிவாஜி சார்  நடிப்ப பார்க்கிற  பாக்யம்தான்  இல்லாம போச்சு. ஆனா ராஜாவின்  ட்யூன்  என்ன  அப்படியே  மெஸ்மரைய்ஸ் பண்ணிடுது" 
          "நான்  மெஸ்மரிசம் பண்ணலியா?"
         "நான்  அப்படி சொல்லலியே? மயங்காமையா  நேத்து  ராத்திரி  என்ன  அந்தப்  பாடு படுத்துனீங்க? நீங்க  நெனச்சதுக்கு எப்படியெல்லாம்  இணங்குனேன் .ஈடு கொடுத்தேன் ..மறந்திட்டிங்களா? எனக்கு  வாழ்க்கை கொடுத்த தெய்வங்க  நீங்க! இந்த உடம்பு  உங்களுக்கு சொந்தம்ங்கிறபோது உயிரையும் கொடுப்பேன். எதுக்கு  மெஸ்மரிசம்?"
         இப்படியெல்லாம்  வெள்ளந்தியாக  பேசுகிறாளே ..இவளை ஏமாற்றலாமா  என்கிற  குற்ற உணர்வு ? சொல்லலாமா வேண்டாமா? சரி  பொம்பளையே  அப்படி பேசுகிறபோது  ஒரு ஆம்பளை  தயங்குவதா?
         இந்த இடத்தில்  அவளை மனைவியாக  நினைக்காமல்  பொம்பளையாக  பார்த்த வக்கிரத்தினால்  அவளிடம்  அப்படி வேண்டும் என  விரும்பினேன்.
              "கோவிச்சுக்கமாட்டியே?"
              "எதுக்காக  கோவிக்கப்போறேன்? வேற மாதிரி  தப்பா ..வேற  அப்பேர் இருந்துச்சான்னு  கேக்கப்போ றிங்களா? தாங்க மாட்டேன்ங்க!" ரொம்பவே  பதறிவிட்டாள் சாந்தி. இப்படி கேட்டு பதறுவாள் என்பதை  சத்தியமாக  நான்  எதிர்பார்க்கவே இல்லை.
        "அய்யய்யோ...அந்த மாதிரி  கேக்கிற  கெட்டவன் நானில்ல சாந்தி! வெரி வெரி  சாரி கண்ணு!" என்றபடியே  கண்ணில் முட்டிக்கொண்டு வந்த  கண்ணீரை  முந்தானையால்  துடைத்தேன்.   "நான்  கேக்க நி...னை..க்..கி..றது  நாம்ப  ரெண்டு பேருக்கு  மட்டுமே..தெரிகிற  சங்கதிதான்?" என  தயங்கித் தயங்கி  சொல்லிவிட்டேன்.
            "என்ன  பகல்லேயா?"
           "நீ ஆசப்பட்டா  அதுவும்தான்! நான் ஆசப்பட்டது அது இல்ல!"
          முகத்தில் குழப்பம் !

 

ஞாயிறு, 12 நவம்பர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 10.) பெண்ணின் சுதந்திரம் செக்ஸ்?

                       "பழி சுமத்துவதால் மட்டுமே குற்றச்சாட்டுகள் உண்மையாகி விட முடியாது" என்கிறார்  முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
                     இதையேதான் மர்மச்சாவு ஜெயலலிதாவும் சொன்னார்.சசிகலாவும் சசியின் குடும்பத்தவர் தினகரன் வகையறாக்களும் சொல்லிவருகிறார்கள்.
                   உண்மை என்ன என்பது அவரவர் மனதுக்குத் தெரியும். ஆனால் அது "சத்தியமாகச்சொல் நீ மனிதன்தானா?" என பாடி இடித்துரைக்கப் போவது கிடையாது. அரசியல்வாதிகளிடம் சத்தியம் உண்மை இரண்டும்  இருக்காது. அவர்களை விட்டு  விலகி ஓடிவிடுகிறது. சொன்னதெல்லாம் உண்மை என சத்தியம் செய்கிறபோது சத்தியமும் உண்மையும் சமாதி நிலைக்குப் போய்விடும்.
            இத்தகைய அரசியல்வாதிகளின் கைகளுக்கு அதிகாரம் போகிறபோது நீதி, நேர்மை இரண்டும் அவர்களுக்கு  அடிமைஆகி விடுகிறது. எதிர்க்கிறவர்களின் குரல்வளையை நெரிக்க அவை  ஆயுதமாகி விடுகிறது.ஒரு ஆள் உங்களுடன் நட்புடன் இருந்த கால கட்டத்தில்  நூறு பாங்கிகளில் கணக்கு வைத்துக்கொள்ள அனுமதிக்கிறீர்கள். அந்த ஆள் முரண்படும்போது  ரெய்டு நடத்துகிறீர்கள், பினாமிகள் வழியாக சொத்து சேர்க்க அனுமதிக்கிறீர்கள்.?உங்களுக்கு இணங்க மறுத்தால் ரெய்டு!
         "நீதி தவறி விட்டேன் .யானே கள்வன்" எனக் கூறி அரியாசனத்தில் அமர்ந்து உயிரை விட்டவன் இளங்கோ அடிகளின் பாண்டியமன்னனாக மட்டுமே இருப்பான். நம் காலத்தில் இது சாத்தியமில்லை.
        நாற்பது பேர் கொள்ளை அடிக்கிறார்கள்.அவர்களில்   இருபது பேர் மட்டும் எப்படி ஐஎஸ்ஐ முத்திரை குத்தப்படுகிறார்கள்?
         எந்த கங்கையில் மூழ்கி புனிதவான்கள் ஆனார்கள்? மொத்த கொள்ளையர்களையும் அதே கங்கையில்  மூழ்கி எழ வைத்திருக்கலாமே?
காற்று மாசுபாட்டில் கங்கைக்கு முதலிடமாம். காரணம் புரிகிறது.!
         அண்மையில் ஒரு  குறும்படம் .லக்ஷ்மி என்பது பெயர். வேலைக்கு சென்று திரும்புகிற கணவனின் செக்ஸ் தேவையை நிறைவு செய்கிறாள். கணவனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது  என்பது தெரியவர லக்ஷ்மியும் ஒரு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்கிறாள். இதை  ஆணாதிக்கத்துக்கு எதிரான நடவடிக்கை  என சொல்ல முடியுமா? பெண் உரிமை என்பதாக சொல்லலாமா? ஊரில் நடப்பதைத்தானே சொல்கிறார்கள் என ஊமையாகி விடலாமா?  சொல்லுங்கள் !
         "நமது நாட்டு அரசியலும் இப்படித்தான்யா அர்த்தம் கெட்டுக்கிடக்கு" என்கிறீர்களா?
          வடநாட்டு அரசியலில் ஒரு மாறுதல் தெரிகிறது. பிஜேபி ஆளும் ம.பி.யில் இடைத்தேர்தலில் காங்.கட்சிக்கு வெற்றி! நல்ல மாறுதல்.!


     ********************************************************

                அத்தையின்  பாதம் தொட்டு  கண்களில் ஒத்திக் கொண்டாள். எத்தனை மருமகள்கள் இப்படி இருப்பார்கள் என்பது  தெரியாது.
               தோள்  அணைத்து சாந்தியை தனியாக  அழைத்துச்சென்றாள்  அத்தையம்மா, "அவர்கள் பேச ஆயிரம் இருக்கும் "என  நானும்   தனித்து  நின்றுவிட்டேன்.
           " சாந்தி...சந்தோஷமா இருந்திங்களாம்மா?"எல்லா  மாமியாரும்  கேட்கும் கேள்விதான்! மெதுவான  குரலில்.
             "ம்...!"
             "ஒரே பிள்ள.  செல்லமா  வளத்திட்டேன். தப்பு தண்டான்னு போக மாட்டான். நல்லபடியா  பாத்துக்கம்மான்னு  உங்கிட்ட சொல்ல முடியல. அவந்தான் உன்னய கண்ணு  கசங்காம  பாத்துக்கணும். தப்புன்னு  உனக்கு ஏதாவது  தோணுச்சுன்னா  எங்கிட்ட சொல்லிரு! "
         "அவர்  நல்லவர் அத்த.!"
          " பெத்தவ கிட்ட    நல்லவர்னு நேத்து வந்தவ சொல்ற.! ஆய்சு  முழுக்க இப்படி சொல்லணும் ." என்று  மருமகளின்  கன்னம் தடவி  திருஷ்டி முறிக்கிறாள் மாமியார்க்காரி..
          " ஏன்டா...இவ்வளவு ஈரத்தோட இருந்தா தலை வலிக்காது? நல்லா தொவட்டி விடுப்பா! இனி  நீதானே  அவளுக்கு எல்லா வேலையையும்  செய்யணும்!" என்று  என்னை பார்க்க   சாந்தியை  அணைத்தபடி  மாடிக்குசென்றேன்.
             என்னமோ தெரியவில்லை.நேற்றைய இரவின் அனுபவம்  கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும்.! புதிதாக  கல்யாணம்  ஆனவர்களுக்கு  பகலிலும்  பவுர்ணமி  நிலவுதான்  தெரியும். மனைவி கொடுத்த சுகம்  அவனது  நாடி நரம்புகளில் ஓடியபடியேதான் இருக்கும். நகக்குறி,பற்குறிகளை ரகசியமாக  பார்த்துக் கொள்வார்கள். வேலைக்கு சென்று விட்டாலும்  இரவின்  அனுபவம்தான் .சீக்கிரமாகவே  வீடு  திரும்புவார்கள். ரகசியமாக  முத்தம்  கொடுப்பதும் ஒரு திரில்தான்!
           "ஏங்க...தொவட்டி தொவட்டி தல ரெண்டாகிடப்போகுது! விடுங்க " என்ற பிறகுதான்    "ஒண்ணுமில்ல சாந்தி. ராத்திரி  நடந்தத நெனச்சுப் பார்த்தேன்.!" என்று வழிந்தேன். நல்ல வேளை .அசடு வழிந்ததைப் பார்க்கிற பாக்கியம்  அவளுக்கு  இல்லை.! .   
        "நல்ல ஆளுங்க. அது என்ன  நிலாவ்லையா .இருக்கு .? அது மட்டும்தான் வாழ்க்கையா? காசு கொடுத்து தான் அத வாங்கனுமா? நீங்க  ஆசைப்பட்டா அத நான் கொடுக்கமாட்டனா?" என்று அவள்  'அத..அத' என்று  திரும்ப திரும்ப சொன்னதும்  மார்பில்  சற்று எரிச்சல்.
          நேற்று இரவு அவளை  இறுக்க அணைத்துக்கொண்டு  மெத்தையில்  புரண்டபோது  தாலி அழுத்திய  தடம்  சற்று  புண்ணாகி இருந்தது. அதுதான்  இப்போது  வலிக்கிறது.
         அவள்  தொடர்கிறாள்.
           " நீங்க  ஜிம்மெல்லாம் போவிங்களா? எல்லாமே  இரும்பாத்தான்  தெரியுமா? பொண்ணு உடம்பு பூ மாதிரி! நைசா  ஹாண்டில் பண்ணனும்"
              "சரி.இன்னிக்கி  எச்சரிக்கையா  இருக்கேன்."
             " வேணாம். எனக்காக உங்களை  மாத்திக்க வேணாம். இரும்பு பிடியாத்தான் பிடிக்கனுமா ...உடும்பு பிடிங்கிறதல்லாம் தெரியாதா?"
               எனக்கு என்ன  சொல்வது என்பது தெரியவில்லை.
               

சனி, 11 நவம்பர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 9.) ஜெ.உயிலை கைப்பற்றவே ரெய்டு ..

                   பருவ மழை வெளுத்துக் கட்டியது.வருமான வரித் துறையும் வெளுத்து அள்ளுகிறது.
                  சசிகலாவின் சொத்து வளர்ச்சி ஜெயலலிதா காலத்திலேயே தொடங்கியதுதான் என்பதை ஊரும் உலகமும் அறிந்ததுதான். வருமானத்துக்கு மீறிய சொத்துகளை வாங்கி  குவித்த வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா.இரண்டாவது குற்றவாளி சசிகலா ,மூன்றாவது  குற்றவாளி இளவரசி ஆகிய மூவருக்கும் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.அபராதமும் விதித்தது.
             முதல் குற்றவாளி ஜெயலலிதா எப்படி செத்தார் என்பது விசாரணைக்கு உரியதாகி விட்டது. வாரிசில்லாமல் ஒரு  கோடீஸ்வரன் மண்டையைப் போட்டால்  எத்தனைபேர் உரிமை கோரி போராடுவார்கள் என்பது சொல்லித் தெரியத் தேவை இல்லை.அதுதான் இன்று அதிமுகவில் நடக்கிறது. அப்பத்தை பங்கு பிரிக்க குரங்கிடம் போன பூனைகள் கதைதான் நடக்கிறது.
            இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு 134 இடங்களில்  வருமானவரி ரெய்டு.சசிகலா குடும்பத்தின் உறவுகள்தான் இலக்கு.
           அவர்கள் எப்படி சொத்து சேர்த்தார்கள் என்பது வருமானவரி புலனாய்வுப் பிரிவுக்கு தெரியவே தெரியாதா?
             ஜாஸ் சினிமா பற்றி கலைஞர் கருணாநிதியும் மற்ற எதிர்கட்சித் தலைவர்களும் விசாரணை நடத்தும்படி கேட்டபோது மத்திய அரசும் வருமானவரித்துறையும் கேளாக் காதினராக இருந்தது ஏன்? சசியின் அண்ணன் மகன் விவேக் இவ்வளவு சொத்துக்கு அதிபதியாகியது எப்படி  என பெரு மூச்சு விடுவது மாதிரி நடிப்பது ஏன்? 
         ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் சொத்து சேர்க்காத யோக்கியர்கள்  யார் என சொல்லட்டுமே? வருமானவரித்துறையின் நோக்கம் உண்மையாக இருக்குமேயானால் ஜெ.யின் அமைச்சரவையில் இருந்த அத்தனை பேர்களையும் சோதனைக்குள்ளாக்க வேண்டும்.
         எடப்பாடியிடம் இணங்கிப் போகாதவர்களை மிரட்டுவதற்காகவே இந்த ரெய்டு என மக்கள் நினைப்பது எப்படி தவறாகும்?
        " ஜெயலலிதாவின் உயிலைக் கைப்பற்றுவதற்காகவே இந்த ரெய்டு" என்கிறார் திருமாவளவன்.
         பிஜேபி.அரசின் துணையுடன் நடத்தப்பட்ட ரெய்டு முன்னர் நடத்தப்பட்ட சேகர் ரெட்டி ,மற்றும் தலைமைச்செயலர், அமைச்சர் ஆகியோரின் இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவை சொல்லவேண்டும். கண்டெய்னர் லாரி நிறைய இருந்த நோட்டுகளை இனம் கண்டவர்களால்  சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது தெரியவில்லை என சொல்வது ...அவர்களது புலனாய்வு திறமையை சந்தேகிக்கவைக்கிறது.
        இந்த ரெய்டு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் உள்ளதாக இருக்கிறது.
**************************************************************************
   
                      முதலிரவின்  களைப்பு .
                     ஆடையின்றி  படுத்திருந்த  சாந்தியின்  பிடியிலிருந்து  என்னை  விலக்கிக் கொண்டு  எழுந்தேன்.  உடம்பு  மீது  ஒட்டியிருந்த கசங்கிய  மலர்களில்  இன்னமும் வாசம் இருப்பதாகவே தோன்றியது
                  அவளும் விழித்துக் கொள்கிறாள்.
                "என்னங்க..இப்பத்தான்  எந்திரிச்சிங்களா ?" என கேட்டவள் படுக்கையில்  தடவித் தேடி   அவளது உள்ளாடைகளை  எடுத்துக் கொள்கிறாள். வெட்கம் விலகாமல் " நைட்  ரொம்பவும்  கஷ்டப்படுத்திட்டேனா,,,சாரிங்க."
               "இத நான்தான்  கேட்டிருக்கனும்."என்றவாறே  அருகில் சென்று  அவளை  மார்புடன்  அணைத்தேன்.
               "ஸ்..ஸ்..!  மெல்ல.! வலிக்கிது! முரடு ! "என்றவள்  பிராவை  சரி  செய்து கொள்ள . "மணி என்னங்க. ? லேட்டா எந்திரிச்சிட்டோமோ? அத்த சத்தம்  போடுவாங்கள்ல ? எனக்கு பாத் ரூம் போகணும். ஹெல்ப்  பண்ணுங்க  அத்தான்!" என்றாள். அதுவரை  என்னை  அத்தான் என்று  சொல்லவே இல்லை. முதன் முதலாக  அவள் அப்படி சொன்னது   எனக்கு  சற்று  கிறக்கத்தை  ஏற்படுத்தியது.
          காலைக் கடனை முடித்துக் கொண்டபின்  இருவரும் ஒன்றாகவே குளித்தோம் .சில்லென்ற  தண்ணீர்  உடலில் பட்டபோது   'எரியிது" என்றாள் .எனக்கும்  காதோரம், முதுகிலும் எரிந்தது.
        "நகம் வெட்டவே மாட்டியா ...சாந்தி?" அவளின்  விரலைப் பிடிக்க   " சார் மட்டும் என்னவாம்? பல்லை சாணை பிடிச்சிருக்கிங்க போலிருக்கே?" என்று  செல்லமாக  முத்தமிட .....
         நான் எப்படியெல்லாம்  கற்பனை செய்திருந்தேனோ  அதெல்லாம்  நடக்கிறது. சந்தோஷமாக இருந்தது. உடைகளை  மாற்றிக்கொண்ட பின்னர்  அவளை  அம்மாவிடம் அழைத்து சென்றேன்.
        அம்மாவுக்கு  எந்தவிதமான வேலையும்  வைக்கக்கூடாது  என  முன்னதாகவே தீர்மானித்து இருந்ததால் அடுப்பங்கரை  என் வசம் ! இட்லி  அவிப்பது  அவ்வளவு  கஷ்டமா  என நினைத்தவனுக்கு  சற்று சிரமமாகவே  இருந்தது. அப்படியானால்  சமையல், சாம்பார், காய்கறி?
           அம்மாவின்  உதவி  தேவைப்படுமோ, யாராவது  ஒரு பெண்ணை  வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டால் என்ன? இந்த நினைப்பு  அப்போது வராமல் இல்லை! பார்க்கலாம் .

சனி, 4 நவம்பர், 2017

கோமாளி தேசத்து ராசாக்கள்.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா?

                    மெதுவாக குனிந்து சாந்தியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்.

                  எனது இடுப்பை சுற்றிய  அவளது இடது கை  இறுக்கியது. . மலைப் பாம்பு மாதிரி!

               "என்னங்க..எனக்கு சமைக்கத் தெரியாது.! அத்த கோச்சுக்குவாங்களா?" அந்த குரலில் இருந்த  சோகம் எனக்குப் புரிந்தாலும் ஏனோ ஒரு எரிச்சல். வெளியில் காட்ட முடியாமல்.! 

               "இந்த சமயத்தில கேக்கிற கேள்வியா சாந்தி? அம்மாட்ட பேசிட்டேன். பண்ணிடுவாங்க.!"

             "அதுக்கில்லிங்க.  விளக்கேத்துறதும் பால் காச்சுறதும் வீட்டுக்கு வர்ற  மருமகளோட முத வேலைன்னு சொல்வாங்க. கண்ணு தெரியாத எனக்கு அதெல்லாம் செய்ய முடியாம போச்சே.அத்த மனசுக்குள்ள வருத்தப்படாம இருப்பாங்களா? தாலி கட்டிக்கிட்டவ சாமி விளக்கேத்துறது லட்சிமிக்கு செய்ற  மாதிரிங்க!"

          கழுத்திலிருந்து மணிக்கட்டு வரை மயிலிறகால் வருடுவதைப் போல விரல்  நகத்தினால் மெதுவாக வரைந்தேன். தூரிகையைப் போல!

       "சரி விடிஞ்சதும் ரெண்டு பேரும் சேர்ந்தே விளக்கேத்தலாம்."என்றதும் மடியில் படுத்திருந்தவள் எழுந்து  நெருக்கமாகினாள் .

          "கூச்சமா இருக்குங்க.!"

         "எனக்கும்தான்! லைட்டை ஆப் பண்ணவா?"

        "விடி வெளக்கு மட்டும் எரியட்டுங்க.உலகம்தான் எனக்கு இருட்டாகிப் போச்சு.அந்தரங்கவாழ்க்கையிலேயாவது கொஞ்சம் வெளிச்சம் இருக்கட்டுமே! ஸ்வீட்ஸ் வெச்சிருக்குன்னு அத்த சொன்னாங்க.அத உங்க கையால எனக்கு ஊட்டி விடுரீங்களா? அது எங்கே இருக்குன்னு என்னால பாக்க முடியாதுங்க.தப்பா நெனச்சுக்காதிங்க?"

        "வித் மை ப்ளஷர் டியர்." என்றபடியே மைசூர்பாகுவை பிட்டு சிறு துண்டை எடுத்து  ஊட்டினேன். நாவில் வாங்கியவள்  ருசித்து விழுங்கினாள். "தொண்டையில்  எறங்குறது கூட தெரியலிங்க." என்றவள் எனது கழுத்தை வளைத்து முத்தமிட்டாள். அழுத்தமான முத்தம். இனிப்பாக இருந்தது இருவருக்கும்! முதலிரவின் ருசி தெரியத் தொடங்கியது.!

         அவளது நாசியிலிருந்து வெப்பக்காற்று. "சாந்தி ..உனக்கு புல்லாக்குப் போட்டா இப்படி கிஸ் பண்ண முடியுமா?" என்றேன். கிண்டலை புரிந்து கொண்டவள் பதிலுக்கு "உங்களுக்கு கடுக்கன் போட்டாகூட  அழகாத்தான் இருக்கும். போட்டுக்குங்களேன்" என எனது காதை  கிள்ளினாள்!

              இருவருக்கும் சிரிப்பு.

             " லைட்டை ஆப் பண்ணியாச்சா?"

              "விடிவெளக்கு மட்டும்தான் எரியிது."என்றதும் அவள் தன்னை களைய ஆரம்பித்தாள்.ஒரு பெண்ணை, அவளது இளமையை அரை இருட்டில் ரசிப்பதில் தனி இன்பம் இருக்கவே செய்கிறது. சேலையின் ஒரு முனையை  பல்லால் கடித்தபடி பிராவை கழற்றும்போது பெண்ணுக்குரிய நாணமும் எச்சரிக்கையும் கவிதைக்குரியது. பார்வையற்றவள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.ஒவ்வொரு அசைவிலும் வெட்கம்.இன்னும் சில நிமிடத்தில்   தன்னை முழுமையாக எடுத்துக்கொள்ளப்போகிறவன் என தெரிந்திருந்தாலும்   அவளது நிர்வாணம் ஆராதனைக்குரியது என்பதால் அவள் எச்சரிக்கையாகவே    இருக்கிறாள்.! காமம் இங்கு வணங்கப்  படுகிறது.


                   இந்து மத தீவிரவாதம் பற்றி கருத்துச்சொன்ன கமல்ஹாசனை  சுட்டுக்கொல்லவேண்டும் என இந்து மகா சபை என்கிற அமைப்பினை சேர்ந்த ஒரு முக்கியத் தலைவர் 'தலை' எடுக்கச்சொன்னதை பிஜேபியினர் ரசிப்பது வெட்கக்கேடானது.வேதனைக்குரியது. தமிழனை கொல்ல சொல்வதற்கு ஆதரவாக குரல் கொடுக்கிற மானக்கேடு தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது. மெர்சல் வசனத்துக்கு தாவிக்குதித்த தடித்த நாக்குகள் எல்லாம் என்ன செய்கின்றன என்பதும்  தெரியவில்லை. ஆட்சி அதிகாரம் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற திமிர் ஆணவம்தான் அந்த கொலைகார பேச்சை ரசிக்கவைத்திருக்கிறது. பத்திரிகையாளர்களின் ரத்தம் ருசித்தவர்கள் தங்களின் கோரப்பசிக்கு தமிழ்நாட்டிலும் இரை தேடத் தொடங்கி இருக்கிறார்கள். 

       தீவிரவாதம் சாதியத்தில் இருந்தாலும் சரி மதத்தில் இருந்தாலும் சரி  அறவே அழித்தொழிக்கப்படவேண்டும் என்பதில் எவனுக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை. இந்தியா எனது நாடு .என்னுடைய இந்தியாவில் மதம் கொண்டு மதம் திரியுமேயானால் அதை அடக்கும் உரிமை ,அதிகாரம் எனக்கு இருக்கிறது.

           இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடியின் கருத்து என்ன என்பது தெரியவில்லை.கொலைவெறிப் பேச்சை தமிழக அரசு ரசிக்கிறதா என்பதும் தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை கருத்து சொல்லவில்லை.  

             தமிழ்நாடே! இதுதான் உனது தலைவிதி என்றால் ....?