
சென்னை மாநகராட்சியில் லஞ்சம் இல்லாம ஒரு காரியமும் நடக்காது என்று சொல்லி ஒரு கூறிப்பிட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகளின் சொத்து விவரங்களை கேட்கிறது உயர்நீதிமன்றம் !
அரசும் அதிகார வர்க்கமும் வெட்கப்பட வேணாமா,வேதனைப்பட வேணாமா?
உயர் நீதிமன்ற உத்திரவுகள் எந்த அளவுக்கு மதிக்கப்படுகின்றன என்பது நீதிபதிகளுக்கு தெரியாதா?
இதை பத்தியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாம ரஜினிகாந்தின் அரசியல் அறிவை அடிஸ்கேல் வச்சு அளந்து பார்க்கிறார் அமைச்சர் ஜெயகுமார்.
பல நேரங்களில் அமைச்சர்களின் ஸ்போக்ஸ்மேன் அண்ணாத்ததான்!
செல்லூரார்,திண்டுக்கல்லார்லாம் பெரும்பாலும் வாயத் திறப்பதில்லை. திறந்தால் வெள்ளப் பெருக்க தடுக்க விபரீத ஐடியாக்களை ஒருத்தர் கொடுப்பார். லால்பகதூர் சாஸ்திரியிடம் எடப்பாடியார் இப்பத்தான் பேசினார் என்பார் இன்னொருத்தர். .
இப்படி பொது அறிவுக்களஞ்சியம் பொங்க ஆரம்பிச்சிடும்.
அந்தம்மா எப்படி இப்பேர்ப்பட்ட அறிவுக் கொழுந்துகளை செலக்ட் பண்ணினாங்க.? அது சரி இப்படிப்பட்ட ஆளுங்கதான பரமவிசுவாசிகளாக இருப்பாங்க..ஓ..சப்ஜெக்ட் மாறிப்போறேனோ?
ரஜினி மேட்டருக்கு வருவோம்.. நேத்து திரை உலகத்தினர் நடத்திய கூட்டத்தில் பேசிய ரஜினி "கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் முதல்மந்திரி கலந்திருக்க வேணாமா? மொத்த மந்திரிசபையும் வந்திருக்க வேணாமா? நீங்க என்ன எம்.ஜி.ஆரா இல்ல ஜெயலலிதாவா?ன்னு கேட்டுட்டார்.
அண்ணன் ஜெயகுமார் பொங்கிட்டார்.
"மறைந்த தலைவருக்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் அரசியல் பேசக்கூடாது. ஆனால் எனதருமை நண்பர் அரசியல் பேசி இருக்கிறார். அனுபவம் போதாது.அரசியல் மச்சூரிட்டி இல்லை. பார்ட் டைம் அரசியல்வாதி. இனிமேதான் புல்டைம் அரசியல்வாதியாகனும்" என்பதாக பேசி இருக்கிறார்.
ரஜினிகாந்த் இவருக்கெல்லாமா பதில் சொல்லுவார்.? அவர் கமுக்கமாக இருக்கிறார்..இன்னும் என்னென்ன கூத்து நடக்கப்போகுதோ?