
முன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை.
"நீ நாசமா போவே!"
"பேதியிலே போவே!"
"கொள்ளைய்ள போவ!"
"காலரா கொண்டு போக!"
"தட்டுவாணி,தாலி அறுப்பா!"
"கொள்ளி வைக்க பிள்ளை இல்லாம பிளேக் கொண்டு போக!"
---இப்படி இன்னும் எழுதத் தகாத வார்த்தை வசீகரங்கள் வந்து விழும்.
ஆனால் இம்மாதிரியான சாபங்கள் பலித்திருக்குமேயானால் இந்தியாவின் ஜனத்தொகை எப்போதோ குறைந்திருக்கும்.
என்றைக்கு மக்கள் மந்திரவாதிகளையும்,பில்லி சூனியம் வைக்கிற சாமியார்களையும் ஆட்சியில் உட்கார வைத்தார்களோ அன்றே நாட்டின் உச்சந்தலையில் ஏழரை இரும்புச்சேர் போட்டு உட்கார்ந்து விட்டான். இந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்!
யோகி ஆதித்யநாத் என்கிற சாமியாரை சி.எம்.ஆசனத்தில் அமரவைத்தார் திருவாளர் மோடி.
அந்த சாமியாரின் அமைச்சரவையில் எத்தகைய அறிவாளிகள் இருப்பார்கள் என்பதை தெரிந்த கொள்ள முடியாதா?
"மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாற்றுகிற அறிவாளிதான் அமைச்சராக இருக்கவேண்டும் என்கிறது தமிழ்மறை.
ஒருவேளை வட இந்தியர்களுக்கான வேதத்தில் சாபமிடுவதுதான் மந்திரிக்கு தகுதி என சொல்லி இருக்கிறதோ என்னவோ?
ஆதித்யநாத் மந்திரிசபையில் ஒரு மகாபுத்திசாலி ஒருவர் இருக்கிறார்.
அவரின் பெயர் ஒ.பி.ராஜ்பார்.
கையில் கமண்டலம் இல்லாத குறை.
"யாராவது எதிர்க்கட்சிகள் நடத்துகிற ஊர்வலம் பொதுக்கூட்டங்களுக்கு போனால் அவர்களுக்கு என்னுடைய அனுமதி வேண்டும்.இல்லையென்றால் நாசமாகப் போவீர்கள்.எனது சாபம் பலிக்கும். அவர்களுக்கு மஞ்சள் காமாலை வரும்.என் கையால் மருந்து வாங்கினால்தான் குணம் ஆகும்" என்று பேசி இருக்கிறார்.
இப்படிப்பட்ட கோமாளிகளின் ஆட்சியில் நல்லாட்சி நடக்குமா?
இன்னொரு மந்திரி "இது தலைச்சன் பிள்ளை மண்டை ஓட்டில் தயாரித்த மை.தடவினால் ரத்தம் கக்கி சாவே.அதனால் பிஜேபிக்கு ஓட்டுப் போடு " என்று கிளம்பினால் என்ன ஆவது?
இதுதான் நவீன இந்தியாவா? கர்மம்.கர்மம்.!